Friday 21 August 2015

உடல்நலம் வாழ்வின் ஆதாரம்


                              உடல்நலம் வாழ்வின் ஆதாரம் 
                        
                                              உடல் நலத்தை இழப்பது அனைத்தையும் இழப்பதாகும் 
                                              உடல்நலத்தை கெடுப்பது தவறான உணவுகள் 
                                              உடல்நலத்தை காப்பது தேவையான உடற்பயிற்சிகள் 
                                              உடல்நலத்தை சொல்வது சரியான மருத்துவர்கள் 

இளமையில் தினமும் தொடர்ந்து மாற்றி, மாற்றி உண்ணும் பல்வேறு விதமான  தவறான உணவுகள் முப்பது, நாற்பது வயதுகளில் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை போன்ற பல ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு மருத்துவர்களிடம் போனால் அவர்கள் தரும் சிகிச்சை, ஒன்று உணவுக்கட்டுப்பாடு, இரண்டு உடற்பயிற்சி, மூன்று மாத்திரைகள், நான்கு அந்த மாத்திரைகளினால் ஏற்பட போகும் பக்கவிளைவுகள். இதைத் தவிர வேறு மருத்துவம் கிடையாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு  நோய் வருவதற்கு முன்பே தாமாகவே முன்வந்து தவறான உணவுகளை ஒதுக்கி வைப்பது அவரவர் கடமையும், பொறுப்புமாகும்.

விருந்து உணவின் போது தவிர பிற நேரங்களில் தவறான உணவுகளை தவிர்த்து வந்தால் மருந்து, மாத்திரைகளையும் தவிர்க்கலாம் மற்றும் அவசரத்திற்கு உணவுக்கட்டுப்பாடு பார்க்காமல்   வாழ்க்கையையும்   ஓட்டி விடலாம். 

இளமையிலே மாத்திரை, மருந்து, மருத்துவமனை, கட்டாய உணவுக் கட்டுப்பாடு என்கிற சூழல் ஏற்பட்டு விட்டதற்கு தவறான உணவுகளே காரணம் என்று மருத்துவர் கூறுகிறார்  என்று கூறி மாத்திரையும் கையுமாக
இருக்கும் பலரை  கண்கூடாக பார்க்கிறோம்.

நோய் ஆள்பார்த்து, வயது பார்த்து, சமயம் பார்த்து சொல்லிக்கொண்டு வருவதில்லை.

இருபது வயதிற்கு மேலே, இளமையும் ஆரோக்கியமும்  இருக்கும்போதே தவறான உணவுகளை அடையாளம் கண்டு அவைகளை தவிர்க்கப் பழகுவது முதுமையை தள்ளிப்போடும். இதை யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்,
விழிப்புணர்வும், மன ஒத்துழைப்பும் தான் தேவை. 

தவறான உணவுகள்

*உடலின் தேவையை விட அதிகமான அளவு மாவுச்சத்து, கொழுப்பு உணவுகளை  உண்பதும் குறைவான உடற்பயிற்சியும்   உடல் எடை அதிகமாக முக்கிய காரணம். உடல் எடை அளவிற்குள் இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி.

*உப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
*கெட்ட கொழுப்பு உணவுகள் கொலஸ்ட்ராலாக மாறி இரத்த குழாயில் படிய ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த எல்லாவகை உணவுகளிலும் கெட்ட கொழுப்பு மிக அதிகமாக  இருக்கும்.
*சீனீ, எண்ணெய், தீட்டியஅரிசி போன்ற சுயதன்மை இழந்த தவறான உணவுகளை தொடர்ந்து உண்டு, அதற்கேற்ப உழைப்பு,    உடற்பயிற்சி இல்லாதபோது, தசைகள்  வளைவுத்தன்மையை இழந்து  நோய்க்கு ஆளாகிறது.
*வீணாகிவிடும், நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்றும், ருசிஎன்பதாலும்  நாம்      தவறான உணவுகளை  தேவைக்கு அதிகமாகவே தினமும் உண்ணுகிறோம்.
*சீனி இனிப்புகளுக்கு இன்சுலின் அதிகம் தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் இல்லை என்றல் இனிப்பு கொழுப்பாக மாறி உடல் எடை கூடிக்கொண்டே போகும். காபி, டீ க்கு தவிர ஏனைய சீனி இனிப்புகளை தவிர்த்து விடலாம்.  
*தோல் தவிடு நீக்கிய தானியஉணவுகளில் இனிப்பு மிக அதிகமாக இருக்கும்.
*பாட்டில் பானங்கள், பழரசங்களில் உப்பும் சீனியும் மிக அதிகமாக இருக்கும்.
*ஓட்டல்  உணவுகளில் உப்பும், கெட்ட கொழுப்பும் மிக மிக அதிகமாக  இருக்கும.
*மீன் தவிர பால் உட்பட அனைத்து வகை மாமிச உணவிலும் கெட்ட  கொழுப்பு உள்ளது.
*ஆரோக்கியத்திற்குத் தேவையான கொழுப்பில் 75 சதவிகித கொழுப்பை ஜீரணத்தின் போது உடலே உற்பத்தி செய்துகொள்கிறது. வெளி உணவில் 25% மட்டுமே தேவை.
*கெடாமலிருப்பதற்காகவும், ருசிக்காகவும், பிறகாரணங்களுக்காகவும் விற்பனைக்காக உணவுகளில் ஆரோக்கியத்துக்கு எதிரான சாயம்,  இரசாயனம் சேர்ப்பது சாதாரணமாகி விட்டது.
*பெயிண்ட்,இங்க,பாலிஷ்,பிளாஸ்டிக் மெழுகு போன்ற இரசாயனங்கள் நமது கவனக்குறைவால் உணவுடன் உடலுள் போகிறது.
*பூச்சி கொல்லி இரசாயனம்,  மெழுகு, கதிர்வீச்சு உடைய காய்,  கனிகளும்       விற்கப்படுகின்றன.
*பாதுகாக்கும் வழி முறையினால்  வெளிநாட்டு காய், கனிகள்  சுய  தன்மையை இழந்திருக்கும்.
*நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமிப்பில் வைத்திருப்பது சாப்பிட்டுக் கொண்டிருக்கத் தோன்றும்.
*தொடர்ந்து உட்கொள்ளும் மது மற்றும் போதை பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பழுதாகிக் கொண்டிருப்பது குடிப்பவருக்குத்தெரியாது.

உடல் நலம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். தவறான உணவுகளை தவிர்த்து சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணும் விழிப்புணர்வே உடல் நலத்தை கடைசி வரை காக்கும் வழி.
சரியான உணவுகள் 
*கசப்பு, துவர்ப்பு போன்ற  இனிப்பற்ற உணவுகளை உண்பது பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, ஓமம், தனியா, வெந்தயம், சீரகம், கருவாப்பட்டை முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*கீரை, காய், கனிகள், முழுத்தானியம், சிறுதானியம், முளைத்த தானியம், நட்ஸ், சீட்ஸ், மூலிகை போன்றவற்றில் உடல் நலத்துக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்கின்றன. உள்ளூரில் விளையும் பொருட்களே புதியதும்,  நல்லதும் ஆகும்.

* உடலுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
*மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 
இந்த விளக்கம் உண்மை என்று தோன்றினால் மனம் ஒத்துழைப்பு கொடுக்கும் வரை பலமுறை வாசியுங்கள். ஒரு தடவை வாசித்தலில் பலன் இருக்காது. பெருகி வரும் மருத்துவ மனைகளையும், சிகிச்சைகளையும், செலவுகளையும், கஷ்டங்களையும், சிரமப்படுபவர்களையும் நினைத்துப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
                                       உடல்நல விழிப்புணர்வு மையம்
                                                                 9962738467














No comments:

Post a Comment