உடல் இயங்கும் விதம்
மனித உடலைப் பிரித்து போட்டால் அதை ஏழு பெரும் பகுதிகளாக பிரிக்கலாம் என்கிறார்கள்.
A.உடலின் ஆதாரம்.
B, உடலின் உட்பகுதி.
C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும்.
D. சுரப்பிகளின் வகை.
E. ஜீரணமும் கழிவும்
F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள்.
G. வெளிப்பாகங்கள்.
இதில் ஒரு சில பாகங்களைப்பற்றிய சிறு விளக்கங்கள் வருமாறு.
A. உடலின் ஆதாரம் :-
1. CELL:- உயிருள்ள அனைத்து ஜீவன்களும் செல் களால் ஆனது. மனிதன் பல ஆயிரங்கோடி செல் களால் ஆன ஜீவன். செல்கள் சத்துக்களை சக்தியாக மாற்றுகிறது. தனக்குத்தானே வழிகாட்டி நடந்து கொள்கிறது.தேவைக்கேற்ப மேலும் உற்பத்தி செய்துகொள்கிறது. பல செல்கள் சேர்ந்து ஒரு திசு வாக வும் , பல திசுக்கள் சேர்ந்து ஒரு உறுப்பாகவும், பல உறுப்புக்கள் சேர்ந்து ஒரு முறையான இயக்கத்தை செய்யவும், பல இயக்கங்கள் சேர்ந்து ஒரு உடலாக செயல் படவும் செய்கிறது.
2.DNA :- Deoxyribonucleic Acid என்கிற பரம்பரையால் வருகின்ற பொருள். உடலின் ஒவ்வொரு செல்லிலும் அதே DNA காணப்படுகிறது.
3.GENE:- செல்லிலுள்ள DNA வின் ஒரு பகுதி GENE ஆகும். உடலின் தேவை அனைத்தையும் உண்டு பண்ணக் கூடிய சக்தி உடையதாகும். அதிக மான GENE கள் சேர்ந்து குரோமோசம் ஆகிறது.
4.MITOCHOMDRION:- செல்களில் சக்தியை உற்பத்தி செய்கிறது.
5.PROTEIN:- ஜீரணமாகி சக்தியாகவும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.
6.STEM CELLS:- இதை தாய் செல் என்கிறார்கள். உடலில் எந்த செல்லாகவும் மாறும் சக்தி உடையது.இரத்தம், இதயம், எலும்பு, தோல், தசை, மூளை என எந்த செல் ஆகவும் மாறக்கூடியது.
7.EGG:- குழந்தை பேறு அடைய பெண் இனத்தில் முட்டை உற்பத்தி ஆகிறது.
8.NERVE CELL:- தனக்கு தூண்டுதல் கிடைத்த உடன் மின்சாரத்தை உண்டாக்கி
தகவல் அனுப்புகிறது.
9.RED CELL:-ஒரு சொட்டு இரத்தத்தில் பல லட்சம் சிகப்பு அணுக்கள் உள்ளன.எலும்பு இதனை உற்பத்தி செய்கிறது. சிகப்பு அணுவில் இருக்கும் .ஹீமோ குளோ பின் என்னும் புரோட்டீனில் இருக்கும் இரும்பு ஆக்சிஜனை சுமந்து செல் களுக்கு கொடுத்து விட்டு, செல் களில் இருக்கும் கழிவுப் பொருளான கரிமல வாயு வை சுமந்து வந்து வெளி ஏற்றுகிறது. சிகப்பு அணு இல்லையேல் மரணம்.
10.WHITE BLOOD CELL:- இரத்தத்தில் கிருமியோ, தொற்று நோயோ புகுந்து விட்டால் வெள்ளை அணுக்கள் அவற்றை வெளியேற்றுகின்றன.ஒரு சொட்டு இரத்தத்தில் 7000 முதல் 25000 வரை வெள்ளை அணுக்கள் உள்ளன.
11. OSTCO BLAST :- இது ஒரு வகை செல்.இதிலிருந்து எலும்பு வளர்கிறது. எலும்பு தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
12.BODY TISSUE:- உடலில் நான்கு விதமான திசுக்கள் உள்ளன.1. epitheliai
( உடலின் உள்ளேயும், வெளிமூடிக்கொள்கிறது ) 2. connective ( எலும்பு மண்டலத்தையும் பிற பாகங்களையும் தாங்கிக்கொள்கிறது.) 3. muscle 4. nerves ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலை செய்கிறது.
B, உடலின் உட்பகுதி
1.BONE:- எலும்பின் அமைப்பு.
2.MUSCLE:- தசையின் அமைப்பு.
3.SKELETAL MUSCLE:- எலும்போடு சேர்ந்திருக்கும் தசைகள்.உடல் அசைவிற் கேற்ப சுருங்கி விரிகிறது.
4.CARTILAGE:- கடினமான தசை. காதின் வெளிப்புறம், மூக்கு போன்ற இடத்தி லுள்ள தசைகளாகும்.
5.SKULL:- மண்டையோடு எலும்பாலான அமைப்பு. உள்பக்கமாக மூளையை யும், வெளிப்பக்கமாக முகத்தையும் தாங்கிக்கொள்கிறது.குழந்தை பிறந்த உடன் இரப்பர் போன்றி ருக்கும் மண்டையோடு நாளடைவில் உறுதியான எலும்பாகி விடுகிறது.
6.SPINE:- முதுகுத் தண்டு மூன்று பாகங்களாகும். முதல் 7 டிஸ்கு களை CERVICAL VERTEBRAE என்றும், அடுத்த 12 டிஸ்கு களை THORACIC VERTEBRAE என்றும், கடைசி 5 டிஸ்கு களை LUMBAR VERTEBRAE என்றும் கூறுகிறார்கள்.
C.மூச்சு ஓட்டமும் இரத்தஓட் டமும்
1.HEART:-பிராண வாயு கலந்த இரத்தம் உடல் முழுவதும் போய் சேர பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது. ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. உடலில் இதயம் சத்தான உணவுகளால் சரிசெய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும். முளை வந்த கோதுமை, திராட்சை பழக் கொட்டை, அன்னாசிப்பழம், பூண்டு போன்று காய், கனிகளிலுள்ள அன்றி ஆக்சிடெண்ட் ( vitamin A, E, C ) இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய் இருக்கிறது.
2.CARDIAC MUSCLE:-இதயத்தின் தசைகள் தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு, தானியங்கியாக ஒரு ஒழுங்கில் செயல்பட்டு ஒரு ஜீவனின் வாழ்நாளுக்கு காரணமாக இருக்கிறது.
3.BLOOD:-இரத்தம் செல்களுக்கு பிராணவாயு வையும், உணவிலுள்ள சத்துக்களையும் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு, செல்களில் ஏற்படும் கழிவுகளை எடுத்துக்கொண்டுவந்து வெளியேற்று கிறது.மனித உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.
4.LUNGS:-நெஞ்சுப் பகுதியில் இருக்கும் நுரையீரல் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்திற்கு கொடுத்து, இரத்தத்திலிருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் வேலையை செய்கிறது..
5.DIAPHRAGM:-மூச்சு விடும் செயல் ஒரு குடைபோன்ற அமைபபுடைய தசையாலான Diaphragm என்பதன் உதவியால் நடைபெறுகிறது. Diaphragm கீழ் நோக்கி சுருங்கி வயிற்றை அழுத்தும் போது மூச்சுக் காற்று உள்ளே செல்கிறது. Diaphragm மேல்நோக்கி இயல்பு நிலைக்கு வரும்போது வெளிமூச்சு ஏற்படுகிறது வயறானது உள்ளே செல்கிறது.
6.ARTERY:-இதயத்திலிருந்து பிராணவாயுவை சுமந்துகொண்டு செல்களுக்கு செல்லும் இரத்த குழாய்களை Artery என்கிறார்கள்.
7.CAPILLARY:-இவை திசுக்களின் உள்ளே இருக்கின்றன. இரத்தத்தை Artery லிருந்து Vein க்கு எடுத்துச்செல்கின்றன. பிராணவாயு, சத்துக்கள், கரிமல வாயு, கழிவுகள் முதலியன Capillary யில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.
8.VEIN:-செல்களிலுள்ள கழிவுகளை Capillary வழியாக எடுத்துக்கொண்டு இருதயத்தை நோக்கிச் செல்லும் இரத்தக் குழாயை Vein என்கிறார்கள்.
D. சுரப்பிகளின் வகை
1. LYMPH 5. PANCREAS 9. PITUITARY
2.TEAM IMMUNITY 6. THYROID 10. OVARY
3. SPLEEN 7. ADRENAL 11. TESTES
4. HORMONES 8. PINEAL 12.PROSTATE
13. SEX LIFE
E. ஜீரணமும் கழிவும்
1. ENZYMES 5. INTESTINES 9. LIVER
2. SALIVA 6. SMOOTH MUSCLE 10.KIDNEYS
3.TEETH 7. GUT BACTERIUM 11.BLADDER
4.STOMACH 8. GALL BLADDER 12. WASTE MATTER
13. ELECTROLYTES
F. உணர்ச்சி மற்றும் தகவல் உறுப்புக்கள்.
1. BRAIN
2. SPINAL CORD
3. NERVES
4. EYE
5. EAR
6. NOSE
7. TOUCH
8. TONGUE
G. வெளிப்பாகங்கள்.
1. SKIN
2. HAIR
3. NAIL
4. SWEAT GLAND
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் செய்யும் பணிகள் அனைத்தையும் விரிவாகப் பார்த்தால் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது.
நமது இதய தசைகள் வாழ் நாள் முழுவதும் ஒய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நமது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கணையம் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு சமமான பணிகளை செய்கின்றன. நாம் உண்ணும், குடிக்கும் அனைத்தும் ஜீரணப்பகுதியை கடந்து, கல்லீரலுக்கும், சிறுநீரகத்துக்கும் போய்வருகின்றன.
நமது மூளை பலநூறு கணணிகளுக்கும் மேலான பணிகளை செய்கிறது.
நமது நரம்பு மண்டலம் ஒப்பிட முடியாத அளவு வேகத்தில் உணர்வுகளை கடத்தவும், உத்தரவுகளை பெறவும் செய்கின்றன.
மேற்கண்ட நமது அவையவங்கள் யாவும் நாம் பிறந்ததிலிருந்து சரியாகவே இயங்கக்கூடியவை. அதற்கு சரியான உணவு, காற்று, தண்ணீர், சூரிய ஒளி, உறக்கம், சரியான எண்ணம் இவைகளை கொடுத்து வந்தால் அவைகளும் சரியாக இயங்கும். ஆனால், பல்வேறு காரணங்களால் நாம்மால் அவைகளை கடைபிடிக்க முடியவில்லை.
உணவிலுள்ள சத்தையும், காற்றிலுள்ள பிரணவாயுவையும் செல்கள் சக்தியாக மாற்றி நம்மை செயல் பட வைக்கின்றன.
பல காரணங்களால் நாம் தவாறன உணவுகளை உண்ணப்பழகி விட்டோம். வியாதி என்று வந்த பின்னரே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம்.
முதலில் இனிப்புச்சத்து. நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணமாகி இரத்தத்துக்கு வரும் போது அதிலுள்ள இனிப்பு சத்துக்களில் ( sugar & starch ) இன்சுலினும் இருந்தால்தான் செல்கள் ஏற்றுக் கொள்கின்றன. இன்சுலின் இல்லாத இனிப்பை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுகின்றன.
இதனால் இரத்தத்தில் சுகர் கூடி செல்களை நோய்ப் படுத்தி விடுகின்றன உடல் பலவீன மாகி விடுகிறது.
இரண்டாவது கொழுப்புச்சத்து. நட்ஸ், சீட்ஸ் களில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பாகும் ( Un Saturated Fat ). நாம் அதிலிருந்து கொழுப்பை மட்டும் பிரித்தெடுத்து உபயோகப்படுத்தும் பொழுது பலசத்துக்கள் பிரிந்து போய் விடுகின்றன.
உணவு ஜீரணமாகி இரத்தத்தில் தேவைக்குமேல் அதிகமாக வரும் இனிப்புக்களை அவை இன்சுலின் கூட வந்தாலும் தேவையில்லை என்று சொல்லி செல்கள் நிராகரித்து விடுகின்றன. அப்போது அந்த இனிப்புகள் கொழுப்பாகமாறி உடலில் தேங்கி உடல் எடையை கூட்டுகின்றன.
நாம் உண்ணும் பால், பால்வகைஉணவுகள், எல்லா மிருக வகை உணவுகள், எல்லாவற்றிலும் கரையாத கொழுப்பு ( Saturated Fat ) இருக்கிறது.
எண்ணெயில் வறுத்த உணவுகளில் மிகவும் கெட்ட கொழுப்பான மாறிய ( Trans Fat ) கொழுப்பு இருக்கிறது.
ஆக, நமது உடலுக்கு நான்கு வகையான உணவு வழிகளில் கொழுப்பு கிடைக்கிறது. ஆனால் நமது உடலுக்குத் தேவையான கொழுப்பில் 75% த்தை நமது உடலே தயாரித்துக் கொள்கிறது. உடலுக்கு உணவு வழியாக வரும் தேவைக்கு அதிகமான கார்போஹைட்ரேட் ( இனிப்பு ) கொழுப்பாக மாறுவ தாலும், மற்றும் கொழுப்புள்ள உணவுகளை தேவைக்கு அதிகமாக உண்ணுவதாலும் உடலுக்குள் கொழுப்பு நிறைய சேர்ந்து விடுகிறது. இதனால் அவரவருக்கும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன. கொழுப்புகள் உடலில் தங்கி உடல் எடையை கூட்டிவிடுகிறது. கூடிய எடையை குறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.
பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரையும் குடித்து, வெண்மைநிற, சரிவிகித, எல்லச்சத்துக்களையும் உடையப் பாலைத்தருகிறது,
அதுப்போல் நமது பழங்கால முன்னோர்கள் வெறும் கிழங்கு, காய், கனிகளை மட்டும் உண்டு எந்த சத்துக்குறைவும் இல்லாமல் திடமாக வாழ்ந்து மடிந்தார்கள்.
இயற்கையாக கிடைக்கும் முழு உணவுகளை மற்றம் ஏதும் செய்யாமல் நாம் உட்கொண்டால் அந்த உணவுகளிலிருந்து உடல் தனக்கு வேண்டிய அனைத்துசத்துக்களையும் தயாரித்துக்கொள்ளும் வகையில் நமது உடல் இயக்கம் அமைந்திருக்கிறது. ஆனால் நாம் அலட்சியமாய் இருந்து நாகரீகம், முன் னேற்றம் என்று சொல்லி நல்லனவற்றை புறந்தள்ளி இயற்கை உணவு களில் பல மாற்றங்கள் செய்து வியாபார மாக்கி உண்ணுகிறோம். அடிப்படையை மறந்து விட்டோம்.
நாம்வெள்ளை அரிசி, வெள்ளை மாவு, எண்ணெய்,சீனி என சுத்திகரிப்பு மூலம்
( Refined Process ) எல்லா சத்துக்களையும் நீக்கிவிட்டு உண்ணுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுத்திகரித்த மற்றும் கெட்டகொழுப்பு உணவுகளை நாம் தேவைக்கு அதிகமாக உண்பதால் நமது ஆரோக்கியத்தில் பலருக்கும் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
மூன்றாவது பிராணவாயு. உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு சீரான பிராணவாயு மிக முக்கியம். ஆனால், நமது மூச்சு ஓட்டம் நமது மன உணர்ச்சிகளுக்கு ஏற்ப சாதாரணமாகவும், அசாதாரணமாகவும் இருக்கிறது. சரியாக மூச்சுவிடுவதை பழகிக் கொண்டால் சில உபாதைகளை மருத்துவம் இல்லாமலே தடுத்து விடலாம்.
நான்காவது உடற்பயிற்சி. நமது உடல் நடக்கவும், ஓடவும், ஏறவும், இறங்கவும் ஆன செயல்களை செய்வதற்காக அமைக்கப்பட்டது. உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் எரிக்கப்பட்டு விடவேண்டும் என்பது நியதி. உழைப்பிற்கேற்ற அளவு உணவு, அல்லது உணவிற்கேற்ற அளவு உழைப்பு . இந்த சமநிலை மிக அவசியமாக இருக்கிறது.
நாம் தெரிந்து கொண்டவைகளை உறுதி செய்து, உறுதி செய்தவைகளை, நினைவில் நிறுத்தி, அந்த உண்மைகளை இயன்றவரை கடைபிடிப்பது ஒன்று தான் நமக்காக உழைக்கும் நமது உடல் உறுப்புக்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.
--------------------------------------------------------