Saturday 28 February 2015

இயற்கையின் நியதி -4 (The Law of cause and effect.)

                                       

                                      இயற்கையின் நியதி - 4
                                                 (The Law of  cause and effect)  

புத்தர் ஒரு அரசனின் மகன்.ஒரு நாள் அவர் பார்த்த காட்சிகள் அவரை மிகவும் பாதித்தது.மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நோய், தள்ளாமை, துன்பம் என்று சிந்திக்கலானார் அதற்கு  விடை தேடிகாட்டிற்கு சென்று கடுந்தவம் செய்தார். ஆசையே துன்பங்களுக் கெல்லாம் காரணம் என்ற இயற்கையின் நியதியை உணர்ந்தார்.

ஆசைப் படுங்கள், ஆனால் உங்கள் ஆசை பிறரை பாதிக்கக் கூடாது.உங்கள் ஆசையில் நியாயம் (தர்மம்) இருக்க வேண்டும். உங்களது நியாயமில்லாத ஆசை, பிறரை பாதிக்கும் போது ஏதாவது ஒரு வழியில் துன்பம் வந்து சேருகிறது என்று அறிவுரை வழங்கினார். தனக்கு வந்த அரச பதவியை மறுத்தார். தனக்கு என்று ஒரே ஒரு செட் உடை மட்டுமே வைத்துக்கொண்டார்.  தினமும் ஒரு வீடு என்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

தன்னைப்போல் யாரும் கடும் தவம் புரிந்து வருத்திக்கொண்டு வாழ வேண்டாம். அதே சமயம் சுகபோகங்கள் தான் வாழ்க்கை என்று மனம் போன போக்கில் வாழவும் வேண்டாம், நியாயமான ஒரு மத்திய வழியில் வாழுங்கள், நல்லவனாய் இருங்கள், நன்மையாய்  இருங்கள்  என்று உபதேசித்தார்.

முதலில் தகுதி உடையவர்களாகுங்கள்  பிறகு ஆசைப் படுங்கள். முதலில் உங்கள் எல்கையை தெரிந்திருங்கள், பிறரது உரிமையை மதியுங்கள் அதன் பிறகு ஆசைப்படுங்கள்.

நமது மனம் போன போக்கில் சரி - தவறு,  பின்விளைவு எதையும் சிந்திக் காமல் நடப்பது   மகிழ்ச்சியாய் இருக்கிறது, ஆனால் நாளை அது செய்யும் பின்விளைவுகள் துன்பமாய் வந்து சேருகிறது இதை The Law of  cause and effect  எனலாம்.

சுயநலம் பின்விளைவை கருதாமல் போனால்-
         சுயநலம் பின் பலனை சிதைத்துவிட்டுப் போகும்
பரஸ்பரம் மரியாதையை தொடராமல் போனால்-
         பரஸ்பரம் தொடர்பு இல்லாமல் போகும்
உதவும்பொருளை பேணாமல் போனால்-
         பேணாத பொருள் உதவாமல் போகும்
மனசாட்சி தெய்வபயமற்று ஆணவமாய் போனால்-
         தெய்வநீதி மனசாட்சியற்று அமைதியாய் போகும்  

காரணமில்லாமல் எந்த காரியமும் இல்லை, காரணத்தை ஆராயும் போது தீர்வு காண்பது சுலபம்.காரணங்கள் தெரியாதபோது விதியே காரணமாகிறது.

                            ----------------------------------------------------------


     

No comments:

Post a Comment