Friday 21 August 2015

உடல்நலம் வாழ்வின் ஆதாரம்


                              உடல்நலம் வாழ்வின் ஆதாரம் 
                        
                                              உடல் நலத்தை இழப்பது அனைத்தையும் இழப்பதாகும் 
                                              உடல்நலத்தை கெடுப்பது தவறான உணவுகள் 
                                              உடல்நலத்தை காப்பது தேவையான உடற்பயிற்சிகள் 
                                              உடல்நலத்தை சொல்வது சரியான மருத்துவர்கள் 

இளமையில் தினமும் தொடர்ந்து மாற்றி, மாற்றி உண்ணும் பல்வேறு விதமான  தவறான உணவுகள் முப்பது, நாற்பது வயதுகளில் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை போன்ற பல ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு மருத்துவர்களிடம் போனால் அவர்கள் தரும் சிகிச்சை, ஒன்று உணவுக்கட்டுப்பாடு, இரண்டு உடற்பயிற்சி, மூன்று மாத்திரைகள், நான்கு அந்த மாத்திரைகளினால் ஏற்பட போகும் பக்கவிளைவுகள். இதைத் தவிர வேறு மருத்துவம் கிடையாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு  நோய் வருவதற்கு முன்பே தாமாகவே முன்வந்து தவறான உணவுகளை ஒதுக்கி வைப்பது அவரவர் கடமையும், பொறுப்புமாகும்.

விருந்து உணவின் போது தவிர பிற நேரங்களில் தவறான உணவுகளை தவிர்த்து வந்தால் மருந்து, மாத்திரைகளையும் தவிர்க்கலாம் மற்றும் அவசரத்திற்கு உணவுக்கட்டுப்பாடு பார்க்காமல்   வாழ்க்கையையும்   ஓட்டி விடலாம். 

இளமையிலே மாத்திரை, மருந்து, மருத்துவமனை, கட்டாய உணவுக் கட்டுப்பாடு என்கிற சூழல் ஏற்பட்டு விட்டதற்கு தவறான உணவுகளே காரணம் என்று மருத்துவர் கூறுகிறார்  என்று கூறி மாத்திரையும் கையுமாக
இருக்கும் பலரை  கண்கூடாக பார்க்கிறோம்.

நோய் ஆள்பார்த்து, வயது பார்த்து, சமயம் பார்த்து சொல்லிக்கொண்டு வருவதில்லை.

இருபது வயதிற்கு மேலே, இளமையும் ஆரோக்கியமும்  இருக்கும்போதே தவறான உணவுகளை அடையாளம் கண்டு அவைகளை தவிர்க்கப் பழகுவது முதுமையை தள்ளிப்போடும். இதை யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்,
விழிப்புணர்வும், மன ஒத்துழைப்பும் தான் தேவை. 

தவறான உணவுகள்

*உடலின் தேவையை விட அதிகமான அளவு மாவுச்சத்து, கொழுப்பு உணவுகளை  உண்பதும் குறைவான உடற்பயிற்சியும்   உடல் எடை அதிகமாக முக்கிய காரணம். உடல் எடை அளவிற்குள் இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி.

*உப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
*கெட்ட கொழுப்பு உணவுகள் கொலஸ்ட்ராலாக மாறி இரத்த குழாயில் படிய ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த எல்லாவகை உணவுகளிலும் கெட்ட கொழுப்பு மிக அதிகமாக  இருக்கும்.
*சீனீ, எண்ணெய், தீட்டியஅரிசி போன்ற சுயதன்மை இழந்த தவறான உணவுகளை தொடர்ந்து உண்டு, அதற்கேற்ப உழைப்பு,    உடற்பயிற்சி இல்லாதபோது, தசைகள்  வளைவுத்தன்மையை இழந்து  நோய்க்கு ஆளாகிறது.
*வீணாகிவிடும், நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்றும், ருசிஎன்பதாலும்  நாம்      தவறான உணவுகளை  தேவைக்கு அதிகமாகவே தினமும் உண்ணுகிறோம்.
*சீனி இனிப்புகளுக்கு இன்சுலின் அதிகம் தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் இல்லை என்றல் இனிப்பு கொழுப்பாக மாறி உடல் எடை கூடிக்கொண்டே போகும். காபி, டீ க்கு தவிர ஏனைய சீனி இனிப்புகளை தவிர்த்து விடலாம்.  
*தோல் தவிடு நீக்கிய தானியஉணவுகளில் இனிப்பு மிக அதிகமாக இருக்கும்.
*பாட்டில் பானங்கள், பழரசங்களில் உப்பும் சீனியும் மிக அதிகமாக இருக்கும்.
*ஓட்டல்  உணவுகளில் உப்பும், கெட்ட கொழுப்பும் மிக மிக அதிகமாக  இருக்கும.
*மீன் தவிர பால் உட்பட அனைத்து வகை மாமிச உணவிலும் கெட்ட  கொழுப்பு உள்ளது.
*ஆரோக்கியத்திற்குத் தேவையான கொழுப்பில் 75 சதவிகித கொழுப்பை ஜீரணத்தின் போது உடலே உற்பத்தி செய்துகொள்கிறது. வெளி உணவில் 25% மட்டுமே தேவை.
*கெடாமலிருப்பதற்காகவும், ருசிக்காகவும், பிறகாரணங்களுக்காகவும் விற்பனைக்காக உணவுகளில் ஆரோக்கியத்துக்கு எதிரான சாயம்,  இரசாயனம் சேர்ப்பது சாதாரணமாகி விட்டது.
*பெயிண்ட்,இங்க,பாலிஷ்,பிளாஸ்டிக் மெழுகு போன்ற இரசாயனங்கள் நமது கவனக்குறைவால் உணவுடன் உடலுள் போகிறது.
*பூச்சி கொல்லி இரசாயனம்,  மெழுகு, கதிர்வீச்சு உடைய காய்,  கனிகளும்       விற்கப்படுகின்றன.
*பாதுகாக்கும் வழி முறையினால்  வெளிநாட்டு காய், கனிகள்  சுய  தன்மையை இழந்திருக்கும்.
*நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமிப்பில் வைத்திருப்பது சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தோன்றும்.
*தொடர்ந்து உட்கொள்ளும் மது மற்றும் போதை பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பழுதாகிக் கொண்டிருப்பது குடிப்பவருக்குத்தெரியாது.

உடல் நலம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். தவறான உணவுகளை தவிர்த்து சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணும் விழிப்புணர்வே உடல் நலத்தை கடைசி வரை காக்கும் வழி.
சரியான உணவுகள் 
*கசப்பு, துவர்ப்பு போன்ற  இனிப்பற்ற உணவுகளை உண்பது பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, ஓமம், தனியா, வெந்தயம், சீரகம், கருவாப்பட்டை முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*கீரை, காய், கனிகள், முழுத்தானியம், சிறுதானியம், முளைத்த தானியம், நட்ஸ், சீட்ஸ், மூலிகை போன்றவற்றில் உடல் நலத்துக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்கின்றன. உள்ளூரில் விளையும் பொருட்களே புதியதும்,  நல்லதும் ஆகும்.

* உடலுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
*மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 
இந்த விளக்கம் உண்மை என்று தோன்றினால் மனம் ஒத்துழைப்பு கொடுக்கும் வரை பலமுறை வாசியுங்கள். ஒரு தடவை வாசித்தலில் பலன் இருக்காது. பெருகி வரும் மருத்துவ மனைகளையும், சிகிச்சைகளையும், செலவுகளையும், கஷ்டங்களையும், சிரமப்படுபவர்களையும் நினைத்துப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
                                       உடல்நல விழிப்புணர்வு மையம்
                                                                 9962738467














Saturday 15 August 2015

நாலடி விளக்கம்



 
                                           நாலடி விளக்கம் 

கடவுள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது  
எங்கும் நிறைந்தது  (omni present )
எல்லாம் தெரிந்தது  (omni scent)
எல்லா சக்தியும் உடையது (omni potent)
எப்போதும் விழித்திருக்கும்(omni awakent)
கடவுள் 
கடவுள் என்பது முயற்சி செய்வது 
கடவுள் என்பது நியாயமாய் நடப்பது
கடவுள் என்பது பயனாய் இருப்பது
கடவுள் என்பது பிரார்த்தனையில் ஈடுபடுவது
கடவுளின் தன்மை-1
கடவுள் பாரபட்ச மற்றவர்
கடவுள் அருள் அனைவருக்கும் சொந்தம்
கடவுளால் ஆயிரம் வழிகளில் உதவ முடியும்
கடவுளால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.
கடவுளின் தன்மை-2 
புலன்களுக்கு அப்பால் இருக்கிறான்
சிந்தனைக்கு அருகில் வருகிறான்
இன்பத்தில் தேவையற்று இருக்கிறான்
துன்பத்தில் தாகமாய் வருகிறான்  
திருமூலரின் கடவுள் விளக்கம் 
மர  யானையை பார்த்தேன், அதில் மரம்தெரியவில்லை.
மரத்தை நினைத்தேன், அதில் யானை தெரியவில்லை.
உலகப்பொருட்களைப்  பார்த்தேன், அதில் பரம்பொருள்  தெரியவில்லை.
பரம்பொருளை நினைத்தேன், அதில்  உலகப்பொருட்கள் தெரியவில்லை.
பிரார்த்தனை-1 
பிரார்த்தனை வேண்டுதலுக்கு சக்தி யூட்டு கிறது.
பிரார்த்தனை கடவுளின் கவனத்தை ஈர்க்கிறது
பிரார்த்தனை புறச்சூழல்களை மாற்றுகிறது
பிரார்த்தனை மனதை அமைதிப்படுத்து கிறது.
பிரார்த்தனை -2
நல்லெண்ணங்களை எண்ணவையுங்கள்
நல்லதை சொல்லவையுங்கள்
நல்லதை தீர்மானிக்கும் தெளிவைத்தாருங்கள்
நல்லதை செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்துங்கள்.
பிரார்த்தனை-3
பொறாமை பழிக்குப்பழி எண்ணாமலும்
கெடுதல் துன்பம் நினையாமலும்
பசி, எதிர்பார்ப்பு இல்லாமலும்
உரிமை, நியதியை மதிக்க வையுங்கள்.
பிரார்த்தனை -4
சுயநலம் பின்விளைவுகளைக் கொண்டது
சுயநலத்தை தடுத்து நிறுத்துங்கள்
நியாயம் தக்க சமயத்தில் உதவக்கூடியது
நியாயத்திற்கு பணிய வையுங்கள்.
ஆன்மீகம்-1 
வழிபாடு விரதம் மட்டும் ஆன்மீகமல்ல
ஆடம்பரம் ஆச்சாரம் ஆன்மீகத்தின் உயர்வு அல்ல
ஒருவருக்கொருவர் உண்மை-நன்மையாய் வாழ்ந்து
உரிமை-நியாயங்களை மதித்து நடப்பதே ஆன்மீகம்
ஆன்மீகம்-2
கட்டுப்பாட்டை நினைத்திரு
நியாயமாய் நடந்திடு
தியானத்தில் நீடித்திரு
பிரார்த்தனையே நிம்மதி.
இயற்கையின் நியதி 
ஒன்றை இழக்க நேர்ந்தால் வேறொன்று வரும். ஒன்றுடன் சேர நேர்ந்தால் மற்றொன்று விலகும்
(The Law of compensation)
 நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்யத் தவறக் கூடாது..
(The Law of Reciprocation)
காரணம்-காரியம்-பின்விளைவை உணர்ந்தால் பரிகாரம் பயன்தரும்
(The Law of Remedy)
குணத்தில் வித்தியாசம் இயற்கை.குறிக்கோளில் ஒத்துழைப்பு வேண்டும்..
(The Law Of Harmony) 
மனிதனின் தேவைகள்
பயனாகவும், பாதுகாப்பாகவும் வாழ அறிவு தேவை
உழைக்கவும், உற்சாகமாகவும் வாழ ஆரோக்கியம் தேவை
சேமித்தும், உதவியும் சிறப்பாய் வாழ தொழில் தேவை
பரஸ்பரம் அக்கறை, அனுசரணை யுடன் வாழ உறவுகள் தேவை.
மனத்தின் தன்மை 
மனம் அதன் நம்பிக்கையின் படி செயல்படும்
மனம் நான், என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
மனம் வலி, அவமானம், தண்டனைக்கு பயப்படும்
மனம் பாராட்டுக்கு ஏங்கும். சதா பிறரை மதிப்பீடு செய்யும்.
மனத்தின் குணம்  
நியாயத்தைப் பற்றி கவலைப் படாமல் சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
நியதிகளின் வலிமையை மறந்து நானேமேலானவன் என்று நடக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் நடைமுறை தவறி சாமர்த்தியம் பேசும்
பின்விளைவுகளை அலட்சியப்படுத்தி விருப்பு-வெறுப்பாய் நடக்கும்.
மனநிலை-1 
இன்றைய சூழ்நிலை யாவும் பொய்
நல்ல குறிக்கோளுடன் இருப்பதே தாக்குதல் இல்லாத நிகழ்காலம்
இன்றைய உணர்ச்சிகள் யாவும் பொய்
நியாயமாய் நடப்பதே நெருக்கடி இல்லாத எதிர்காலம்
மனநிலை-2 
இன்றைய பசியும் ருசியும் பொய்
சரியான உணவும் பயிற்சியும் உடல்நலம் காக்கும்
இன்றைய சொகுசும் பாராட்டும் பொய்
சிக்கனமும் சேமிப்பும் ஆபத்துக்கு உதவும்
மனநிலை-3 
விருப்பு-வெறுப்பு-சமநிலையில் நியாயம் வேண்டும்
யூகம்-கேள்விப்படுவது-ஒப்பிடுவதை விசாரித்து நம்ப வேண்டும்
எளிமை-நேர்மை-மனிதாபிமானம் செயலாக வேண்டும்
ஆரோக்கியம்-செல்வம்-பரஸ்பரம் மரியாதை குறிக்கோளாக வேண்டும்
எண்ணங்கள்-1
எண்ணங்கள் சக்திவாய்ந்தது
எண்ணங்கள் பொருட்களை உண்டுபண்ணக்கூடியது
எண்ணங்கள் காத்திருந்து சந்தர்ப்பங்களைத் தரக்கூடியது
எண்ணங்கள் சூழலை மாற்றி காட்டும் ஆயுதம்
எண்ணங்கள்-2 
எல்லா சூழ்நிலையிலும் நல்லெண்ணங்களைத் தேடு
எல்லா கஷ்டத்திலும் நல்லெண்ணங்களை நினை
எல்லா இடங்களிலும் நல்லெண்ணங்களைப்  பேசு
எல்லா கடமைகளையும் நல்லெண்ணத்துடன் செய்.   
அறம்-1 
அறம் என்பது யாருக்கும் கெடுதல் செய்யாத  மனம்
அறம் அன்பையும், நியாயத்தையும் செய்து கட்டும்.
அறம் மனம் வழியே உடலைப் பேணும்
அறத்தை மீறினால் மன உளைச்சலே மிஞ்சும்
அறம் -2
தனது கடமைகளை மறக்காமலும்
பிறரது உரிமைகளை மறுக்காமலும்
நியாயத்தை கைவிடாமலும்
எவரையும் ஏமாற்றமலும் -ஆவன செய்வது
பொருள் 
கைத்தொழிலும், சிறு சேமிப்பும் இரண்டாவது சம்பளம் 
செலவாகட்டும், சேமிப்பாகட்டும்  பல துளி பெரும் செல்வம்
கொடுத்த கடனையும்,வாங்கிய கடனையும் நினைவூட்ட வேண்டும்  
எளிமையாய் வாழ்தல் இயற்கையின் கட்டளை.
வளம் 
வருமானத்துக்குள் வாழ்ந்து காட்டுதல் வளம்
காப்பீடு, சிறுசேமிப்பால்  பாதுகாப்பு பெறுவது வளம்
கடன்வாங்கவும், ஆடம்பரத்திற்கும்   பயப்படுவது  வளம்
பாராட்டு,விமர்சனங்களை கருதாமல் சிக்கனமாய் வாழ்தல் வளம்.
பணம் 
பணத்துக்கு ஆடம்பரம், கஞ்சத்தனம்,ஏமாற்று என பல சொற்கள்
பணம் இல்லையானால் துன்பம் நிச்சயம்
பணம் பெருகும் போது வேறொன்று வெளியேறும்
பணம் உள்ளவர்கள் முதலில் தன் கிளைகளை தாங்க வேண்டும் 
நுகர்வு 
மருத்துவ  ஆலோசனை  தவிர்த்து நுகர்வோர் உடல்நலம் இழப்பர்
சேமிப்பில்லாமல் செலவழித்து நுகர்வோர் மகிழ்ச்சியை இழப்பர்
நியாயம், நடைமுறை தவறி நுகர்வோர் உறவை இழப்பர்
நியதியை மதிக்காமல் பேராசை நுகர்வோர் அமைதியை  இழப்பர்.
அறிவு 
விருப்பு-வெறுப்பு களை பின் வைத்து நியாயமாய் நடப்பது அறிவு
சரி-தவறுகளை சிந்தித்து சரிப்படுத்திக்கொள்வது அறிவு
காரணம்-பின்விளைவுகளை ஆராய்ந்து காப்பாற்றிக்கொள்வது அறிவு
நல்லதை-மாயையை அறிந்து பிறருக்கு  பயனாய் இருப்பது அறிவு.
ஆரோக்கியம் 
உடல் நலத்தை  காப்பது இயற்கை உணவுகள்
உடல் இளமையை காப்பது உடற்பயிற்சிகள்
உடல் நலம் தொடர கட்டுப்பாடுகள் அவசியம்
உடல் நலத்தை சொல்வது மருத்துவ சோதனைகள்
உணவு
 சரியான உணவையும் , தவறான உணவையும் அறியும் பழக்கம் நல்லது        
சத்தேயானாலும் அளவிற்கு மிஞ்சினால் நோயாகிறது
ருசியே ஆனாலும் அளவோடு உண்பதே நலத்துக்கு நல்லது
உப்பு, இனிப்பு, கொழுப்பில் ருசியும் நோயும் சேர்ந்தே உள்ளது.
உடற்பயிற்சி 
தினசரி உடற்பயிற்சி செய்ய  சுய தீர்மானம் அவசியம்
நோயை தடுப்பதும், குணப்படுத்துவதும் உடற்பயிற்சியின் வேலை
மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் உடற்பயிற்சி தணிக்கிறது
உடல் வலிமையையும், வளைவுத்தன்மையும் தொடரச் செய்கிறது
தியானம் 
அசையாத பால் உறையும்
அசையாத விதை முளைக்கும்
அசையாத கரு வளரும்
அசையாத மனம் ஆன்மீகமாகும்.
குணம் -1
முதலில் தகுதி பெறு
பிறகு ஆசைப்படு
நானே மேலானவன் என்பது தகுதியல்ல
கடமையை உணர்ந்து நடப்பதே தகுதி.
குணம்-2
உண்மையாய் இரு
புத்திசாலித்தனம் காட்டிக்கொடுத்துவிடும்
சூழ்நிலையும், உணர்ச்சியும் ஆரவாரிக்கும்
நியாயமும், கட்டுப்பாடும் கரைசேர்க்கும்
பயிற்சி 
நினைப்பை நிறுத்த தியானம் பழகு
ஆசைகளை நிறுத்த விரதம் பழகு
வெறுப்புகளை நிறுத்த சமநிலை பழகு
குற்றங்களை நிறுத்த துறவு பழகு.
ஆசை 
நினைத்ததை அடைய வல்லது
நெருப்பிற்கு சமமானது
ஒருபோதும் திருப்தி படாதது
துன்பங்களுக்கு காரணமாவது.
பயம் 
நானே மேலானவன் எண்ணம் மாற நியதிகளுக்குப் பயப்படு
சுயநல எண்ணம் மாற நியாயத்துக்குப் பயப்படு
பொறாமை எண்ணம் மாற இறைவனுக்குப் பயப்படு 
ஏமாற்றும் எண்ணம் மாற பாவம் செய்யப் பயப்படு.
பாபம் 
விருப்பும் வெறுப்பும் பாபம் செய்யும்
பாபம் சாபத்துக்கு காரணமாகும்
சாபம் ஈடு செய்யாமல் விடாது
பாபம் செய்யாதிரு மனமே.
கட்டுப்பாடு இல்லாத போது 
பொறுமை இருக்காது
சூழ்நிலை புரியாது
அன்பு தங்காது
அருள் சேராது

நியாயம் 
நியாயம் இறைவனின் வெளிப்பாடு
நியாயமாய் நடப்பதே வலிமை
நியாயத்திற்கு பணிவதே உயர்வு
நியாயத்தை மறுப்பது ஆபத்து.
நியாயம் இல்லாத போது 
உண்மையை மறைக்கத்தோன்றும்
உரிமையை மறுக்கத்தோன்றும்
நடைமுறையை விலக்கத்தோன்றும்
சுயநலமாய் நடக்கத்தோன்றும் 
ஒற்றுமை 
பரஸ்பரம் மரியாதை ஒற்றுமையை காக்கும்
ஒற்றுமை சிதற சுயநலமே காரணம்
நியாயமாய் நடப்பதே ஒற்றுமைக்கு வழி
தவறை திருத்திக்கொள்வதே ஒற்றுமைக்கு நல்லது.
தத்துவம் 
குணமும், குற்றமும் மனிதனின் இயல்பு
செய்யத்  தக்கதும், செய்யத் தகாததும் மீறக்கூடாத நிபந்தனைகள்
பயிற்சியும், வைராக்கியமும் எதையும் சாதிக்க வைக்கும்
தன்னை சரிப்படுத்துவதும், பயனாக்குவதும் மனிதனின் கடமை.
கஷ்டம் 
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமையாது
பலருக்கும் பலவகையில் தன் நிலையும் சூழ்நிலையும் அமைகிறது
ஆசை, விதி வாழ்க்கையை ஆட்சிசெய்யுமானால் கஷ்டம் வலிக்கும்
தடைகளை தெரிந்து, திட்டமிட்ட விடாமுயற்சி கூலியை  பெற்றுத்தரும்.   
விதி 
விதி எனபது நியாயத்தின் தீர்ப்பு
விதிக்குப் பரிகாரம் வலியச்சென்று உதவுவது
விதிக்கு மருந்து விடாமுயற்சி
விதியை தணிக்க பிரார்த்தனை உதவும்.
பெரியோர்கள் கூறியது 
எதிர்பார்ப்பும்  பதிலுக்குபதிலும் நியாயமாய் இருக்க   
விருப்பும்  வெறுப்பும் சரியாய் இருக்க 
மனத்தால மனத்தைக்  கட்டுப்படுத்த 
அடுத்தவர் உரிமையை மதித்திடு மனமே.
சித்தர்கள் கூறியது-1
எதிர்பார்ப்பும் பதிலுக்குபதிலும் பூஜ்ஜியத்துக்கு வர  
விருப்பு  வெறுப்பு இல்லாத சமநிலை ஏற்பட 
மனத்தால்   மனத்தை அடக்க 
செத்தாரைப் போல் திரி மனமே.
சித்தர்கள் கூறியது-2
முயற்சி  நியாயம் மனதிருப்திக்கு உதவும்
உடல்நலம்  பரஸ்பரம் மரியாதை மனமகிழ்ச்சிக்கு உதவும்
வருமானம்  சேமிப்பு மனவலிமைக்கு உதவும்
செத்தாரைப்போல் திரிவது மனம் சக்தி பெற உதவும்
இயற்கை மாறுகிறது 
மண்இரசாயனங்களை கொட்டுவதற்கு அல்ல. உயிர்களுக்குஉணவு தயாரிக்க
காடுகள் வெட்டுவதற்காக அல்ல. மண்,நீர்,காற்றை வளப் படுத்த
கற்றும் நீரும் கெட்டது யாரால். நிலமும் வெப்பமும் கெடுவது யாரால்
இயற்கையின் ஒழுங்கு தடுமாறுவது யாரால்.
இயற்கை செழிக்க 
அறவழி வாழ்க்கை
இயல்பு மாறாத உணவு
இயற்கை மாசுபடாத தொழில்
இயற்கையை காக்கும் காட்டுப்பாடு.
சுயமுன்னேற்றம் (Self Development)
அறிய வேண்டியது   உலகள  வானது
நல்லதொரு புத்தகம்  அறிவுக் களஞ்சியம்
பொழுது  போக்கிற்கென்று படிக்காமல்
படித்ததில் பிடித்தது குணம் ஆக  வேண்டும்
திட்டம் (Planning)
அனுபவமுள்ளவர்  ஆலோசனை கேட்டு
வழியையும்,  மாற்று வழியையும் முடிவு செய்து
பணிகளை  வரிசைப்படுத்தி
வரிசைப்படி பணிகளை செய்வது நன்முயற்சி.
நேரம் 
நேரம் அனைவருக்கும்  ஒரே அளவானது
நேரம்  ஓடிக் கொண்டிருக்கிறது
நேரத்துடன் ஓடுபவர்கள் சாதிக்கிறார்கள்
நேரத்தை அட்டவணையாக்கி பணிகளை முடிக்கிறார்கள்.
முடிவெடுத்தல் (Decision)
பிரச்சினை  என்ன
என்ன  முடிவு வேண்டும்
முடிவை  எட்டும் பலவழிகள் யாது
அதில் சிறந்த வழி எது.
தூண்டுதல் (Motivation)
அன்பாய், அக்கறையாய்  உற்சாகப்படுத்துவதும்
சிறு முன்னேற்றங்களையும் ஊக்கப்படுத்துவதும்
நற்செயலை பாராட்டுவதும்
பரிசுப்பொருட்களால் மகிழ்விப்பதும் தூண்டுதலாகும்.
மன அழுத்தம் 
பதட்டமும், பரபரப்பும்  இதயத்தை அழுத்தும்
கோபமும், கொந்தளிப்பும்  சுரப்பிகளை அழுத்தும்
பயமும்,அதிர்ச்சியும் உடல் இயக்கத்தை தடை செய்யும் 
கவலையும், தவிப்பும் சுவாசத்தை பாதிக்கும்  .
உதவி
ஒற்றுமையின்றி  உதவிகள் இல்லை
உதவிகள்  இன்றி வெற்றிகள்  இல்லை
உயர்வு  என்பது  பலரது உதவிகள்
உதவியை மறந்து சாமர்த்தியம் பேசுவது எல்லோராலும் முடியாது.
உறவில் நெருக்கம் 
பரஸ்பரம்  மதித்து நடப்பதை கட்டாயமாய்  பராமரித்தல்
பரஸ்பரம்  தவகல் தொடர்பை பேணுதல்
பரஸ்பரம்  குறைகளை அனுசரித்துப் போதல் 
பரஸ்பரம் பயனாய் இருத்தல்.
உறவில் விரிசல்-1 
நானே மேலானவன் எண்ணம் குற்றம் செய்ய வைக்கும்
சுயநல எண்ணம் குணம் மாறி நடக்கும்
சாமர்த்தியம் பேசி தப்பிக்கும் உறவு நெடுநாள் தொடராது
யாரை நம்பியும் யாரும் இல்லை என்று ஒதுங்கி நிற்கும்
உறவில் விரிசல்-2
பேச்சும் செயலும் தொடர்ந்து பாதிப்பைத்தரும் போது
அலட்சியமும் ஆதிக்கமும் தொடர்ந்து வெளிப்படும் போது
தகவலும் ஒத்துழைப்பும் தொடர்ந்து குறையும் போது
பதிலுக்கு பதிலாய் அக்கறையும் அனுசரிப்பும் விரிசலாகி நிற்கும்.
தவறு-1
தவறுக்குகாரணம்ஆரோக்கியம்தேவைமனநிலைசூழ்நிலைசேர்வதாகும் தேவையை நிறைவேற்ற நியாயத்தை மீறும் மனநிலையும்
மனநிலைக்கேற்ப ஆரோக்கியமும்சூழ்நிலையும் சாதகமாய் இருக்கும் போது
பின்விளைவை புறந்தள்ளி மனம் தவறைச்செய்கிறது.    
தவறு-2
தனது தவறு தனக்குத் தெரியாது
தனது தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்  
அடுத்தவர் தவறு பெரிதாய் தெரியும்
அக்கறையுடையோர் சொல்லும் தவறை சரிப்படுத்த வேண்டும்.
தீர்ப்பு 
இருபக்கமும் விசாரிக்காமல் முடிவுக்கு வருவதும்
சுயநலத்தை மனதில் வைத்து நியாயம் பேசுவதும்
சாமர்த்தியம்  பேசி பாதிக்கப் பட்டவனை குற்றவாளி யாக்குவதும்
விருப்பு - வெறுப்பால் முடிவு சொல்வதும் தவறான தீர்ப்பு.
விசாரணை
என்ன நடந்தது, என்ன வேண்டும் என்பதை விசாரித்து
சரி எது,  தப்பு எது என்பதை ஆராய்ந்து
சுய நல  சாமர்த்தியங்களை ஒதுக்கி வைத்து
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது.
தகராறு (Conflict)
நடை முறை ஒழுங்கை மீறுவதும்
உரிமையை அலட்சியப்படுத்துவதும்
உண்மையை மறைத்து சாமர்த்தியம் பேசுவதும்
மனதறிந்து அவமதிப்பதும் தகராறுக்கு காரணமாகும்.
வாழ்க்கைப் பாதை-1 
வாழ்க்கை சூழ்நிலையை  மாற்றுவது விதியின் சக்தி
சூழ்நிலைதரும் கிளர்ச்சி தவறு செய்ய வைக்கிறது
பிரார்த்தனையை நம்பினால் சூழ்நிலை தணியும்
பிரார்த்தனை என்பது நல்லெண்ணமாய் இருப்பது.
வாழ்க்கைப் பாதை-2
உடல்நலம் காப்பது அவரவர் கட்டுப்பாடுகள் 
பிணி ஆள் பார்த்து, வயது பார்த்து வருவதில்லை
முதுமையில் பணமும் வேண்டும்  ஆதரவும் வேண்டும்
மரணத்தை நினைத்து எழுதி வைக்க வேண்டும்
வாழ்க்கைப் பாதை-3
இயற்கையாய் உண்பதே உடல்நலத்துக்கு வழி
பிரார்த்தனையாய் இருப்பதே நல்லெண்ணத்துக்கு வழி
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது
பயனாய் இருப்பதே பிறவியின் நோக்கம்

வாழ்க்கைப் பாதை-4
சூழ்நிலையில் கடமையை செய்
மனநிலையில் தியானத்தை நினை
உடல்நிலையில் ஆரோக்கியம் பேணு
உணர்ச்சி நிலையில் உஷாராய் இரு.
                                      ------------------------------------------------


Wednesday 5 August 2015

ஆணவம்-கர்மா-மாயை

                                        ஆணவம்-கர்மா-மாயை 


இந்த பிரபஞ்சமானது பரம்பொருள், மாற்றங்கள், உயிர்கள்  போன்றவற்றால் ஆனது.

பரம்பொருள் என்பது அறிவு மட்டுமே உடையது.
மாற்றங்கள் என்பது அறியாமை மட்டுமே உடையது.
உயிர்கள் என்பது அறிவும், அறியாமையும் உடையது.

பரம் பொருள் என்பது இறைவன். மாற்றங்கள் என்பது நியதி. உயிர் என்பது இறைவனும் நியதியும் கலந்த உணர்ச்சி.

உயிர்கள் பரம்பொருளை அடையவே விரும்புகின்றன. ஆனால்,
உயிர்கள் பரம்பொருளை அடையமுடியாமல் மாற்றங்களில் ஆசைப்பட்டு வாழ்ந்து மடிகின்றன. வெளியுலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் ஆணவம், கர்மா, மாயை என்கிற தடை களில் சிக்கி வாழ்ந்து மடிகிறான். உள் உலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் பரம்பொருளைக்கண்டு பேரானந்த வாழ்க்கை வாழ்வதாக வாழ்ந்து மடிகிறான். விளையாட்டு வீரர்கள் சொற்பம். பார்வையாளர்களோ பல லட்சம் என்பது போல், உள்  உலக சிந்தனையில் ஈடுபட்ட  சித்தர்கள் சொற்பம். வெளி உலக சிந்தனையில் இருந்து சித்தர்களை பாராட்டி, விமர்சனம் செய்பவர்கள் பல லட்சம்.

பரம்பொருளைக்காண தடையாய்  இருப்பது,    ஆணவம், கர்மா, மாயை.
ஆன்மாவானது உடலெடுத்ததும் ஆணவம், கர்மா,  மாயை இம்மூன்றும் அதை சூழ்ந்து கொள்கிறது.
 
ஆணவம்

நான் ஆன்மா அல்ல, உடல் என்பது ஆணவம். உடல் சார்ந்த  தேக பலம், பண பலம், ஆட்பலம், அதிகார பலம், திறமையின் பலம் போன்ற தனது எல்லா உடைமை களைப்பற்றியும் நினைத்துக்கொண்டு பிறரை அணுகுவதும், எதிர்பார்ப்பதும் ஆணவமாகும். தன்னை சுற்றி இருக்கும் இயற்கை சூழலுக்கும், ஜீவராசிகளுக்கும் எந்த வித இடையூறும் கொடுக்காமல் வாழ்வதே ஆணவமற்ற வாழ்க்கை.  நான், எனது, என்னுடைய என்று வரும்போது உணர்ச்சி வயப்பட்டு விடுகிறோம். பாசம்-பகைக்கு ஆளாகி விடுகிறோம். 

கர்மா

வினை என்பதன் மற்றொரு பெயர் கர்மா. ஆணவத்தால் ஏற்படுவது கர்மா. பரம்பொருளையும், ஆன்மாவையும் மறக்கவைத்து உடலால் அனுபவிக்கும் இன்பமே முக்கிய மானது என்று நடப்பதால் அதனால் கர்மா ஏற்படும் படியாகி விடுகிறது.  எண்ணம்.சொல்.செயல் ஆகிய மூன்றாலும் உயிர்களுக்கு நிகழ்கின்ற வினைகளே இன்ப, துன்பங்களுக்கும்  காரணமாகிறது. இன்ப-துன்பங்களை அனுபவிக்கும் காலத்தில் புது வினைகள் ஏற்படுகின்றன. காரணம்-காரியம்-பின்விளைவு  என்னும் சுழற்சியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்றோ, நாளையோ அதற்குரிய பலன் தேடிவரும். அல்லது அதற்குரிய விலையை கொடுத்தே ஆகவேண்டும். மனிதன் விருப்பு வெறுப்பினால் செயல்படக்கூடியவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருக்கிறது. பின்விளைவும் இருக்கிறது. ஆணவத்தின்  விளைவே கர்மா. ஆசை, பொறாமை, நியாயம், கடமை போன்ற செயல்களுக்கேற்ற பின்விளைவே கர்மா. விருப்பம் போல் நடக்கலாம் அது அடுத்தவரை பாதிக்ககூடாது. வெறுப்பைக்காட்டிக் கொள்ளலாம், அதில் நியாயம் இருக்கவேண்டும். தவறை உணர்ந்து குற்றஉணர்வு ஏற்படும்போது வருத்தம், பரிகாரம், மன்னிப்பு போன்ற வழிகள் தெரியவரும். மனித சட்டமாகட்டும், இயற்கையின் சட்டமாகட்டும் தெரியாது என்று மீறுவதால் மன்னிப்பு கிடைப்பதில்லை. தவறை ஒப்புக்கொண்டு வருந்துவதால் மன்னிப்புக் கிடைக்கலாம். 

மாயை

இன்பம் முக்கியமானது, நிலையானது என்கிற எண்ணமே மாயை.  ஆசை, உடைமைகள், உயர்வு, தாழ்வு, உணர்ச்சிகள், சூழ்நிலைகள், இளமை, வாழ்க்கை என எதுவுமே நிலையானது அல்ல. எல்லாம் நேரம் வந்தவுடன் சொல்லாமல், கொள்ளாமல் மாறிவிடும். ஆனால், இவைகளை உயிர்கள் நிலையானது, உண்மையானது என்று நம்பி வாழ்கின்றன. நிலையில்லாததை நிலையானது என்று நினைப்பது மாயை. இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது மாயை. உள்ளதை மறைப்பது மாயை. இல்லாததை தோற்றுவிப்பது மாயை. இதனால், மனத்தின் ஆசைக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கு எல்லையில்லை.

பாம்பு என்று நினைக்கிறவரை வரை பயம் ( நிஜம்). கயறு என்று தெரிந்ததும் அது பொய். ஞானம் என்பது உள்ளதை உள்ளபடி அறிவது. ஞானிகள் வாழ்க்கையை எல்லோராலும் வாழமுடியாது. ஞானிகளின் உபதேசங்கள் நம்மை எச்சரிக்கை செய்யும். நமக்கு வழிகாட்டும்.

பயன் கருதாமல் வினை செய்யும் போது பழைய மற்றும் புதிய வினைகள் அனைத்தும் அழிந்து போகின்றன என்று திருமூலர் சுவாமிகள் கூறுகிறார்.

ஆணவம்  என்பதை ஆங்கிலத்தில் EGO   எனலாம். அதை நானே மேலானவன் (அகந்தை) என்று அர்த்தம் கொள்ளலாம். ஆணவ  எண்ணம் மனதிலிருந்து பல பல வார்த்தைகளாக வெளிப்பட்டு மனிதர்களுக்குள் பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மிகச்சிறு பிரச்சினையை ஆணவம் குடும்பத்தை இரண்டாக்கி விடுகிறது.

கர்மா என்பது செயல். செயல்களில் பலவகையுண்டு. அதில் ஆதிக்கம் அல்லது DOMINATION என்று  ஒரு செயல் பிறரை துன்புறுத்தும் செயலாகும். பிற உயிர்களின் உரிமையை மதிக்காமல் அவற்றை ஆதிக்கம், பலவந்தம் என்னும் செயலால் நம் விருப்பத்தை திணிக்கும் போது அங்கெ பாவம் நிகழ்கிறது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், அதிகாரி-உதவியாளர், வலியவர்- எளியவர் என்னும் உறவுகளுள் நியாயமில்லாத பிரச்சினைகள் ஆதிக்க மனோபாவத்தால் ஏற்படுவதை காண்கிறோம்.

மாயை என்பது கவர்ச்சி, உந்துதல், ஈர்ப்பு, சுகம், சொகுசு, போதை,திருப்திதராத போன்ற வற்றைத்தரும் ஆசை DESIRE, LUST எனலாம்  இந்த உலகிலுள்ள அனைத்தும் பரிணாமம் என்னும் செயலால் மற்றம் அடையக்கூடியது. ஆனால் மனிதமனம் அவைகளை உண்மையென்று நம்பி சிக்கி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறது.

ஆணவம், கர்மா, மாயை என்பவற்றை, நானே மேலானவன், ஆதிக்கம், ஆசை போன்ற எண்ணங்கள் என நினைவில் கொள்ளலாம்.

நானேமேலானவன்  எண்ணம் நீக்கும்   பரஸ்பரம் மரியாதை   பழகு.
ஆசைகளை  குறைக்கும்      விரதங்கள்     பழகு.
எண்ணுவதை  நிறுத்தும்    தியானம்    பழகு.
சுயநலத்தை  அகற்றும்   சமஉரிமை   பழகு.
பொறாமையை  நீக்கும்   பிரார்த்தனை   பழகு.
லாபத்திற்காக ஏமாற்றாத   நேர்மை   பழகு.
இயற்கையை  விரும்பும்   எளிமை   பழகு.
வழிபாட்டிற்கும்  மேலான   கடமை   பழகு.
பாதித்தவனை  மதிக்கும்     நியாயம்    பழகு.
தன்  குற்றத்தை  உணரும்  சுயவிசாரணை   பழகு.

                       ---------------------------------------------



Tuesday 4 August 2015

ஆன்ம தரிசனம்

                                       ஆன்ம தரிசனம் 

உலகில்  பலவித குணங்களுடைய,  உயர்வு, தாழ்வு  உடைய மனிதர்கள் வாழ்ந்து மடிவதை அறிவோம். இதில் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு பிரிவு லொளகீக வாழ்க்கை வாழும் மனிதனுக்கு   துறவற வாழ்க்கை வாழ்ந்த மகான்கள் தரும் பாடம்.

உயிரினங்களில் மிக உயர்ந்தது, சிறந்தது என்பது  மனித இனமாகும். பரம்பொருள் அல்லது இறைவன் கூட அனுபவம் பெறவேண்டுமானால் மனிதப்  பிறவி எடுக்க வேண்டும். மனிதனால் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.

இறைவன் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தருக்கும் உணர்ச்சியுள்ள, கண்ணுக்கு தெரியாத சர்வசக்தி.

 தன்னைப் பற்றி சிந்தித்த வண்ணம் செயல் பட்டவர்கள் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்கள். உலகக் காட்சியில் அவர்களுக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. தாங்கள் மேற்கொண்ட வைராக்கியத்தால்  பிறரால் நம்ப முடியாத, காணமுடியாத   உண்மைகளை கண்டார்கள். அதில் ஒன்று தான் ஒவ்வொரு உயிரும் ஆன்மா என்னும் தெய்வத்துளியினால் ஆனது என்பது.

 உலகக் காட்சிகளை உண்மை என்று நம்பி அதன் மீது பற்று கொண்டவர் களுக்கு தன்னுள் ஆன்மா இருப்பது புரியாது. தன்னுள் ஆன்மா இருப்பதை புரிந்தவர்களுக்கு வெளிக் காட்சிகளால் எந்த பயனும் இல்லை. அவர்கள் பித்தர்களைப்போல் இருப்பார்கள். அவர்கள் அதிசய சக்திகளை கொண்டிருப் பார்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. அவர்களால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

விஞ்ஞான-தொழில் நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும், கடலையும், நீரையும், நிலத்தையும்  மாசுபடுத்தினோம்.  மனிதனின் சுயநலனுக்காக காடுகளை அழித்தோம், அழித்துகொண்டிருக்கிறோம் அதனால் இயற்கையின் பருவநிலையை தடுமாற செய்திருக்கிறோம். இது மனிதனின் லொளகீக வாழ்க்கையின் பின்விளைவு.

விஞ்ஞான-தொழில் நுட்ப மயத்தை ஆதரித்தோம்.

துறவற வழ்க்கை வாழ்ந்த மனிதன் சொன்னதை புறந்தள்ளினோம்.

மனிதனின் உடல். அதில் இரண்டு முக்கிய உறுப்புகள். ஒன்று  இதயம், இரண்டு மூளை.

முதலில் இதயம். இதயத்தின் துடிப்பு சுவாசத்தின் ரிதத்தை ஒட்டி இருக்கிறது. சுவாசம் என்பது  உள்மூச்சு, வெளிமூச்சு என்னும் இயக்கத்தால் ஆனது. இதுவே உயிரின் இயக்கம். உயிர் பிரிந்து விட்டால் மூச்சு நின்று விடும். மூச்சு  நின்று விட்டால்  இதயம் நின்றுவிடும். இதயம் நின்றுவிட்டால் மனிதன் மரணம்.

இந்த இதய இயக்கத்தில் இருப்பதுதான் ஆன்மா என்னும் தெய்வத்துளி. இது உடல் என்பதன் எதிர்பதம். உடல் அழியும், ஆனால் ஆன்மா  அழியாது. உடல் கண்ணுக்குத் தெரியும் ஆனால், ஆன்மா கண்ணுக்குத் தெரியாது.

அடுத்தது மூளை. மூளையானது  மனத்திடம் அனைத்தையும் அற்பணிக்கக் கூடியது.  மனமானது  மூளைக்கு உத்தரவிடக்கூடியது. ஆனால்,  மனம் வைராக்கியத் திற்கு அடிமையாகக்கூடியது. வைராக்கியம் எதையும் சாதிக்க கூடியது. வைராக்கியம் ஆன்மா வையும்   தரிசிக்க வைத்து சாதிக்கக் கூடியது.  இதய இயக்கத்தில் இருக்கும் ஆன்மாவை மூளை வழியான வைராக்கியம் மூலம்  மட்டுமே தரிசிக்க முடியும். மூளை உடலின் ஒரு பாகம். மனம்  எண்ணங்களால் ஆனது. ஐம்புலன்களும் எண்ணங்களை உற்பத்திசெய்யும் மற்றும்  எண்ணங்களை செயல்படுத்தும் கருவிகள். எண்ணங்களை நிறுத்தினால் அதன் பெயர் தியானம். ஆசைகளை நிறுத்தினால் அது கட்டுப்பாடு.

ஐம்புலன்களையும், எண்ணங்களையும்,ஆசைகளையும் நிறுத்துவது விரதங்கள், அதை பயிற்சி என்றும் சொல்லலாம். வெளிஉலக காட்சிகளை விரும்பாதவர்கள் இப்பயிற்சிகளை எளிதாக செய்தார்கள்.ஆன்மா இதய இயக்கத்தில் இருக்கும் தெய்வத்துளி. வைராக்கியம்   என்பதும், ஆன்மா என்பதும் கண்ணுக்குத்தெரியாத சக்தி. வெளியுலகை துறந்த வைராக்கிய வான்களுக்கே ஆன்ம தரிசனம் சாத்தியமாயிற்று.

துறவு நெறி அதாவது, ஆன்மாவைத் தரிசிக்கும்  வாழ்க்கை முறையால் இயற்கை நாசமடையவில்லை.

நுகர்வு  நெறி அதாவது, விஞ்ஞான - தொழில்நுட்பத்தை அனுபவிக்கும்  வாழ்க்கை முறையால் தான் இயற்கை மிக வேகமாக மாசடைகிறது.

துறவற வாழ்க்கை எல்லோராலும் வாழமுடியாது. சுகபோக வாழ்க்கை ஊதாரித்தன வாழ்க்கையாகும். இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையே சிறப்பானது.

இன்றைய சூழலில்,

எளிமையான உடை, எளிமையான உணவு, எளிமையான உறைவிடம். எளிமையே நோக்கம்.

கடமைகளை தட்டிக்களிக்காமல் இயன்றவரை முழுமையாக செய்துவிடல். முடியாதபோது முடியவில்லை என்பதை  சொல்லிவிடுதல்.

எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இக்கட்டான நிலையிலுள்ள அப்பாவிக்கும், தன்னால் இயன்றதை  மனிதநேயத்துடன் செய்வது.

எங்கும் நியாயம், எதிலும் நியாயம், எப்போதும் நியாயம், நியாயமே தெய்வம் என  நியாயமாய் நடப்பதை வாழ்வின் லட்சியமாய் கொள்ளுதல்.

தேவைகளை படிப்படியாக   குறைத்துக் கொண்டே போகுதல். தனக்குள்ள வேலைகளை தானே செய்து கொள்ளுதல்.

எண்ணங்களை நிறுத்திய தியானம். ஆசைகளை நிறுத்திய விரதம்
போன்ற  பயிற்சிகளை செய்தல்.

                                      ----------------------------------------------------



Sunday 2 August 2015

உணவும் உடல்நலமும்

                                          உணவும் உடல்நலமும்

சத்துள்ள உணவுகளை மாற்றி, மாற்றி சரியானவிகிதத்தில் கலந்து சரியான அளவுக்குள் உண்பதை கட்டாயமாக்கிக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி  உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என எல்லா சத்துக்களும் கலந்திருக்க வேண்டும்.

இளமையில் துடிப்பாகவும், குடும்பத்தகராறு, நிதிப்பிரச்சினை, தொழில்ப்பிரச்சினை, போன்ற வைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்கவும், முதுமையில் வலிமையாக இருக்கவும் உதவுவது அவரவர் உணவுப்பழக்கங்களே முதல் காரணமாகும்.

நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நமது ஹார்மோன்கள் செயல் படுகிறது.கொழுப்பை உடலில் சேர்த்து வைக்கிறோமா அல்லது எரிக்கிறோமா என்பதை அந்த ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.

உண்ணும் உணவு ஜீரணமாகி, உடலுள் சுரக்கும் பல்வேறு திரவங்களுடன் சேர்ந்து உடைந்து, துகள்களாக சிதைந்து, திசுக்களில் சக்தியாக மாறுகிறது. என்சைம்கள் (Enzyme) இந்த இரசாயன மாற்றங்களை தூண்டும் கிரியா ஊக்கியாக (Catalyst) செயல்படுகிறது. நமது ஆரோக்கியத்திற்கு கார்பன், ஹைட்ரஜன் என 50 மூலகங்கள் (Elements)  தேவைப்படுகிறது.  இவை அனைத்தும் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு போன்ற சத்துக்களிலிருந்து வளர்சிதை மாற்றங்கள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

எந்த உணவுகள் நன்மை செய்யும், எந்த உணவுகளை உண்ணக்கூடாது என்பதை கற்றுக்கொள்வது நல்லது.

உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரோட்டீன் அதற்கு குறைவாகவும், கொழுப்பு அதைவிட குறைவாகவும், தினசரி உணவில் இருக்கவேண்டும். இவை 45 : 35 : 20 என்கிற சதவிகிதத்தில் இருக்கும் போது அதை சமசீர் உணவு என்கிறார்கள்.

சமசீர் உணவு உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. உடலை மெல்லியதாக வைத்து ஆரோக்கியமாக்குகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பு உடலில் சேருவதில்லை. உடல் தளர்ச்சி குறைகிறது. பசியை அளவோடு வைக்கிறது.

உண்ணும் உணவுகளில் அனைத்தையும் உடலானது பயன் படுத்திக்கொள்ளவோ, தேவை இல்லாததை, அதிகமானதை வெளியேற்றவோ செய்யும்படி கண்காணித்துக் கொள்ளவேண்டும். உணவுகளிலுள்ள ஏதாவது பாகம் இரத்தத்திலோ, திசுக்களிலோ தேவைக்கு அதிகமாக சேருமானால் அதுவே நோயாகி விடுகிறது. இதனை மூன்று வழிகளில் செயல் படுத்த முடியும். ஒன்று, ஒழுங்கான மருத்துவ சோதனை. இரண்டு, ஒழுங்கான உடற்பயிற்சி. மூன்று, ஒழுங்கான உணவுக்கட்டுப்பாடு. இதில் ஏதாவது ஒன்றில் அலட்சியம் ஏற்படுமானால் கூட நோய் தவிர்க்க முடியாத தாகிவிடும்.

 உப்பு, இனிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் உணவில் அதிக மாகவும், கெடுதல் செய்யும் வகைகளாகவும் இருக்கிறது. உணவகங்களில் உண்ணும் போதும், குளிர்பானங்கள் மூலமும் நமக்கு தெரியாமலே, இவைகளை தேவைக்கு அதிகமாக உண்கிறோம்.

தற்போதைய உணவுப்பொருள் சந்தையில் ஆர்கானிக் உணவுப்பொருள் இன்னார்கானிக் உணவுப்பொருள் என இரண்டு வகைகளில் தாவர உணவுப்பொருட்களும், மாமிச உணவுப்பொருட்களும் அடையாளம் கூறி விற்கப்படுகின்றன.

ஆர்கானிக் உணவுப்பொருள் :-  இவ்வகை உணவுப்பொருட்களை விளைவிக்க விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே நிலத்திற்கும், பயிர்களுக்கும் உபயோகிக்கிறார்கள். பயிர்களை தாக்கும் புழுக்களை அழிக்க அவைகளை தின்னும் பூச்சி களையும், பறவைகளையும் வளர்க்கிறார்கள். நோய்களை தடுக்க இயற்கையான மருந்துகளை உபயோகிக்கிறார்கள். களைகள் வராமலிருக்க பயிர் சுழற்சிமுறைகளை கையாளு கிறார்கள்.  எந்த வகையிலும் பயிர்களுக்கு இரசாயனங்களை உபயோகிப்பதில்லை. மனிதர்கள் உண்ணும் உயிரினங்களை வளர்க்க ஆர்கானிக் பயிர் உணவுகளையே கொடுத்து வளர்த்து சந்தையில் விற்கிறார்கள்.

இன்னார்கானிக் உணவுப்பொருள் :- இவ்வகை உணவுப்பொருட்களை விளைவிக்க விவசாயிகள் ரசாயன உரங்களையும், சின்தட்டிக் கலவைகளை பூச்சி கொல்லியாக மற்றும் நோய்க்கெதிராக பயன் படுத்துகிறார்கள். களைகள் வளராமலிருக்க சின்தட்டிக் ஹெர்பிசைட் உபயோகிக்கிறார்கள். தாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு ஆன்டிபயாடிக் மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஹார்மோன்களை கொடுத்து
வளர்க்கிறார்கள்.

மனிதனின் பலவிதமான நோய்களுக்கு இன்னார்கானிக் உணவுப்பொருட்களும் காரணம் என இப்போது அனைத்து தரப்பினரும் கூறி வருகிறார்கள். ஆர்கானிக் உணவுப்பொருட்களே ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள்.

ஆரோக்கியம் இருக்கும்போதே உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல்நலத்தையும், இளமையையும் தக்கவைத்துக் கொள்ள பொதுவாக யாரும்  விரும்புவதில்லை. கண்கெட்ட பிறகே தினமும் சூரியனை பார்க்க ஆசைபடுபவர்களாக இருக்கிறோம்.

தினசரி நாம் உண்ணும் உணவில் 45 சதம் கார்போஹைட் ரேட் டும் , 35 சதம் புரோட்டீனும், 20 சதம் கொழுப்பும் இருக்கவேண்டும். ஆனால் தமிழ் நாட்டு உணவில் 70 சதம் கார்போஹைட்ரேட்டும் எஞ்சிய 30 சதம் புரோட்டீனும், கொழுப்பும் இருக்கிறது.

அதிக கார்போஹைட்ரேட் உணவுப் பழக்கத்தால் பலவிதமான நோய்கள் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. அதற்கென சாப்பிடும் மாத்திரை, மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் களால் மேலும் ஆரோக்கியம் குறைகிறது. மண் வளக் குறை பாட்டாலும், உணவுப்பொருட்களை சுத்திகரிப்பதாலும், அதிகம் குழைய வேக வைப்பதாலும் சத்துக்கள் குறைந்து போகின்றன.

விவசாயிகள் நேரடியாக விற்கும் உள்ளூர் தெருவோர கடைக் காய் கறிகளே சிறந்தது. வெளியூர் காய்கறிகள்  அதிக நாள் பாதுகாக்கப் படுவதால் அவை இயற்கை தன்மையை இழந்திருக்க கூடும்.

முழுத்தானியம், காய், கனி,  கீரை, மூலிகைகள், நட்ஸ், சீட்ஸ் போன்றவை களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.

இயற்கை உணவுகளை மனிதன் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கும் போது பல சத்துக்கள் பிரிந்து போய் விடுகின்றன. தவிடு நீக்கிய வெள்ளை அரிசி, மைதா மற்றும் (Refined) உப்பு, சீனி, எண்ணெய்  போன்ற கெடுதல் உணவுகள், காய், கனிகள் மீது பூச்சிக் கொல்லி இரசாயனம், காய், கனிகள் கெட்டுப் போகாமலிருக்க கதிர்வீச்சு, நீண்ட நாள் கெடா மலிருக்க இரசாயனம் சேர்த்த தயார் உணவுகள் மற்றும் பானங்கள் தாராளமாய் கிடைக்கின்றன. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
    
நாம் எதை உண்கிறோம். உடலுள் அது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். ருசி என்றோ,  இருக்கிறது என்பதற்காகவோ, நிர்பந்த படுத்தினார்கள் என்றோ, வீணாகி விடும் என்றோ   கேடு விளைவிக்கும் உணவுகளை உண்ணக்கூடாது. 

கடந்த நூறு ஆண்டுகளில் உலகம் இயந்திர மயமாகி உணவு, உடை, உறைவிடம் என அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டது. மனிதன் இயற்கை உணவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட உணவு, பாதுகாக்கப்பட்ட உணவு, தயார் நிலை உணவு, துரித உணவு, என பல்வேறு உணவுகளை பயன்படுத்துகிறான். இயற்கை உணவை மாற்றம் செய்யாமல் உண்டு வாழ்ந்த மனிதனின் மூளை வளர்ச்சி பெறாமல் இருந்தது எனவும், நெருப்பை கையாளத்தெரிந்த மனிதன் வேகவைத்த உணவுகளை உண்ண ஆரம்பித்ததிலிருந்து மூளை வளர்ச்சி யடைந்து, இப்போது கலோரி அதிகமுள்ள உணவுகளால் மூளை வளர்ச்சி இரண்டு மடங்காகி வருவதாக கூறுகிறார்கள். மனிதனின் அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை ஆனால், ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு 50 சதம் இயற்கை உணவும், 50 சதம் லேசாக வேக வைத்த உணவும் நல்லது என்கிறார்கள். பொரித்த, வறுத்த, கருகிய உணவுகள் ஆரோக்கியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

உணவை வீட்டில் செய்து உண்பது நல்லது. அதுவே, உடல் எடை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சுகர் மற்றும் பொது நலத்துக்கு நல்லது. உணவக உணவுகள் அதிக கலோரி உடையது. வீட்டில் மூன்று வேளை உணவிலுள்ள கலோரி, ஓட்டலில் ஒரு வேளை  உணவில் இருக்கிறது. ஓட்டல் உணவுகள் சுவையாக இருப்பதினால் கலோரி பற்றி கவலைப்படாமல் அதிகம் சாப்பிட்டு விடுகிறோம்.

ஒவ்வொருவர் உடலிலும் ஏதாவது ஒரு உறுப்பு பலவீனமாக இருக்கும். தவறான உணவுகள் அந்த உறுப்பை மேலும் பலவீனப்படுத்தி நோயாளி ஆக்கி விடும்.

மது கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. உடலில் கால்சியத்தை குறைக்கிறது. மதுவில் சத்துக்கள் எதுவும் இல்லை, கலோரி அதிக மாக இருக்கிறது.

சுத்திகரிக்கப் பட்ட உணவுகள் கணையத்தை பலவீனப்படுத்தி இன்சுலின் பிரச்சினையை தருகிறது. இளைஞர் களுக்கு உடலில் கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கிறது.

எண்ணையில் வறுத்த உணவுகள் இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி இரத்தக்குழாய் களில் துகள்களாக வலம் வந்து இதயம், மூளை, பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை பிரச்சினையாக்கு கிறது.

உப்பு உணவுக்கு ருசியை தருகிறது.  அதே உப்பு உணவில் அதிக மாகும் பொழுது இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்து கிறது. இதனால் இதயம், சிறுநீரகம், மூளை பலவீன மடை கிறது.

இருபது வயது களில் உடல் முழுவளர்ச்சியை அடைந்து விடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு பத்து வயது கூடும் போதும் உணவின் அளவையும் குறைக்கவேண்டும்.  உணவில் கட்டுப்பாடாய் இருக்க வில்லையானால் நாற்பது வயதுகளில் மாத்திரை,  மருந்து என்பது கட்டாயமாகிவிடுகிறது.  

உடல் எடையை அதிகமாக்கும் உணவுகள், உயர் இரத்த அழுத்தத்தை தரும் உணவுகள், சுகர் நோயை தரும் உணவுகள், இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் உணவுகள், சிறுநீரகம், கல்லீரல்  மற்றும் இதயத்தை பலவீனப்படுத்தும் உணவுகள் போன்றவற்றை இளம் வயதிலேயே தெரிந்து  உணவுப்பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கிய  குறைவிற்கு உடற்பயிற்சி இன்மையும், பிறவிக்  குறை பாடுகளும், பரம்பரையும், சுற்றுப்புற சூழலும், அவரவர் விதியும் பிற காரணங்களாகும்.

எல்லா உணவுகளையும் மாற்றி, மாற்றி உண்பது நல்லது. சரியான உணவு எது, தவறான உணவு எது என தெரிந்து உண்பது நல்லது. பசுமையாக, புதியதாக செய்து உண்பது நல்லது. உள்ளூர் காய், கனி களை உண்பது நல்லது.உடல் எடை கூடாதவாறு அளவோடு உண்பது நல்லது.

                           -------------------------------------------------