Friday 14 October 2016

                         தனிமனித பொறுப்புகள் 

உயிரினங்களில் மனித இனம் உயர்ந்தது. காரணம் மனிதனுக்கு மனம் என்பது கூடுதலாக இருக்கிறது. அந்த மனத்தால் சிந்திக்க முடியும் சிந்தித்ததை வெளிப்படுத்தமுடியும்,  சிந்தித்ததை செயல்படுத்தவும் முடியும். மனித சிந்தனை எல்லையற்றது, கட்டுப்பாடற்றது. ஆனால் இயற்கையின் செயல்கள் அனைத்திற்கும் எல்கையும் கட்டுப்பாடும் உண்டு. வெயிலுக்கு மழையும், மழைக்கு வெயிலும் என எல்கையும் கட்டுப்பாடுமாக இருக்கிறது. காற்றிலுள்ள பிராணவாயுவை மனிதனுக்கும், மனிதன் வெளியேற்றும் கரியமலவாயுவை தாவரங்களுக்கும்  என எல்கையும்  கட்டுப்பாடுமாக இருக்கிறது. இது போன்று இயற்கை எல்லாவற்றையும் ஒரு சுழற்சிக்குள் ஏற்பாடு செய்திருப்பதால் இந்த உலகம் ஒரு சீராக எல்கையும், கட்டுப்பாடு  மாக இயங்கி வருகிறது.

மனித மனத்தின் சிந்தனையும் செயலும் இந்த சுழற்சி தத்துவத்தை கடைபிடிப்பது கிடையாது. மனிதன் இயற்கையிலுள்ள பொருட்களில் இருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டாத கழிவுகளை இயற்கை மீது எறிந்து விடுகிறான். மனிதன் இயற்கையின் மீது கொட்டும் கழிவுகளால் ஐம்பொருட்களும் மாசடைவது பற்றியோ, இதர ஜீவராசிகளின் அழிவு பற்றியோ மனிதன் கவலைப்படவில்லை. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது மனிதனுக்கு நன்றாகவே தெரியும். இதன் விளைவு தான் இன்றைய காலநிலை மாற்றங்கள், மாசு, நோய்கள், போட்டி, பொறாமை, வறுமை, ஆடம்பரம், சுயநலம், இல்லாமை, தீவிரவாதம் போன்று பல்வேறு பிரச்சினைகளாய் வெளிப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு, வீட்டுக்குள், தனிமனிதனுக்கு என பலவகையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை அறிவோம். இயற்கை பேணும் எல்கை, கட்டுப்பாட்டு சுழற்சியை மனிதனும் பேணி கட்டுப்பாடுடன் விஞ்ஞானத்தை வளர்த்திருந்தால் வாழ்க்கை அனைவருக்கும் இனிப்பாய் இருந்திருக்கும்.  

அறம் பேணு 
 கடமை என்று வரும் போது பலனை எதிர் பாராமல் செய்வது
ஆதிக்கம் செய்யாமல் அடுத்தவர்  உரிமைகளை மதித்து  நடப்பது.
எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நியாயமாய் நடந்து காட்டுவது .
பிறர் கஷ்டம் உணர்ந்து  தன்னால் இயன்றதை வலிய செய்வது 

இயற்கை பேணு 
சுயநலம் பின்விளைவை கருத்தாமல் போனால்,
                                               சுயநலம் பின்பலனை சிதைத்து விட்டுப்போகும்
பரஸ்பரம் மரியாதையை கருதாமல் போனால்,
                                              பரஸ்பரம் தொடர்பு இல்லாமல் போகும்
உதவும்பொருளை கருதாமல் போனால்,
                                              கருதாத பொருள் உதவாமல் போகும்,
மனசாட்சி கடவுள்பயம் கருதாமல்போனால்.
                                              கடவுள்நீதி மனசாட்சி இல்லாமல் போகும்

உடல் பேணு 
உடல் இயங்கும் விதத்தை தெரிந்திருப்பது
உடலை வழிநடத்த  மனக்கல்வி பழகுவது
உடல் உழைப்பில் விவசாயம் முதன்மையானது
உடல் நலத்திற்கு உணவே மருந்தாக வேண்டும்.

எளிமை பேணு 
விஞ்ஞான வளர்ச்சியால் சுகாதாரம் அழியும்
ஆடம்பர வளர்ச்சியால் வளங்கள் அழியும்
சொகுசு வளர்ச்சியால் வலிமை அழியும்
கட்டுப்பாட்டின் வளர்ச்சியால் துன்பம் அழியும்

விளக்கம் 

அறம் பேணு 
ஒவ்வொரு தனி மனிதனும் பேண வேண்டிய சில பொது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் இனிமையாய் வாழ நம் முன்னோர்கள் நன்னடத்தை, மதிப்பு, ஒழுக்கம் என்கிற சில நற்செயல்களை பொதுவாக்கி அதனை அறம் என்று சொல்லி குருகுல கல்வியில் போதித்தார்கள். ஒவ்வொருவரும் இந்த அறத்துடன் தன குணத்தை ஒப்பிட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவேண்டியது அவரவர் கடமையாகும் என்றார்கள்  .ஆனால், நாம் அப்படி செய்யாமல், நம்மை பிறருடன் ஒப்பிட்டு அவர்களைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ ஆரம்பிக் கிறோம் அறம் கூறும் வழியினை தொலைத்து விட்டு துன்பப் படுகிறோம். தற்கால கல்வி பணம் சம்பாதிக்கும் வழியினை மட்டுமே சொல்லித்தருகிற கல்வியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவோம். மனம் போகும் போக்கில் போவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும், பிறரிடம் பகை கொள்வ தற்கும், பிறரை ஆதிக்கம் செய்வதற்கும், தனது பலத்தால் பிறருக்கு பாதிப்பினை ஏற்படுத்தவும், நிரபராதி யார் என்று விசாரிக்காமல் தண்டிக்கவும், உண்மைகளை மறைத்து சாமர்த்தியம்  பேசுவதற்கும், அனைத்து தரப்பினரும், அனைத்து துறையிலுள்ளவர்களும் எந்த பயமும் இல்லாமல் நடப்பதை கண்கூடாக காண்கிறோம். அறம் என்பதை தனிமனிதன் பேணாமல் போனதால் தனிமனித கட்டுப்பாடுகள் என்பது இல்லாமல் போய்விட்டது. பின்விளைவாக மனஅழுத்தம் நிரந்தரமாகி விட்டது. அது ஒருத்தரை ஒருத்தர் நிம்மதியாக வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

இயற்கை பேணு 
1.நாம் காணும் இயற்கை நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மகாசக்தியின் வெளிப்பாடு என விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் சொல்லுகிறார்கள். மனிதன் பயப்படவேண்டியதற்கு பயந்து வாழவேண்டும் என்பதை பழமொழிகளிலும், நீதிகளிலும் மிக அழுத்தமாய் நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும், மனசாட்சிக்கும், அரசு சட்டங்களுக்கும், இயற்கை நியதி ( தெய்வ நீதி ) களுக்கும் பயந்து வாழ்பவர்கள் அரிதாகி வருகிறார்கள். அதனால், மறுபுறம்  குற்றங்களும், பாதிப்பு களும் அதிக மாகி வருவதை காண்கிறோம். 2.தனக்கு உதவும் இயற்கை பொருட்களை பேணாமல் வளர்ச்சி, முன்னேற்றம் என எல்லா வளங்களும் மாசுபடுவதற்கும், அழிந்து போவதற்கும் அவை நமக்கு உதவாமல் போவதற்கும்  நாமே காரணமாய் இருக்கிறோம். 3.நாம் உறவாடும் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது. நமது வலிமையின் ஆணவத்தால் பிறரின் சுயமரியாதையை அலட்சியப்படுத்தி நடக்கும்  போது நாளடைவில் அந்த உறவு முறிந்து போய் விடுகிறது. 4.தனது ஆசைகள், காரியங்கள் தான் முக்கியம் என சுயநலமாய் நடக்கும் போக்கினால் பின்னால் வரப்போகும் நல்ல தருணங்களை இழந்து விடுகிறோம். நம் கண்முன் இருக்கும் சக மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் என அனைத்தும் மனிதனால் பேணவேண்டிய இயற்கையாகும்.ஆனால், நமக்கு அதுமாதிரி கல்வி தரப்படவில்லை. இது போன்று இயற்கையை பேணுவதை கைவிட்டதினால், வீட்டிலும், நாட்டிலும், உலகிலும் நியாயமற்ற போக்குகள் ஏற்பட்டு தீராத பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே போவதை காண்கிறோம். தனக்கு தேவையான வெளியே காணும் பிற அனைத்தும் இயற்கையை சார்ந்தது. அவற்றை மதித்து, பேணிக் கொள்ளவேண்டியது அவரவர்களின் பொறுப்பாகும் .

உடல் பேணு 
1.வாழ்க்கைக்கு ஆதாரம் உடல். அந்த உடல் இயங்கும் விதத்தை அறிந்து வைத்திருப்பது அனைவர்க்கும் நல்லது. 2.உடலில் முக்கிய மானது ஐம்பொறிகள். அந்த ஐம்பொறிகளையும் ஆட்டிப்படைப்பது மனம். அந்த மனதிற்கு நாம் தான் கல்வி கொடுக்கவேண்டும் ( Educate the Mind ). ஏனென்றால் மனதிற்கு நல்லது-கெட்டது, சரி-தவறு தெரியாது. மனம் ஆசைப்படுவதை எப்படியாவது அடைந்து விட நினைக்கும் ஒரு சக்தி. 3.உடலுக்கு உழைப்பு வேண்டும். உடல் உட்கார்ந்தே இருப்பதற்காக படைக்கப்பட்டது அல்ல. விவசாயம் ஒன்றே மனிதனுக்கும் இயற்கைக்கும் உகந்த ஒரே தொழில். மற்றெல்லாம்  பின்விளைவு உள்ள தொழிலாகும். 4.நாம் உண்ணும் உணவு உடலுக்கு சத்தாகவும், மருந்தாகவும் இருக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு உணவுவகைகளை சொல்லிக்கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் நாம் ருசிக்காகவும், மேலைநாட்டு உணவே சிறந்தது என்றும் உணவே மருந்து என்னும் நல்ல பழக்கத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். அதன் பின்விளைவாக மருத்துவமனைகளும், செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போவதையம் காண்கிறோம். அவரவர் உடலைப் பேணுவது அவரவர்களின் முக்கிய கடமையாகும்.

எளிமை பேணு 

1.தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித இனத்திற்கு நன்மை செய்கிறது என்கிற நோக்கத்தில் மனிதன் விஞ்ஞான - தொழில்நுட்பத்தை எந்த பின்விளைவு களையும் பொருட்படுத்தாமல் வளர்த்துக்கொண்டு போகிறான். ஆனால், இந்த உலகம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மனித சக்தி மட்டுமே உயர்ந்ததும் அல்ல. அதற்கும் மேலே, இயற்கையின் நியதிகள் இருக்கிறது. இயற்கையின் சுழற்சிகள் இருக்கிறது. இயற்கையின் புதிரான மாற்றங்கள் இருக்கிறது. இயற்கையில் பல்வேறு ஜீவராசிகள் இருக்கிறது, மேலும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிதாய் பல்வேறு ஜீவராசிகள் உற்பத்தியாக இருக்கிறது. இவையெல்லாம் மனித சக்திக்கு உட்பட்டதல்ல. மனிதனுக்கு சவால்விடுவதாக கூட இருக்கலாம். அதனால், அளவிற்கு மீறி இயற்கையின் சுகாதாரம் பாதிக்கும் படியான விஞ்ஞான - தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதல்ல. 2. மனித இனம் ஆடம்பரங்களை அனுபவிக்க இயற்கையின் வளங்களை அழித்து இயற்கையின் சமநிலையை சீர்குலையும் படி செய்கிறது. இதை மனித இனம் மட்டுமே செய்கிறது. 3.மனிதனின் சொகுசுக்கு அளவே இல்லை. உணவாகட்டும், படுக்கையாகட்டும், பொருட் களாகட்டும் சொகுசையே நோக்கமாக கொண்டு வியாபாரிகள் புதுப்புது வகைகளை விற்பனைக்கு கொண்டுவருகிறார்கள். அதன் பின்விளைவாக மனிதன் வலிமை இழந்து சிறுவயதிலேயே மருத்துவத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுவதை காண்கிறோம். மனிதனுக்கு மட்டுமே மருத்துவ மனைகள் பெருகிக்கொண்டு போவதே இதற்கு சான்று. 4.கட்டுப்பாடாய் வாழ்வதும் கஷ்டம். மாசடைந்த சுற்றுப்புறத்தில் வாழ்வதும் கஷ்டம். கட்டுப்பாடாய் வாழும்போது மனதில் வலிமையையும், உடலில் தெம்பும் நிறையவே இருக்கும். ஆனால், நாகரீக வாழ்க்கையின் பின்விளைவான பலவீனம், நோய், விலைவாசி, தாழ்வுமனப் பான்மை போன்றவைகள்  வாழ்க்கையை நிம்மதி யில்லாமல் ஆக்கி விடுகிறது.  

மனிதன் பேணவேடியதை பேணாமல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் பல அதிசயங்களை கைக்குள் கொண்டு வருவதால் இந்த இயற்கை இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுமா, மனித பிரச்சினைகள் தீருமா, எல்லா உயிர்களுக்கும் அமைதியான சூழ்நிலை கிடைக்குமா. விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்குநாடு ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. மனிதருக்கு மனிதர் ஆடம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்த்துள்ளது. இதனால் இயலாமையும், பொறாமையும், வெறுப்பும் பலவாறாக வெளிப்படுகிறது.

 மனிதன் முதலில் கட்டுப்பாடுகளை பேணவேண்டும். அதாவது, மனிதனது கண்டுபுடிப்புகள் அனைத்தும் இயற்கை சுழற்சி போன்று முழுமை பெற்றதாக இருக்கவேண்டும். அது முடியுமா, நாம் வெகுதூரம் வந்து விட்டோம்.

                          -------------------------------------------------------------                                                

Friday 23 September 2016

                                             கடவுளும் மனிதனும்

மிருக வாழ்க்கை வாழ்ந்த ஆதிமனிதனுக்கு கடவுள் பற்றிய சிந்தனை இல்லாதிருந்தது. புயலையும், காட்டுத் தீயையும், காட்டு வெள்ளத்தையும், பூகம்பத்தையும், இடி, மின்னலையும் பார்த்து பயந்துகொண்டிருந்தான்.

மனிதனுக்குள் இருந்த  சிந்திக்கும், புரிந்துகொள்ளும், வெளிப்படுத்தும், செய்து பார்க்கும் சக்திகள் ஒவ்வொன்றாக பயன்பாட்டிற்கு வந்தன..

ஏதோ ஒரு சக்தி தான் இதையெல்லாம் நடத்துகிறது என்று மனிதனுக்குத் தோன்றியது. முதலில் இடி, மின்னலை வணங்கினான்.  பிறகு அவனுக்கு நன்மை செய்யும் ஒவ்வொன்றையும் வணங்க ஆரம்பித்தான். மனித கூட்டம் பெருக பெருக அனுபவங்களும், அறியாமைகளும்,  நம்பிக்கைகளும், பகுத்தறிவும் பலவாறாக மாறின. பலவித விளக்கங்களும், கதைகளும், வழிபாடுகளும், மதங்களும், விமர்சனங்களும் ஏற்பட்டன. ஆனால் இதுவரை யாரும் கடவுளை பார்த்ததில்லை

மனிதன் எழுத படிக்க தெரிந்த பிறகு  2000,2500 வருட வரலாறுகள் தான் ஓரளவு உள்ளன.அதற்கு முந்தைய வரலாறுகளெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் சொல்லும் விளக்கம் தான் நமக்கு இருக்கிறது. இருந்த போதும் இன்றும்  மனித இனம் சூரியனையும், சந்திரனையும், ஐம்பெரும் பூதங்களையும், செடியையும், மரத்தையும், உயிரினங்களையும் ( மிருகம், பறவை  முதலியன ) மனிதனையும் ( குரு, ரிஷி, ஞானி போன்றவர்கள் ) தெய்வத்தின் வடிவாக வழிபாடுகள் செய்து வணங்கி வருவதை காண்கிறோம். கடவுளுக்கு பல உதாரணங்களைச் சொல்லி, கதைகளைச் சொல்லி அனுபவங் களைச் சொல்லி கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தி இன்றளவும் வணங்கி வருகிறோம்.  ஆனால் இதுதான் கடவுள் என்று இதுவரை யாரும் காண்பித்ததில்லை.

"விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை" அதாவது, சொன்னவர்கள் பார்த்ததில்லை, பார்த்தவர்கள் சொன்னதில்லை என்று நம் முன்னோர்கள்  சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். அதாவது கடவுள் இருக்கிறார் ஆனால் பார்க்கமுடியாது என்கிற அர்த்தம் ஆகிறது.  எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்,  எல்லா சக்தியும் உடையவர்,  எப்போதும் விழித்திருப்பவர் என்பது தான் கடவுளுக்கு எல்லோரும் கூறும் விளக்கம். அப்படியானால் இந்த விளக்கங்களை எல்லாம் உடைய ஒருவர் எப்படி இருப்பார். இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்தவராய் இருப்பார். வெட்ட வெளியிலும் நிறைந்திருப்பார், அடர்ந்த மலையிலும் நிறைந்திருப்பார்.  ஒரு பலூனில் நிறைந்திருக்கும் காற்றைப்போல் எல்லா இடமும் வியாபித் திருப்பார். இதற்கு பொருந்துகிறார் போல் இன்றைய விஞ்ஞானிகள் நியூட்ரினோ என்னும் துகள்கள்  இந்த பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருப்பதாக சொல்கிறார்கள். உலக பொருட்கள் அனைத்தும் அதனுள் மூழ்கி இருக்கிறது என்கிறார்கள்.

இந்த பிரபஞ்ச இயக்கத்துக்கும், பிரபஞ்ச நியதிக்கும், பிரபஞ்ச சக்திக்கும், பிரபஞ்ச பரிணாமத்திற்கும் காரணமாய் ஒரு சக்தி இயங்குகிறது. மனிதனுக்கு இருக்கும் மூளையின் திறனால் அந்த கடவுள் உருவத்தை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவோ, நினைவில் நிறுத்தவோ முடியாது. அதனால் சிலர் கடவுள் இல்லை என்று விவாதிக்கிறார்கள்.

மனம் என்று ஒன்று இருப்பதை  அனைவரும் ஏற்றுக்கொள் கிறோம். எண் ஜாண் உடம்பை மனம் ஆட்டிப்படைக்கிறது. அந்த மனம் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது.அதன் வடிவம் என்ன. அதை எந்த நாட்டு மருத்துவர் களாவது இதுவரை பார்த்திருக்கிறார்களா. மனதை பற்றி முழுதாக தெரிந்தவர் எவரும் இல்லைஎன்பது தான் உண்மை .அப்படி இருக்கும் போது இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந் திருக்கும் மனம் போன்ற ஒரு வடிவத்தை, கடவுளை  எப்படி மனிதனால் பார்க்க முடியும்.  அதனால் கடவுளை விமர்சனம் செய்பவர் களையும், கடவுளை பாராட்டுபவர்களையும் கடவுள் கண்டுகொள்வதில்லை என்பது தான் அவரின் குணம் என்றாகிறது.

அந்தக் கடவுளை நம் முன்னோர்கள் "காரணங்களுக்கெல்லாம் காரண மானவன், அணுவுக்கும் அணுவானவன், பரம்பொருள், பரப்பிரம்மம், பராசக்தி, பரமேஸ்வரன், தெய்வநீதி, தெய்வசக்தி, பிரபஞ்சமனம், ஆதியந்தம் இல்லாதவன், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்றெல்லாம் உணர்ந் தார்கள், பெயரிட்டு அழைத்தார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடம், கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் கடவுள் என்பது மனத்தால் உணர்ந்துகொள்ளவேண்டிய ஒரு தாகம் ஆகும். தாகம் இல்லாதவர் களுக்கு தண்ணீர் தேவைப்படாது.

ஆதியந்தம் இல்லாத பரம்பொருளை எல்லோராலும் நினைத்துப்பார்க்க முடியாது, நினைவில் நிறுத்தி வழிபடமுடியாது என்பதற்காக இறைவனுக்கு வடிவம் கொடுத்தார்கள்.உருவமாகவும்,.உருவமில்லாமலும், ஆன அருவுருவ வடிவில் இன்றும் நாம் வழிபாட்டு வருகிறோம். சிவலிங்கம், மற்றும் வடிவமற்ற, வடிவமுள்ள  சிலைகளை வணங்கிவருகிறோம். கடவுளை மனத்தால் நினைக்கலாம் வணங்கலாம், பிரார்த்திக்கலாம் ஆனால், எல்லோராலும் மனதில் பதியவைக்கமுடியாது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அதற்கு வழிபாடுசெய்வதினால் நம்பிக்கை உறுதிபெறுகிறது, மனதில் பதிக்கிறது.

கடவுளை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவரமுடியாது என்பதால் உலகத்தில் தான் காணும் பொருட்கள் , உயிரினங்கள் அனைத்தும் கடவுளின் படைப்பே என உணர்ந்த மனிதன் காரண காரியங்களோடு கருடனையும், பாம்பையும், பசுவையும், துளசி செடியையும், அரசமரத்தையும், நீரையும், நெருப்பையும் இறைவனோடு சம்பந்த படுத்தி வழிபட்டான். தேங்காய், பழம், உணவுகளை கடவுளுக்குப் படைத்து திருப்திப்  பட்டுக்கொண்டான். கடவுளை குடும்பமாக பாவித்து கணவன், மனைவி, குழந்தைகள் என்று கடவுளை நெருக்கமாக்கிக் கொண்டான். தனது வேண்டுதல்களுக்கும், கஷ்டங்களுக்கும், பிரச்சினை களுக்கும் கடவுளால் உதவமுடியும் என்ற நம்பிக்கை கொண்டான்.

ஒவ்வொன்றிர்க்கும் காரணங்களை ஆராய்ந்த மனிதன்  விஞ்ஞானம் என்னும் செய்முறையில் நிரூபிக்கும் அறிவை  வளர்தது வந்தான். விஞ்ஞானம்   மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்ததினால் விஞ்ஞான தொழில்நுட்பம் மிக வேக மாக வளர்ந்தது. அதற்கு பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும் கூடவே வளர்ந்து வந்தது. இயற்கை சார்ந்த, கடவுள் சார்ந்த வாழ்க்கை புறந்தள்ளப்பட்டது. இயற்கையை புறந்தள்ளிய விஞ்ஞான வாழ்க்கை மனிதனுக்கு உடல்நலப்பிரச்சினை, தொழில் பிரச்சினை, குடும்பப்பிரச்சினை, பணப்பிரச்சினை என பல்வேறு பிரச்சிகளை பின்விளைவாக கொடுத்தது. மனிதன் வாழ்வில் அமைதியை இழந்தான். கவலை, கோபம், பதட்டம், பயம் போன்ற உணர்ச்சிகளில் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளானான். வழி தேடி, நிம்மதி வேண்டி, உதவி வேண்டி, மன்னிப்பு வேண்டி என பல கோரிக்கைகளுடன் கடவுளை நாட வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது.

தெய்வமாக வழிபாட்டு வந்த நிலம், நீர், நெருப்பு ( வெப்பம்), காற்று, ஆகாயம் அனைத்தும் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியால் சரிசெய்யமுடியாத அளவிற்கு  சிதைக்கப்பட்டு விட்டது. மனிதன் வணங்கி வந்த வனங்களும், பிற உயிரினங்களும் மரியாதையற்று போயிற்று. கடவுள் வழிபாடு சிலமணித் துளி நேரம் என்றாகி விட்டது.

நமது ரிஷிகளும், ஞானிகளும் மனிதவாழ்க்கை எளிதானது அல்ல கட்டுப்பாடு மிகுந்தது. செய்யத்தக்கதும், செய்யத்தகாததும் நிறைந்தது மனித வாழ்க்கை. மனம் ஆசைக்கும், ஆணவத்திற்கும் எளிதில் அடிமைப்பட்டுவிடும் அதிலிருந்து மீள்வதென்பது மிக்க கடினம் என உபதேசித்தார்கள். மனம்போன போக்கில் மனிதன் வாழ்ந்தால் தானும் கெட்டு, பிறஉயிர்களும் கெட்டு, உலகமும் கெடும் என எச்சரித்தார்கள். தங்கள் மனதை கட்டுப் படுத்துவதிலே முழுவாழ்க்கை யையும்  கழித்தார்கள். மனதை கட்டுப் படுத்தமுடியாமல் இறைவனிடம் பலவாறு வேண்டிநின்றார்கள். எளிய வாழ்க்கை, எளிய உணவு, எளிய உறைவிடம், உயர்ந்த ஒழுக்கம் போன்றவைகளை அவர்கள் பின் பற்றி வாழ்ந்தார்கள். அவர்கள் பின்பற்றிய வாழ்க்கையில் .மாசு, அலட்சியம், ஏமாற்று, சுயநலம் போன்றவை துளியும் இல்லாதிருந்தது.

தற்காலத்திலும் கடவுள் பக்திக்கு குறைவில்லை. கோவிலுக்கு ஏராள மானோர் செல்கிறார்கள். வழிபாடுகள் செய்கிறார்கள். வேண்டுதல் களை நிறை வேற்று கிறார்கள். பணம், தொழில், குடும்பம்  என்று வந்தால் கடவுள் வழிபாட்டின் போது  இருந்த மனநிலையையும், கடவுள் பயத்தையும்   மறந்து சுயநலம் ஒன்றையே நோக்கமாக வைத்து முடிவெடுக் கிறார்கள். உண்மையை, நியாயங்களை மறந்து சாமர்த்தியங்களை பேசி பிடிவாதமாய் இருக்கிறார்கள். இதனால் நீதி, நியாயம், கடவுள் வழிபாடு எல்லாம் அர்த்த மற்று போய்விடுகிறது. தனது நியாயமற்ற செயலால் பிற உயிர்கள் கண்ணீர், வேதனை என நியாயமாக வருந்தும் போது அது தீவினை என்னும் சக்தி பெற்று ஆரம்பமான இடத்தை ஏதாவது ஒரு வழியில், ஏதாவது ஒரு நேரத்தில் தாக்குகிறது. இதை தெய்வ நீதி ( Law of Nature ) என்கிறார்கள். தற்கால விஞ்ஞான வாழ்க்கையால் மனிதனுக்கு தெய்வநீதி பயம் இல்லாமல் போய்விட்டது.

கடவுளின் தன்மை

எங்கும் நிறைந்திருக்கிறாய்
எல்லாவற்றிலும் கலந்திருக்கிறாய்
பாதிப்புகளை உணர்ந்து கொள்கிறாய்
ஈடு செய்து உணர்த்திக் காட்டுகிறாய்
எல்லாம் உனது படைப்பு
எல்லாம் உனக்குத் தெரியும்
எல்லாம் உன்னால் முடியும்
எல்லாம் உனது அருள்/செயல்/நீதி/பரிணாமம்

மனிதனின் தன்மை  

விருப்பு - வெறுப்பால் ஆனவன்
சரி-தவறு  பற்றி கவலைப்படாதவன்
அறம் - நெறிகளை கற்றும் அதன்படி வாழாதவன்
வலி,தண்டனைக்கு பயப்படுபவன்
ஆணவம், ஆசைகளை வளத்துக்கொள்பவன்
நான் - எனது என்று உணர்ச்சிவயப்படக்கூடியவன்
நோய், முதுமை,நெருக்கடி வந்தபின் சிந்திப்பவன்
எண்ணங்களை நிறுத்தி தியானம் பழக விரும்பாதவன்

முன்னோர் வாக்கு. 


ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்.---புத்தர். 

செத்தாரைப்போல் திரிமனமே ----பட்டினத்தார் 

உலகம் பழிப்பதை ஒழித்து வாழ்வதே  சிறந்த வாழ்க்கை .----திருவள்ளுவர்

 வைதோரைக் கூடவை யாதே: - இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே  வெய்ய வினைகள் செய்யாதே -
 கல்லை வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே.
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய்தே மன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.----கடுவெளி சித்தர்

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே --அகத்தியர்

முதலில் உனது மனதிற்கு கல்வி கொடு( First Educate Your Mind ).---கீதை

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு --பழமொழி.

மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.--உலகநீதி.

செயலின் பின்விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது --நீயுட்டன்3ம் விதி

உலகப்பற்று  ஆன்மிகம் தராது
ஆன்மிகம் உலகப்பற்று  தராது

---------------------------------------------------------------------------------------




Monday 1 August 2016

   உடல் எடையயை கட்டுப்படுத்துவது எப்படி 

நம்மில் பலபேருக்கு உடல் எடை அதிக மாகிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம்.

உடல் உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உடலுழைப்பு என்கிற சமநிலை தவறி  தேவைக்கு அதிகமான அளவு உணவை உண்பது அல்லது தனது உடல் ஒத்துக்கொள்ளாத தவறான உணவுகளை உண்பது போன்றவைகள் உடலின் எடை கூடுவதற்கு முக்கிய காரணம். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினசரி பயிற்சிகளால் உட்கார்ந்து இருப்பதை   ஈடுகட்டவேண்டும் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தினசரி பயிற்சி செய்து உடல் எடையை பராமரிப்பதில்லை. அதனால் உடல் எடை கூடுகிறது.
சிலருக்கு ஹார்மோன் போன்ற பிரச்சினைகளாலும் உடல் எடைகூடும்.

 பலபேர் உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றி, உடற் பயிற்சி செய்து என பலவழிகளை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அந்தவகை கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கமல் உடல் எடையை குறைக்கமுடியாமல் போய் விடுகிறது. எனக்கு எந்த நோயும் வராது என்று நம் மனம் அடம் பிடிப்பதாலும் கட்டுப்பாடுகள் தளர்நபோய் விடுகின்றன.வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியப்பேச்சையும் கேள்விப்படுகிறோம்.

உடல் எடையை குறைக்க முதலில் நமது மனதின் முழு ஒத்துழைப்பை பெற வேண்டும்.அதற்கு நமது மனதை நாம் பயமுறுத்த வேண்டும்.

அதிக உடல் எடை பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவம் கூறுகிறது.

சிறு வயதில் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், இதயநோய்கள் என பலவிதமான சுகவீனங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களை மருத்துவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.இதைச்சொல்லி   நம் மனதை பயமுறுத்தவேண்டும்.

மருத்துவமனைகளுக்கு சென்று இளம்வயதில் சுகர், பிரஷர், இருதயநோய் என கஷ்ட்ட ப்படுபவர்களை நேரில் பார்க்கவேண்டும். பார்ப்பவர்களை நம் மனம் நம்பும். 

அடிக்கடி பயமுறுத்தவேண்டும்.இந்த பயமுறுத்துதலால் நம் மனம் மாறி ஒத்துழைக்க தயாராகும் 

உடல் எடை எவ்வாறு கூடுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் கார்போஹைரேட் மற்றும் கொழுப்பு உணவுகள் அன்றாடம் எரிக்கப்படாத போது அவை உடலில் சேமிக்கப்படுகிறது. மேலும் மேலும் சேமிக்கப்படும் போது உடை எடை கூடுகிறது.

உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும்.

உடலில் சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்கவேண்டும், மேலும் புதிதாக சேமிப்பிற்கு வராதபடி உணவில் கவனமாய் இருக்கவேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.

சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்வது. தினசரி இரவு உணவை பழங்கள், காய்களோடு  நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் மன ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

ஒரு 21 நாட்கள் இரவு உணவை உண்ணாமல் இருந்து விட்டால் பிறகு மனம் அதற்கு பழக்கப் பட்டுவிடும். பிறகு இரவு சாப்பிடாமல் இருப்பது ஒரு கஷ்டமாகவே இருக்காது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மனதில் உறுதியாய் இருக்கும் வரை இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. பழங்கள்,காய்களால் உடல் எடை கூடாது.

புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்வது.காலை, மதிய  உணவில் பயறு / பருப்பு / கடலை , காய்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக்  கொள்ள வேண்டும். இடைவேளைகளில் பசித்தால்     பழம், சுண்டல், சிறிதளவு காரம் போன்றவைகளை சாப்பிடலாம். விருந்துகளில் கட்டாயப்படுத்தினார்கள் என்றோ, ருசியாக இருந்தது என்றோ, வீணாகிவிடும் என்றோ எடையை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்தி விட்டு உண்ண வேண்டும். தவறான உணவுகள், பானங்கள் எதையும் வாங்கி வீட்டில் இருப்பில் வைக்கக்கூடாது. காலை உணவிற்குமுன் உடற்பயிற்சி செய்வதாலும் சேமிப்பிலிருக்கும் கொழுப்புகள் கரையும்.

நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நமது அலட்சியம் பாழ்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அதனால் வரும் உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள்,மாத்திரைகளின் பக்க விளைவுகள், செலவுகள்,அலைச்சல்கள், மனச்சோர்வுகள் அனைத்தையும் எண்ணிப்பார்த்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.  


Friday 13 May 2016

          தேர்தல் நாள் மே 16,   2016  திங்கட்கிழமை                  

நம் நாடு அடைந்திருக்க வேண்டிய முக்கியாமான இலக்குகள்.

தேவைக்கேற்ப ஆறுகள், குளங்கள், அணைகள்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி
கடல் பரப்பிற் கேற்ப துறைமுகங்கள்
காலி இடங்களிலெல்லாம் காடு வளர்ப்பு
சிறந்த தரமான ஒரேவித இலவசக் கல்வி
திறமையை வளர்க்கும் பாடத்திட்டங்கள்.
திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு.
ஒழுக்கத்தை, மனிதநேயத்தை வளர்க்கும்  பயிற்சிகள்
நாடு முழுவதும் சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள்
சிறந்த தரமான இலவச மருத்துவம்
தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்
கொசுவற்ற நகரம், கிராமம்
சிறப்பான பேருந்து, ரயில் போக்குவரத்து
 மக்கள் பெருக்கத்திற் கேற்ப தேவைகளை திட்டமிடுதல் 
அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்


ஊழல் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுதல். 
லஞ்சமற்ற அரசு அனுமதிகள்
லஞ்சமற்ற அரசு அலுவலகங்கள்
லஞ்சமற்ற அரசு பணி நியமனம்,
லஞ்சமற்ற அரசு பணி இடமாற்றம்
கமிஷனற்ற அரசு ஒப்பந்ததாரார் வேலைகள்
மிக விரைவான விசாரணை, கடுமையான தண்டனை தரும் சட்டங்கள்.

யாருடைய தவறு 

நம்மில் 40 சதவீதத்தினர் தேர்தல் வந்தால் வாக்களிப்பதில்லை.

மேடைப் பேச்சை, தேர்தல் அறிக்கையை, இலவசங்களை, சினிமா பிரபலங்களை, ஜாதி-மத உணர்வுகளை, ஊடகங்களை  நம்பி, மனம்போன போக்கில் 60 சதவீதத்தினர் வாக்களிக்கின்றனர்.  

இதனால், ஊழல் செய்பவர்களும், மனசாட்சி இல்லாதவர்களும் ஆட்சிப்பொறுப்புக்கு வருகிறார்கள்.

பொறுப்புக்கு வருபவர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன், பினாமி என பலவழிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு,  நாட்டை கடனாளியாக்கும் ஏமாற்றுக் காரர்களாக இருக்கிறார்கள்.  

நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இருப்பதில் நல்லவர் யாரென்று விசாரித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் அளிக்கும் வாக்கு நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது . நமது எதிர்காலமும், நமது பிள்ளைகளின் எதிர்காலமும், நமது பிள்ளையின் பிள்ளைகளின் எதிர்காலமும் நாம் அளிக்கும் வாக்கில் அடங்கி இருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வாக்களிக்கவேண்டும். 

நாட்டின் இன்றைய நிலைமைக்கு நாம் அனைவரும் நல்லவர்களுக்கு வாக்களிக்காததுதான் காரணம்.

சிலர் வாக்களிக்காமல் இருந்து விடுவதுதான் காரணம். 

Friday 6 May 2016

                          செயலும் பலனும் 

ஆணவம் அலட்சியத்தை வெளிப்படுத்தும்
பணிவு கடமையை விரும்பும்
பொய் சாமர்த்தியமாய் பேசும்
உண்மை நிரபராதி ஆக்கும்
வெறுப்பு பாபம் செய்யும்
விருப்பு வரம்பைத் தாண்டும்,
தவறு குற்ற உணர்வை ஏற்படுத்தும்
சரி நிம்மதியைத் தரும்
ஏமாற்றுவது தரத்தை நிர்ணயிக்கும்
நோக்கம் ஒத்துழைப்பதில் தெரியும்
அநியாயம் பின்விளைவாகி திரும்பி வரும்
நியாயம் துணையாக கூட வரும்
ஆதிக்க மனம் கடவுளிடம் நடிக்கும்
பாதித்த மனம் கடவுளிடம் புலம்பும்


                                   காரணம்- பின்விளைவு 

 விருப்பு-வெறுப்பு
காரணம் பின்விளைவு இல்லாத செயலே கிடையாது.
காரணம் பின்விளைவை ஆராய்ந்துபார்ப்பது அறிவு
காரணத்தை ஆராய்ந்தால் பரிகாரம் தெரியும்
பின்விளைவை ஆராய்ந்தால் கட்டுப்பாடு தெரியும்
கட்டுப்பாட்டை ஆராய்ந்தால் எல்கை தெரியும்
எல்கையை ஆராய்ந்தால் செய்யத்தக்கது, செய்யத்தகாதது தெரியும்
செய்யத்தக்கதை செய்வது நியாயம் என்றாகும்
செய்யத்தகாததை செய்வது குற்றம் என்றாகும்
நியாயமாய் நடக்கும் போது பலன் தெரியாது
குற்றமாய் நடக்கும் போது தண்டனை தெரியாது
நியாயமாகவும், குற்றமாகவும் நடப்பது மனதிலுள்ள விருப்பு - வெறுப்பாகும்.
மனதிற்கு சரி-தவறு, நல்லது-கெட்டது, காரணம் - பின்விளைவு
செய்யலாமா- கூடாதா பற்றிய கவலை இல்லை
உடல் மனத்தின் வேலையாள்
உடல்  மூலம்  தனது விருப்பு, வெறுப்புகளை செய்து மனம் திருப்தி பட்டுக்கொள்கிறது.
அவரவர் மனதிலுள்ள விருப்பு,வெறுப்பு அவரவர் செயலாகிறது
ஒவ்வொரு செயலுக்கும் காரணம் பின்விளைவு உண்டு
-----------------------------------  ( மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் )

                                    =============================

----------------   மனம் பற்றிபெரியோர்கள் சொன்னவை ---------------------.

மனம் ஆசை, கவர்ச்சிகளை விரும்பும்.அதுவே துன்பங்களுக்கெல்லாம் காரணம் . ( புத்தர் )

மனம் உலக சுகங்களை பெரும் பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ( அருணகிரிநாதர் )

மனம் பாராட்டுக்கு ஏங்கும், விமர்சனங்களுக்குப் பயப்படும். ( உதயமூர்த்தி )

மனம் மனிதாபிமானமாய் நடவாமல், கடவுளைத் தேடி அலையும்.
( கண்ணதாசன் )

மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்துகொள்ளும்
( சைவசித்தாந்தம் )

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் ( உலக நீதி )

மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே ( திருமூலர்)

செத்தாரைப்போல் திரிமனமே.( பட்டினத்தார் )

மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்
( இரமண மகரிஷி )

மனம் இயற்கைநியதிகளை மறந்து, நானே மேலானவன் என்று நடக்கும்
( கடுவெளி சித்தர் )

மனத்திலுள்ள அறம் உடல் நலத்தைப் பேணும் ( சைவ சித்தாந்தம் )

மனம் இருப்பதை எண்ணி மகிழாமல், இல்லாததை நினைத்து, நினைத்து ஏங்கும் ( பாரதியார் )

மனமிருந்தால் மார்க்கமுண்டு  ( பழமொழி )

மனமே நண்பன், மனமே எதிரி   ( பகவத் கீதை )

பிறர் மீது குற்றம் காணும் மனதைக்கொண்டு தன குற்றம் காணவேண்டும்.         ( திருவள்ளுவர் )

தியானம்

பழத்தில் சுவையை உணர்வது போல்
மலரில் மணத்தை உணர்வது போல்
தியானத்தில் ஒரு வகை அமைதியை  உணரலாம்
இறைவனென்ற உருவத்தைத் தேடாமல்
பேரமைதி உணர்வைத்தேடித்தருவது தியானம்
சுகபோக வாழ்க்கை தியானம் செய்ய விடாது
தியான வாழ்க்கை புதிய அனுபவத்தை உணரும்
சுகபோகம் வெளி உலகத்துக்கு மனத்தை அடிமையாக்கும்
தியானம் உள் உலகத்தை உணர வழிகாட்டும்
உள் உலகை உணர்ந்த மனம் பற்றற்று நிற்கும்
பற்றற்ற மனம் துன்பமற்ற மனம்
அதுவே ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள்
அதுவே அகத்தியர், திருமூலர், இரமணர்

என் விதி அளவை தீர்வு செய்யும் இறைவா
என் உடல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் சூழல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் மன அளவை தீர்வு செய்யும் இறைவா
என் செயல் அளவை தீர்வு செய்யாதது ஏன் இறைவா.
என் விருப்பு-வெறுப்பு படி செயல் பட விட்டாயே
பின் விளைவில் சிக்கி எம்மை புலம்ப வைத்தாயே.











Sunday 10 April 2016

சிறு நீரகம்

                                                         சிறு நீரகம் 

சிறுநீர் மூலம் நூற்றுக் கணக்கான கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. நாம் உண்ணுவதையும், குடிப்பதையும், உடற்பயிற்சி செய்வதையும், சிறுநீரக செயல் பாட்டையும் பொறுத்து சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் பரிசோதனை முடிவுகளை  அலட்ச்சியப் படுத்தாதீர்கள்.

எந்த வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எந்தவகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல், எவ்வளவு நீர் அருந்துகிறோம், எதைக்குடிக்கக்கூடாது, எந்த உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எந்த அளவிற்கு உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்பவைப்பற்றி அக்கறைப்படாமல் இளம் வயதிலே ஆரோக்கியத்தை பலவீனப் படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

சிறுநீரகம் இரத்தத்திலுள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை ஒழுங்கில் வைத்திருக்கிறது. சிறுநீரகத்தில் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, இரத்தத்திலுள்ள இரசாயனக் கூறுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

சிறுநீரில் புரோட்டின், ஆல்புமின் சோதனைமூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் சோதிக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தில் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், அது தனது செயல் பாட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியப்படுத்த முடியாது. சிறுநீரகம் பழுதடையும் போது இரத்த சுகரும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், இரத்த சுகர், புரோட்டின் உணவு, கொலஸ் ட்ரால் முதலிய வற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

சிறுநீரகம் தினசரி 200 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி 2 லிட்டர் கழிவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்று கிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கல், பழுப்பு முதலியன ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்தும், முடிந்தவரை மாத்திரைகளை உண்பதை குறைக்கவும் முயற்சிக்கவேண்டும். சில மாத்திரைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. 

இரண்டு சிறுநீரகமும் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன.

சரியான உணவிலும், சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், உடல் எடை  போன்ற ஆரோக்கிய எண்களிலும், நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற வற்றிலும் கவனமாய் இருந்தால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  சீனி, உப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு தண்ணீர் தினசரி குடிப்பது மிகவும் நல்லது. வாழைத்தண்டு சாறு, பார்லித் தண்ணீர், சீரகத்தண்ணீ ர்  போன்றவை சிறுநீர் பிரச்சனை களை தடுக்க உதவுகிறது. மாறிய கொழுப்பு ( Trans Fat ) உணவுகளைத் தவிர்ப்பதால் புராஸ்டேட் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சிறுநீர் பிரச்சினை வராமல் தடுக்கலாம்..

                                ------------------------------------------------------













Saturday 9 April 2016

இருதயம்

                                                           இருதயம் 

தாயின் வயிற்றில் வளரும் சிசுவில்  முதன் முதலாக உருவாகி இயங்கும் உறுப்பு இதயமாகும்.

ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. 

ஆரோக்கியமான இருதய தசைகள் உடல் உழைப்பின் போது சிறப்பாகவும், ஓய்வின் போது குறைந்த அளவு துடிப்புடனும்  முழுவேலையையும் செய்கிறது. 

குறைந்த இதய துடிப்பில் அதிக அளவு இரத்தத்தை வெளியேற்றும் பணியினை செய்யும் சக்தியுடன் இதயதசைகள் இருக்கிறது. இதயத்தமனிகள் அதிக அளவு இரத்தம் பாய்ந்து செல்வதற்கு ஏதுவாய் பெரியதாய் இருக்கிறது.

பிராண வாயு கலந்த இரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இருதயம் செய்கிறது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித இதயம் ஒரு நாளைக்கு சுமார் 80000 முதல் 100000 தடவை வரை துடித்து சுமார் 9000 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 70 முதல் 90 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் சுமார் 2 முதல் 3 பில்லியன் தடவை துடித்து, 50 முதல் 60 மில்லியன் காலன் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்த பணிகளை செய்வதற்கு ஏற்ப இருதய தசைகள் வித்தியாசமான குணங்களுடன் அமையப் பெற்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆன்றி ஆக்சிடண்ட் ( Anti Oxidant ) சத்துள்ள உணவுகள் இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

காய்கள், கீரைகள், மூலிகைகள், பழங்களில் சக்திவாய்ந்த ஆன்றி ஆக்சிடண்ட்கள் இருக்கின்றன. வைட்டமின் E இதயத்தைப் பாதுகாக்கிறது. முளைவந்த கோதுமை, கோதுமைப்புல் ஜுஸ், பார்லி போன்ற வற்றிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் என்ஸைம்கள்  இதயத்தை வலிமைப் படுத்துகின்றன. திராட்ஷைப் பழக்கொட்டையிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தில் இரத்தம் கட்டியாகாமல் இருக்க ஆஸ்பிரின் உதவும். ஆனால் நெடுநாள் உண்ணும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆஸ்பிரினுக்குப் பதில் அன்னாசிப் பழம் நல்லது. வெள்ளைப்பூண்டு இருதயத்திற்குரிய சிறந்த ஆன்றி ஆக்சிடண்ட். வெள்ளைப்பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பச்சையாக உண்ணும் பூண்டு இரத்த சுகரை குறைக்கிறது.

இரத்தக் கொலஸ்ட்ரால் விகிதம் கட்டுக்குள் இல்லை என்றாலும் அதிக உடல் எடையாலும் மன அழுத்தத்தை குணப் படுத்தாவிட்டாலும் நல்ல கொழுப்புச் சத்து குறைபாட்டாலும் இரும்புத்தாது அதிகமாவதாலும் இருதயம் ஆபத்துப் பாதையில் போய் விடுகிறது.

உடலில் இருதய ஆரோக்கியம் சத்தான உணவுகளால் சரி செய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும்.

இதயநோய் மரணம் ஏற்படும் காரணங்கள் அனைத்திலும் முதன்மை வகிக்கிறது. இளவயது மரணத்திலும் முதற் காரணமாக இருக்கிறது.

புகைத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவை இதயநோய் மரணத்துக்கான தெரிந்த காரணங்கள்.

சிறந்த உடற்பயிற்சி, உணவுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை களால் இருதய நோயை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்கவும் முடியும்.




Image result for இருதயம்



ஆஸ்துமா

                                                                      ஆஸ்துமா 

ஒவ்வாமை       ( புகை, மணம், தூசு, காற்றோட்டமின்மை )             மன அழுத்தம்
( பயம், பரிதவிப்பு, கவலை ) மூச்சுக் குழாய் பலவீனம்,  பரம்பரை போன்ற காரணங்களால் மூச்சுப் பாதையில் தடிப்பு, அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

மூச்சுப் பாதையிலுள்ள குழாய் களில் தடிப்போ அல்லது வீக்கமோ ஏற்படுவது ஆஸ்துமா ஆகும். வீக்க மானது மூச்சுப்பாதையின் வலிமைத்தன்மையை குறைந்த நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது. மூச்சுக் காற்றில் இருக்கும் ஏதாவது துகள்கள் பட்டவுடன் வீக்கமான இடம் அதனை வலிமையுடன் எதிர்க்க ஆரம்பிக்கிறது. மூச்சுப் பாதையில் ஏற்படும் வீக்கம் எளிதாக போய்க்கொண்டிருந்த மூச்சை சிரமப்படுத்துகிறது. மூச்சுவிடும் இயக்கத்திலிருக்கும் தசைகளை இறுக்க மடையச்  செய்கிறது. இதனால் மூச்சுப்பாதை மேலும் குறுகுகிறது. இம் மாற்றங்களினால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று குறைகிறது. மிகுந்த சிரமப்பட்டு மூச்சு விடவேண்டியதாகிறது. மூச்சுப் பாதையிலிருக்கும் திசுக்கள் அதிகமான அளவு சளியை உண்டுபண்ணுகிறது. இதனால் மூச்சு விடுவதற்கு மேலும் சிரமப்படவேண்டிய தாக இருக்கிறது.

யோகாசனம், துரித நடைப் பயிற்சி, ஆழமாக மூச்சு விடும் பயிற்சி, மன அமைதி பயிற்சி போன்றவைகளால் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம்.,   


                     

Wednesday 16 March 2016

வாழ்க்கைப் பயிற்சிகள்

                                          வாழ்க்கைப் பயிற்சிகள் 

மனித இனத்தைத் தவிர உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் சுற்றுபுறத்தில் எந்த மாற்றமும் செய்யாமல்  ஒரே மாதிரியான வாழ்கையை வாழ்ந்து மடி கின்றன. மனிதன் மட்டுமே விஞ்ஞானம், தொழில் நுட்பம், வளாச்சி, முன்னேற்றம்  என உலகப் பொருட்களில் மாற்றங்கள் செய்து உலகை மாசு படுத்தி தனக்கு தானே எதிரியாகி வருகிறான்.

மனித மனமானது பழக்கங்களுக்கு அடிமை. விஞ்ஞான கண்டுபிடிப் புகளுக்கு அடிமை. ஒன்றைத் தவறு என்று தெரிந்த பின்பும் அதை தொடர்ந்து செய்வதில்  அடிமை.

நமது பழக்கங்கள், கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் நமது ஆசைகளுக்குப் போடும்   தீனியாகவே இருக்கின்றன. ஆசைகள் மனத்தின் சுகத்தை மைய மாகக் கொண்டு வெளிப்படுவது. ஆசைக்கு அளவில்லை. இவற்றுக் கெல்லாம் பாலமாக இருப்பது பணம். இவ்வாறாக மனித வாழ்க்கை பணம் சம்பதிப்பதற் காகவே தன் ஒவ்வொருநாளையும் செலவு செய்து,  அதிலே வாழ் நாள் முழுவதும் முடிந்து போவதை நாம் அறிவோம். அதன் பரிணாமம் தற்காலத்தில் குழந்தையின் மூன்று வயதிலிருந்தே அதற்கு பயிற்சிகள் ஆரம்பமாகிறது. கடைசியில் பணம் சம்பாதித்தவன் நிம்மதியைத் தேடுகிறான், பணம் இல்லாதவன் துன்பப்படு கிறான். காரணம், மனிதன் தனது மனத்தின் குணத்தையும் பயிற்சி கொள்ள வில்லை, தன்னைக்கட்டுப்படுத்தும் இயற்கையின் நியதிக்கு  பணிவு கொள்ளவும் பயிற்சிக்க வில்லை. பயிற்சி என்பது நமக்கு வேண்டிய ஒன்றை நமதாக்கிக் கொள்வது. பயிற்சி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு தைத்தலும், தட்டச்சும், நீச்சலும், சைக்களும் கூட தெரியாமலிருப்பதை நாம் அறிவோம். பயிற்சி எடுத்துக்கொண்டவர் களுக்கு அவை மிக எளிதாக இருப்பதையும் அறிவோம். தற்காலத்தில் நமக்கு வேண்டிய சில அத்தியாவசிய பயிற்சிகளை பார்ப்போம்.  

கல்விப் பயிற்சி :- கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் என பாடங்களில் அதிகம் மதிப்பெண் வாங்குவதிலே பயிற்சியாய்  இருக்கும் நமது கல்வி, அன்றாட பிரச்சினைகளை, மன அழுத்தங்களை கையாளும் வழிகளை பயிற்சிக்கவிலை. நமது பழங்கால குருகுல கல்வி, பணிவையும், பணிவிடை யையும் சேர்த்தே பயிற்சியாக கற்றுக்கொடுத்தது. அதனால் மனத்தில் ஈகோ என்பது வளரவில்லை. அனைத்து பிரச்சனைகளுக்gகும் ஈகோவே முதல் காரணம். தற்கால கல்வி ஈகோவை களைய கற்றுக் கொடுக்க வில்லை.   
டாக்டர்,    வழக்குரைஞர்,    இஞ்சினியர்,  நிதி ஆலோசகர், விஞ்ஞானி, கல்வி யாளர், நிர்வாக அதிகாரி என எல்லா வல்லுனர்களுக்கும் ஒரே  குறிக்கோள்  பணம்  என்றாகி  விட்டதை    கண்கூடாக   பார்க்கிறோம். பிறரை  ஏமாற்றி  குறுகிய  காலத்தில்  பெரும்    பணக்காரராகுபவர்கள் அனைவரும்   திறமை சாலி என்றாகி விட்டது. மக்களை மக்களே ஏமாற்று கிறார்கள்.  நடத்தை, நேர்மை, ஒழுக்கம் போன்றவைகள் மனதில் நிற்கும் படியான   கட்டாய பயிற்சிகள்  தொழிலில்  இல்லாமற்  போய்  விட்டது. தற்காலத்தில்   பணிக்கு சேரும்  இடங்களில்  நேர்மை, ஒழுக்கங்களை இளைஞர்கள் நேரில் பார்த்து மனதில்  பயிற்சி கொள்ளும், பதிய வைக்கும்  உதாரணத் தலைவர்கள், அதிகாரிகள் இல்லை. சாமர்த்தியம் பேசி தவறு களிலிருந்து தப்பித்துக் கொள் வதுதான் தற்கால உதாரணங்கள்.   வீட்டில், தொழில், அல்லது பணி யிடத்தில் தனது கடமைகளை, அடுத்தவர் உரிமைகளை மதித்து நடக்கும்  பயிற்சிகள் உயர்ந்தவை.

கடமைப் பயிற்சி:-  நாம் பிறந்ததிலிருந்து நமக்கு கடமையும் கூடவே வந்து விடுகிறது. அந்த அந்த வயதிற் கேற்ப  கடைமைகள் புதிது, புதிதாக வந்து சேரு கின்றன. பள்ளிக்கூடம் போவது, வேலைக்குப்போவது, பெற்றோரைக் காப் பாற்றுவது, மனைவியை அங்கீகரிப்பது, குழந்தைகள் படிப்பு , உடன் பிறந்தோரின் படிப்பு, திருமணம் ,  போன்ற பல்வேறு கடமைகள் நிறைவேறுவதும், புதிதாக வருவதும் என வாழ்வின் கடைசி வரை தொடர்ந்து வரும் பொறுப்புக்களாகும். இத்தோடு, தனது ஆரோக்கியம், வருமானம், பிள்ளைகளின் வாழ்க்கை, முதுமை காலத்துக் குரிய  திட்டம்  இவைகளை நோககி முன்னேறுவது போன்றவை  மனிதனின் சவாலான கடமைகளாகும்.   

நிதிப்பயிற்சி:- ஒவ்வொருவருக்கும் கடமையும் இருக்கிறது, முதுமையும் இருக்கிறது. இரண்டிற்கும் தேவை  பணம். ஒன்று செலவு,  மற்றது சேமிப்பு. செலவாகட்டும், சேமிப்பாகட்டும் பல துளி பெரும் பணம். பணம் ஒழுகும் ஓட்டைகளை தெரிந்து அவைகளை அடைத்து முன்னேற்றம் பெற முழு கவனம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். மது, புகை, வட்டி, பிறரின் பாராட்டை விரும்பி, பிறரின் விமர்சனத்திற்கு பயந்து  போன்ற செலவுகளை சிந்தித்து அவைகளை தவிர்க்க வழிகாணுதல். சிறு சேமிப்பு என்பது கூடுதல் வருமானம். கைத்தொழில் நிரந்தர வருமானம். சிறுசேமிப்பை முதலீடாக்க வேண்டும். முதலீடு வளர்ச்சி பெறவேண்டும். காப்பீடு குடும்பத்துக்கு பாதுகாப்பு. நிதியை வளர்ப்பதை குடும்பத்திலுள்ள அனைவரும் தங்களது பொறுப்பாகவும், கடமையாகவும், சிரமமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  நிதி என்பதும் செயல் பட்டால் தான் பெருகும்.

நுகர்வுப்பயிற்சி:- கஞ்சத்தனமாய் நடப்பவர்கள் மீது குறைகள் விழும். சிக்கனமாய் நடப்பவர்களை பாராட்டவேண்டும். ஆடம்பரக்காரர்கள் மீதும், ஊதாரித்தனமாய்  நடப்பவர்கள் மீதும் குற்றம் சேரும். எதற்கு, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என ஆலோசித்து ஆடம்பரத்தை குறைத்து, தனது வருமானத்திற்கு எந்த, எந்த செலவுகள் எல்லாம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது  நுகர்வுப் பயிற்சி.

ஆன்மீகப் பயிற்சி:- கோயிலுக்கு செல்லுதல், வழிபாடு செய்தல், வேண்டுதல்களை நிறைவேற்றுதல், வீட்டிலும் பூஜை, பிரார்த்தனை செய்தல் போன்றவைகள் மட்டும். ஆன்மிகம் ஆகாது. நியாயமாய் நடத்தல், பிறர் உரிமையை மதித்தல், விடாமுயற்சி செய்தல், கடமைகளை செய்தல், எளிமையாய் வாழ்தல், பிற ஜீவன் களிடம் மனிதாபிமானமாய் நடத்தல் போன்ற நற்குணங்களை கடைபிடித்து ஒழுகுவதும் ஆன்மிகபயிற்சியாகும். "இந்த உலகமும், அதில் தோன்றி இருக்கும் அனைத்து படைப்புக்களும் இறைவனின் வெளிப்பாடேயாகும். தனிமனிதனது ஆணவமும், சுயநலமும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றே அனைத்து மதங்களும் போதிக்கின்றன".

உணவுப் பயிற்சி:- கடந்த நூறு வருடங்களில் மின்சாரம், இராசாயனம்  மற்றும்  இயந்திர வளர்ச்சி அசுரத்தன்மையை அடைத்திருப்பதை அறிவோம். இதன் தாக்கத்தால் நாம் உண்ணும் உணவும் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. சரியான உணவு எது, தவறான உணவு எது என்று தெரிந்து கொள்ளுவதற்கே பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு உணவு வியாபாரம் நம்மை ஈர்க்கிறது. மருத்துவ மனைகளும், நோய்களும் பெருகிவருவதன் காரணங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுவதே உணவுப் பயிற்சி.

மனப் பயிற்சி:- மனதிற்கு சரி - தவறு, உண்மை - பொய், நல்லது - கெட்டது பற்றிய கவலை இல்லை. நமது ஆசைகளை நிறைவேற்றி அதை அனுபவிப்பதிலே நோக்கமாய் இருக்கும். பின்விளைவுகளைப் பற்றி நாம் உறுதியாய் இருந்தால் தப்பிக்கலாம். ஆசை, சூழ்நிலை, மனநிலை மூன்றும் சேரும் போது அது யாருடைய மனதாக இருந்தாலும் ( நல்லது - கெட்டது ) கட்டாயமாக நடத்திக்காட்டும்.  நம்மை காப்பாற்றும் வார்த்தைகளை, நம்மை சரிப் படுத்தும் வார்த்தைகளை, நம்மை பயன் படுத்தும் வார்த்தைகளை, நம்மை ஆன்மீகப்படுத்தும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவைகளை மனதுள் சொல்லிக்கொண்டிருக்கும் மனப்பயிற்சியை செய்வது நல்லது.
       
மூச்சுப் பயிற்சி:- உடலுக்கு திட உணவு ( காய்,கனி போன்ற ), திரவ உணவு( தண்ணீர் ), வாயு உணவு( காற்று ) என மூன்று நிலை உணவுகள் தேவைப் படுவதை நாம் அறிவோம். நாம் சரியான முறையில் ஆழ்ந்து சுவாசித்தால் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளே செல்லும். இதனால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் நடக்கின்றன. உடலையும் உயிரையும் பிணைத்து வளர்த்தெடுப்பது சுவாசம். உடலில் உற்பத்தியாகும் 60-80% கழிவுகள் சுவாசத்தின் மூலமே வெளியேறுகிறது. உடலுக்கு ஆற்றல் தரமான இரத்தம். மனதுக்கு ஆற்றல் தரமான எண்ணங்கள். சுவாசம் இரத்தத்தை சுத்தப்படுத்துவதைப்போல், எண்ணங்களையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது என்று நமது ரிஷிகள் சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதும் முதல்படி. மூச்சு குதிரையைப் போன்றது. மனம் அதில் சவாரி செய்பவன். குதிரையை காட்டுப் படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனை கட்டுப்படுத்தலாம் என்கிறார் மனித வடிவில் வந்த இரமண மகரிஷி. சிறு, சிறு மூச்சுப்பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் பயிற்சிப்பது பயனுள்ளதாகும்.

உடற் பயிற்சி:- உடற் பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு தெம்பையும், உணர்சிகளுக்கு கட்டுப்பாட்டையும் தருகிறது. உடற்பயிற்சி நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயை கட்டுப் படுத்தவும் செய்கிறது. உடற்பயிற்சி இரத்தத்தில் கெட்ட கொழுப்பை எரித்து, நல்ல கொழுப்பை அதிக மாக்குகிறது. உடற்பயிற்சி உடலுக்கு வலிமையையும், வளைவுத் தன்மையை யும்,  நீண்டநேரம் தாங்கும் சக்தியையும் தருகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்பொழுதே உடற்பயிற்சியை மேற் கொண்டால், நோய்வரும் வாய்ப்புகள் இருக்காது. தினசரி உண்ணும் உணவுகள் எரிக்கப் படவேண்டும். அவை உடலில் சேமிப்பாக விடக்கூடாது. உடற்பயிற்சியை அலட்சியப் படுத்துபவர்கள் நோய்க்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி அதை செய்யாதவர்கள், இளம் வயதிலேயே முதுமைத் தன்மையை அடைகிறார்கள். வாழ்நாள் முழுவதையும்  நோய்க்காக ஒதுக்குகிறார்கள்.  தான் எவ்வளவு உறுதியாய் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி இல்லையானால் இனிப்பும்,  கொழுப்பும் இரத்தத்தில் அதிக மாகி உடலுள் சேமிக்கப்படுகிறது. வயறு பருமனாகிறது. என்ஸைம்கள் சுரப்பது குறைகிறது. HDL குறைகிறது. LDL & Triglycerides அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பது பலவீன மடைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உட்கார்ந்திருப்பதை நடை பயிற்சி மூலம் ஈடு செய்வதை விட வேறு வழி இல்லை.

ஒற்றுமைப் பயிற்சி:- கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பது முதியோர் வாக்கு. ஒற்றுமை என்பது பரஸ்பரம் மரியாதை, பரஸ்பரம் சகிப்புத்தன்மை. ஆனால்,  இன்று மனித மனத்தை  ஆணவம்,  சுயநலம், பொறாமை, பொய் போன்ற வை சூழ்ந்து கொண்டு விட்டன. தன்னுள் இவை இருப்பது தனக்கு தெரிவதில்லை. தனது தேவை, மனநிலை, சூழ்நிலைக்காகத்தான் உறவுகள் என்றாகிவிட்டது. ஆனால் நாம் ஒவ்வருவரும் ஒவ்வொரு வரையும் சதா மதிப்பீடு செய்து பரஸ்பரம் குறை, குற்றங்களை பதிவு செய்து கொள்கிறோம். சந்தர்ப்பம் வரும்போது  அவைகளை சொல்லி உறவுகளை உடைத்து விடுகிறோம். முதுமை,  இயலாமை வரும் போது ஆதரவுக்காக காத்திருக்கிறோம். உண்மை, உரிமை, நியாயம், சகிப்புத்தன்மை இவைகளை பரஸ்பரம் கடை பிடிக்கும் பயிற்சிதான் ஒற்றுமையை நீட்டிக்கும்.

முடிவுரை:- விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிகளை  நோக்க மாக கொண்டு மனித இனம் வாழும் வரை பணம் முக்கிய தேவையாகவே இருக்கும். அறம், பணிவு, நேர்மை, பரஸ்பரம் மரியாதை போன்றவை ஓரம் கட்டப் பட்டு விடும். இதனால் அன்றாட வாழ்க்கையில்  எல்லாம் இயந்திரமயமாகி எளிதாக இருக்கும். ஆனால், நோய், மன அழுத்தம், ஏமாற்று, பகை போன்றவைகளை கட்டுப் படுத்தமுடியாத படி மனிதன் வாழ்க்கை ஓடும். ஒரு சிலர் கோவில், யோகா, சுற்றுலா, மது என மாற்று வழியில் சிறிது நேரத்தை செலவிடுகிறார்கள்.

ரிஷிகளும், ஞானிகளும் லொளகீக வாழ்க்கையை விரும்பாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்கள். சூட்சம சக்திகளை சிந்தப்பதில் விருப்பம் கொண்டார்கள். பிரம்மம், பிரபஞ்ச சக்தி, ஆத்மா, பரமாத்தமா போன்ற சூட்சம ங்களை  உணர்ந்து விளக்கினார்கள். அதை புரிந்து கொள்வதும் கடினமானது என்றார்கள். விஞ்ஞானிகள் ஸ்தூல சக்திகளை ஆராய்ந்தார்கள். மின்சக்தி, மின்காந்த சக்தி, புவியீர்ப்பு சக்தி, அணுசக்தி போன்ற ஸ்தூல சக்திகள் போன்ற வைகள் புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் எளிதாக இருந்தன. சூட்சம சக்திகளால் உலகுக்கு எந்த கெடுதலும் ஏற்படவில்லை. ஸ்தூலசக்திகளின் பயன் பாட்டால் உலகம் மாசு படுவதற்கு அளவே இல்லாமல் இருக்கிறது. ரிஷிகள், ஞானிகள் சொன்ன இயற்கையை போற்றி வாழும் எளிமை வாழ்க்கையை வாழ நமக்கு சிரமமாய் இருக்கிறது என்று விஞ்ஞான வாழ்க்கையை பற்றிக்கொண்டோம். விஞ்ஞான வாழ்க்கையோ இந்த உலகை மாசுபடுத்தி நமது பிள்ளைகளும், நமது பிள்ளைகளின் பிள்ளைகளும் ஆரோக்கியமாய் வாழ தரமுடன் இருக்குமா என்கிற பயம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கல்வியோடு சேர்த்து வாழ்க்கைப் பயிற்சியையும் கற்றுக் கொண்டு கடை பிடித்தால் ஒழிய மனிதன் அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேறு வழியே இல்லை.

                                             ----------------------------------------------

Wednesday 24 February 2016

இயற்கையின் நியதி - 6

                                                    இயற்கையின் நியதி - 6
                                                          (The Law of Karma)

இந்த பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும்  ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. மெல்லிய ஒலி, அதிர்வுகளை உணரும் சக்தியை நாம் இழந்து விட்டோம்.

நாம் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையிலிருந்து மாறி, விஞ்ஞான வாழ்க்கைக்கு வந்துவிட்டோம். விஞ்ஞான வாழ்க்கையில் நம் உடலில்  பல அரிய  இயற்கை சக்திகளை இழந்து வருகிறோம் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். விஞ்ஞானத்தால் உலகில் பல நன்மைசெய்யும் உயிரினங்கள் அழிந்துவிட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில்  நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா  பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள். தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன்  ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.( Every action, there is an equal and opposite reaction ) 

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பிவருகிறது"
( Reciprocation ) என்கிறோம்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின்  எண்ணம், சொல், செயல்களும்  அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action)  ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்துகொண்டிருக்கும். இந்த அதிர்வுகள்  தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு  அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ,  தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான  இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும். 

கர்மா ( ஊழ்வினை ) என்பது சம்ஸ்கிருத வார்த்தை. ஒவ்வொரு மனித உடலிலிருந்தும் நினைப்பு, சொல், செயல் மூலம்  உற்பத்தியாகும் அதிர்வுகள் எதிர் சக்தியாக திரும்பி வருவதை கர்மா என்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. இது அதே பிறவியிலும் நடக்கலாம், அடுத்த பிறவியிலும் நடக்கலாம் என்கிறார்கள். சில சம்பவங்களை கேள்விப்படும் போது அது மிக துல்லியமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. சிலரது வாழ்க்கையை பார்க்கும் போது எல்லோரிடமும் ஒரேமாதிரி நடக்காமல் நிச்சய மற்றதாக இருக்கிறதே என ஐயம் வரும் படி  இருக் கிறது.

ஊழ்வினைக்குப் பரிகாரம் செய்யப் போனால் அங்கேயும் ஊழ்வினைதான் முன்வந்து நிற்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். சிரமம் பாராத விடாமுயற்சி ஊழ்வினையை தணிக்கும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமை யாக்கி தண்டிக்கிறது. அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது  கர்மா வலிய வந்து உதவுகிறது. ஒழுங்கற்ற ஒரு ஒழுங்காய் இயற்கையின் நியதிகள் நடப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், அல்லது இடைநீக்கம் பெறும் தன்மை அடைகிறது. அனேகம்பேரால் தன்னால் உருவாக்கப்பட்ட சக்திகளை ஒழிக்க முடியாமல் போகிறது.  தனது எண்ணம், சொல், செயல் என்னும் நடவடிக்கையின் பின்விளைவுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. நல்லவர்களாய் இருக்கவேண்டியது அவரவர் கடமையும், பொறுப்புமாகும்.கெட்டவர்களை மக்கள் கண்டிக்கிறார்கள், நீதிமன்றம் தண்டிக்கிறது. தோல்வி, இழப்பு என்று இயற்கையின் நியதிகள் தண்டிக் கின்றன.

பின்விளைவு இல்லாதது என்று நாம் சிலதை நினைத்தாலும், இந்த பிரபஞ்சம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது.

நமது பாதையை மாற்றவேண்டிய நேரத்தில் மாற்றிக்கொள்ளவிட்டால் அதே தவறுகள் திருப்பி நடக்கும்.( History repeats)  )

செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது. செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற  பலனைத் தரும். 

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்.

நம்மால் வெளியே யாரையும் மாற்ற முடியாது. நம்மை நாமே மாற்றிக் கொள்வது தான்எளிதான செயல் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்..

                                    ------------------------------------------------













Sunday 14 February 2016

ஆரோக்கியத்தை காப்பது எப்படி

                                   ஆரோக்கியத்தை காப்பது எப்படி 

சிறப்பான ஆரோக்கியத்திற்கு தேவையானவை மூன்று.1.  காற்று 2. தண்ணீர்
3.இயற்கை உணவுகள்.

இளமையில் முதுமைத் தன்மை வராமலிருக்க, அல்லது முதுமைநோய்கள் வராமலிருக்க சரியான உணவு எது, தவறான உணவு எது  என்று தெரிந்து உண்ணுவதை பழக்கப்படுத்திக்கொள் ளவேண்டும்  

1900 க்குப்பிறகு தான் மின் உற்பத்தி, இயந்திரங்கள் பெருக்கம் அதிக மானது. சுத்திகரித்த சீனி, அரிசி, எண்ணெய் சந்தைக்கு தாராளமாக வந்தன. உணவில் வியாபாரம் புகுந்தது. ஆரோக்கியம் பிரச்சினையானது.  

இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இரசாயனம், உணவில் இரசாயனம், பிளாஸ்டிக்  என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகங்களில் உண்பது,   தயார் உணவு, துரித உணவு, வெளிநாட்டு காய், கனிகள்,  உணவுகள், குளிர் பானங்கள், பழரசங்கள்  சாதாரணமாகி விட்டன.

இதனால், சுத்தி கரித்த உணவுகள் (Refined Grains,oil,sugar ) மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat), விஷத்தன்மை உணவுகள் (Oxidants) போன்றவைகளை மிக அதிகமாக உண்கிறோம். மது, மாத்திரை, மாசுபட்ட சுற்றுச்சூழல் அனைத்தும் பக்கவிளைவு களை உடையதாக இருக் கிறது. 

சரியான உணவுகள்:- முழுத்தானியம், நட்ஸ், சீட்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, கிழங்கு, மூலிகைகள், கருப்பட்டி, நாட்டுவெல்லம், தேன், பனங்கற்கண்டு,   தண்ணீர் முதலியன.

தவறானஉணவுகள்:-சுத்திகரித்த தானியங்கள், எண்ணெய்கள், சீனி, வெல்லம், கொதிக்கிற எண்ணெயில் செய்த மாமிசஉணவுகள், சிற்றுண்டிகள், இனிப்புகள்,  தின்பண்டங்கள், சீனி இனிப்புகள், இராசாயனம் சேர்த்து பாதுகாக்கப் பட்ட காய், கனி, குளிர்பானங்கள், உணவுகள் முதலியன.. 

எறும்பூர  கல்லும் தேயும் என்பது போல தவறான உணவுகளை நாட்ப் பட உண்பதால் பலருக்கும் பலவிதமான  ஆரோக்கிய கேடுகள்  ஏற்படுகிறது.

இதை நினைவில் நிறுத்தி உணவுப் பழக்கத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும். ஏனென்றால், பரம்பரை யினாலோ,  பிறவிக்குறை பாடாலோ, ஒவ்வொருவர் உடலிலும் ஏதாவது ஒன்று அல்லது பல உறுப்புகள் பலவீனமாக அமைந்து விடுகிறது. அந்த உறுப்புகள் தவறான உணவுகளால் சீக்கிரமாக மேலும் பலவீனமாகிறது.

நாம் சரியான உணவை உண்கிறோமா, அல்லது தவறான உணவை உண்கிறோமா என்பதைப் பொறுத்துத்தான்  நமது ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. ருசியான உணவிற்கும் ஹார்மோன்கள்  இயக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் உணவு ருசியாக இருந்தால் கட்டுப்பாடுகளை சமாதானப் படுத்திவிட்டு, விரும்பி சாப்பிடுகிறோம்.

முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், பல் வலி, பார்வை குறைபாடு போன்றவை முதல் பெரிய நோய்கள் வரை இளம் வயதில் ஏற்பட தவறான உணவுகள் முக்கிய காரண மாக இருக்கிறது.  

உணவுகளை அதன் இயற்கைத் தன்மையை  மாற்றாமல் உண்ணும் போது அவற்றிலிருந்து  உடலானது தனக்கு வேண்டிய எல்லா சத்துக் களையும் தயாரித்துக் கொள்கிறது. பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரை யும் குடித்து விட்டு எல்லா ச்சத்து க்களையும் உடைய பாலை சுரப்பதை நாம் அறிவோம்.

நாம்மனிதர்கள். சூழ்நிலையாலும், எண்ணங்களாலும் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். உணர்ச்சிகள் உடல் இயக்கத்தை நடத்தக்கூடியவை. மூச்சின் வேகமும், இதயத்தின் துடிப்பும் உணர்ச்சிகளால் மாறக்கூடியவை. இதை நினைவில் கொண்டு மூச்சுப் பயிற்சியினை  முக்கியமாக  கடை பிடிக்கவேண்டும். 
          -----------------------------------------------------------------

Tuesday 26 January 2016

புரோஸ்ட்டேட் வளர்ச்சி

                                            புரோஸ்ட்டேட் வளர்ச்சி
                                         BPH- ( BENIGN PRO-STATIC  HYPERPLASIA )


ஆண்கள் உடலில் சிறுநீர்பையிலிருந்து செல்லும் சிறுநீர் குழாயும்,டெஸ்டிஸி ருந்து வரும் விந்து குழாயும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு இரு வழி வால்வு ( Two Way Valve ) போன்று செயல் படும் தசையை  புரோஸ்ட்டேட் என்கிறார்கள். சிறுநீர், அல்லது விந்து இதில் ஏதாவதுஒன்றைவெளியேஅனுப்பும்பணியினை  புரோஸ்ட்டேட் செய்கிறது.

                                       Image result for PROSTATE

குழந்தைப் பருவத்தில் மிகச்சிறிய தாகவும், இருபது வயதுகளில் முழுவளர்ச்சி யும்  புரோஸ்ட்டேட் அடைகிறது. நாற்பது வயதிற்குப்பின் தேவையற்ற வளர்ச்சியினை புரோஸ்ட்டேட் அடைகிறது. ஐம்பது வயதினை அடையும் போது  வீக்கம் போல் ஆகி விடுகிறது. மேலும் வயதாகும் போது பிரச்சினையா கிறது. எழுபது வயதை அடையும் பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்ட் டேட் பலவித தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது, ஹார்மோன் செயல்பாடு களால்  புரோஸ்ட்டேட் வாழ் நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதற்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால் சிறுநீரை வெளியே விடாமல் பல இடை யூறு களைத் தருகிறது. சிறுநீர் போக்கின் அழுத்தம் குறையும். நாளடை வில் சொட்டுச் சொட்டாக போகும். சிறுநீர் வெளியே வரமுடியாமல் தயங்கும். சிறுநீர் போன திருப்பதி இருக்காது. இரவில் அடிக்கடி சிறுநீர் போக வேண்டி வரும். உறக்கம் கெடும்.சிகிச்சை எடுக்காமல் விட்டால் திடீரென ஒருநாள் மொத்தமாக சிறுநீர் போகமுடியாமல் ஆகிவிடும்.அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்தலாம்.இதற்குரிய மாத்திரை களால் பல வித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

 பரம்பரை, ஹார்மோன் கோளாறு, உணவு இவைகளைப்  பொறுத்து புரோஸ்ட் டேட் பிரச்சினை ஏற்படுகிறது.

உணவுப்பழக்கம்  ஹார்மோன்களை  தாக்குகிறது. பலவருடங்களாக உண்டு வந்த  மாறிய கொழுப்பு ( Trans Fat ) வகை உணவுகள் புரோஸ்ட்டேட் ஆரோக்கி யத்தை கெடுத்து விடுகிறது. எண்ணெயில் வறுத்த உணவுகளை நிறுத்தி விட்டு, நட்ஸ், சீட்ஸ்  களை உண்ணவேண்டும். முக்கியமாக திராட்சை விதை, பூசணி விதை, ஆழி விதை களை உண்டு வந்தால்   அதிலுள்ள கொழுப்புகள் மிக நல்லதாகும்.

சிறுநீர் போவதில் பிரச்சினை தெரிந்தால் அலட்சிய மாய் இருப்பது நல்ல தல்ல.  இது நெடுநாள் நோயாக மாறி, புரோஸ்ட்டேட் ல் பழுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் போன்ற ப்பக்கத்து அவையவங்களையும் பாதிக்கும்.புரோஸ்ட்டேட்  ன் வளர்ச்சி கான்சராகவும் மாறிவிடுகிறது.

 புரோஸ்ட்டேட் கான்சர் 

புரோஸ்ட்டேட் கான்சரை அமைதியான கான்சர்  ( Silent Cancer ) என்கிறார்கள். பெரும்பாலும் எழுபது வயதிற்கு மேற்பட்டவர் களுக்கு  புரோஸ்ட்டேட் கான்சர் வருகிறது. நிறைய ஆண்களுக்கு  புரோஸ்ட்டேட் கான்சர் இருப்பது தெரிவதில்லை. இரத்தத்தில் PSA Value ( Prostate Specific Antigen) சோதனை மூலம் புரோஸ்ட்டேட் கான்சரை உறுதி செய்யலாம்.  புரோஸ்ட்டேட் கான்சர் உடலில்  எலும்புகளைத் தாக்கி பலவீனப்படுத்துகிறது. 

புரோஸ்ட்டேட் பிரச்சினையை அறவே தவிர்க்க விரும்பு பவர்கள் மாறிய கொழுப்பு உணவுகளை அறவே தவிர்த்து விடவேண்டும். 1900 ம் ஆண்டுகளுக்கு முன் புரோஸ்ட்டேட்  கான்சர் என்பது மிகவும் அரிதாக இருந்தது. இக்காலத்தில் புரோஸ்ட்டேட்  கான்சர் மிக அதிக மாக காணப்படுகிறது. காரணம் 1900 க்குப்பிறகு மின் உற்பத்தி, இயந்திரங்கள் பெருக்கம் அதிக மானது. சுத்திகரித்த சீனி, அரிசி, எண்ணெய் சந்தைக்கு தாராளமாக வந்தது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இரசாயனம், உணவில் இரசாயனம், பிளாஸ்டிக்  என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகங்களில் உண்பது,   தயார் உணவு, துரித உணவு, வெளிநாட்டு காய், கனிகள்,  உணவுகள், குளிர் பானங்கள், பழரசங்கள்  சாதாரணமாகி விட்டது. இதனால்  மாறிய கொழுப்பு(Trans Fat), சுத்திகரித்த உணவுகள் (Refined Grains,oil,sugar ) விஷத்தன்மை உணவுகள் (Oxidants) போன்றவைகளை  மிக அதிகமாக உண்கிறோம். இதனால் பலருக்கும் பலவிதமான ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது.

ஜப்பானில் வளர்க்கப்படும் Maitake என்னும் காளான் உணவு  புரோஸ்ட்டேட் மற்றும் எல்லாவகை கான்சருக்கும் மிக அருமையான உணவு. சீரகம் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த உணவாக இருக்கிறது .ஹோமியோபதியிலும் புரோஸ்ட்டேட் க்கு சிறந்த மருந்துகள் உள்ளன. அமெரிக்கா வில் வளரும் Saw Palmetto என்னும் மரத்தில் விளையும் பழத்தின் சாறு வளர்ந்த புரோஸ்ட்டேட் மற்றும் சிறுநீர்பிரச்சினைகளை குணப் படுத்துகிறது. பொதுவாக Anti Oxidant உணவுகளை தினசரி சாப்பிட்டு வருவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். 

                                      ----------------------------------------------











Sunday 17 January 2016

மனப்பயிற்சி செய்வது எப்படி.

                                    மனப்பயிற்சி செய்வது எப்படி.

முதலில் மனதைப்பற்றி சிறு விளக்கம். எல்லோரும் மனம் என்பதை ஒப்புக் கொள் கிறோம். விஞ்ஞானம்  உடலை ஆராய்ந்து விளக்கும் அளவிற்கு மனம் என்பதை முழுமையாக ஆராய்ந்து விளக்க வில்லை. காரணம், உடல் ஸ்தூலமானது. மனம் சூட்ச்சமமானது. 

மனத்தைப்பற்றி விஞ்ஞானமும், மெய்ஞானமும் கொடுத்துள்ள சில விளக் கங்கள். மனம் என்பது நினைப்புகள். நினைப்புகள் இல்லையானால் மனம் என்பது  இல்லை. மனம் ஒரு வெள்ளைத் துணியைப் போன்றது. அதை எந்த நிற சாயத்தில்  நனைக்கிறோமோ அந்த நிறத்தை எடுத்துக்கொள்கிறது. மனம் ஒரு குரங்கை போன்றுத் தாவிக்கொண்டே இருக்கும். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம். என்றெல்லாம் மெய்ஞானம் கூறுகிறது.

மனம் என்பது நாம் இதுவரை பார்த்தது, கேட்டது, அனுபவித்தது, ஆசைப் பட்டது  போன்ற அனைத்தின் சேமிப்பு. ஆரோக்கியமான உடலில் ஆரோக்கிய மான மனம் இருக்கும். மனம் மூளையின் முதலாளி. வேலையற்ற மனம் கேடுகளை எண்ணும்  என்றெல்லாம் விஞ்ஞானம்  கூறுகிறது.

பொதுவாக மனம் என்பது எப்பொழுதும் எதையாவது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடியது. ஏதாவது சில வார்த்தைகள் தான் எண்ணம் என்பது. அந்த சில வார்த்தைகள் எதைப்பற்றி இருக்கும். அவரவர் விருப்பு-வெறுப்பு, வெற்றி- தோல்வி,சுகம்-துக்கம் பற்றிய வார்த்தைகளாக எண்ணிக்கொண்டிருப்போம். 

எண்ணங்கள் பல வகை. அத்தியாவசிய மானதாகவும் இருக்கலாம், வெட்டியான தாகவும் இருக்கலாம். வெட்டியான எண்ணங்களை விரட்டி விடுவது அவ்வளவு சுலபம் அல்ல.

ஆனால் அதற்கு சித்தர்களும்,  ரிஷிகளும் பயிற்சி செய்தார்கள். விருப்பு- வெறுப்பு அற்ற சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஒரு மனதாய், பிரக்ஜையுடன்    திரும்பத், திரும்ப சொல்லிக் கொண்டி ருந்தார்கள். வெற்றி கண்டார்கள்.

அஉம்(ஓ ம் ),
ஓம் நமசிவாய.
ஓம் நமோ நாராயணாய.
ஓம் கம் கணபதயே நமக.
ஓம் சத் சித் ஆனந்த பரபிரம்மா  
போன்ற அவரவருக்கு பிடித்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.  அதில் அவர்கள் வெற்றி யும் கண்டார்கள்.  

அதையே விஞ்ஞானம் REPETITION IS THE MASTER OF CHANGES  என்று சொல்கிறது. POSITIVE, AFFIRMATIVE வார்த்தைகளாக  ஆக சொல்லிக்கொண்டே இருங்கள் என்கிறது.

I AM AL RIGHT.
I AM RELAXED.
I FEEL HAPPY.
I FEEL HEALTHY,
I FEEL SUCCESS  
போன்று அவரவருக்கு வேண்டியதை, பிடித்ததை  சொல்லிக் கொண்டிருக்க சொல்கிறது விஞ்ஞானம்.

இதை நாம் அனைவரும் உள்வாங்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உடலுக்கு சரியான உணவு வேண்டும், மனதிற்கு சரியான எண்ணம் வேண்டும்.
உடல் சரியாக இயங்க உடற்பயிற்சி உதவுவதுப்போல், மனம் சரியாக இயங்க மனப்பயிற்சி உதவும்.

மனதிற்கு சரி-தவறு, உண்மை-பொய், செய்யலாமா-கூடாதா என்பது பற்றி யெல்லாம் கவலையில்லை. அவரவர் விருப்பம் எதுவோ அதை அதிக மாக விரும்பும். வெறுப்பு எதுவோ அதை அதிக மாக வெறுக்கும். ஆனால், அந்த, அந்த செயல் களுக்கான பின்விளைவுகள் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில் முன் வந்து நிற்கின்றன. 

மனம் துள்ளி குதிப்பதற்கும், துவண்டு போவதற்கும், ஆவேசப்படுவதற்கும் வார்த்தைகள், நினைப்புக்கள் நேரடியாக காரணமாய் இருப்பதை காண்கிறோம். 

இங்கு சில வார்த்தைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளுக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனிடமே அந்த வார்த்தைகளை வேண்டுதலாய் கேட்கும் போது மனப்பயிற்சி சிறப்பாக அமைகிறது.

உண்மையென்று உணர்ந்த வார்த்தைகளை, தன்னைக் காப்பாற்றும் வார்த்தைகளை, தன்னைச் சரிப்படுத்தும் வார்த்தைகளை, தன்னைப் பயன் படுத்தும் வார்த்தைகளை பட்டியலிட்டு அவரவர் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம். 

முக்கியமான வார்த்தைகளை ஒருமனதாய், பிரக்ஜை யுடன் திரும்பத்திரும்பச் சொல்லி ஆழ் மனதில் பதிய வைத்து விட்டால், எஞ்சியவற்றை மனதின் நுட்ப மான இயக்கம் கவனித்துக்கொள்ளும்.

1.நல்லெண்ணம்தா:-யாருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ துன்பம் நினையாத நல்வழியைத் தேடித் திரியும் மனம்.
2.நன்மைதா:-தன்னால் தன் வாழ்க்கைக்கு எந்த குறைவும் ஏற்படாமல்  நடக்கும் மனம்.
3,நியாயம்தா:-நிரபராதி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வாதிக்கும் மனம்.
4.நோக்கம்தா:-தன்னுடையத் தேவைகளுக்கு தன்னைத் தகுதி படுத்துவதில்  குறியாய் இருக்கும் மனம்.
5.ஆன்மீகம்தா:-தனது மனம், இயற்கை நியதிகள் பற்றி இயன்ற வரை ஆழமாக சிந்திக்கும் மனம்.
6.ஆரோக்கியம்தா:-சரியான உணவாலும், பயிற்சிகளாலும், மருத்துவ ஆலோசனையாலும் உடல் வலிமையைக்காப்பற்றிக்கொள்ளும் மனம்.
7.செல்வம்தா:-சிறுசேமிப்பு செய்து அதனை முதலீடாகவும், காப்பீடகவும் வளர்த்து பாதுகாப்பு பெறும் மனம்.
8.பரஸ்பரம் மரியாதைதா:-பரஸ்பரம் சகிப்புத்தன்மையாகவும், பயனாகவும்   பழகும் நானே மேலானவன் என்கிற நினைப்பற்ற மனம்.
9.எளிமைதா:-இயற்கைவளம், மற்றும் இயற்கையின் ஒழுங்கைக் கெடுக்கும் ஆடம் பரத்தை விரும்பாத மனம்.
10.கடமைதா:-சார்ந்திருப்பவர்களையும், சமுதாய சட்டங்களையும் ஏற்று நடக்கும் மனம்.
11.திட்டம்தா:-சம்பந்தப் பட்டவர்களிடம் ஆலோசித்து பணிகள், வழிகள்; தடை களை பட்டியலிடும் மனம்.
12.செயல்தா:-திட்டமிட்டப்படிசெயல்பட்டு, முன்னேற்றம் காணும் சளைக்காத மனம்.
13.பொறுப்புதா:-நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒப்புக் கொண்ட வை களில்  நியாயமாய் நடக்கும் மனம்.
14.தகுதிதா:-உண்மை, நம்பிக்கை, நேர்மையை நினைத்து போலித்தனத் தைக் கைவிடும் மனம்.
15.கட்டுப்பாடுதா:-அளவு, வரம்பு அறிந்து பொறுமை, நியாயமான வழிகளில் எதையும் அணுக நினைக்கும் மனம்.
16.வலிமைதா:-செய்த தவறுகளுக்கு வருந்தி, மீண்டும் தவறு செய்யாதபடி நடக்கும் வலிமையை தேடும் மனம்.
17.அறம்தா :செய்யத்தக்கதை செய்து, தவறுக்கு வருந்தி, உணர்ந்தவர்களை
மன்னித்து,   அநியாயங் களை எதிற்கும் மனம்.
18.கருணைதா:- இயலாதவர்களின் தேவைகளுக்கு தன்னால் இயன்றதை செய்து காட்டும் மனம்.
19.சூழ்நிலைதா:- சரி-தவறு, சாதக-பாதக மான சூழ்நிலையில் உணர்ச்சி வயப் படும்போது எச்சரிக்கும் மனம்.
20. பின்விளைவில் பயம் தா:-பின்விளைவு களிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை கருதி, இயற்கையின் நியதிகளுக்கு பயந்து நடக்கும் மனம்.
21. பணிவுதா:-அடுத்தவர்கள் உரிமைக்கும்,  நியாயமாய் நடப்பவர்களுக்கும்,  நம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும் அடங்கிப்போகும் மனம்.
22. அருள்தா:-  கடவுளால்  ஆயிரம்  வழிகளில்  உதவ முடியும் என நம்பி
சரணடையும் மனம்.
23.திருப்திதா:​-ஆசைக்கு அளவே இல்லை.  வேண்டாம்,  போதும்,  என்கிற மனநிறைவோடு  நன்றி கூறும் மனம்.
24. நிம்மதிதா:- நாம் செய்த கடமை, நன்மை, நியாயமாய் நடந்தது போன்ற நல்ல நினைவுகளை எண்ணிசிறந்த புத்தகம், இசை, யோகா, தியானம், பிரார்த்தனை,  சேவை போன்ற  வை களில்   ஈடுபாடு கொள்ளும் மனம்.

உடற்பயிற்சியைப்போல் அல்லாமல் மனப்பயிற்சியை பிரயாணத்தின் போதும்,  பொது இடங்களிலும், காத்திருக்கும் போதும், ஓய்வின் போதும்  மனத்துள் சொல்லிக் கொண்டிருக்கலாம். தவறான எண்ணங்களையும், தவறான கற்பனைகளையும் தவிர்க்கலாம்.

ஒருவருடைய குணத்தையோ , பழக்க வழக்கத்தையோ அவ்வளவு எளிதாக மாற்றி விடமுடியாது. விடாமுயற்சி அதற்குரிய கூலியை பெற்றுத்தரும்.

                                    --------------------------------------------------















  

Friday 15 January 2016

உடல் இயங்கும் விதம்

                                            உடல் இயங்கும் விதம்  

மனித உடலைப் பிரித்து போட்டால் அதை ஏழு பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்  என்கிறார்கள்.

A.உடலின் ஆதாரம். 
B, உடலின் உட்பகுதி.
C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும். 
D. சுரப்பிகளின் வகை. 
E. ஜீரணமும் கழிவும்   
F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள்.
G. வெளிப்பாகங்கள்.

இதில் ஒரு சில பாகங்களைப்பற்றிய சிறு விளக்கங்கள் வருமாறு.

A. உடலின் ஆதாரம் :-    
1. CELL:-  உயிருள்ள அனைத்து ஜீவன்களும் செல் களால் ஆனது. மனிதன் பல ஆயிரங்கோடி செல் களால் ஆன ஜீவன். செல்கள் சத்துக்களை சக்தியாக மாற்றுகிறது. தனக்குத்தானே வழிகாட்டி நடந்து கொள்கிறது.தேவைக்கேற்ப மேலும் உற்பத்தி செய்துகொள்கிறது. பல செல்கள் சேர்ந்து ஒரு திசு வாக வும் , பல திசுக்கள் சேர்ந்து ஒரு உறுப்பாகவும், பல உறுப்புக்கள் சேர்ந்து ஒரு முறையான இயக்கத்தை செய்யவும், பல இயக்கங்கள் சேர்ந்து ஒரு உடலாக செயல் படவும் செய்கிறது.

2.DNA :- Deoxyribonucleic Acid என்கிற பரம்பரையால் வருகின்ற பொருள். உடலின் ஒவ்வொரு செல்லிலும் அதே DNA காணப்படுகிறது.

3.GENE:-  செல்லிலுள்ள DNA வின் ஒரு பகுதி GENE ஆகும். உடலின் தேவை அனைத்தையும் உண்டு பண்ணக் கூடிய சக்தி உடையதாகும். அதிக மான GENE கள் சேர்ந்து குரோமோசம் ஆகிறது.

4.MITOCHOMDRION:-  செல்களில் சக்தியை உற்பத்தி செய்கிறது.

5.PROTEIN:-  ஜீரணமாகி  சக்தியாகவும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

6.STEM CELLS:- இதை தாய் செல் என்கிறார்கள். உடலில் எந்த செல்லாகவும் மாறும் சக்தி உடையது.இரத்தம், இதயம், எலும்பு, தோல், தசை, மூளை என எந்த செல் ஆகவும் மாறக்கூடியது.

7.EGG:- குழந்தை பேறு அடைய பெண் இனத்தில் முட்டை உற்பத்தி ஆகிறது.

8.NERVE CELL:- தனக்கு தூண்டுதல் கிடைத்த உடன் மின்சாரத்தை உண்டாக்கி
தகவல் அனுப்புகிறது.

9.RED CELL:-ஒரு சொட்டு இரத்தத்தில் பல லட்சம் சிகப்பு அணுக்கள் உள்ளன.எலும்பு இதனை உற்பத்தி செய்கிறது. சிகப்பு அணுவில் இருக்கும் .ஹீமோ குளோ பின் என்னும் புரோட்டீனில் இருக்கும் இரும்பு ஆக்சிஜனை சுமந்து செல் களுக்கு கொடுத்து விட்டு, செல் களில் இருக்கும் கழிவுப் பொருளான கரிமல வாயு வை சுமந்து வந்து வெளி ஏற்றுகிறது. சிகப்பு அணு இல்லையேல் மரணம்.

10.WHITE BLOOD CELL:- இரத்தத்தில் கிருமியோ, தொற்று நோயோ புகுந்து விட்டால்  வெள்ளை அணுக்கள் அவற்றை வெளியேற்றுகின்றன.ஒரு சொட்டு இரத்தத்தில் 7000 முதல் 25000 வரை வெள்ளை அணுக்கள் உள்ளன.

11. OSTCO BLAST :-  இது ஒரு வகை செல்.இதிலிருந்து எலும்பு வளர்கிறது. எலும்பு தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

12.BODY TISSUE:- உடலில் நான்கு விதமான திசுக்கள் உள்ளன.1.  epitheliai 
( உடலின் உள்ளேயும், வெளிமூடிக்கொள்கிறது ) 2. connective  ( எலும்பு மண்டலத்தையும் பிற பாகங்களையும் தாங்கிக்கொள்கிறது.) 3. muscle 4. nerves ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலை செய்கிறது.

B, உடலின் உட்பகுதி
1.BONE:- எலும்பின் அமைப்பு.

2.MUSCLE:- தசையின் அமைப்பு.

3.SKELETAL MUSCLE:- எலும்போடு  சேர்ந்திருக்கும் தசைகள்.உடல் அசைவிற் கேற்ப சுருங்கி விரிகிறது.

4.CARTILAGE:- கடினமான தசை.  காதின் வெளிப்புறம், மூக்கு போன்ற இடத்தி லுள்ள தசைகளாகும்.

5.SKULL:- மண்டையோடு எலும்பாலான அமைப்பு. உள்பக்கமாக மூளையை யும்,  வெளிப்பக்கமாக முகத்தையும் தாங்கிக்கொள்கிறது.குழந்தை பிறந்த உடன் இரப்பர் போன்றி ருக்கும் மண்டையோடு நாளடைவில் உறுதியான எலும்பாகி விடுகிறது.

6.SPINE:- முதுகுத் தண்டு மூன்று பாகங்களாகும். முதல் 7 டிஸ்கு களை CERVICAL VERTEBRAE   என்றும், அடுத்த 12 டிஸ்கு களை THORACIC VERTEBRAE என்றும், கடைசி 5 டிஸ்கு களை LUMBAR VERTEBRAE  என்றும் கூறுகிறார்கள்.

C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும்
1.HEART:-பிராண வாயு கலந்த இரத்தம்  உடல் முழுவதும் போய் சேர பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது. ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. உடலில் இதயம் சத்தான உணவுகளால் சரிசெய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும். முளை வந்த கோதுமை, திராட்சை பழக் கொட்டை, அன்னாசிப்பழம், பூண்டு போன்று காய், கனிகளிலுள்ள அன்றி ஆக்சிடெண்ட் ( vitamin A, E, C ) இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

2.CARDIAC MUSCLE:-இதயத்தின் தசைகள் தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு, தானியங்கியாக ஒரு ஒழுங்கில் செயல்பட்டு ஒரு ஜீவனின் வாழ்நாளுக்கு காரணமாக இருக்கிறது.

3.BLOOD:-இரத்தம் செல்களுக்கு பிராணவாயு வையும், உணவிலுள்ள சத்துக்களையும் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு, செல்களில் ஏற்படும் கழிவுகளை எடுத்துக்கொண்டுவந்து வெளியேற்று கிறது.மனித உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.

4.LUNGS:-நெஞ்சுப் பகுதியில் இருக்கும் நுரையீரல் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்திற்கு கொடுத்து, இரத்தத்திலிருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் வேலையை செய்கிறது..

5.DIAPHRAGM:-மூச்சு விடும் செயல் ஒரு குடைபோன்ற அமைபபுடைய தசையாலான Diaphragm என்பதன் உதவியால் நடைபெறுகிறது. Diaphragm கீழ் நோக்கி சுருங்கி வயிற்றை அழுத்தும் போது மூச்சுக் காற்று உள்ளே செல்கிறது. Diaphragm மேல்நோக்கி இயல்பு நிலைக்கு வரும்போது வெளிமூச்சு ஏற்படுகிறது வயறானது உள்ளே செல்கிறது.

6.ARTERY:-இதயத்திலிருந்து பிராணவாயுவை சுமந்துகொண்டு செல்களுக்கு செல்லும் இரத்த குழாய்களை Artery  என்கிறார்கள்.

7.CAPILLARY:-இவை திசுக்களின் உள்ளே இருக்கின்றன. இரத்தத்தை Artery லிருந்து Vein க்கு எடுத்துச்செல்கின்றன. பிராணவாயு, சத்துக்கள், கரிமல வாயு, கழிவுகள் முதலியன  Capillary   யில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

8.VEIN:-செல்களிலுள்ள கழிவுகளை Capillary  வழியாக எடுத்துக்கொண்டு    இருதயத்தை நோக்கிச்  செல்லும் இரத்தக் குழாயை  Vein  என்கிறார்கள்.

D. சுரப்பிகளின் வகை
1. LYMPH                                        5. PANCREAS                 9. PITUITARY
2.TEAM IMMUNITY                     6. THYROID                  10. OVARY 
3. SPLEEN                                       7. ADRENAL                 11. TESTES
4. HORMONES                               8. PINEAL                     12.PROSTATE
                                                                                                  13. SEX LIFE 
E. ஜீரணமும் கழிவும்  
1. ENZYMES                                   5. INTESTINES                9. LIVER
2. SALIVA                                       6. SMOOTH MUSCLE   10.KIDNEYS 
3.TEETH                                         7. GUT BACTERIUM     11.BLADDER
4.STOMACH                                  8. GALL BLADDER       12. WASTE MATTER
                                                                                                    13. ELECTROLYTES

F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள். 
1. BRAIN
2. SPINAL CORD
3. NERVES
4. EYE
5. EAR
6. NOSE
7. TOUCH
8. TONGUE

G. வெளிப்பாகங்கள்.
1. SKIN
2. HAIR
3. NAIL
4. SWEAT GLAND

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள் 

நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் செய்யும் பணிகள் அனைத்தையும் விரிவாகப் பார்த்தால் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது.

நமது இதய தசைகள் வாழ் நாள் முழுவதும் ஒய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நமது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கணையம் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு சமமான பணிகளை செய்கின்றன. நாம் உண்ணும், குடிக்கும் அனைத்தும்  ஜீரணப்பகுதியை கடந்து, கல்லீரலுக்கும், சிறுநீரகத்துக்கும் போய்வருகின்றன.
 
நமது மூளை பலநூறு கணணிகளுக்கும் மேலான பணிகளை செய்கிறது.

நமது நரம்பு மண்டலம் ஒப்பிட முடியாத அளவு வேகத்தில் உணர்வுகளை கடத்தவும், உத்தரவுகளை பெறவும் செய்கின்றன.  


மேற்கண்ட நமது அவையவங்கள் யாவும் நாம் பிறந்ததிலிருந்து சரியாகவே இயங்கக்கூடியவை. அதற்கு சரியான உணவு, காற்று, தண்ணீர், சூரிய ஒளி, உறக்கம், சரியான எண்ணம் இவைகளை கொடுத்து வந்தால் அவைகளும் சரியாக இயங்கும். ஆனால், பல்வேறு காரணங்களால் நாம்மால் அவைகளை கடைபிடிக்க முடியவில்லை.  

உணவிலுள்ள சத்தையும், காற்றிலுள்ள பிரணவாயுவையும் செல்கள் சக்தியாக மாற்றி நம்மை செயல் பட வைக்கின்றன.

பல காரணங்களால் நாம் தவாறன உணவுகளை உண்ணப்பழகி விட்டோம். வியாதி என்று வந்த பின்னரே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம்.

முதலில் இனிப்புச்சத்து. நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணமாகி இரத்தத்துக்கு வரும் போது அதிலுள்ள இனிப்பு சத்துக்களில் ( sugar & starch ) இன்சுலினும் இருந்தால்தான் செல்கள்  ஏற்றுக் கொள்கின்றன. இன்சுலின் இல்லாத இனிப்பை  ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுகின்றன.

இதனால் இரத்தத்தில் சுகர் கூடி செல்களை நோய்ப்  படுத்தி விடுகின்றன உடல் பலவீன மாகி விடுகிறது.

இரண்டாவது கொழுப்புச்சத்து. நட்ஸ், சீட்ஸ் களில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பாகும் ( Un Saturated Fat ). நாம் அதிலிருந்து கொழுப்பை மட்டும் பிரித்தெடுத்து உபயோகப்படுத்தும் பொழுது பலசத்துக்கள் பிரிந்து போய் விடுகின்றன.

உணவு ஜீரணமாகி இரத்தத்தில் தேவைக்குமேல்  அதிகமாக வரும் இனிப்புக்களை அவை இன்சுலின் கூட வந்தாலும் தேவையில்லை என்று சொல்லி செல்கள் நிராகரித்து விடுகின்றன. அப்போது அந்த இனிப்புகள் கொழுப்பாகமாறி உடலில் தேங்கி உடல் எடையை கூட்டுகின்றன.

நாம் உண்ணும் பால், பால்வகைஉணவுகள், எல்லா மிருக வகை உணவுகள், எல்லாவற்றிலும் கரையாத கொழுப்பு ( Saturated Fat ) இருக்கிறது.

எண்ணெயில் வறுத்த உணவுகளில் மிகவும் கெட்ட கொழுப்பான மாறிய ( Trans Fat )  கொழுப்பு இருக்கிறது.

ஆக, நமது உடலுக்கு நான்கு வகையான உணவு வழிகளில் கொழுப்பு கிடைக்கிறது. ஆனால் நமது உடலுக்குத் தேவையான கொழுப்பில் 75% த்தை நமது உடலே தயாரித்துக் கொள்கிறது. உடலுக்கு உணவு வழியாக வரும் தேவைக்கு அதிகமான கார்போஹைட்ரேட் ( இனிப்பு ) கொழுப்பாக மாறுவ தாலும்,  மற்றும் கொழுப்புள்ள உணவுகளை தேவைக்கு அதிகமாக உண்ணுவதாலும் உடலுக்குள் கொழுப்பு நிறைய சேர்ந்து விடுகிறது. இதனால் அவரவருக்கும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள்  ஏற்படுகின்றன. கொழுப்புகள் உடலில் தங்கி உடல் எடையை கூட்டிவிடுகிறது. கூடிய எடையை குறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.

பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரையும் குடித்து, வெண்மைநிற, சரிவிகித, எல்லச்சத்துக்களையும் உடையப் பாலைத்தருகிறது,

அதுப்போல் நமது பழங்கால முன்னோர்கள் வெறும் கிழங்கு, காய், கனிகளை மட்டும் உண்டு எந்த சத்துக்குறைவும் இல்லாமல் திடமாக வாழ்ந்து மடிந்தார்கள்.

இயற்கையாக கிடைக்கும்  முழு உணவுகளை மற்றம் ஏதும் செய்யாமல்  நாம் உட்கொண்டால் அந்த உணவுகளிலிருந்து  உடல் தனக்கு வேண்டிய அனைத்துசத்துக்களையும் தயாரித்துக்கொள்ளும் வகையில் நமது உடல் இயக்கம் அமைந்திருக்கிறது. ஆனால் நாம் அலட்சியமாய் இருந்து நாகரீகம், முன் னேற்றம்  என்று சொல்லி நல்லனவற்றை புறந்தள்ளி  இயற்கை உணவு களில் பல மாற்றங்கள் செய்து வியாபார மாக்கி உண்ணுகிறோம். அடிப்படையை மறந்து விட்டோம்.

நாம்வெள்ளை அரிசி, வெள்ளை  மாவு, எண்ணெய்,சீனி என சுத்திகரிப்பு  மூலம்
( Refined Process )  எல்லா சத்துக்களையும் நீக்கிவிட்டு உண்ணுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுத்திகரித்த மற்றும் கெட்டகொழுப்பு உணவுகளை நாம் தேவைக்கு அதிகமாக உண்பதால் நமது  ஆரோக்கியத்தில் பலருக்கும் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.

மூன்றாவது பிராணவாயு. உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு சீரான பிராணவாயு  மிக முக்கியம். ஆனால், நமது மூச்சு ஓட்டம் நமது மன உணர்ச்சிகளுக்கு ஏற்ப சாதாரணமாகவும், அசாதாரணமாகவும் இருக்கிறது. சரியாக மூச்சுவிடுவதை பழகிக் கொண்டால் சில உபாதைகளை மருத்துவம் இல்லாமலே தடுத்து விடலாம்.

நான்காவது உடற்பயிற்சி. நமது உடல்  நடக்கவும், ஓடவும், ஏறவும், இறங்கவும் ஆன செயல்களை செய்வதற்காக அமைக்கப்பட்டது. உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் எரிக்கப்பட்டு விடவேண்டும் என்பது நியதி. உழைப்பிற்கேற்ற அளவு உணவு, அல்லது உணவிற்கேற்ற அளவு உழைப்பு . இந்த சமநிலை மிக அவசியமாக இருக்கிறது.

நாம் தெரிந்து கொண்டவைகளை உறுதி செய்து, உறுதி செய்தவைகளை, நினைவில் நிறுத்தி, அந்த உண்மைகளை இயன்றவரை கடைபிடிப்பது ஒன்று தான் நமக்காக உழைக்கும் நமது உடல் உறுப்புக்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

                                       --------------------------------------------------------