Saturday 28 February 2015

இயற்கையின் நியதி -3 (The Law of Reciprocation)

                                              


                                         இயற்கையின் நியதி - 3
                                                       (The Law of Reciprocation)                         

 மனிதன் தான் நடத்தும் செயல் அதற்கேற்ப அடுத்தவர் தரும்  எதிர்ச்செயல் என்பது போல்   நம் கண்ணுக்குத்தெரியாமல் இந்த இயற்கையிலும்  மிக அமைதியாக பதிலுக்குப்பதில் என்பது நடந்து கொண்டிருக்கிறது. பதிலுக்கு பதில் என்பதை  இயற்கையும் செய்கிறது.

சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் திறந்த வெளியில், மர நிழலில் தங்கி, காய், கனி, கிழங்கு போன்றவை களை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தான் அவனால் இயற்கைக்கு எந்த தொந்தரவும் இல்லாதிருந்தது. அப்போது பெய்த மழை, தனக்குத்தானே ஆறுகளையும் நதி களையும் உருவாக்கி கொண்டது. அந்த அளவிற்கு மழை விடாமல் பெய்திருக்கிறது. இயற்கையான உணவுகளை மட்டும் மனிதன் உண்டு வந்தான். இயற்கை அவனுக்கு குளிரையும் வெப்பத்தையும் தாங்கும் சக்தியை கொடுத்தது. மருத்துவம் என்பது இல்லாதிருந்தது. நாகரீக உணவுகள் மனிதனுக்கு இளமையில் முதுமை நோய்களை பரிசாக கொடுக்கிறது. மனிதனுக்குரிய மருத்துவ மனைகள் பெருகிக்கொண்டு போகின்றன

மனிதன் இயற்கையை பாதிக்காமல் நடந்தது வரை இயற்கையும் அவனை பாதிக்கவில்லை.

நாம் நமது சொகுசுக்காக மரங்களை அழித்தோம் வானிலை ஒழுங்கற்ற தாக ஆகிவிட்டது.பெரிய, பெரிய ஆலைகளினாலும், கணக்கற்ற வாகனங் களினாலும்  பூமியின் ஆகாயப்பகுதியின்  வெப்பத்தை அதிகப்படுத்தினோம். அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து. துருவப் பகுதியிலுள்ள பனிப் பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன, இது மேலும் தொடர்ந்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலத்துக்குள் வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்  செயலுக்கேற்ப இயற்கையும் பதில் செயல் செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு நியதிக்கு உட்பட்டே நடக்கிறது அந்த நியதியை   The Law of Reciprocation  எனலாம்.

இதேபோல் மனிதருக்குள்ளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி, மதித்து நடக்கும் வரை அந்த உறவு அமைதியாக போய்க்கொண்டிருக்கும். அதில் யாராவது ஒருவர் முரண்பாடாக நடந்து பரஸ்பரத்தை பராமரிக்க வில்லை யானால் அந்த உறவில் குழப்பம் ஏற்படும். இயற்கையின்    The Law of Reciprocation அங்கு தனது வேலையை செய்யும்.

நடைமுறையைமதித்து, உண்மையாய், நன்மையாய், நியாயமாய் ஒருவருக் கொருவர்  பரஸ்பரம் நடக்கும் போது அந்த உறவை  The Law of Reciprocation  காப்பாற்றும்.

இதில்  யாராவது ஒருவர் அலட்சியமாய் நடந்து உண்மைக்கு பதில் சாமர்த்திய மாய் நடந்தால் அந்த உறவுக்குள் The Law of Reciprocation கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

பதிலுக்குப்பதில் செய்யும் உந்துதல் எல்லோருக்கும் உண்டு. நாம் ஒரு பொருளையோ, உதவியையோ, அலட்சியத்தையோ, மரியாதையையோ ஒருவருக்கு கொடுத்தால் அவரும் அதை திருப்பி செய்யவேண்டும் என்று நினைப்பார்.

சிலசமயம் பலனடைந்த பிறகு உதவியையும், உதவி செய்தவரையும் மறந்து விடுவார்.  எந்த  விஷயத்தில் பதிலுக்குப்பதில் செய்யவேண்டும் யாரிடமெல்லாம் பதிலுக்குப்பதில் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறுபவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
  
செய்யக்கூடாத நபரிடம் செய்யக்கூடாத விஷயத்தில் பதிலுக்குப்பதில் செய்வதால் சரி செய்யமுடியாத காயத்தை(  The Law of Reciprocation) ஏற்படுத்தும்.

தவறுவது மனித இயல்பு. செய்த தவறை நியாய வழியில் முடிவுக்கு கொண்டு
வரவேண்டியது அவரவர் பொறுப்பாகும்.

                                  --------------------------------







                

No comments:

Post a Comment