Thursday 22 October 2015










Image result for money and health


Image result for பொன்மொழிகள்


Image result for பொன்மொழிகள்



Image result for பணம்
Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்



Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்








Image result for பொன்மொழிகள்

Image result for money and health






































EFFECT OF ALCOHOL


























Image result for exercise and health








Image result for body weight  and health








Image result for body weight  and health

Image result for time and health

Image result for time and health




Key Numbers for Heart Health

3 numbers that can change your life.

1. Blood Pressure: Key to Heart Health

2. Cholesterol: Predictor of Heart Attack

3. Waist Size: The Connection to Heart Disease



Wednesday 21 October 2015

நினைப்பும் உடல்நலமும்

                                         நினைப்பும் உடல்நலமும்

உடல் மனதின் வேலையாள். உடல் மனதிற்கு கீழ்படிந்து நடக்கிறது. சுற்றுப்புறம் உடல்நலத்தைப் பாதிப்பது போல் நினைப்புகளும் உடல் நலத்தைப்  பாதிக்கிறது. நியாயமற்ற நினப்புகளால் உடல் துரிதமான நோய்க்கும் அழிவிற்கும் காரணமாகிறது. உற்சாகமான நல்லெண்ணங்கள் உடலின் இளமையையும் ஆரோக்கியத்தையும் காக்கிறது.

நோயைப் பற்றிய மாறாத பயம் நோய்க்கு ஆட்படுத்துகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது. பரிதவிப்பான எண்ணம் உடல்முழுவதையும் கெடுத்து விடுகிறது. சுத்தமில்லாத நினைப்புகளை மனதில் அடைகாக்கும் பொழுது அது செயலாகாவிட்டாலும் நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறது.
உடலானது மிகவும் மென்மையான, மற்றும் சுருங்கு தசைகளாலானது. எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியது. எண்ணங்களின் தன்மைக்கேற்றபடி மாற்றமடையக்கூடியது. உறுதியான, சுத்தமான, மகிழ்ச்சியான எண்ணங்களால் தசைகள் சக்தியும், மென்மையும் பெறக்கூடியது. நல்லெண்ணங்களை உடையமனம் நல்ல இரத்தத்தையும், நல்ல வாழ்க்கையையும் அமைக்க முயற்சிக்கும். எண்ணங்களை மாற்றாமல் உணவுகளை மட்டும் மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.

மனதில் சுத்தாமான எண்ணங்களை உடையவர்கள் ஒருபோதும் அசுத்தமான உணவுகளுக்கு ஆசை படமாட்டார்கள். சுத்தமான எண்ணம் உடலை சுத்தமாக்கும். உற்சாகத்தை தரும் எண்ணங்கள் என்பவை ஒரு மருத்துவரைப் போன்று உடலை ஆரோக்கியப்படுத்தும்.

சந்தோசம், கவலை, கோபம், பயம் போன்ற எண்ணங்களை முகம் பிரதிபலிக்கிறது. கவலையால் நெற்றி சுருங்குகிறது. மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்கிறது. இவைகளை நாம் முகத்தில் நேரில் காண்கிறோம். உண்மையில் இந்த உணர்வுகளால் உடல் முழுவதும் தாக்கம் பெறுகிறது. எண்ணங்களின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு உறுப்பு களும் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கம் பெறு கின்றன.

எண்ணங்களை அதன் நோக்கத்துடன் தொடர்பு படுத்தி எண்ணப்பழக வேண்டும். தெளிவான நோக்கம் இல்லாமல் வாழ்பவர்கள் கவலை, பிரச்சினை, சுயபரிதாபம் போன்ற நிலைக்கு தள்ளப்படு கிறார்கள். நோக்கமில்லாமல் எண்ணுவதையும், பலவீனங்களையே எண்ணிக் கொண்டிருப் பதையும்   நிறுத்தப் பழகவேண்டும். எண்ணங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டும்.

பலசமயங்களில் நமக்குள்ளே நாம் பேசிக்கொள்கிறோம், விவாதிக்கிறோம், வழிகாண்கிறோம். யாருக்கும் பாதிப் பிருக்கக்கூடாது நியாயமாய் இருக்கவேண்டும் என்கிற நோக்கில் முடிவெடுத்தால் வெளியே  நியாயமாய் நடப்போம். தனக்குள்ளே பேசிக்கொள்ளும் போதே சுயநலத்தை முன்வைத்து முடிவெடுத்தால்  தவறாக நடந்து பிரச்சினைக்கு காரண மாவோம்.

நல்லதை விரும்புபவர் புகைபிடிப்பதில்லை, மது-போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை. உணவு, உடற்பயிற்சி, கடமை, நியாயம், கருணை, மரியாதை என்கிற மனோபாவம் அவரிடம் இருக்கும்.

ஒரு பிரச்சினையான சூழ் நிலையில் அனைவருக்கும் பயனான ஒரு முடிவை தேடுவதே நேர்மறை எண்ணம். கெட்டதை தவிர்த்து நல்வழியை காண்பது நேர்மறை எண்ணம்.

எதிர் மறை எண்ணங்கள் சில

ஒரு சூழ்நிலையிலுள்ள தவறுகளை மட்டுமே மிகைப்படுத்தி நல்லவற்றை கவனிக்காமல் விடுவது.

தனக்கு ஒரு நல்லது கிடைக்கும் போது அதனால் வரும் பாராட்டுக்களையும் பாராட்டுபவர்களையும் நினைத்துப்பார்க்காமல், எல்லாவற்றிற்கும் தனது திட்டம் தான் காரணம் என்ற நினைப்பில் இருப்பது.

தவறாக ஒன்று நடந்துவிட்டால் தன்மீது நொந்துகொள்வது.

தொடர்ந்து தவறுகளைமட்டுமே எதிர்பார்ப்பது. காலையில் ஒன்று தவறாகிவிட்டால் அன்று முழுவதும் தவறு தான் நடக்கும் என்கிற முடிவுடன் இருப்பது.

நல்லது அல்லது கெட்டதை ( Perfection or Failure ) மட்டுமே பார்ப்பது. மத்திய வழியை மறந்து விடுவது. இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களுக்கு சில உதாரணங்களாகும்.

தான் மாறவேண்டிய சில குணங்களை உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள திட்டமிடுவது நல்லது.

தன்னுடைய எண்ணங்கள் நேர்மறையா, எதிர்மறையா என கவனித்து அதனை சரிப்படுத்துவது நல்லது ,

தனது முடிவின் பின்விழைவுகளைப பற்றி யோசிக்காமல் ஆசையாலும், கோபத்தாலும்  உணர்ச்சி வயப்படுகிறோம் என்பதை உணருவது.

எந்த சூழலிலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருப்பது நல்லது  .

உடற்பயிற்சி, சரியான உணவு, மன அழுத்தத்தை மாற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது .

கவலைப் படுவதால் எதுவும் நடக்காது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து புதிய முயற்சியில் இறங்குவது நல்லது

நமது மகிழ்ச்சியிலும் வாழ்க்கையிலும் அக்கறையுள்ள அம்மா, மனைவி/கணவன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் நம்மீது குற்றம் காணும் போது அதை அலட்சியப் படுத்தாமல் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும்..

சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக வழிகாட்டி அதை கவனித்து கேட்டு தெரிந்துகொள்வது நல்லது .

தவறான எண்ணம் மனதில் ஏற்படும் போது இது தவறான எண்ணம் என உணர்ந்து அதற்கேற்ற சரியான நல்லெண்ணங்களை எண்ணுவது நல்லது .

பயிற்சிதான் தவறான எண்ணங்களிலிருந்து நல்லெண்ணங்களுக்கு மாற்றும். சுய விமர்சனங்களை குறைத்து விட்டு சுய ஏற்பினை அதிகப்படுத்தவேண்டும். கெட்டதை நினைத்து விட்டு நல்லதை செய்யமுடியாது. நல்ல, வலிமையான, வெற்றியானநினைப்புகள் ஆழ்மனதிற்குள் புகவேண்டும். ஏழையாக இருந்தாலும் ராஜாவாக ஆவேன் என்று கற்பனை செய்ய வேண்டும்.  

ஆழ்மனத்திலிருக்கும் சரியான எண்ணங்கள்  அதிசயிக்கும் வகையில் சக்தியையும்,வலிமையையும்,தைரியத்தையும்,தீர்மானத்தையும்  தருகிறது.
இன்று உணர்ச்சியுடன் நாம் எண்ணும்  ஒரு எண்ணம் சீக்கிரத்திலோ, தாமதமாகவோ  ஒருநாள் செயலுக்கு வருகிறது. நம் செயலுக்கேற்ப நம் வாழ்க்கை நடக்கிறது. நமது வாழ்கையை நமது எண்ணங்கள் காக்கிறது.

எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் வாழ்கையை ஒழுங்கு படுத்தலாம். அதற்கு வெற்றி-தோல்விகளைப்பற்றி ஆராய்ந்த தெளிவால் நெருக்கடிகளை கையாள  வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிகபெரிய சக்தி களில் ஒன்று நினைப்பு. என்ஜின் முன்னால் போவதும் பின்னால் போவதும் ஒரே சக்தியால் தான். அதேபோல் சரிக்கும்-தவறுக்கும் காரணம் எண்ண சக்திதான். உணவில்லாமல் பட்டினி கிடப்பவன் பயத்தால் செத்து விடுகிறான்.நோய் குணமாக வேண்டி பட்டினிவிரதம் என்றிருப்பவன் நோய் குணமடைந்து ஆரோக்கியம் பெறுகிறான். நம்பிக்கை எண்ணம் உடலுக்கு வலிமையைத் தருகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது.

சரியான உணவுகள், உடற்பயிற்சிகள் , நல்லவனாக, நன்மையாக இருப்பது போன்ற எண்ணங்களை    பெரும்பான்மையாக எண்ணும் போது அவை ஆழ்மனதுள்  சென்று உடனடியாகவோ தாமதமாகவோ நம்மை விருப்பத் துடன் செயல்பட வைக்கிறது. மனதை  நம்முடன் ஒத்துழைக்க வைக்க இதுவே வழி. நல்ல உடல் நலத்துடன் வாழ மனத்திலிருக்கும் நினைப்புகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருக்காமல் நல்ல எண்ணங்கள்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                           ------------------------------------------------------










































Sunday 18 October 2015

நிலமும் உடல் நலமும்

                                         நிலமும்  உடல் நலமும் 

ஆரோக்கியம் அனைத்து உயிரினங்களின் பிறப்புரிமையாகும். இந்த சட்டம் மண்ணிற்கும், தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருந்தும். இந்த நான்கின் ஆரோக்கியமும் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இந்தத்தொடரில் ஏதாவது ஒன்று பலவீனமடையவோ, பாதிப்படையவோ, செய்தால் அது அடுத்தத் தொடரை பாதித்து கடைசி தொடரான மனிதனையும் பாதிக்கிறது.  

தாவரங்களுக்கு மனிதன் இடும் இரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி விஷங்களாலும், மண் வளம் பாதிக்கப்படுகிறது. தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த தாவரங்களைத் தின்னும் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த உயிரினங்களையும் தாவர உணவுகளையும் உண்ணும் மனிதனும் பாதிக்கப்படுகிறான்,

இதனைச் சரிப்படுத்தாமல் மனிதனின் சுகாதாரம், மருத்துவ கண்டுபிடிப்புகள் எதுவும் உயிரினங்களையும் மண்வளத்தையும் காப்பாற்றப்போவதில்லை. 

மண்வள  பாதுகாப்பு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் உணவின் உயர்ந்த தரம் அந்த உணவு பயிராகும் சத்து நிறைந்த மண் வளத்தை பொறுத்தே அமைகிறது.

மண்ணிலுள்ள பல நுண்ணிய உயிரினங்கள் மண்ணில் சத்துக்கள் ஏற்படவும் தாவரங்கள் முளைக்கவும். செழித்து வளரவும் உதவுகின்றன. இயற்கை உரங்கள் மண் ஆரோக்கியத்தைக்காத்து அதில் வளரும் தாவரங்களை ஆரோக்கியப்படுத்தி அதை உண்டு வாழும் மற்ற உயிரினங்களையும் மனிதனையும் காப்பாற்றுகிறது.

மண் நீரையும், சத்துக்களையும் சேர்த்துவைத்துக்கொளகிறது. மண் என்பது அழுக்கு அல்ல. இயக்க மற்றதுமல்ல 

மண் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு கிடைக்காதவரை மனிதனுக்கும், மனிதன் உண்ணும் உயிரினங்களுக்கும் சத்தான உணவிற்கும் பாதுகாப்பு இல்லை.

மண் இயற்கையிலுள்ள பல நிறங்களை உறிஞ்சி தாவரங்களுக்கு நிறத்தைத்தருகிறது. இந்த நிறங்களுக்கு பல்வேறு நல்ல குணங்கள் உள்ளன.

மனிதன் இயற்கையின் நியதிகளை புரிந்து, விவசாயத்தைப் பேணி வந்தால் அதுவே நமது ஆரோக்கியத்திற்கும் நமது குழந்தைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

காலுக்கு காலணிகள் பழக்கத்திற்கு வந்த பிறகு மனிதனுக்கும் பூமிக்கும் இடையே யான நேரடித் தொடர்பு நின்று விட்டது.

வெறுங்காலில் நடக்கும் போது நல்ல மண்ணில் இருக்கும் சிரட்டோனின் பாக்டீரியா ( Seratonin Bacterium ) என்னும் நுண்ணுயிர் மனிதனுக்கு நன்மை செய்கிறது. 

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் மண், மணல், புல், தரையில் நடப்பதால் உடலில் அன்றி ஆக்சிடன்ட்( Anti Oxidant ) ஐ அதிகரிக்கச்செய்கிறது. தூக்கத்தை ச்சிறப்பாக்கு கிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. மூளையின் மின் செயல் அதிகரிப்பதை எலக்ட்ரோன்ஸ் பேலோகிரம்(Electroence Phalograms) என்னும் சோதனை மூலம் அறியலாம். இரத்த சிகப்பு அணுக்களில் ஏற்படும் மாற்றம் இரத்தத்தின் திடத்தை குறைக்கிறது. அதிக திடமான ( High Viscosity ) இரத்தம் இதய நோய்க்கு காரணமாகிறது. பூமியின் நேரடித் தொடர்பு கிடைப்பதால் பூமியின் சக்தி உடலுக்கு கிடைக்கிறது. வெறும் காலால் நல்ல மண்ணில் நடந்து உயர்ந்த பலன்களை அனுபவிக்கலாம்.

உயர்ந்த மண் வகைகளை உடலில் பூசிக் கொள்ளும் போது மண் உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை உறிஞ்சிக்கொள்கிறது. உடலில் கடினமான தோலின் தன்மையை மிருதுவாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ச்செய்கிறது. இதனால் முடி, தசை, மூட்டுகள் நல்ல ஆரோக்கியம் பெறுகின்றன.   

மண் வளம்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                                ------------------------------------------------

Friday 2 October 2015

தண்ணீரும் உடல்நலமும்

                                         தண்ணீரும் உடல்நலமும் 

தண்ணீர் வாழ்க்கையின் அடிப்படை. மனித உடல் இயக்கத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய மானது. கொழுப்பை எரிக்கும் உடலின் இயற்கையான திறனை தண்ணீர் அதிகரிக்கிறது.

உடலால் நீரைத் தேக்கிவைக்க இயலாது, ஆகையால் உடலுக்கு அவ்வப்போது தண்ணீர் தேவைப்படுகிறது.

தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமெடுக்காவிட்டால் கூட போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். காலை, மதியம், இரவு என ஒவ்வொரு உணவின் இடைப்பட்ட நேரங்களில் தண்ணீர்  அருந்துவது நல்லது. அது பலவித நோய்களைத் தடுத்து  உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.

நமது உடல் 70% தண்ணீரால் ஆனது. ஜீரணம், இரத்த ஓட்டம், தோல், சிறுநீரகம், மலச்சிக்கலின்மை போன்ற இயக்கங்களுக்கு நீர் முக்கியமாக பயன்படுகிறது.

நமது உடல் தோல், மூச்சு, சிறுநீர், மலம், வாய் போன்ற வழியாக நீரை இழக்கிறது.இந்த இழப்பை அவ்வப்போது சரிக்கட்டுவது உடல் ஆரோக்கியத் திற்கு நல்லது. 

சிறுநீரகம் சீராக இயங்க நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. நீரானது சிறுநீரக நோய், கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. குறைந்த அளவு நீரால் சிறுநீரகத்தின் செயல்பாடும் குறைகிறது.

நீரானது மலச்சிக்கலை தடுக்கிறது. உடலில் போதுமான அளவு நீர் இருக்கும் போது குடலிலுள்ள கழிவுகள் நகர்வதற்கும் எளிதாக வெளியேறு வதற்கும் உதவுகிறது.

 தண்ணீர் தோலை ஈரமாக வைத்து உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் தண்ணீர் குறைவு ஏற்படுமானால் சிறுநீரக இயக்கம் குறைகிறது அல்லது நின்று விடுகிறது. உடலில் ஏற்படும் சிறிய நீர்க் குறைவு கூட உடலின் சக்தியினை வடித்து சோர்வாக்கி விடுகிறது.

திட உணவு மட்டு மல்ல, திரவ உணவும் உடலுக்கு மிக முக்கியம்.தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறவும், நோய் குணமடைய வும் செய்கிறது.  

உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல், குடல் வழியாக கழிவுகள் வெளியேறும் செயல் பாடுகளுக்கு தண்ணீர் அவசியமாகிறது.
காய்ச்சல்,வாந்தி,பேதி,வேர்வையின் போது அதிக அளவு நீர் உடலை விட்டு வெளியேறு கிறது. 

கடையில் விற்கப்படும் குளிர்பானம், பழரசம், போன்றவை களில் உப்பு, இனிப்பு, பாதுகாக்கும் இரசாயனம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். அவைகளில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை. அவை உயர்  இரத்த அழுத்தம், இரத்த சுகர், உடல் அதிக எடை போன்றவை களுக்கு காரணமா கிறது..

பழங்கள். காய்கள், சூப், கஞ்சி, குழம்பு போன்றவை களில் இருக்கும் தண்ணீர் உடலுக்கு நல்லது.

கர்ப்பமானவர்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும், அதிக உடல் உழைப்பு உள்ளவர்களும், சூடான சூழலில் பணபுரிபவர்களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அளவிற்கு அதிகமான தண்ணீர் உடலிலுள்ள சோடியத்தை (உப்பு) வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தால் ஒரு அளவான நீரைத்தான் வெளியேற்ற முடியும்.

பத்து வயது வரை ஒரு லிட்டரும்,இருபது வயது வரை இரண்டு லிட்டரும் அதற்கு மேற்பட்ட வயதினர் மூன்று லிட்டர் வரையும் தண்ணீர் அருந்தவேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றிற்கும், நமது குடிநீருக்கும், மழை பெய்து உணவு உற்பத்தி செழிப்ப டைவதற்கும் கடல் நீர் ஆதாரமாய் இருக்கிறது.

கடல் நீரில் பெட்ரோலியக் கழிவுகள், அசுத்தநீர், குப்பைகள், இரசாயனக் கழிவுகள் போன்றவை களை கொட்டுவதால்  கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. சில மீன் களில் மெர்குரி சேர்க்கிறது. சில மீன்கள் நோய்வாய்ப் படுகிறது. இந்த மீன் களை  உண்ணும் மனிதன் பலவித நோய்களுக்கு ஆளாகிறான்.    

தண்ணீர்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                          --------------------------------------------------



சூரியனும் உடல்நலமும்

                                        சூரியனும் உடல்நலமும் 

சூரிய ஒளி மாசுபடாத,கொழுப்பற்ற , இனிப்பற்ற ஒரு உணவு எனலாம். 

சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B ( UVB ) கதிர்கள் உடலின் தோலிலிருக்கும கொழுப்புடன் சேரும்போது வைட்டமின்  D உற்பத்தியா கிறது.

உணவிலுள்ள கால்சியம் சத்தை உறிஞ்ச உடலில் அதற்கேற்ப வைட்டமின் D சத்து இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தை விட , சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B கதிர்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தே அதிக மானதும், முதன்மை யானதும் ஆகும்.

உடலில் வைட்டமின் D யை தேவைக்கு அதிக மாக சூரியனிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் நிறுத்திக்கொள்ளும் திறன் இயற்கை யாகவே உடலுக்கு இருக்கிறது.

கண்ணாடிவழியாக வரும் சூரிய வெளிச்சத்திலிருந்து உடலால் வைட்டமின்  D யை தயாரித்துக்கொள்ள முடியாது.கண்ணாடியில் UVB கதிர்கள் ஊடுருவி வராது. சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது நல்ல உறக்கத்தையும் , உடல் பொலிவையும் தரும்.

கண்ணுக்கு கண்ணாடி அணியாமல் சூரிய ஒளியில் இருக்கும் போது  கண்ணுக்குள்ளேயும் புகுந்து நன்மை செய்கிறது.

சூரிய ஒளியில் நடமாடாதவர்களுக்கு வைட்டமின் D சத்திலும், கால்சிய சத்திலும் குறைவு ஏற்படலாம்.

மீன், முட்டை, பால்,  ஓட்ஸ், இனிப்பு கிழங்கு போன்ற உணவுகளிலும் வைட்டமின் D இருக்கிறது.

இயற்கையில் சீதோஷ்ணம் ஒரு சீரான சுழற்சியில் இருந்து வந்தது. இது உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிக சாதக மாக இருந்தது. காலப்போக்கில் காற்றை குளிர்ச்சிபடுத்தவும், சுத்தப்படுத்தவும் செய்து வந்த வனங்கள் அழிக்கப்பட்டன. மறுபுறம் பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்கள், மின்சாதனங்களி லிருந்து வெளியேறும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் பூமி வெப்ப மய மாதல் கட்டுப் படுத்தமுடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போவதாலும் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

பூமியில் இதுவரை பனிக்கட்டியாகவே இருந்த நிலங்கள் உருக ஆரம் பித்திருக்கிறது.

கடல்நீர் மட்டம் உயர்வு, புயல், கடல் நீர் நிலத்துள் புகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.

மழைக்காலம் என்பது ஒழுங்கற்றது ஆகிவிடும்.
வெப்பமான சூழ்நிலை பலவித ஒவ்வாமை நோய் கள்  ஏற்பட காரணமாகும்.
வெப்பமான நிலைமை கெடுதல் பாக்டீரியாக்கள் உற்பத்தியாக ஏதுவாகும்.
வெப்பமான சுற்றுப்புறம் எரிச்சலையும், வெறுப்பையும் தரும்.
வெப்பக்காற்றினால் நோய், மரணம் ஏற்படும்.
வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று என்பது சாதாரணமாகி விடும்.

சூரிய ஒளி  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                    ---------------------------------------------




















காற்றும் உடல்நலமும்

                                              காற்றும்   உடல்நலமும்

உயிர்கள் வாழ பிராணவாயு அவசியம். உயிர்கள் காற்றிலிருந்து பிராண வாயுவை எடுத்துக்கொள்கிறது. மூச்சு விடுதலில் இரண்டு வகை. ஒன்று  மேல்மூச்சு. இரண்டாவது ஆழமான மூச்சு.

பொதுவாக நாம் அனைவரும் மேல்மூச்சு விடுபவர்களாக இருக்கிறோம். ஆழமான மூச்சு விடுபவர்களாக இல்லை.

மேல் மூச்சு விடுவதால் நுரையீரலின் முழுத் திறனையும் நாம் பயன் படுத்திக்கொள்வதில்லை.

நாம் ஆழமான மூச்சுவிடும் போது நுரையீரலின் கீழ் உள்ள டயபரமானது அதிக பட்சமாய் விரிவடைகிறது. அப்போது  வயிறானது ஒரு பலூனைப் போன்று உள்ளே போவதும் வெளியே  வருவதுமாக இருக்கிறது.  இதனால் நுரையீரலின்    முழுத்திறனையும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நமது மன நிலை சுவாசத்தை பாதிக்கிறது. கோபம், பரிதவிப்பு, கவலை போன்ற மனநிலைமைகளில் நாம் இருக்கும் போது நமது சுவாசமானது மிகவும் குறைந்த பட்சமாகி விடுகிறது. உடலில் பிராணவாயு குறைவு ஏற்பட்டு உடல் சோர்வு, பசியின்மை, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளே இழுத்து  வெளியே விடும்போது நமது இதயத் துடிப்பு (Heart Beat), நாடியின் அளவு (Pulse Rate ) இரத்த ஓட்டம் முதலியன ஒரே சீராக  இயங்கு கின்றன. அப்போது உடல் ஆசுவாசம் பெறுகிறது. அதனால் மனமும் ஆசுவாசம் அடைகிறது. தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதால் நாடித்துடிப்பு  சீராகி மனம் ஆசுவாசம் அடைந்து, உயர் இரத்த அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவையும், சுவாசிக்கும் பிராணவாயுவையும் சேர்த்து செல்கள் உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றிக்கொள்கின்றன. உடலுக்கு பிராணவாயு குறைவு ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அல்லது உடலிலுள்ள பலவீனமான பாகங்களில் வலி ஏற்படுவதை  தவிர்க்க முடியாது.

நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் அதன் அளவிற்கேற்ப சக்தி பயன் படுத்தப் படுகிறது.மேல் மூச்சைவிட ஆழமான மூச்சுவிட அதற்கேற்ப சக்தி அதிகம் தேவைப்படுகிறது.ஆழமான மூச்சு அதிக கலோரியை பயன்படுத்து கிறது. அதனால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கப்படுகிறது.

மூச்சுப்பயிற்சி மனக்கொந்தளிப்பையும், மன அழுத்தத்தையும் குறைத்து மனதை சமநிலையில் வைக்கிறது.

காற்றில் 21% பிராணவாயும்,78% நைட்ரஜன் வாயும்,மீதி ஈரப்பதம் போன்ற பிற பொருட்களும் உள்ளன. காற்றிலிருந்து பிராணவாயுவை மட்டும் பிரித்து இரத்தத்துடன் சேர்க்கும் வேலையை நுரையீரல் செய்கிறது. இரத்தத்திலுள்ள கரிமல வாயு போன்ற அசுத்தங்களை பிரித்து வெளியேற்றும் வேலையையும் நுரையீரல் செய்கிறது.

வாகனப்புகையாலும், தொழிற்சாலை புகையாலும் காற்று மாசு படுகிறது. அந்த மாதிரி காற்றையும் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில்  நாம் இருக்கிறோம்.  மாசடைந்த காற்றினால்  தலைவலி, சுவாசக்கோளாறு மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன.

காற்றிலுள்ள தூசு, புகை, மணம், குளிர்ச்சி போன்றவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சுவாசப்பிரசசினை  யை தருகிறது.

கைகளை கழுகு வதும், மருத்துவம் கூறும் துணியினை மூக்கில் கட்டிக்கொள்வதும் பயன்தரும்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்வது காலப்போக்கில்  பழக்கமாகிவிடும்.மூச்சுப் பயிற்சி ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                 ---------------------------------------------

Tuesday 29 September 2015

நலமான வாழ்விற்கு அவரவர் பங்கு

        நலமான வாழ்விற்கு  அவரவர்  பங்கு 

சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதஇனம் வெட்ட வெளியில், மரநிழலில் வாழ்ந்து வந்தது. காய்,  கனி, கிழங்குகள் மட்டுமே உணவாக இருந்தது. உணவைத் தேடுவது தான்  அன்றாடம் உள்ள ஒரே பிரச்சினையாக இருந்தது. ஆனால், இன்றோ பொருள் தேடும் பிரச்சினை, உடல் நலப் பிரச்சினை, உறவுகளில் பிரச்சினை, சுற்றுப்புற சுகாதாரப் பிரச்சினை என பலவகையான பிரச்சினைகளால்  மனிதன் வாழ வேண்டி யுள்ளது. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அல்லது யாராக இருந்தாலும் தனது உடல் நலத்தை பேணி, பாதுகாத்து, நலமாய் இருப்பதில் கண்ணும்,  கருத்துமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆரோக்கியத்தை காக்கும் முயற்சியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியது அனைவரின் கடமையும், பொறுப்புமாகும்.

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் மனித இனம் மட்டுமே "சிந்தனையும் செய்கையும்" உடையதாய் இருக்கிறது. இந்த சிந்தனை செயல் இயல்பைக்கொண்டு மனிதன் தன அருகில் கிடைத்த பொருள்களில் மாற்றங்கள் செய்து தனது தேவைகளை எளிதாக அடைய வழிகண்டான். அதற்கு, வளர்ச்சி, முன்னேற்றம், நாகரீகம்  என்று பெயரிட்டுக்கொண்டான். இயற்கையிலுள்ள பொருட்களையும், நடப்புகளையும் பலதையும், பலவாறு ஆராய்ந்தான். அதனதன் தன்மைக்கேற்ப கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம்  என்று பல  பிரிவுகளாக்கிக் கொண்டான், தனது ஆராய்ச்சியை வளர்த்துக்கொண்டே போனதினால் உலகம் இன்று தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி கிடக்கிறது.

இந்த பூமியில் உயிரினங்கள் தோன்ற அதன் தட்ப, வெட்ப நிலையே காரணம். சாதக மான தட்ப வெட்ப நிலைக்கு மரங்களும், காடுகளுமே முக்கிய காரணம். பூமியின் நில பரப்பில் பெரும்பாலான இடங்கள் செடி, கொடி, மரங்களால் அடர்ந்திருந்த காரணத்தால் மழைக்கு குறைவே இல்லாமல் இருந்தது. பூமியில் பெரிய நதிகளும், ஆறுகளும் ஏற்பட்டன. உயிரினங்கள் தோன்றின. மனித இனமும் தோன்றியது. மனிதன் மர இலையை ஆடையாக உடுத்திக்கொண்டான். ஆயுதமாகவும், விறகாகவும், வண்டியாகவும், படகாகவும்,  வீடாகவும், பாலமாகவும் என மரங்களை பலவாறாக உபயோகித்துக்கொண்டான். மரங்களையும் காடுகளையும் அழித்து தனது தேவைகளையும், ஆடம்பரங்களையும் பெருக்கிகொண்டான். மலைக்காடுகளை  அழித்து  பணப்பயிர்களாக மாற்றிக்கொண்டான்.

மனிதன் காடுகளை வெட்ட, வெட்ட பூமியின் தட்ப, வெட்ப நிலை மாற ஆரம்பித்தது. மறுபக்கம் மனிதனின் ஆராய்ச்சி  யினால் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்தது. உயிரினங்களுக்கான சாதகமாய் இருந்த தட்ப, வெட்பம் மாறியது. உயினங்களுக்கு கெடுதல் செய்யும் கிருமிகள் உற்பத்தியாயின. கூடவே மருத்துவ விஞ்ஞானமும் வளர்ந்தது. பலவித கெடுதல் செய்யும் இரசாயனங்கள் பூமியிலும், கடலிலும், ஆகாயத்திலும் கொட்டப்பட்டன.கடந்த நூறாண்டு காலத்தில் நடத்தப்பட்ட இந்த செயல் களினால் இன்று கற்று, நீர், நிலம், வெப்பம், கதிர்வீச்சு அனைத்தும் மனிதனுக்கும், பிற உயிரனங்களுக்கும் கெடுதல் செய்வதாய் மாறி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் அதை குணப்படுத்தும் மருத்துவ மனைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

இது தான் இன்றைய சுற்றுப்புறம். இதிலிருந்து மனிதனும் பிற உயிரினங்களும் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

1.உடல் ஆரோக்கியம் :- ஒவ்வருவரும்  தனது  உடல்  இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை  உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும்,  நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .


2.மனஆரோக்கியம்:- தினசரி மாறி வரும் நமது சூழ்நிலைகளிலுள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டும், தனது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காக அனைத்தையும் அனுசரித்தும் வாழ்வதே மன ஆரோக்கியம்.

3..உணர்ச்சிகள் ஆரோக்கியம்:- நாம் உணர்ச்சிவயப்படும் போது வெளிபடுத்தும்  உணர்ச்சிகள் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர கெடுதல் செய்வதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே உணர்ச்சிகள் ஆரோக்கியம் .

4.சமூக ஆரோக்கியம்:- வீட்டிலுள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும், நண்பர்களிடமும் பணி இடத்திலும், மற்றும் நாம் உறவாடும் அனைவரிடமும் நாம் வைத்திருக்கும் உறவின் தரம்  சமூக ஆரோக்கியமாகும்.

5.சுற்றுப்புற ஆரோக்கியம் :-  கற்று, நீர், மண் மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் சுற்றுவட்டாரத்தை வளமாகவும், மகிழ்ச்சி தரகூடியாதகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது சுற்றுப்புற ஆரோக்கியமாகும் .

6.நிதி ஆரோக்கியம் :- பணம்  இல்லையானால் அமைதியும், மகிழ்ச்சியும்  வாழ்க்கையில் இருக்காது.சரியாக திட்ட மிடல், கடின உழைப்பு, சிக்கனம் சேமிப்பு, முதலீடு என தேவைக்கேற்ப பணத்தை பெருக்கிக் கொள்வதே
 நிதி ஆரோக்கியமாகும்

7.தொழில்  ஆரோக்கியம்:-    ஏதாவது ஒரு தொழிலில் நம்மை  ஈடுபடுதிக் கொள்கிறோம். வேலையில் நமக்குள்ள விருப்பம், நமது திறமை வேலையிடத் துள்ள நல்ல சூழ்நிலை, திருப்தியான வருமானம் மற்றும் வசதிகள் ஆகியன தொழில் ஆரோக்கியமாகும் .

8.ஆன்மீக ஆரோக்கியம்:-  பிற உயரினங்களின் உரிமைகளை மதித்தும் அவை மகிழ்ச்சியுடன் வாழ விருப்பம் கொண்டும் அவைகளுடன் இணக்கமாய் இருந்து இந்த ஆன்மீக நோக்கத்தை அறிந்து, ஆன்மீகப் பாதையில் வாழவேண்டும்.இயற்கையின் நியதிகளை உணர்ந்து அதற்கு பணிந்து வாழ்வதே  ஆன்மீக ஆரோக்கியமாகும்
                     
9.அறச்செயல் ஆரோக்கியம்:- மனிதன் மனம் போன போக்கில் போககூடியவன். ஆணவம், சுயநலம், பொறமை, சாமர்த்தியப்பேச்சு என்பன தன்னுள் இருப்பதை  அறியாதவன். அதன் விளைவு களில் சிக்கி வாழ்க்கையை களிப்பவன். எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற குணங்கள்  தான்  இந்த இயற்கையையும் தன்னையையும் சிறப்பாக வாழவைக்கும்.என்பதை அலட்ச்சிய படுத்தி வாழ்பவன். நீதி நெறியுடன் (ethics) நன்னடத்தையோடு(moral) நன்மதிப்புடன்(value)  உலகம் போற்றும்  நல்ல குணங்களை கொண்டிருப்பதே அறச்செயல் ஆரோக்கியமாகும்.

 சிறந்த உடல் நலம் பெற சரியான ஆரோக்கியத்திர்க்காக சிரமப்படவேண்டும் மேற்கூறிய பிரிவுகளில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை பாதிக்கலாம் இதனால் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்த அனைத்து பிரிவு களையும் புரிந்துகொண்டு சரியாக நடக்கும் ஒருவர் சிறந்த உடல் நலம் பெற்று சாதிப்பவராவார்.

எல்லா நேரமும் எல்லா பிரிவுகளையும்ஒருவரால் சிறப்பாககடை பிடிக்க முடியும்  என்பது உண்மையில் நடக்ககூடிய காரியமல்ல. எந்த ஒருவரும் முழு ஆரோக்கியமுடையவர் என்றோ, முழு ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ இருப்பதில்லை.

நல்ல ஆரோக்கியம் முதல் மரணம் வரை உள்ள இடைப்பட்ட ஒரு இடத்தில நம் ஆரோக்கியம் இருக்கிறது.

ஆரோக்கியத்துக்குரிய நடவடிக்கைகளை அதிக அளவு தேர்ந்தெடுத்து செயல் படுத்துவது நல்லது

நல்ல ஆரோக்கியத்தை நாடி அந்த வழிகளை கடைபிடிக்கும் குணாதிசயங்கள் நமக்கு இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஆரோக்கியம் என்பது சத்து, உடற்பயிற்சி, ஓய்வு, பிறவிக்குறைபாடுகள் சம்பந்தப்பட்டது.

நம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும், தாவரங்கள் மற்றும் தண்ணீரிலிருந்து கிடைகிறது.

சத்துகள் பலவகையானது. அவை, கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள் முதலியன. நார்ச்சத்தும் மிக முக்கியமானது.

கார்போஹைட்ரேட்டை தனித்த கார்போஹைட்ரேட் (Simple carbohydrate)   என்றும், கலவை கார்போஹைட்ரேட் (Complex carbohydrate) என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள்.

சீனி, வெள்ளை அரிசி, மைதா போன்ற இயந்திரங்களில் சுத்திகரிக்கப்பட்ட, அதாவது அதிலிருந்த பல சத்துக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டை தனித்த கார்போஹைட்ரேட் என்கிறார்கள். இவ்வகை உணவுகள் ஜீரணித்து இரத்தத்திற்கு வரும்போது அதிக அளவு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் கிடைக்காத போது இரத்தத்தில் சுகராக அதிகரிக்கிறது. தேவைக்கு அதிகமான இனிப்பு கொழுப்பாக மாறி உடலில் தேங்கி உடல் எடை அதிகமாக்குகிறது. இவ்வகை உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

தவிடுடன் கூடிய அரிசி, முழுக்கோதுமை, கரும்புச்சாறு, முழுபழங்கள், போன்றவை களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என்பவைகளுடன் கார்போஹைட்ரேட் சேர்ந்திருப்பதால் இதை  கலவை கார்போஹைட்ரேட் என்கிறார்கள்.இவ்வகை உணவுகள் ஜீரணித்து இரத்தத்திற்கு வரும்போது இன்சுலின் ஒரு சீராகவே தேவைப்படுகிறது. இரத்தத்தில் சுகர் சீராக இருக்கிறது. நார்ச்சத்து ஜீரணத்தை மெதுவாககுவதால் பசிகுறைந்து  உடல் எடை குறைகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு இன்சுலின் தேவைப்படுவது  போன்று புரோடீன், கொழுப்பு உணவுகளுக்கு இன்சுலின் தேவை இல்லை. கடலை,பருப்பு,பயறு,கொள்ளு,ஓட்ஸ் போன்றவை புரத சத்து நிறைந்தவை.

கொழுப்பும் உடலுக்கு தேவையான ஒரு சத்து ஆகும்.கொழுப்பிலும் பிரிவுகள் இருக்கிறது.கரையாத கொழுப்பு(Saturated fat), கரையும்  கொழுப்பு(Unsaturated fat),  மாறிய கொழுப்பு (Trans fat) என மூன்று வகைப்படும்.

பால் உட்பட அனைத்து மிருக வகை இறைச்சி களிலும் உறையும் கொழுப்பு இருக்கிறது. கோழியின் தோலிலும், முட்டை மஞ்சள் கருவிலும்  உறையும் கொழுப்பு இருக்கிறது. இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இவ்வகை உணவுகளை மிகக்குறைவாகவே உண்ணவேண்டும்.

மாமிச உணவுகளும், தின்பண்டங்களும் சூடான எண்ணையில் வறுத்து செய்யும் போது  மிகவும் ருசியாக இருக்கிறது. எண்ணெயை சூடாக்கும் போது அது மாறிய கொழுப்பாகி விடுகிறது. உணவகங்களில் அதே எண்ணையை திரும்ப,திரும்ப சூடாக்கி உணவு தயாரிக்கிறார்கள். ஆனால், நாம் உணவகங்களில் வறுத்த உணவுகளையே மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறோம். மாறிய கொழுப்பு இரத்தில் நல்ல கொழுப்பை குறைத்து (HDL), கெட்ட கொழுப்பை (LDL) அதிகப் படுத்தி விடுகிறது. கெட்ட கொழுப்பு இரத்த குழாய்களில் தேங்கி இரத்தப் போக்கை தடை செய்து நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

தாவரங்கள் மூலம் உடலுக்கு கிடைக்கும் கொழுப்பு கரையும்  கொழுப்பாகும். ஆழிவிதை, வால்நட், திராட்ஷைவிதை, பூசணி விதை, பாதாம்,  முந்தரி, எள்ளு, தேங்காய் போன்ற நட்ஸ், சீட்ஸ் மூலம் சுத்திகரிக்காமல் கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். இரத்தத்தில் LDL ஐ குறைத்து, HDL ஐ அதிகப் படுத்தும்.  கரையும் கொழுப்பு உணவுகளையும் சாப்பிட்டு, கரையாத  கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுவதால் மொத்த கொழுப்பும் அதிகமாகும்.

நமது தினசரி உணவில் முழுத்தானியம், கீரை, காய், கனி, நட்ஸ், பயறு, பருப்பு, கடலை  போன்றவை களுடன், மூன்று லிட்டர்  தண்ணீரும் குடித்து வந்தால், உடலுக்கு தேவையான எல்லா வைட்டமின்களும், தாதுக்களும், நார்ச்சத்தும் கிடைத்துவிடும்.


அடுத்து, உடற்பயிற்சி. மனிதனின் தொழில்நுட்பம் அவனை அசைய விடாமல்  உட்காரவைத்து அவனுடைய அனைத்து வேலைகளையும் செய்து தருகிறது. உட்கார்ந்தே இருப்பதால் தசைகளும், மூட்டு இணைப்புகளும் விறைப்பும்,  பலவீனமும் அடைந்து போகின்றன. உடல் எடை கூடுகிறது. பலவித ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட காரணமாகிறது. உடலானது நடக்கவும், ஓடவும் போன்ற தீவிர அசைவிற்காக படைக்கப் பட்டிருக்கிறது. அப்படி உடற்பயிற்சி செய்வதால், இரத்தத்தில், LDL குறைந்து, HDL அதிகமாகும்.  தினமும் அசதி ஏற்படும் படியான உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமானது. காலை நேரம்  இருபது நிமிடம் கை, கால் அசைவுதரும் யோகப் பயிற்சி செய்வது உத்தமம்.

உறக்கம், ஓய்வு, பொழுபோக்கு, ஆசுவாசம் போன்றவை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை தரவல்லது. தியானம், மூச்சு பயிற்சி போன்றவை மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை களுக்கு நிவாரணமாகும்.  

பூச்சிக்கொல்லி இரசாயனம், சோப்பு, குளோரின், இங்க், பெயின்ட், பிளாஸ்டிக், கருகிய உணவுகள், கெட்டுப்போன உணவுகள்,  மாத்திரை, நச்சுக் காற்று, நச்சுத்  தண்ணீர் போன்றவை நம் உடலுக்குள் எப்படியாவது போய்விடுகின்றன.  அவை நல்ல செல்களையும் நோய்ப் படுத்தி அழித்து விடுகின்றன. இது பலருக்கும் பலவிதமான நோய் ஏற்பட காரணமாகும். அவைகளை இராணுவப்படை போன்று எதிர்த்து அழிப்பது வைட்டமின் A E C ஆகும். இந்த வைட்டமின் களை நச்சு தன்மை எதிரி (Anti Oxidant)   என்கிறார்கள். இஞ்சி, மஞ்சள், பூண்டு, காய், கனி, கீரை, மூலிகை களில் இவ்வகை வைட்டமின்கள் இருக்கின்றன.

உண்பதும், உழைப்பதும், உறங்குவதும் தினமும் நடந்து விடுவதால மட்டும் நல்ல ஆரோக்கியம் என்று சொல்லிவிடமுடியாது. உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சுகர், கொலஸ்ட்ரால் போன்றவை எந்த அறிகுறியையும் தராமல் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டிருக்கும்  

குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர் ஆலோசனையின்படி மருத்துவ சோதனைகளை செய்து உடல் நலத்தை பராமரித்துக்கொள்ளவேண்டும்.

பூமியின் வெப்பம் குறையும் அளவிற்கு, காலியான இடம் என்பதே இல்லாமல், அனைத்து இடங்களிலும் ஓங்கி வளரும் மரங்களை வளர்த்து விடவேண்டியது மனிதனின் கடமை.

ஆண், பெண் இருபாலரும் சைக்கிளை தினமும் பயன் படுத்த வேண்டும். இது உடற்பயிற்சிக்கும், சுற்றுப்புற மேன்மைக்கும் நல்லது.

இரசாயனம், பிளாஸ்டிக் பயன் பாட்டை குறைத்து அதன் கழிவுகளை கண்டபடி எறிந்து மண்வளத்தை மாசு படுத்தாமல்  காக்கவேண்டும்.

போதை வஸ்துக்கள், மதுப்பழக்கம் போன்றவை நண்பர்கள் மூலமே ஆரம்பிக்கும். அடிமையாக்கும் இந்த பழக்கம் பல பேர் ஆரோக்கியத்தையும், குடும்பத்தையும் கெடுத்து வருகிறது. மதுவை பழகாதவர்கள் யோகம் செய்தவர்கள்.

தயார் உணவு, துரித உணவு, பாட்டில் பானம், இறக்குமதி உணவு அனைத்திலும்  ஏதாவது ஒரு வழியில் இரசாயனம்  கலந்து  விட  சந்தர்ப்பம் உள்ளது என்கிற நினைவுடன் அம்மாதிரி உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும்.


உண்ணக்கூடிய உணவுகளையும், உண்ணக்கூடாத உணவுகளையும் தெரிந்து, புதிய உணவுப்பழக்கத்திர்க்கு மாறுங்கள். சரியான உணவுப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதற்கு மன ஒத்துழைப்பு மிக அவசியம்.

சரியான் உணவு எது, தவறான உணவு எது என அறிந்து உண்பதே ஆரோக்கியம். நல்லதே ஆனாலும் அளவோடு உண்பதே ஆரோக்கியம். நல்ல உணவுகளையும் மாற்றி, மாற்றி உண்பதே ஆரோக்கியம். பொதுவாக, சரியான  உணவுகளை, சரிவிகித மாய், சரியான அளவுக்குள் உண்பதே ஆரோக்கியம்.

தினசரி உணவில் காய், கனி, கீரை, கடலை, பருப்பு, பயறு, முழுத்தானியம், சிறுதானியம், நட்ஸ், வித்து  போன்றவை அதிக அளவும், தனித்த கார்போஹைட்ரேட் மற்றும் கரையாத  கொழுப்பு உணவுகள் மிக குறைவாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உப்பு, சீனி, மாறிய கொழுப்பு உணவுகளை அதிகமாய் உண்பதால் குணப்படாத நோய்கள் ஏற்பட காரணமாகும்.

தவாறன தின்பண்டங்களை வீட்டில் அதிகம் இருப்பு வைத்திருப்பது அதை அதிகம் உண்ண வேண்டிவரும்.

தாகத்திற்கு என்றில்லாமல் தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இருபது வயதுகளில் உடல் முழுவளர்ச்சியினை அடைந்து விடுகிறது. அதனால், அதன்பிறகு உடலுக்கு சற்று குறைவான அளவு உணவே தேவைப்படுகிறது. உணவின் தன்மைக்கேற்ப உடல் உழைப்பு இல்லாத போது நாற்பது வயதுகளில் அதிக உடல் எடை, பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

முன்னால் இருக்கிறது என்றோ, தருகிறார்கள் என்றோ,  நிர்பந்த படுத்தினார்கள் என்றோ, வீணாகி விடும் என்றோ கெடுதலான உணவுகளை உண்ணக்கூடாது.

அசுத்தக் காற்றை சுவாசிப்பதினால் ஆரோக்கிய குறைவு ஏற்படுகிறது. மருத்துவம் கூறும் துணியினை மூக்கில் கட்டிக்கொள்வது பயன் தரும்.

போகிற இடங்களில் கிடைக்கும் நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பது மிகவும் நல்லது. உடலால் நீரை சேமித்து வைக்க முடியாது. உடலில் நீர் குறைவு ஏற்படாமல்  அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சூரிய ஒளியில் நடமாடாதவர்களுக்கு வைட்டமின் D  மற்றும் கால்சிய சத்தில் குறைவு ஏற்படலாம்.

மண் என்பது அழுக்கானதல்ல. இயக்க மற்றது மல்ல. மண்ணின் வளம் குறையும் போது மனிதனின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகி விடும்.

மாத்திரை சாப்பிடுகிறேன், உடற்பயிற்சி செய்கிறேன் என்று நினைத்து  உப்பு, இனிப்பு, கொழுப்பு உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.

தன்னுடைய ஆசைகளை  குறைத்து, அடுத்தவர் உரிமைகளை மதித்து, தவறுகளை எதிர்த்து,  நியாயத்துக்கு பணிந்து  வாழ்வது நல்ல மன நலத்தை தரும். நல்ல மன நலம் உடல்நலத்தை மேம்படுத்தும்.

கல்வி, செல்வம், உடல்நலம், குணம், மகிழ்ச்சி என அனைத்திலும் விதி, முயற்சி  என்கிற இரு பெரும் சக்திகள் அவரவருக்கென  வித்தியாசங்களில் அவரவர் வாழ்க்கையை நடத்துகிறது என்கிற உண்மையை புரிந்து, எளிமையாய் வாழ்வதில் விருப்பம் கொள்ளவேண்டும். எளிமையே இயற்கையையும், வாழ்கையையும்  வளமாக்கும்.

உடல் நலத்திற்கு என நடைபெறும் சொற்பொழிவுகள், கண்காட்சிகள் போன்ற வற்றில் கலந்து கொண்டு மாறிவரும் சூழலில் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.   



Friday 21 August 2015

உடல்நலம் வாழ்வின் ஆதாரம்


                              உடல்நலம் வாழ்வின் ஆதாரம் 
                        
                                              உடல் நலத்தை இழப்பது அனைத்தையும் இழப்பதாகும் 
                                              உடல்நலத்தை கெடுப்பது தவறான உணவுகள் 
                                              உடல்நலத்தை காப்பது தேவையான உடற்பயிற்சிகள் 
                                              உடல்நலத்தை சொல்வது சரியான மருத்துவர்கள் 

இளமையில் தினமும் தொடர்ந்து மாற்றி, மாற்றி உண்ணும் பல்வேறு விதமான  தவறான உணவுகள் முப்பது, நாற்பது வயதுகளில் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை போன்ற பல ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு மருத்துவர்களிடம் போனால் அவர்கள் தரும் சிகிச்சை, ஒன்று உணவுக்கட்டுப்பாடு, இரண்டு உடற்பயிற்சி, மூன்று மாத்திரைகள், நான்கு அந்த மாத்திரைகளினால் ஏற்பட போகும் பக்கவிளைவுகள். இதைத் தவிர வேறு மருத்துவம் கிடையாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு  நோய் வருவதற்கு முன்பே தாமாகவே முன்வந்து தவறான உணவுகளை ஒதுக்கி வைப்பது அவரவர் கடமையும், பொறுப்புமாகும்.

விருந்து உணவின் போது தவிர பிற நேரங்களில் தவறான உணவுகளை தவிர்த்து வந்தால் மருந்து, மாத்திரைகளையும் தவிர்க்கலாம் மற்றும் அவசரத்திற்கு உணவுக்கட்டுப்பாடு பார்க்காமல்   வாழ்க்கையையும்   ஓட்டி விடலாம். 

இளமையிலே மாத்திரை, மருந்து, மருத்துவமனை, கட்டாய உணவுக் கட்டுப்பாடு என்கிற சூழல் ஏற்பட்டு விட்டதற்கு தவறான உணவுகளே காரணம் என்று மருத்துவர் கூறுகிறார்  என்று கூறி மாத்திரையும் கையுமாக
இருக்கும் பலரை  கண்கூடாக பார்க்கிறோம்.

நோய் ஆள்பார்த்து, வயது பார்த்து, சமயம் பார்த்து சொல்லிக்கொண்டு வருவதில்லை.

இருபது வயதிற்கு மேலே, இளமையும் ஆரோக்கியமும்  இருக்கும்போதே தவறான உணவுகளை அடையாளம் கண்டு அவைகளை தவிர்க்கப் பழகுவது முதுமையை தள்ளிப்போடும். இதை யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்,
விழிப்புணர்வும், மன ஒத்துழைப்பும் தான் தேவை. 

தவறான உணவுகள்

*உடலின் தேவையை விட அதிகமான அளவு மாவுச்சத்து, கொழுப்பு உணவுகளை  உண்பதும் குறைவான உடற்பயிற்சியும்   உடல் எடை அதிகமாக முக்கிய காரணம். உடல் எடை அளவிற்குள் இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி.

*உப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
*கெட்ட கொழுப்பு உணவுகள் கொலஸ்ட்ராலாக மாறி இரத்த குழாயில் படிய ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த எல்லாவகை உணவுகளிலும் கெட்ட கொழுப்பு மிக அதிகமாக  இருக்கும்.
*சீனீ, எண்ணெய், தீட்டியஅரிசி போன்ற சுயதன்மை இழந்த தவறான உணவுகளை தொடர்ந்து உண்டு, அதற்கேற்ப உழைப்பு,    உடற்பயிற்சி இல்லாதபோது, தசைகள்  வளைவுத்தன்மையை இழந்து  நோய்க்கு ஆளாகிறது.
*வீணாகிவிடும், நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்றும், ருசிஎன்பதாலும்  நாம்      தவறான உணவுகளை  தேவைக்கு அதிகமாகவே தினமும் உண்ணுகிறோம்.
*சீனி இனிப்புகளுக்கு இன்சுலின் அதிகம் தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் இல்லை என்றல் இனிப்பு கொழுப்பாக மாறி உடல் எடை கூடிக்கொண்டே போகும். காபி, டீ க்கு தவிர ஏனைய சீனி இனிப்புகளை தவிர்த்து விடலாம்.  
*தோல் தவிடு நீக்கிய தானியஉணவுகளில் இனிப்பு மிக அதிகமாக இருக்கும்.
*பாட்டில் பானங்கள், பழரசங்களில் உப்பும் சீனியும் மிக அதிகமாக இருக்கும்.
*ஓட்டல்  உணவுகளில் உப்பும், கெட்ட கொழுப்பும் மிக மிக அதிகமாக  இருக்கும.
*மீன் தவிர பால் உட்பட அனைத்து வகை மாமிச உணவிலும் கெட்ட  கொழுப்பு உள்ளது.
*ஆரோக்கியத்திற்குத் தேவையான கொழுப்பில் 75 சதவிகித கொழுப்பை ஜீரணத்தின் போது உடலே உற்பத்தி செய்துகொள்கிறது. வெளி உணவில் 25% மட்டுமே தேவை.
*கெடாமலிருப்பதற்காகவும், ருசிக்காகவும், பிறகாரணங்களுக்காகவும் விற்பனைக்காக உணவுகளில் ஆரோக்கியத்துக்கு எதிரான சாயம்,  இரசாயனம் சேர்ப்பது சாதாரணமாகி விட்டது.
*பெயிண்ட்,இங்க,பாலிஷ்,பிளாஸ்டிக் மெழுகு போன்ற இரசாயனங்கள் நமது கவனக்குறைவால் உணவுடன் உடலுள் போகிறது.
*பூச்சி கொல்லி இரசாயனம்,  மெழுகு, கதிர்வீச்சு உடைய காய்,  கனிகளும்       விற்கப்படுகின்றன.
*பாதுகாக்கும் வழி முறையினால்  வெளிநாட்டு காய், கனிகள்  சுய  தன்மையை இழந்திருக்கும்.
*நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமிப்பில் வைத்திருப்பது சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தோன்றும்.
*தொடர்ந்து உட்கொள்ளும் மது மற்றும் போதை பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பழுதாகிக் கொண்டிருப்பது குடிப்பவருக்குத்தெரியாது.

உடல் நலம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். தவறான உணவுகளை தவிர்த்து சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணும் விழிப்புணர்வே உடல் நலத்தை கடைசி வரை காக்கும் வழி.
சரியான உணவுகள் 
*கசப்பு, துவர்ப்பு போன்ற  இனிப்பற்ற உணவுகளை உண்பது பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, ஓமம், தனியா, வெந்தயம், சீரகம், கருவாப்பட்டை முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*கீரை, காய், கனிகள், முழுத்தானியம், சிறுதானியம், முளைத்த தானியம், நட்ஸ், சீட்ஸ், மூலிகை போன்றவற்றில் உடல் நலத்துக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்கின்றன. உள்ளூரில் விளையும் பொருட்களே புதியதும்,  நல்லதும் ஆகும்.

* உடலுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
*மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 
இந்த விளக்கம் உண்மை என்று தோன்றினால் மனம் ஒத்துழைப்பு கொடுக்கும் வரை பலமுறை வாசியுங்கள். ஒரு தடவை வாசித்தலில் பலன் இருக்காது. பெருகி வரும் மருத்துவ மனைகளையும், சிகிச்சைகளையும், செலவுகளையும், கஷ்டங்களையும், சிரமப்படுபவர்களையும் நினைத்துப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
                                       உடல்நல விழிப்புணர்வு மையம்
                                                                 9962738467














Saturday 15 August 2015

நாலடி விளக்கம்



 
                                           நாலடி விளக்கம் 

கடவுள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது  
எங்கும் நிறைந்தது  (omni present )
எல்லாம் தெரிந்தது  (omni scent)
எல்லா சக்தியும் உடையது (omni potent)
எப்போதும் விழித்திருக்கும்(omni awakent)
கடவுள் 
கடவுள் என்பது முயற்சி செய்வது 
கடவுள் என்பது நியாயமாய் நடப்பது
கடவுள் என்பது பயனாய் இருப்பது
கடவுள் என்பது பிரார்த்தனையில் ஈடுபடுவது
கடவுளின் தன்மை-1
கடவுள் பாரபட்ச மற்றவர்
கடவுள் அருள் அனைவருக்கும் சொந்தம்
கடவுளால் ஆயிரம் வழிகளில் உதவ முடியும்
கடவுளால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.
கடவுளின் தன்மை-2 
புலன்களுக்கு அப்பால் இருக்கிறான்
சிந்தனைக்கு அருகில் வருகிறான்
இன்பத்தில் தேவையற்று இருக்கிறான்
துன்பத்தில் தாகமாய் வருகிறான்  
திருமூலரின் கடவுள் விளக்கம் 
மர  யானையை பார்த்தேன், அதில் மரம்தெரியவில்லை.
மரத்தை நினைத்தேன், அதில் யானை தெரியவில்லை.
உலகப்பொருட்களைப்  பார்த்தேன், அதில் பரம்பொருள்  தெரியவில்லை.
பரம்பொருளை நினைத்தேன், அதில்  உலகப்பொருட்கள் தெரியவில்லை.
பிரார்த்தனை-1 
பிரார்த்தனை வேண்டுதலுக்கு சக்தி யூட்டு கிறது.
பிரார்த்தனை கடவுளின் கவனத்தை ஈர்க்கிறது
பிரார்த்தனை புறச்சூழல்களை மாற்றுகிறது
பிரார்த்தனை மனதை அமைதிப்படுத்து கிறது.
பிரார்த்தனை -2
நல்லெண்ணங்களை எண்ணவையுங்கள்
நல்லதை சொல்லவையுங்கள்
நல்லதை தீர்மானிக்கும் தெளிவைத்தாருங்கள்
நல்லதை செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்துங்கள்.
பிரார்த்தனை-3
பொறாமை பழிக்குப்பழி எண்ணாமலும்
கெடுதல் துன்பம் நினையாமலும்
பசி, எதிர்பார்ப்பு இல்லாமலும்
உரிமை, நியதியை மதிக்க வையுங்கள்.
பிரார்த்தனை -4
சுயநலம் பின்விளைவுகளைக் கொண்டது
சுயநலத்தை தடுத்து நிறுத்துங்கள்
நியாயம் தக்க சமயத்தில் உதவக்கூடியது
நியாயத்திற்கு பணிய வையுங்கள்.
ஆன்மீகம்-1 
வழிபாடு விரதம் மட்டும் ஆன்மீகமல்ல
ஆடம்பரம் ஆச்சாரம் ஆன்மீகத்தின் உயர்வு அல்ல
ஒருவருக்கொருவர் உண்மை-நன்மையாய் வாழ்ந்து
உரிமை-நியாயங்களை மதித்து நடப்பதே ஆன்மீகம்
ஆன்மீகம்-2
கட்டுப்பாட்டை நினைத்திரு
நியாயமாய் நடந்திடு
தியானத்தில் நீடித்திரு
பிரார்த்தனையே நிம்மதி.
இயற்கையின் நியதி 
ஒன்றை இழக்க நேர்ந்தால் வேறொன்று வரும். ஒன்றுடன் சேர நேர்ந்தால் மற்றொன்று விலகும்
(The Law of compensation)
 நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்யத் தவறக் கூடாது..
(The Law of Reciprocation)
காரணம்-காரியம்-பின்விளைவை உணர்ந்தால் பரிகாரம் பயன்தரும்
(The Law of Remedy)
குணத்தில் வித்தியாசம் இயற்கை.குறிக்கோளில் ஒத்துழைப்பு வேண்டும்..
(The Law Of Harmony) 
மனிதனின் தேவைகள்
பயனாகவும், பாதுகாப்பாகவும் வாழ அறிவு தேவை
உழைக்கவும், உற்சாகமாகவும் வாழ ஆரோக்கியம் தேவை
சேமித்தும், உதவியும் சிறப்பாய் வாழ தொழில் தேவை
பரஸ்பரம் அக்கறை, அனுசரணை யுடன் வாழ உறவுகள் தேவை.
மனத்தின் தன்மை 
மனம் அதன் நம்பிக்கையின் படி செயல்படும்
மனம் நான், என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
மனம் வலி, அவமானம், தண்டனைக்கு பயப்படும்
மனம் பாராட்டுக்கு ஏங்கும். சதா பிறரை மதிப்பீடு செய்யும்.
மனத்தின் குணம்  
நியாயத்தைப் பற்றி கவலைப் படாமல் சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
நியதிகளின் வலிமையை மறந்து நானேமேலானவன் என்று நடக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் நடைமுறை தவறி சாமர்த்தியம் பேசும்
பின்விளைவுகளை அலட்சியப்படுத்தி விருப்பு-வெறுப்பாய் நடக்கும்.
மனநிலை-1 
இன்றைய சூழ்நிலை யாவும் பொய்
நல்ல குறிக்கோளுடன் இருப்பதே தாக்குதல் இல்லாத நிகழ்காலம்
இன்றைய உணர்ச்சிகள் யாவும் பொய்
நியாயமாய் நடப்பதே நெருக்கடி இல்லாத எதிர்காலம்
மனநிலை-2 
இன்றைய பசியும் ருசியும் பொய்
சரியான உணவும் பயிற்சியும் உடல்நலம் காக்கும்
இன்றைய சொகுசும் பாராட்டும் பொய்
சிக்கனமும் சேமிப்பும் ஆபத்துக்கு உதவும்
மனநிலை-3 
விருப்பு-வெறுப்பு-சமநிலையில் நியாயம் வேண்டும்
யூகம்-கேள்விப்படுவது-ஒப்பிடுவதை விசாரித்து நம்ப வேண்டும்
எளிமை-நேர்மை-மனிதாபிமானம் செயலாக வேண்டும்
ஆரோக்கியம்-செல்வம்-பரஸ்பரம் மரியாதை குறிக்கோளாக வேண்டும்
எண்ணங்கள்-1
எண்ணங்கள் சக்திவாய்ந்தது
எண்ணங்கள் பொருட்களை உண்டுபண்ணக்கூடியது
எண்ணங்கள் காத்திருந்து சந்தர்ப்பங்களைத் தரக்கூடியது
எண்ணங்கள் சூழலை மாற்றி காட்டும் ஆயுதம்
எண்ணங்கள்-2 
எல்லா சூழ்நிலையிலும் நல்லெண்ணங்களைத் தேடு
எல்லா கஷ்டத்திலும் நல்லெண்ணங்களை நினை
எல்லா இடங்களிலும் நல்லெண்ணங்களைப்  பேசு
எல்லா கடமைகளையும் நல்லெண்ணத்துடன் செய்.   
அறம்-1 
அறம் என்பது யாருக்கும் கெடுதல் செய்யாத  மனம்
அறம் அன்பையும், நியாயத்தையும் செய்து கட்டும்.
அறம் மனம் வழியே உடலைப் பேணும்
அறத்தை மீறினால் மன உளைச்சலே மிஞ்சும்
அறம் -2
தனது கடமைகளை மறக்காமலும்
பிறரது உரிமைகளை மறுக்காமலும்
நியாயத்தை கைவிடாமலும்
எவரையும் ஏமாற்றமலும் -ஆவன செய்வது
பொருள் 
கைத்தொழிலும், சிறு சேமிப்பும் இரண்டாவது சம்பளம் 
செலவாகட்டும், சேமிப்பாகட்டும்  பல துளி பெரும் செல்வம்
கொடுத்த கடனையும்,வாங்கிய கடனையும் நினைவூட்ட வேண்டும்  
எளிமையாய் வாழ்தல் இயற்கையின் கட்டளை.
வளம் 
வருமானத்துக்குள் வாழ்ந்து காட்டுதல் வளம்
காப்பீடு, சிறுசேமிப்பால்  பாதுகாப்பு பெறுவது வளம்
கடன்வாங்கவும், ஆடம்பரத்திற்கும்   பயப்படுவது  வளம்
பாராட்டு,விமர்சனங்களை கருதாமல் சிக்கனமாய் வாழ்தல் வளம்.
பணம் 
பணத்துக்கு ஆடம்பரம், கஞ்சத்தனம்,ஏமாற்று என பல சொற்கள்
பணம் இல்லையானால் துன்பம் நிச்சயம்
பணம் பெருகும் போது வேறொன்று வெளியேறும்
பணம் உள்ளவர்கள் முதலில் தன் கிளைகளை தாங்க வேண்டும் 
நுகர்வு 
மருத்துவ  ஆலோசனை  தவிர்த்து நுகர்வோர் உடல்நலம் இழப்பர்
சேமிப்பில்லாமல் செலவழித்து நுகர்வோர் மகிழ்ச்சியை இழப்பர்
நியாயம், நடைமுறை தவறி நுகர்வோர் உறவை இழப்பர்
நியதியை மதிக்காமல் பேராசை நுகர்வோர் அமைதியை  இழப்பர்.
அறிவு 
விருப்பு-வெறுப்பு களை பின் வைத்து நியாயமாய் நடப்பது அறிவு
சரி-தவறுகளை சிந்தித்து சரிப்படுத்திக்கொள்வது அறிவு
காரணம்-பின்விளைவுகளை ஆராய்ந்து காப்பாற்றிக்கொள்வது அறிவு
நல்லதை-மாயையை அறிந்து பிறருக்கு  பயனாய் இருப்பது அறிவு.
ஆரோக்கியம் 
உடல் நலத்தை  காப்பது இயற்கை உணவுகள்
உடல் இளமையை காப்பது உடற்பயிற்சிகள்
உடல் நலம் தொடர கட்டுப்பாடுகள் அவசியம்
உடல் நலத்தை சொல்வது மருத்துவ சோதனைகள்
உணவு
 சரியான உணவையும் , தவறான உணவையும் அறியும் பழக்கம் நல்லது        
சத்தேயானாலும் அளவிற்கு மிஞ்சினால் நோயாகிறது
ருசியே ஆனாலும் அளவோடு உண்பதே நலத்துக்கு நல்லது
உப்பு, இனிப்பு, கொழுப்பில் ருசியும் நோயும் சேர்ந்தே உள்ளது.
உடற்பயிற்சி 
தினசரி உடற்பயிற்சி செய்ய  சுய தீர்மானம் அவசியம்
நோயை தடுப்பதும், குணப்படுத்துவதும் உடற்பயிற்சியின் வேலை
மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் உடற்பயிற்சி தணிக்கிறது
உடல் வலிமையையும், வளைவுத்தன்மையும் தொடரச் செய்கிறது
தியானம் 
அசையாத பால் உறையும்
அசையாத விதை முளைக்கும்
அசையாத கரு வளரும்
அசையாத மனம் ஆன்மீகமாகும்.
குணம் -1
முதலில் தகுதி பெறு
பிறகு ஆசைப்படு
நானே மேலானவன் என்பது தகுதியல்ல
கடமையை உணர்ந்து நடப்பதே தகுதி.
குணம்-2
உண்மையாய் இரு
புத்திசாலித்தனம் காட்டிக்கொடுத்துவிடும்
சூழ்நிலையும், உணர்ச்சியும் ஆரவாரிக்கும்
நியாயமும், கட்டுப்பாடும் கரைசேர்க்கும்
பயிற்சி 
நினைப்பை நிறுத்த தியானம் பழகு
ஆசைகளை நிறுத்த விரதம் பழகு
வெறுப்புகளை நிறுத்த சமநிலை பழகு
குற்றங்களை நிறுத்த துறவு பழகு.
ஆசை 
நினைத்ததை அடைய வல்லது
நெருப்பிற்கு சமமானது
ஒருபோதும் திருப்தி படாதது
துன்பங்களுக்கு காரணமாவது.
பயம் 
நானே மேலானவன் எண்ணம் மாற நியதிகளுக்குப் பயப்படு
சுயநல எண்ணம் மாற நியாயத்துக்குப் பயப்படு
பொறாமை எண்ணம் மாற இறைவனுக்குப் பயப்படு 
ஏமாற்றும் எண்ணம் மாற பாவம் செய்யப் பயப்படு.
பாபம் 
விருப்பும் வெறுப்பும் பாபம் செய்யும்
பாபம் சாபத்துக்கு காரணமாகும்
சாபம் ஈடு செய்யாமல் விடாது
பாபம் செய்யாதிரு மனமே.
கட்டுப்பாடு இல்லாத போது 
பொறுமை இருக்காது
சூழ்நிலை புரியாது
அன்பு தங்காது
அருள் சேராது

நியாயம் 
நியாயம் இறைவனின் வெளிப்பாடு
நியாயமாய் நடப்பதே வலிமை
நியாயத்திற்கு பணிவதே உயர்வு
நியாயத்தை மறுப்பது ஆபத்து.
நியாயம் இல்லாத போது 
உண்மையை மறைக்கத்தோன்றும்
உரிமையை மறுக்கத்தோன்றும்
நடைமுறையை விலக்கத்தோன்றும்
சுயநலமாய் நடக்கத்தோன்றும் 
ஒற்றுமை 
பரஸ்பரம் மரியாதை ஒற்றுமையை காக்கும்
ஒற்றுமை சிதற சுயநலமே காரணம்
நியாயமாய் நடப்பதே ஒற்றுமைக்கு வழி
தவறை திருத்திக்கொள்வதே ஒற்றுமைக்கு நல்லது.
தத்துவம் 
குணமும், குற்றமும் மனிதனின் இயல்பு
செய்யத்  தக்கதும், செய்யத் தகாததும் மீறக்கூடாத நிபந்தனைகள்
பயிற்சியும், வைராக்கியமும் எதையும் சாதிக்க வைக்கும்
தன்னை சரிப்படுத்துவதும், பயனாக்குவதும் மனிதனின் கடமை.
கஷ்டம் 
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமையாது
பலருக்கும் பலவகையில் தன் நிலையும் சூழ்நிலையும் அமைகிறது
ஆசை, விதி வாழ்க்கையை ஆட்சிசெய்யுமானால் கஷ்டம் வலிக்கும்
தடைகளை தெரிந்து, திட்டமிட்ட விடாமுயற்சி கூலியை  பெற்றுத்தரும்.   
விதி 
விதி எனபது நியாயத்தின் தீர்ப்பு
விதிக்குப் பரிகாரம் வலியச்சென்று உதவுவது
விதிக்கு மருந்து விடாமுயற்சி
விதியை தணிக்க பிரார்த்தனை உதவும்.
பெரியோர்கள் கூறியது 
எதிர்பார்ப்பும்  பதிலுக்குபதிலும் நியாயமாய் இருக்க   
விருப்பும்  வெறுப்பும் சரியாய் இருக்க 
மனத்தால மனத்தைக்  கட்டுப்படுத்த 
அடுத்தவர் உரிமையை மதித்திடு மனமே.
சித்தர்கள் கூறியது-1
எதிர்பார்ப்பும் பதிலுக்குபதிலும் பூஜ்ஜியத்துக்கு வர  
விருப்பு  வெறுப்பு இல்லாத சமநிலை ஏற்பட 
மனத்தால்   மனத்தை அடக்க 
செத்தாரைப் போல் திரி மனமே.
சித்தர்கள் கூறியது-2
முயற்சி  நியாயம் மனதிருப்திக்கு உதவும்
உடல்நலம்  பரஸ்பரம் மரியாதை மனமகிழ்ச்சிக்கு உதவும்
வருமானம்  சேமிப்பு மனவலிமைக்கு உதவும்
செத்தாரைப்போல் திரிவது மனம் சக்தி பெற உதவும்
இயற்கை மாறுகிறது 
மண்இரசாயனங்களை கொட்டுவதற்கு அல்ல. உயிர்களுக்குஉணவு தயாரிக்க
காடுகள் வெட்டுவதற்காக அல்ல. மண்,நீர்,காற்றை வளப் படுத்த
கற்றும் நீரும் கெட்டது யாரால். நிலமும் வெப்பமும் கெடுவது யாரால்
இயற்கையின் ஒழுங்கு தடுமாறுவது யாரால்.
இயற்கை செழிக்க 
அறவழி வாழ்க்கை
இயல்பு மாறாத உணவு
இயற்கை மாசுபடாத தொழில்
இயற்கையை காக்கும் காட்டுப்பாடு.
சுயமுன்னேற்றம் (Self Development)
அறிய வேண்டியது   உலகள  வானது
நல்லதொரு புத்தகம்  அறிவுக் களஞ்சியம்
பொழுது  போக்கிற்கென்று படிக்காமல்
படித்ததில் பிடித்தது குணம் ஆக  வேண்டும்
திட்டம் (Planning)
அனுபவமுள்ளவர்  ஆலோசனை கேட்டு
வழியையும்,  மாற்று வழியையும் முடிவு செய்து
பணிகளை  வரிசைப்படுத்தி
வரிசைப்படி பணிகளை செய்வது நன்முயற்சி.
நேரம் 
நேரம் அனைவருக்கும்  ஒரே அளவானது
நேரம்  ஓடிக் கொண்டிருக்கிறது
நேரத்துடன் ஓடுபவர்கள் சாதிக்கிறார்கள்
நேரத்தை அட்டவணையாக்கி பணிகளை முடிக்கிறார்கள்.
முடிவெடுத்தல் (Decision)
பிரச்சினை  என்ன
என்ன  முடிவு வேண்டும்
முடிவை  எட்டும் பலவழிகள் யாது
அதில் சிறந்த வழி எது.
தூண்டுதல் (Motivation)
அன்பாய், அக்கறையாய்  உற்சாகப்படுத்துவதும்
சிறு முன்னேற்றங்களையும் ஊக்கப்படுத்துவதும்
நற்செயலை பாராட்டுவதும்
பரிசுப்பொருட்களால் மகிழ்விப்பதும் தூண்டுதலாகும்.
மன அழுத்தம் 
பதட்டமும், பரபரப்பும்  இதயத்தை அழுத்தும்
கோபமும், கொந்தளிப்பும்  சுரப்பிகளை அழுத்தும்
பயமும்,அதிர்ச்சியும் உடல் இயக்கத்தை தடை செய்யும் 
கவலையும், தவிப்பும் சுவாசத்தை பாதிக்கும்  .
உதவி
ஒற்றுமையின்றி  உதவிகள் இல்லை
உதவிகள்  இன்றி வெற்றிகள்  இல்லை
உயர்வு  என்பது  பலரது உதவிகள்
உதவியை மறந்து சாமர்த்தியம் பேசுவது எல்லோராலும் முடியாது.
உறவில் நெருக்கம் 
பரஸ்பரம்  மதித்து நடப்பதை கட்டாயமாய்  பராமரித்தல்
பரஸ்பரம்  தவகல் தொடர்பை பேணுதல்
பரஸ்பரம்  குறைகளை அனுசரித்துப் போதல் 
பரஸ்பரம் பயனாய் இருத்தல்.
உறவில் விரிசல்-1 
நானே மேலானவன் எண்ணம் குற்றம் செய்ய வைக்கும்
சுயநல எண்ணம் குணம் மாறி நடக்கும்
சாமர்த்தியம் பேசி தப்பிக்கும் உறவு நெடுநாள் தொடராது
யாரை நம்பியும் யாரும் இல்லை என்று ஒதுங்கி நிற்கும்
உறவில் விரிசல்-2
பேச்சும் செயலும் தொடர்ந்து பாதிப்பைத்தரும் போது
அலட்சியமும் ஆதிக்கமும் தொடர்ந்து வெளிப்படும் போது
தகவலும் ஒத்துழைப்பும் தொடர்ந்து குறையும் போது
பதிலுக்கு பதிலாய் அக்கறையும் அனுசரிப்பும் விரிசலாகி நிற்கும்.
தவறு-1
தவறுக்குகாரணம்ஆரோக்கியம்தேவைமனநிலைசூழ்நிலைசேர்வதாகும் தேவையை நிறைவேற்ற நியாயத்தை மீறும் மனநிலையும்
மனநிலைக்கேற்ப ஆரோக்கியமும்சூழ்நிலையும் சாதகமாய் இருக்கும் போது
பின்விளைவை புறந்தள்ளி மனம் தவறைச்செய்கிறது.    
தவறு-2
தனது தவறு தனக்குத் தெரியாது
தனது தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்  
அடுத்தவர் தவறு பெரிதாய் தெரியும்
அக்கறையுடையோர் சொல்லும் தவறை சரிப்படுத்த வேண்டும்.
தீர்ப்பு 
இருபக்கமும் விசாரிக்காமல் முடிவுக்கு வருவதும்
சுயநலத்தை மனதில் வைத்து நியாயம் பேசுவதும்
சாமர்த்தியம்  பேசி பாதிக்கப் பட்டவனை குற்றவாளி யாக்குவதும்
விருப்பு - வெறுப்பால் முடிவு சொல்வதும் தவறான தீர்ப்பு.
விசாரணை
என்ன நடந்தது, என்ன வேண்டும் என்பதை விசாரித்து
சரி எது,  தப்பு எது என்பதை ஆராய்ந்து
சுய நல  சாமர்த்தியங்களை ஒதுக்கி வைத்து
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது.
தகராறு (Conflict)
நடை முறை ஒழுங்கை மீறுவதும்
உரிமையை அலட்சியப்படுத்துவதும்
உண்மையை மறைத்து சாமர்த்தியம் பேசுவதும்
மனதறிந்து அவமதிப்பதும் தகராறுக்கு காரணமாகும்.
வாழ்க்கைப் பாதை-1 
வாழ்க்கை சூழ்நிலையை  மாற்றுவது விதியின் சக்தி
சூழ்நிலைதரும் கிளர்ச்சி தவறு செய்ய வைக்கிறது
பிரார்த்தனையை நம்பினால் சூழ்நிலை தணியும்
பிரார்த்தனை என்பது நல்லெண்ணமாய் இருப்பது.
வாழ்க்கைப் பாதை-2
உடல்நலம் காப்பது அவரவர் கட்டுப்பாடுகள் 
பிணி ஆள் பார்த்து, வயது பார்த்து வருவதில்லை
முதுமையில் பணமும் வேண்டும்  ஆதரவும் வேண்டும்
மரணத்தை நினைத்து எழுதி வைக்க வேண்டும்
வாழ்க்கைப் பாதை-3
இயற்கையாய் உண்பதே உடல்நலத்துக்கு வழி
பிரார்த்தனையாய் இருப்பதே நல்லெண்ணத்துக்கு வழி
நியாயமாய் நடப்பதே பின்விளைவுக்கு நல்லது
பயனாய் இருப்பதே பிறவியின் நோக்கம்

வாழ்க்கைப் பாதை-4
சூழ்நிலையில் கடமையை செய்
மனநிலையில் தியானத்தை நினை
உடல்நிலையில் ஆரோக்கியம் பேணு
உணர்ச்சி நிலையில் உஷாராய் இரு.
                                      ------------------------------------------------


Wednesday 5 August 2015

ஆணவம்-கர்மா-மாயை

                                        ஆணவம்-கர்மா-மாயை 


இந்த பிரபஞ்சமானது பரம்பொருள், மாற்றங்கள், உயிர்கள்  போன்றவற்றால் ஆனது.

பரம்பொருள் என்பது அறிவு மட்டுமே உடையது.
மாற்றங்கள் என்பது அறியாமை மட்டுமே உடையது.
உயிர்கள் என்பது அறிவும், அறியாமையும் உடையது.

பரம் பொருள் என்பது இறைவன். மாற்றங்கள் என்பது நியதி. உயிர் என்பது இறைவனும் நியதியும் கலந்த உணர்ச்சி.

உயிர்கள் பரம்பொருளை அடையவே விரும்புகின்றன. ஆனால்,
உயிர்கள் பரம்பொருளை அடையமுடியாமல் மாற்றங்களில் ஆசைப்பட்டு வாழ்ந்து மடிகின்றன. வெளியுலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் ஆணவம், கர்மா, மாயை என்கிற தடை களில் சிக்கி வாழ்ந்து மடிகிறான். உள் உலகில் சிந்தனையை செலுத்திய மனிதன் பரம்பொருளைக்கண்டு பேரானந்த வாழ்க்கை வாழ்வதாக வாழ்ந்து மடிகிறான். விளையாட்டு வீரர்கள் சொற்பம். பார்வையாளர்களோ பல லட்சம் என்பது போல், உள்  உலக சிந்தனையில் ஈடுபட்ட  சித்தர்கள் சொற்பம். வெளி உலக சிந்தனையில் இருந்து சித்தர்களை பாராட்டி, விமர்சனம் செய்பவர்கள் பல லட்சம்.

பரம்பொருளைக்காண தடையாய்  இருப்பது,    ஆணவம், கர்மா, மாயை.
ஆன்மாவானது உடலெடுத்ததும் ஆணவம், கர்மா,  மாயை இம்மூன்றும் அதை சூழ்ந்து கொள்கிறது.
 
ஆணவம்

நான் ஆன்மா அல்ல, உடல் என்பது ஆணவம். உடல் சார்ந்த  தேக பலம், பண பலம், ஆட்பலம், அதிகார பலம், திறமையின் பலம் போன்ற தனது எல்லா உடைமை களைப்பற்றியும் நினைத்துக்கொண்டு பிறரை அணுகுவதும், எதிர்பார்ப்பதும் ஆணவமாகும். தன்னை சுற்றி இருக்கும் இயற்கை சூழலுக்கும், ஜீவராசிகளுக்கும் எந்த வித இடையூறும் கொடுக்காமல் வாழ்வதே ஆணவமற்ற வாழ்க்கை.  நான், எனது, என்னுடைய என்று வரும்போது உணர்ச்சி வயப்பட்டு விடுகிறோம். பாசம்-பகைக்கு ஆளாகி விடுகிறோம். 

கர்மா

வினை என்பதன் மற்றொரு பெயர் கர்மா. ஆணவத்தால் ஏற்படுவது கர்மா. பரம்பொருளையும், ஆன்மாவையும் மறக்கவைத்து உடலால் அனுபவிக்கும் இன்பமே முக்கிய மானது என்று நடப்பதால் அதனால் கர்மா ஏற்படும் படியாகி விடுகிறது.  எண்ணம்.சொல்.செயல் ஆகிய மூன்றாலும் உயிர்களுக்கு நிகழ்கின்ற வினைகளே இன்ப, துன்பங்களுக்கும்  காரணமாகிறது. இன்ப-துன்பங்களை அனுபவிக்கும் காலத்தில் புது வினைகள் ஏற்படுகின்றன. காரணம்-காரியம்-பின்விளைவு  என்னும் சுழற்சியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்றோ, நாளையோ அதற்குரிய பலன் தேடிவரும். அல்லது அதற்குரிய விலையை கொடுத்தே ஆகவேண்டும். மனிதன் விருப்பு வெறுப்பினால் செயல்படக்கூடியவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருக்கிறது. பின்விளைவும் இருக்கிறது. ஆணவத்தின்  விளைவே கர்மா. ஆசை, பொறாமை, நியாயம், கடமை போன்ற செயல்களுக்கேற்ற பின்விளைவே கர்மா. விருப்பம் போல் நடக்கலாம் அது அடுத்தவரை பாதிக்ககூடாது. வெறுப்பைக்காட்டிக் கொள்ளலாம், அதில் நியாயம் இருக்கவேண்டும். தவறை உணர்ந்து குற்றஉணர்வு ஏற்படும்போது வருத்தம், பரிகாரம், மன்னிப்பு போன்ற வழிகள் தெரியவரும். மனித சட்டமாகட்டும், இயற்கையின் சட்டமாகட்டும் தெரியாது என்று மீறுவதால் மன்னிப்பு கிடைப்பதில்லை. தவறை ஒப்புக்கொண்டு வருந்துவதால் மன்னிப்புக் கிடைக்கலாம். 

மாயை

இன்பம் முக்கியமானது, நிலையானது என்கிற எண்ணமே மாயை.  ஆசை, உடைமைகள், உயர்வு, தாழ்வு, உணர்ச்சிகள், சூழ்நிலைகள், இளமை, வாழ்க்கை என எதுவுமே நிலையானது அல்ல. எல்லாம் நேரம் வந்தவுடன் சொல்லாமல், கொள்ளாமல் மாறிவிடும். ஆனால், இவைகளை உயிர்கள் நிலையானது, உண்மையானது என்று நம்பி வாழ்கின்றன. நிலையில்லாததை நிலையானது என்று நினைப்பது மாயை. இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது மாயை. உள்ளதை மறைப்பது மாயை. இல்லாததை தோற்றுவிப்பது மாயை. இதனால், மனத்தின் ஆசைக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கு எல்லையில்லை.

பாம்பு என்று நினைக்கிறவரை வரை பயம் ( நிஜம்). கயறு என்று தெரிந்ததும் அது பொய். ஞானம் என்பது உள்ளதை உள்ளபடி அறிவது. ஞானிகள் வாழ்க்கையை எல்லோராலும் வாழமுடியாது. ஞானிகளின் உபதேசங்கள் நம்மை எச்சரிக்கை செய்யும். நமக்கு வழிகாட்டும்.

பயன் கருதாமல் வினை செய்யும் போது பழைய மற்றும் புதிய வினைகள் அனைத்தும் அழிந்து போகின்றன என்று திருமூலர் சுவாமிகள் கூறுகிறார்.

ஆணவம்  என்பதை ஆங்கிலத்தில் EGO   எனலாம். அதை நானே மேலானவன் (அகந்தை) என்று அர்த்தம் கொள்ளலாம். ஆணவ  எண்ணம் மனதிலிருந்து பல பல வார்த்தைகளாக வெளிப்பட்டு மனிதர்களுக்குள் பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மிகச்சிறு பிரச்சினையை ஆணவம் குடும்பத்தை இரண்டாக்கி விடுகிறது.

கர்மா என்பது செயல். செயல்களில் பலவகையுண்டு. அதில் ஆதிக்கம் அல்லது DOMINATION என்று  ஒரு செயல் பிறரை துன்புறுத்தும் செயலாகும். பிற உயிர்களின் உரிமையை மதிக்காமல் அவற்றை ஆதிக்கம், பலவந்தம் என்னும் செயலால் நம் விருப்பத்தை திணிக்கும் போது அங்கெ பாவம் நிகழ்கிறது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், அதிகாரி-உதவியாளர், வலியவர்- எளியவர் என்னும் உறவுகளுள் நியாயமில்லாத பிரச்சினைகள் ஆதிக்க மனோபாவத்தால் ஏற்படுவதை காண்கிறோம்.

மாயை என்பது கவர்ச்சி, உந்துதல், ஈர்ப்பு, சுகம், சொகுசு, போதை,திருப்திதராத போன்ற வற்றைத்தரும் ஆசை DESIRE, LUST எனலாம்  இந்த உலகிலுள்ள அனைத்தும் பரிணாமம் என்னும் செயலால் மற்றம் அடையக்கூடியது. ஆனால் மனிதமனம் அவைகளை உண்மையென்று நம்பி சிக்கி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறது.

ஆணவம், கர்மா, மாயை என்பவற்றை, நானே மேலானவன், ஆதிக்கம், ஆசை போன்ற எண்ணங்கள் என நினைவில் கொள்ளலாம்.

நானேமேலானவன்  எண்ணம் நீக்கும்   பரஸ்பரம் மரியாதை   பழகு.
ஆசைகளை  குறைக்கும்      விரதங்கள்     பழகு.
எண்ணுவதை  நிறுத்தும்    தியானம்    பழகு.
சுயநலத்தை  அகற்றும்   சமஉரிமை   பழகு.
பொறாமையை  நீக்கும்   பிரார்த்தனை   பழகு.
லாபத்திற்காக ஏமாற்றாத   நேர்மை   பழகு.
இயற்கையை  விரும்பும்   எளிமை   பழகு.
வழிபாட்டிற்கும்  மேலான   கடமை   பழகு.
பாதித்தவனை  மதிக்கும்     நியாயம்    பழகு.
தன்  குற்றத்தை  உணரும்  சுயவிசாரணை   பழகு.

                       ---------------------------------------------



Tuesday 4 August 2015

ஆன்ம தரிசனம்

                                       ஆன்ம தரிசனம் 

உலகில்  பலவித குணங்களுடைய,  உயர்வு, தாழ்வு  உடைய மனிதர்கள் வாழ்ந்து மடிவதை அறிவோம். இதில் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு பிரிவு லொளகீக வாழ்க்கை வாழும் மனிதனுக்கு   துறவற வாழ்க்கை வாழ்ந்த மகான்கள் தரும் பாடம்.

உயிரினங்களில் மிக உயர்ந்தது, சிறந்தது என்பது  மனித இனமாகும். பரம்பொருள் அல்லது இறைவன் கூட அனுபவம் பெறவேண்டுமானால் மனிதப்  பிறவி எடுக்க வேண்டும். மனிதனால் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.

இறைவன் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தருக்கும் உணர்ச்சியுள்ள, கண்ணுக்கு தெரியாத சர்வசக்தி.

 தன்னைப் பற்றி சிந்தித்த வண்ணம் செயல் பட்டவர்கள் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்கள். உலகக் காட்சியில் அவர்களுக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. தாங்கள் மேற்கொண்ட வைராக்கியத்தால்  பிறரால் நம்ப முடியாத, காணமுடியாத   உண்மைகளை கண்டார்கள். அதில் ஒன்று தான் ஒவ்வொரு உயிரும் ஆன்மா என்னும் தெய்வத்துளியினால் ஆனது என்பது.

 உலகக் காட்சிகளை உண்மை என்று நம்பி அதன் மீது பற்று கொண்டவர் களுக்கு தன்னுள் ஆன்மா இருப்பது புரியாது. தன்னுள் ஆன்மா இருப்பதை புரிந்தவர்களுக்கு வெளிக் காட்சிகளால் எந்த பயனும் இல்லை. அவர்கள் பித்தர்களைப்போல் இருப்பார்கள். அவர்கள் அதிசய சக்திகளை கொண்டிருப் பார்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. அவர்களால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

விஞ்ஞான-தொழில் நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும், கடலையும், நீரையும், நிலத்தையும்  மாசுபடுத்தினோம்.  மனிதனின் சுயநலனுக்காக காடுகளை அழித்தோம், அழித்துகொண்டிருக்கிறோம் அதனால் இயற்கையின் பருவநிலையை தடுமாற செய்திருக்கிறோம். இது மனிதனின் லொளகீக வாழ்க்கையின் பின்விளைவு.

விஞ்ஞான-தொழில் நுட்ப மயத்தை ஆதரித்தோம்.

துறவற வழ்க்கை வாழ்ந்த மனிதன் சொன்னதை புறந்தள்ளினோம்.

மனிதனின் உடல். அதில் இரண்டு முக்கிய உறுப்புகள். ஒன்று  இதயம், இரண்டு மூளை.

முதலில் இதயம். இதயத்தின் துடிப்பு சுவாசத்தின் ரிதத்தை ஒட்டி இருக்கிறது. சுவாசம் என்பது  உள்மூச்சு, வெளிமூச்சு என்னும் இயக்கத்தால் ஆனது. இதுவே உயிரின் இயக்கம். உயிர் பிரிந்து விட்டால் மூச்சு நின்று விடும். மூச்சு  நின்று விட்டால்  இதயம் நின்றுவிடும். இதயம் நின்றுவிட்டால் மனிதன் மரணம்.

இந்த இதய இயக்கத்தில் இருப்பதுதான் ஆன்மா என்னும் தெய்வத்துளி. இது உடல் என்பதன் எதிர்பதம். உடல் அழியும், ஆனால் ஆன்மா  அழியாது. உடல் கண்ணுக்குத் தெரியும் ஆனால், ஆன்மா கண்ணுக்குத் தெரியாது.

அடுத்தது மூளை. மூளையானது  மனத்திடம் அனைத்தையும் அற்பணிக்கக் கூடியது.  மனமானது  மூளைக்கு உத்தரவிடக்கூடியது. ஆனால்,  மனம் வைராக்கியத் திற்கு அடிமையாகக்கூடியது. வைராக்கியம் எதையும் சாதிக்க கூடியது. வைராக்கியம் ஆன்மா வையும்   தரிசிக்க வைத்து சாதிக்கக் கூடியது.  இதய இயக்கத்தில் இருக்கும் ஆன்மாவை மூளை வழியான வைராக்கியம் மூலம்  மட்டுமே தரிசிக்க முடியும். மூளை உடலின் ஒரு பாகம். மனம்  எண்ணங்களால் ஆனது. ஐம்புலன்களும் எண்ணங்களை உற்பத்திசெய்யும் மற்றும்  எண்ணங்களை செயல்படுத்தும் கருவிகள். எண்ணங்களை நிறுத்தினால் அதன் பெயர் தியானம். ஆசைகளை நிறுத்தினால் அது கட்டுப்பாடு.

ஐம்புலன்களையும், எண்ணங்களையும்,ஆசைகளையும் நிறுத்துவது விரதங்கள், அதை பயிற்சி என்றும் சொல்லலாம். வெளிஉலக காட்சிகளை விரும்பாதவர்கள் இப்பயிற்சிகளை எளிதாக செய்தார்கள்.ஆன்மா இதய இயக்கத்தில் இருக்கும் தெய்வத்துளி. வைராக்கியம்   என்பதும், ஆன்மா என்பதும் கண்ணுக்குத்தெரியாத சக்தி. வெளியுலகை துறந்த வைராக்கிய வான்களுக்கே ஆன்ம தரிசனம் சாத்தியமாயிற்று.

துறவு நெறி அதாவது, ஆன்மாவைத் தரிசிக்கும்  வாழ்க்கை முறையால் இயற்கை நாசமடையவில்லை.

நுகர்வு  நெறி அதாவது, விஞ்ஞான - தொழில்நுட்பத்தை அனுபவிக்கும்  வாழ்க்கை முறையால் தான் இயற்கை மிக வேகமாக மாசடைகிறது.

துறவற வாழ்க்கை எல்லோராலும் வாழமுடியாது. சுகபோக வாழ்க்கை ஊதாரித்தன வாழ்க்கையாகும். இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையே சிறப்பானது.

இன்றைய சூழலில்,

எளிமையான உடை, எளிமையான உணவு, எளிமையான உறைவிடம். எளிமையே நோக்கம்.

கடமைகளை தட்டிக்களிக்காமல் இயன்றவரை முழுமையாக செய்துவிடல். முடியாதபோது முடியவில்லை என்பதை  சொல்லிவிடுதல்.

எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இக்கட்டான நிலையிலுள்ள அப்பாவிக்கும், தன்னால் இயன்றதை  மனிதநேயத்துடன் செய்வது.

எங்கும் நியாயம், எதிலும் நியாயம், எப்போதும் நியாயம், நியாயமே தெய்வம் என  நியாயமாய் நடப்பதை வாழ்வின் லட்சியமாய் கொள்ளுதல்.

தேவைகளை படிப்படியாக   குறைத்துக் கொண்டே போகுதல். தனக்குள்ள வேலைகளை தானே செய்து கொள்ளுதல்.

எண்ணங்களை நிறுத்திய தியானம். ஆசைகளை நிறுத்திய விரதம்
போன்ற  பயிற்சிகளை செய்தல்.

                                      ----------------------------------------------------