Saturday 21 February 2015

இயற்கையின் நியதிகள் ( THE LAWS OF NATURE )


                               
                                         இயற்கையின் நியதி 

மனிதன் ஏற்படுத்திய சட்டமாகட்டும், இயற்கை ஏற்படுத்திய சட்டமாகட்டும் சட்டம் பற்றி தெரியாது என்பதால் மன்னிப்புக் கிடையாது. மனித சட்டங்களை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ், வழக்குரைஞர், நீதிபதி என மனிதர்கள் இருக்கிறார்கள். இயற்கைன் நியதி களை மீறுபவர்களை கண்காணிக்க பாதிக்கப்பட்டவர்களின் மனவலி, உடல்வலி போன்றவைகள் ( கடல் நீரானது ஆவியாகி மேகமாகி மழையாவது போல ) எண்ண அதிர்வுகளை உண்டாக்கி அதனதன் வலிமைக்கேற்ப  பின்விளைவுகளை உண்டு பண்ணு கின்றன.   

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் திறந்த வெளியில் மரநிழலில் காய், கனி, கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தான். அன்றாடம் உணவை தேடி அலைவது மட்டுமே அவனது ஒரே வேலை யாக இருந்தது.

மனிதனுக்கே உடைய சிந்தனை திறனாலும், உடல் வாகாலும் இயற்கையில் கிடைத்தவை களில் மாற்றங்கள் செய்து தனது தேவை, வசதிகளை வளர்த்துக்கொண்டான். இயற்கையின் செயல் பாடுகளை உற்று கவனித்து அதன் சட்டம் ஒழுங்கை புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

பல விஞ்ஞான விதிமுறைகளை கண்டுபிடித்து அவைகளை செய்முறையில் விளக்கினான்.ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் பல ஆன்மீக விதிகளை போதித்தார்கள்.சிந்தனையாளர்கள் பல பழமொழிகளை வழக்கத்தில் பேசி வந்தார்.

மனிதன் தங்களுக்கு  வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு போன்ற இரட்டைகள் ஏற்படுவதற்கு உரிய  காரணங்களை ஆராய்ந்தான். அவைகள் பழமொழிகளாகவும், பொன்மொழிகளாகவும் இயற்கையின் நியதிகளாகவும் புழக்கத்தில் கொண்டுவந்தான்

புவிஈர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி போன்ற கண்ணுக்குத் தெரியாத சக்திகளை பரிசோதனை கூடத்தில் ஆராய்ந்து அவைகளை நமது தேவை களுக்கு பயன் படுத்தி கொண்ட அளவிற்கு இயற்கை நியதி சக்திகளை ஆராய்ந்து உபயோகப்படுத்திக்கொள்ள நம்மால் முடியவில்லை. காரணம், புத்தர், வியாசர் போன்ற ரிஷி வாழ்க்கை, தவ வாழ்க்கையில் அப்பழுக்கற்ற ஈடுபாடு உடையவர்களால் தான் சிக்கல் நிறைந்த இயற்கையின் நியதிகளை புரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் முடிந்தது.

இயற்கையின் நியதிகளை யாரும், யாருக்கும் கூறி கட்டாயப்படுத்தவோ, செயல்முறைப்படுத்தவோ முடியாது. இயற்கையின்நியதிகளை கூறி தண்டிக்கமுடியாது. இயற்கை நியதிகளின் உதடுகள் மூடியே இருக்கும். ஆனால், காது வழியே புரிந்து கொள்ளும். இயற்கையின் நியதிகளை குறிப்பட்டு பேசுவதால் சில சமயம் மனஸ்தாபங்கள் ஏற்படவும், மனம்  புண்படவும், போன்ற விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட காரணமாகும்.

இயற்கையின் நியதிகளை சொல்லி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம், எச்சரித்துக் கொள்ளலாம். துன்பம் தோல்வி களிலிருந்து ஆறுதல் பெறலாம் அல்லது வராமல் பார்த்துக் கொள்ளலாம். தன்னை சரிப்படுத்திக் கொள்ளலாம்.

அவரவர் வாழ்க்கையில் அனுபவித்த, கேள்விப் பட்ட, பார்த்த சிறந்த பழமொழிகளை, பொன்மொழிகளை, இயற்கையின் நியதிகளை நினைவில் நிறுத்தி தனது வாழ்க்கை யில் பயன் படுத்தி வந்தால், பிரச்சினைகள் குறைந்து மனஅமைதி கூடும்.

ஒரு கருத்தை ஒருவர் உண்மை என்று உணர்ந்து, பின்  அதை கடைபிடிக்காமல் விட்டுவிட்டால் அதனாலுள்ள பலன் அவருக்கு கிடைக்காமல் போகும் .

 இயற்கையின் படைப்பில்,  எல்லாம் அல்லது எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. ஆனால் நாம் ஒருவருக்கொருவரை ஒப்பிட்டு பேசி உயர்வாகவோ,  தாழ்வாகவோ எண்ணி நடக்கிறோம்

எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற நல்ல குணங்களை அனைவருக்கும் பொதுவான  ஒரு அளவு கோலாய் வைத்து அதனுடன் அனைவரும் தன்னை  ஒப்பிட்டு பார்த்து நான் எளிமையானவனா, தூய்மையானவனா, கடமையை கருதி நடப்பவனா, நியாயமாய் நடப்பவனா என இந்த உலகமக்கள் அனைவரும் நடந்தால் அனைவரின் மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் குறைவே இருக்காது. ஆனால் நமக்கு அது மாதிரியான கல்வி இல்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்  என்கிற நோக்கத்தில் தான் கல்வி இருக்கிறது. அதற்காகவே தினமும் வாழ்கிறோம்.

இயற்கையின் நியதிகள் ஏராளமாக இருந்தாலும் ஒருசிலதை நாம் நினைவில் நிறுத்தி அதனை பயன் படுத்தி பலனை பெறவேண்டும்.

.நமது கல்வியில் மனம் இயங்கும் விதம் பற்றியோ, இயற்கை நியதிகள் இயங்கும் விதம் பற்றியோ பொதுப் பாடம் கிடையாது. இவைகளெல்லாம் கண்ணுக்குத் தெரியாதவை, புலப்படாதவை, நிரூபிக்கப் படாதவை என்று நாம் ஒதுக்கி விட்டோம். ஆனால் அவைதான் அவரவர் வாழ்க்கையின் ஆணி வேராய் இருக்கிறது  

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதி.( Law of Attraction)

ஒற்றுமை என்னும் இயற்கையின் நியதி (Law of Harmony )             

ஈடு செய்யும் இயற்கையின் நியதி.( Law of compensation)              

காரண காரிய இயற்கையின் நியதி.( Law of cause and effect)              

பரிகாரம் என்னும் இயற்கையின் நியதி.( Law of remedy)      
      
பிரிவுகள்  என்னும் இயற்கையின் நியதி (Law of Classification)

கர்மா என்னும் இயற்கையின் நியதி (Law of Karma)

திருப்பி செய்யும் இயற்கையின் நியதி.( Law of reciprocation)

மாற்றம் என்னும் இயற்கையின் நியதி ( Law of Change)

விடாமுயற்சி என்னும் இயற்கையின் நியதி(Law of Perseverance)

எதிர்த் தன்மை என்னும் இயற்கையின் நியதி(Law of Polarity)

 நினைப்பு என்னும் இயற்கையின் நியதி (Law of Thinking)

அதிர்வு என்னும் இயற்கையின் நியதி (Law of Vibration) 

போன்ற சில இயற்கையின் நியதிகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.         

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதி.( Law of Attraction)

ஈர்ப்பு என்னும் இயற்கையின் நியதிஎன்பது, ஒன்று அதே போல உள்ள மற்றவைகளோடு சேர்ந்திருக்க விரும்பும் .தண்ணீர், தண்ணீருடன் சேர விரும்பும்.எறும்பு, எறும்புகளோடு சேர்ந்திருக்க விரும்பும். எண்ணங்கள், அதே வகையைச் சார்ந்த எண்ணங்களுடன் இருக்க விரும்பும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ,

நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
நம்மை உருவாக்கிய பிரபஞ்சசக்தியிடம் அந்த தேவையை கேட்கவேண்டும்.
அந்த தேவை நம்மை நோக்கி வந்து கொண்டி ருப்பதாக உணரவும், நம்பவும் வேண்டும்.
நமக்கு நன்மை யானது வந்து சேரும்.
நமக்கு எது வேண்டுமோ அதை மட்டுமே நினைக்க வேண்டும்.
எது வேண்டாமோ அதை நினைக்கக் கூடாது. நாம் அடிக்கடி நினைப்பது நம்மிடம் வந்து சேரும்.
ஆனால் நிறைய நேரம் நாம் தவறானவை களையே நினைக்கிறோம்.(90%)
தீர்வில் தான் நம் கவனம் இருக்க வேண்டும். பிரச்சனையை பேசிக் கொண்டி ருப்பதில் அல்ல. .
நல்ல, சிறந்த, உயர்ந்த வார்த்தை களில் நமது கவனத்தை கூர்மையாக்க வேண்டும். அடிக்கடி நினைக்கவேண்டும்,நம்ப வேண்டும். The Law of Attraction .நமக்கு உதவ இது ஒரு சிறந்தவழி.

 பிற நியதி களை அடுத்தடுத்து உள்ள விளக்கங்களில் காணலாம்.

                                          --------------------------------------

                                    

No comments:

Post a Comment