Thursday 26 February 2015

சுயமுன்னேற்றம்

                                        

                           
                                          சுயமுன்னேற்றம் 



நமது தோல்வி, பிரச்சினைகளுக்கு  சுயமுன்னேற்றக் கல்வி, மற்றும் பயிற்சிகளில் நாம் பின் தங்கி இருப்பதும் ஒரு  காரணம்

நமது  சிந்திப்பதில், செய்கையில், குணங்களில் இருக்கும் பலவீனங்களை கண்டுபிடிக்க நாம் விருப்பமுள்வர்களாய் இருக்கவேண்டும்

வெற்றியாளர்கள் எப்பொழுதும் பகுத்தறிந்து  நடைமுறைக்கு சாத்திய மானதை, சரியான, நியாயமான வழியில் செய்ய நினைக்கிறார்கள்.

வெற்றி என்பது என்ன.  பணம் சம்பாதிப்பது, அரசியலில் அதிகாரம் அடைவது, பெயரும் புகழும், கண்டுபிடிப்பது என பலருக்கும் பலவாக இருக்கிறது.

வாழ்க்கையில் நமது நோக்கத்தை அடைவது மட்டும் முக்கியமில்லை.அந்த வெற்றி நமது திருப்தியையும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தவேண்டும் அதுதான் உண்மையில் வெற்றி.

வெற்றி என்பது நம்மை சுற்றி இருக்கும் பலபேருடைய நேரடி, மறைமுக ஒத்துழைப்பாகும் .

வெற்றியானது  மனஅமைதியையும், மகிழ்ச்சியையும் தரவில்லையானால் அந்த வெற்றிக்கு அர்த்தமேயில்லை 

நாம் சாதிக்க வேண்டும். அந்த வெற்றி, மனஅமைதி, மகிழ்ச்சி எல்லாம் சமநிலையில் தொடர வேண்டும் அதுதான் உண்மையில் சாதனை.

நமக்கு பணம், புகழ், மரியாதை எல்லாம் வேண்டும் ஆனால் அவைகள் நமக்கு நலத்தையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் உண்மையிலேயே தர வேண்டும் 

பொதுவாக நாம் வெற்றி தோல்வி என்பதை பணத்தை வைத்துதான் பேசுகிறோம். பணத்தை தான்  நாம் வெற்றி என்று குழம்பி பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்கிறோம்   

பணத்தை அடைய தெரிந்த  வழிகளில் எல்லாம் ஓடுகிறோம். அதனால் மனஅழுத்தம், சச்சரவு, பகை,, அசௌகரியம், பிரச்சினை,  அமைதியின்மை போன்றவைகளை வரவழைத்துக் கொள்கிறோம் 

வெற்றிக்காக உழைக்கும் போதும், வெற்றி வந்தபின்பும் மகிழ்ச்சியாயிருக்க நமக்கு ஆரோக்கியமான உடலும், ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும் 

நாம் எல்லோரும் மனித இனம். படைப்பில் அனைவரும் சமம். ஆனால் ஒவ்வருவரின் செயல்களிலும், குணங்களிலும் மாற்றங்கள் காணப்படுகிறது. அதற்கு அவரவர் ஆழ்மனதிலிருந்து எழும் எண்ண உந்துதல்கள் தான் காரணம்.

தன்னுடைய வாழ்க்கையில் இப்படி, இப்படி யெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தூண்டுதலானது அவரவருக்குள் இருக்கும் சக்திவாய்ந்த அழுத்தமாகும் என்பதை  நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.     

வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமானால் மனதின் இந்த சக்தியை நாம் அறிந்துகொள்ள முயற்சிக்க  வேண்டும். நம் ஒவ்வருவரிடமும் இந்த மனசக்தி இருக்கிறது .

பிறருடனான நம் உறவானது பரஸ்பரம் அடிப்படையில் நாம்  செய்து கொள்ளும் மனதின் செயல்களாலும்  மனதின் எதிர் செயல்களாலும் ஆனது.

நமக்கு நமது மனமும், அதில் இருக்கும் உந்துதல் படி நாம் நடப்பதுபோல் நம்மை சுற்றி இருப்பவர்  அவர் மனமும் அதில் இருக்கும் உந்துதல்  படி அவர் நடப்பார், என்பதை  நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்

விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, சோகம், ஆவேசம், சாந்தம், தற்காப்பு, தாக்குதல், பொறாமை, பயம் குடும்ப வழக்கம் உணர்ச்சிகள், ஆசைகள் போன்றவை எல்லாம் மனத்துள் மறைந்து, புதைந்து கிடந்தது ஏதாவது வழியில் நம்மை செயல் படுத்தும் மிக சக்தி வாய்ந்த உந்துதல்களாகும். மனதின் இந்த நுட்பம் பற்றி பெரும்பாலனவர் கட்க்கு தெரியாது
.
ஒருவரின் வெளியில் தெரியும்  குணங்களுக்கு பின்னால் இருந்து மிக வலிமையான  மனோசக்தி அவரை இயக்குகிறது  நமது திறமை, நமக்கு கிடைக்கும் பிறரின்  ஒத்துழைப்பு, உதவி இவைகளை பொறுத்தே வெற்றி அமைகிறது.

நம்மை சுற்றியுள்ள நல்லவர்கள்  மனதில் நம்மைப் பற்றியுள்ள எண்ணங்களைப்  பற்றி நாம் சிந்திக்கவேண்டும்

ஒவ்வருவரின் தனித்தன்மையையும்  நான்கு பாகமாக பிரிக்கலாம்

1.தன்னைப்பற்றி தனக்கு தெரிந்தவைகளும் பிறருக்கு தெரியாதவைகளும்

2 தன்னைப்பற்றி தனக்கும் பிறருக்கும்தெரிந்தவைகள்

3.தன்னைப்பற்றி தனக்குதெரியாதவைகளும் ஆனால் பிறருக்கு      தெரிந்தவைகளும்

4.தன்னைப்பற்றி தனக்கும் தெரியாத பிறருக்கும் தெரியாதவைகள்

இந்த நான்காவது பாகம் முழுவதும் விருப்பு  வெறுப்பு ஏக்கம் ஆவேசம் பேராசை போன்ற பலவித மான உணர்வுகள் மறைந்து கிடந்து உந்துதல்களை கொடுத்து  ஒருவரின்நல்ல அல்லது மோசமான குணங்களுக்கு காரணமாக இருக்கிறது

முடிவாக நாம் அறியாத நமக்குத் தெரியாத சக்திவாய்ந்தமறைந்து கிடக்கும்   மன உந்துதல் களே வெற்றி தோல்விக்கு முக்கியகாரணமாக இருக்கிறது

நம்மைப்பற்றி வெளிப்படையாக நமக்கு தெரிந்த  உந்துதல்கள் 10% தான். நம்மைப்பற்றி நமக்கு தெரியாமல் நம்முள் மறைந்து கிடக்கும் உந்துதல்கள் 90%. இந்த ஆழ்மன உந்துதல்கள் தான் நம்மில் பலபேரை பணமும் மகிழ்ச்சியும் உடைய முழு வெற்றியை அடையவிடாமல் கெடுத்துவிடுகிறது

நாம் நம் மனதை  ப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.நாம் பிறரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் .பிறருடன் உள்ள நமது உறவை ஆரோக்கியமானதாக ஆக்க வேண்டும்

நாம் நம்மை சுற்றி இருப்பவர்களை  எவ்வாறு முக்கியமாய் நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி இருக்கிறது.அவர்கள் மனதில் நம்மைப்பற்றி நல்லெண்ணங்களை ஏற்படுத்த வேண்டும்.

திறமை,பணம்,இரக்ககுணம் போன்றவை மட்டும் வெற்றியை தராது

அன்பு,நேர்மை,பக்தி,அர்ப்பணிப்பு,உந்துதல்கள்,சாந்தம்,சமாதனம்,
போராட்டம், ஆவேசம், ஆணவம், சுயநலம், சுயவிசாரணை, நோக்கம், நன்னடத்தை,மனமுறிவு, பயம்,பதட்டம்,முன்தீர்மானம், பொறாமை,போன்ற பல உணர்வுகளும் முழுக்க  முழுக்க மனம் சம்பந்தப்பட்டவை.

எந்த ஒரு கணிதமோ, இயந்திரமோ இந்த மன பிரச்சினைகளை சரிப்படுத்தாது

பணமோ,விஞ்ஞானசாதனைகளோ மன அமைதியை, மகிழ்ச்சியை  தந்து விடாது.

ஒரு மனிதனால் மட்டுமே சிக்கலான மனதை ஆராய்ந்து சரிப்படுத்த முடியும். ஒருவன் செய்யும் எந்த வொரு செயலும் அவனை சுற்றியிருப்பவர்களை பாதிக்ககூடாது. அவனுடைய செயல்கள் அவர்களுக்கு திருப்தி தருவதாக இருக்க வேண்டும்
.
பல பேருடைய தோல்விக்கும்,வேதனைக்கும் காரணம் தன்னால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்பு களை அவர்கள் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பதில்லை

நம்முடைய செயல்களை நாமே ஆராய்ந்து அதனை  சிறிது வித்தியாசப்படுத்தி செய்ய ப்பழகவேண்டும்.

இதன்படி நாம் நம்மை சுற்றி யிருப்பவர்களிடம் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.     .

நமது செயல்களின் மேல்  நமக்கு இருக்கும் விழிப்புணர்வே நமக்கு உண்மையான வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொடுத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.

உளவியல் ஆலோசகர்கள் ,மற்றும் சுயமுனேற்ற பயிற்சியாளர்கள் நடத்தும் மனத்தின் நுட்பம் பற்றிய பயிற்சியில் கிழ்க்கண்ட பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன

1.மனதின் நுட்பம் ( Id-Ego-Super ego,the mechanism of the mind.)

2.மனதின் மூன்று நிலைகள் ( Parent ego,Adult ego,Child ego.)

3.சதா பிறருடன் ஒப்பிடுதல் (I am ok-You are ok;         I am ok-You are not ok;
                                                            I am not ok-You are ok;    I am not ok-You are not ok)
4.மூன்று குணாதிசயங்கள்   ( The dominator,   The sufferer,    The rescuer)

5.மனதின் இயற்கையான பாதுகாப்பு நுட்பம் (Natural defence mechanism of the mind.)

6.முரட்டு குணம்  (sadist,masochist,insanity,criminality,pervert etc.,)

மனதில்  நியாயமான, தர்க்கவாத விசாரணை செய்து நம் மனதினுள் இருக்கும் ஆணவம், ஆதிக்கம், சுயநலம், பதிலுக்குப்பதில், பொறாமை, சாமர்த்திய பேச்சு, பொய் போன்ற உந்துதல்களை  அடையாளம் காணவேண்டும். அவை பிறரை பாதிக்கும் போது அவருடனான உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் உண்மை  என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

எனவே நியாயமில்லாத மன உந்துதல்களை கண்டறிந்து  நம் மனதினுள் இருந்து வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருக்கமான தொடர்புடையது. நமது குணம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டு மானால் நமக்கு ஆரோக்கியமான உடலும் ஆரோக்கியமான மனமும் அதில் ஆரோக்கியமான எண்ணங்களும் இருக்கவேண்டும்.

ஆரோக்கியமான உடலுக்குரிய கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமான மனதிற்குரிய பயிற்சி களை  நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

இன்பங்கள் பலவிதம். நாம் எல்லோரும் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.நமக்குகீழ் உள்ளவர்களை திட்டுகிறோம்,தண்டிக்கிறோம்,
அலட்சியப்படுத்துகிறோம், ஏமாற்றுகிறோம், உபதேசம் செய்கிறோம், நமது தவறுகளை மன்னித்துக் கொள்கிறோம், பிறரிடம்  சாமர்த்தியம் பேசி தப்பித்துக் கொள்கிறோம். இப்படி பல வகையில் நமக்குள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது குற்றச்சாட்டுகள்  ஒரு விளையாட்டை போன்றது.  நமது செயலும் நமது எதிர்ச்செயலும் விளையாட்டுக்கான  கருவியைப் போன்றது நமது நோக்கம் எப்படியாவது நாம் வெற்றிபெற்று விடவேண்டும் என்பதுதான் ஆனால் உண்மைக்கு இடமில்லாத வாதங்களால் பாதிக்க பட்டவருக்கு   மனக்கஷ்டம்   தான் மிஞ்சுகிறது.உறவு பலவீனப்படுகிறது .                                                                  

நம்மில்  முழுநிறைவானவர் என்று யாரும் கிடையாது.இருக்கவும் முடியாது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல காரணங்கள் நம்மை சுற்றியிருந்து நமது வாழ்க்கையை கடினமாக்குகிறது. நற்குணமில்லாத அதிகாரி, உதவியாளர், கணவன், மனைவி, உறவினர், பொறாமைபிடித்த எதிரிகள், மாறிவிட்ட நண்பர்கள், பூகம்பம், விபத்து, கலவரம் போன்ற பல காரணங் களால் நாம் சமநிலையை இழக்கிறோம்.

நாம் எல்லோருமே எப்போதும் மகிழ்ச்சியுடனோ, அல்லது எப்போதும் சோகமாகவோ இருப்பதில்லை. நாம் அனைவரும்  மனஅழுத்தம், பதட்டம்,தவிப்பு,பயம்,தோல்வி போன்ற வற்றால் பாதிக்க கூடியவர்கள்.நமது மனமானது  மகிழ்ச்சிக்கும், மனச் சோர்வுக்கும் இடையில் மாறிக்கொண்டிருக்கும் .

நமக்கு நாம் நினைத்தது போல் எல்லாம் கிடைத்து, அந்த வெற்றியின் தாக்கத்தால்  பிரச்சினைகளை சரியாக கையாளாமல் நமக்கு உதவியவர் களையும், நெருங்கியவர் களையும் பகைத்து  மன அமைதியை இழப்பதால் என்ன லாபம்.

மரியாதை என்பது நானே மேலானவன் என்கிற எண்ணம் இல்லாமல் ஒருவருக்கொருவர் தேவை, உரிமைகளை பரஸ்பரம் மதித்து  அதில் சாமர்த்தியம் பேசாமல் உண்மையாக செய்வதாகும்.

 நாம் நமது வாழ்க்கையை விரும்பவும், மதிக்கவும் வேண்டும்.
அதேபோல்  பிறரது வாழ்க்கையை விரும்பவும், மதிக்கவும் வேண்டும்.இதை அறிந்து நடப்பவர்கள்  வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் .



https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y79UJhcSt1s#t=2014


No comments:

Post a Comment