Thursday 22 October 2015










Image result for money and health


Image result for பொன்மொழிகள்


Image result for பொன்மொழிகள்



Image result for பணம்
Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்



Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்

Image result for பொன்மொழிகள்








Image result for பொன்மொழிகள்

Image result for money and health






































EFFECT OF ALCOHOL


























Image result for exercise and health








Image result for body weight  and health








Image result for body weight  and health

Image result for time and health

Image result for time and health




Key Numbers for Heart Health

3 numbers that can change your life.

1. Blood Pressure: Key to Heart Health

2. Cholesterol: Predictor of Heart Attack

3. Waist Size: The Connection to Heart Disease



Wednesday 21 October 2015

நினைப்பும் உடல்நலமும்

                                         நினைப்பும் உடல்நலமும்

உடல் மனதின் வேலையாள். உடல் மனதிற்கு கீழ்படிந்து நடக்கிறது. சுற்றுப்புறம் உடல்நலத்தைப் பாதிப்பது போல் நினைப்புகளும் உடல் நலத்தைப்  பாதிக்கிறது. நியாயமற்ற நினப்புகளால் உடல் துரிதமான நோய்க்கும் அழிவிற்கும் காரணமாகிறது. உற்சாகமான நல்லெண்ணங்கள் உடலின் இளமையையும் ஆரோக்கியத்தையும் காக்கிறது.

நோயைப் பற்றிய மாறாத பயம் நோய்க்கு ஆட்படுத்துகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது. பரிதவிப்பான எண்ணம் உடல்முழுவதையும் கெடுத்து விடுகிறது. சுத்தமில்லாத நினைப்புகளை மனதில் அடைகாக்கும் பொழுது அது செயலாகாவிட்டாலும் நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறது.
உடலானது மிகவும் மென்மையான, மற்றும் சுருங்கு தசைகளாலானது. எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியது. எண்ணங்களின் தன்மைக்கேற்றபடி மாற்றமடையக்கூடியது. உறுதியான, சுத்தமான, மகிழ்ச்சியான எண்ணங்களால் தசைகள் சக்தியும், மென்மையும் பெறக்கூடியது. நல்லெண்ணங்களை உடையமனம் நல்ல இரத்தத்தையும், நல்ல வாழ்க்கையையும் அமைக்க முயற்சிக்கும். எண்ணங்களை மாற்றாமல் உணவுகளை மட்டும் மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.

மனதில் சுத்தாமான எண்ணங்களை உடையவர்கள் ஒருபோதும் அசுத்தமான உணவுகளுக்கு ஆசை படமாட்டார்கள். சுத்தமான எண்ணம் உடலை சுத்தமாக்கும். உற்சாகத்தை தரும் எண்ணங்கள் என்பவை ஒரு மருத்துவரைப் போன்று உடலை ஆரோக்கியப்படுத்தும்.

சந்தோசம், கவலை, கோபம், பயம் போன்ற எண்ணங்களை முகம் பிரதிபலிக்கிறது. கவலையால் நெற்றி சுருங்குகிறது. மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்கிறது. இவைகளை நாம் முகத்தில் நேரில் காண்கிறோம். உண்மையில் இந்த உணர்வுகளால் உடல் முழுவதும் தாக்கம் பெறுகிறது. எண்ணங்களின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு உறுப்பு களும் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கம் பெறு கின்றன.

எண்ணங்களை அதன் நோக்கத்துடன் தொடர்பு படுத்தி எண்ணப்பழக வேண்டும். தெளிவான நோக்கம் இல்லாமல் வாழ்பவர்கள் கவலை, பிரச்சினை, சுயபரிதாபம் போன்ற நிலைக்கு தள்ளப்படு கிறார்கள். நோக்கமில்லாமல் எண்ணுவதையும், பலவீனங்களையே எண்ணிக் கொண்டிருப் பதையும்   நிறுத்தப் பழகவேண்டும். எண்ணங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டும்.

பலசமயங்களில் நமக்குள்ளே நாம் பேசிக்கொள்கிறோம், விவாதிக்கிறோம், வழிகாண்கிறோம். யாருக்கும் பாதிப் பிருக்கக்கூடாது நியாயமாய் இருக்கவேண்டும் என்கிற நோக்கில் முடிவெடுத்தால் வெளியே  நியாயமாய் நடப்போம். தனக்குள்ளே பேசிக்கொள்ளும் போதே சுயநலத்தை முன்வைத்து முடிவெடுத்தால்  தவறாக நடந்து பிரச்சினைக்கு காரண மாவோம்.

நல்லதை விரும்புபவர் புகைபிடிப்பதில்லை, மது-போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில்லை. உணவு, உடற்பயிற்சி, கடமை, நியாயம், கருணை, மரியாதை என்கிற மனோபாவம் அவரிடம் இருக்கும்.

ஒரு பிரச்சினையான சூழ் நிலையில் அனைவருக்கும் பயனான ஒரு முடிவை தேடுவதே நேர்மறை எண்ணம். கெட்டதை தவிர்த்து நல்வழியை காண்பது நேர்மறை எண்ணம்.

எதிர் மறை எண்ணங்கள் சில

ஒரு சூழ்நிலையிலுள்ள தவறுகளை மட்டுமே மிகைப்படுத்தி நல்லவற்றை கவனிக்காமல் விடுவது.

தனக்கு ஒரு நல்லது கிடைக்கும் போது அதனால் வரும் பாராட்டுக்களையும் பாராட்டுபவர்களையும் நினைத்துப்பார்க்காமல், எல்லாவற்றிற்கும் தனது திட்டம் தான் காரணம் என்ற நினைப்பில் இருப்பது.

தவறாக ஒன்று நடந்துவிட்டால் தன்மீது நொந்துகொள்வது.

தொடர்ந்து தவறுகளைமட்டுமே எதிர்பார்ப்பது. காலையில் ஒன்று தவறாகிவிட்டால் அன்று முழுவதும் தவறு தான் நடக்கும் என்கிற முடிவுடன் இருப்பது.

நல்லது அல்லது கெட்டதை ( Perfection or Failure ) மட்டுமே பார்ப்பது. மத்திய வழியை மறந்து விடுவது. இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களுக்கு சில உதாரணங்களாகும்.

தான் மாறவேண்டிய சில குணங்களை உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள திட்டமிடுவது நல்லது.

தன்னுடைய எண்ணங்கள் நேர்மறையா, எதிர்மறையா என கவனித்து அதனை சரிப்படுத்துவது நல்லது ,

தனது முடிவின் பின்விழைவுகளைப பற்றி யோசிக்காமல் ஆசையாலும், கோபத்தாலும்  உணர்ச்சி வயப்படுகிறோம் என்பதை உணருவது.

எந்த சூழலிலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருப்பது நல்லது  .

உடற்பயிற்சி, சரியான உணவு, மன அழுத்தத்தை மாற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது .

கவலைப் படுவதால் எதுவும் நடக்காது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து புதிய முயற்சியில் இறங்குவது நல்லது

நமது மகிழ்ச்சியிலும் வாழ்க்கையிலும் அக்கறையுள்ள அம்மா, மனைவி/கணவன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் நம்மீது குற்றம் காணும் போது அதை அலட்சியப் படுத்தாமல் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும்..

சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக வழிகாட்டி அதை கவனித்து கேட்டு தெரிந்துகொள்வது நல்லது .

தவறான எண்ணம் மனதில் ஏற்படும் போது இது தவறான எண்ணம் என உணர்ந்து அதற்கேற்ற சரியான நல்லெண்ணங்களை எண்ணுவது நல்லது .

பயிற்சிதான் தவறான எண்ணங்களிலிருந்து நல்லெண்ணங்களுக்கு மாற்றும். சுய விமர்சனங்களை குறைத்து விட்டு சுய ஏற்பினை அதிகப்படுத்தவேண்டும். கெட்டதை நினைத்து விட்டு நல்லதை செய்யமுடியாது. நல்ல, வலிமையான, வெற்றியானநினைப்புகள் ஆழ்மனதிற்குள் புகவேண்டும். ஏழையாக இருந்தாலும் ராஜாவாக ஆவேன் என்று கற்பனை செய்ய வேண்டும்.  

ஆழ்மனத்திலிருக்கும் சரியான எண்ணங்கள்  அதிசயிக்கும் வகையில் சக்தியையும்,வலிமையையும்,தைரியத்தையும்,தீர்மானத்தையும்  தருகிறது.
இன்று உணர்ச்சியுடன் நாம் எண்ணும்  ஒரு எண்ணம் சீக்கிரத்திலோ, தாமதமாகவோ  ஒருநாள் செயலுக்கு வருகிறது. நம் செயலுக்கேற்ப நம் வாழ்க்கை நடக்கிறது. நமது வாழ்கையை நமது எண்ணங்கள் காக்கிறது.

எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் வாழ்கையை ஒழுங்கு படுத்தலாம். அதற்கு வெற்றி-தோல்விகளைப்பற்றி ஆராய்ந்த தெளிவால் நெருக்கடிகளை கையாள  வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிகபெரிய சக்தி களில் ஒன்று நினைப்பு. என்ஜின் முன்னால் போவதும் பின்னால் போவதும் ஒரே சக்தியால் தான். அதேபோல் சரிக்கும்-தவறுக்கும் காரணம் எண்ண சக்திதான். உணவில்லாமல் பட்டினி கிடப்பவன் பயத்தால் செத்து விடுகிறான்.நோய் குணமாக வேண்டி பட்டினிவிரதம் என்றிருப்பவன் நோய் குணமடைந்து ஆரோக்கியம் பெறுகிறான். நம்பிக்கை எண்ணம் உடலுக்கு வலிமையைத் தருகிறது. பயம் எண்ணம் உடலைக்கொன்று விடுகிறது.

சரியான உணவுகள், உடற்பயிற்சிகள் , நல்லவனாக, நன்மையாக இருப்பது போன்ற எண்ணங்களை    பெரும்பான்மையாக எண்ணும் போது அவை ஆழ்மனதுள்  சென்று உடனடியாகவோ தாமதமாகவோ நம்மை விருப்பத் துடன் செயல்பட வைக்கிறது. மனதை  நம்முடன் ஒத்துழைக்க வைக்க இதுவே வழி. நல்ல உடல் நலத்துடன் வாழ மனத்திலிருக்கும் நினைப்புகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருக்காமல் நல்ல எண்ணங்கள்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                           ------------------------------------------------------










































Sunday 18 October 2015

நிலமும் உடல் நலமும்

                                         நிலமும்  உடல் நலமும் 

ஆரோக்கியம் அனைத்து உயிரினங்களின் பிறப்புரிமையாகும். இந்த சட்டம் மண்ணிற்கும், தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருந்தும். இந்த நான்கின் ஆரோக்கியமும் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இந்தத்தொடரில் ஏதாவது ஒன்று பலவீனமடையவோ, பாதிப்படையவோ, செய்தால் அது அடுத்தத் தொடரை பாதித்து கடைசி தொடரான மனிதனையும் பாதிக்கிறது.  

தாவரங்களுக்கு மனிதன் இடும் இரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி விஷங்களாலும், மண் வளம் பாதிக்கப்படுகிறது. தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த தாவரங்களைத் தின்னும் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த உயிரினங்களையும் தாவர உணவுகளையும் உண்ணும் மனிதனும் பாதிக்கப்படுகிறான்,

இதனைச் சரிப்படுத்தாமல் மனிதனின் சுகாதாரம், மருத்துவ கண்டுபிடிப்புகள் எதுவும் உயிரினங்களையும் மண்வளத்தையும் காப்பாற்றப்போவதில்லை. 

மண்வள  பாதுகாப்பு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் உணவின் உயர்ந்த தரம் அந்த உணவு பயிராகும் சத்து நிறைந்த மண் வளத்தை பொறுத்தே அமைகிறது.

மண்ணிலுள்ள பல நுண்ணிய உயிரினங்கள் மண்ணில் சத்துக்கள் ஏற்படவும் தாவரங்கள் முளைக்கவும். செழித்து வளரவும் உதவுகின்றன. இயற்கை உரங்கள் மண் ஆரோக்கியத்தைக்காத்து அதில் வளரும் தாவரங்களை ஆரோக்கியப்படுத்தி அதை உண்டு வாழும் மற்ற உயிரினங்களையும் மனிதனையும் காப்பாற்றுகிறது.

மண் நீரையும், சத்துக்களையும் சேர்த்துவைத்துக்கொளகிறது. மண் என்பது அழுக்கு அல்ல. இயக்க மற்றதுமல்ல 

மண் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு கிடைக்காதவரை மனிதனுக்கும், மனிதன் உண்ணும் உயிரினங்களுக்கும் சத்தான உணவிற்கும் பாதுகாப்பு இல்லை.

மண் இயற்கையிலுள்ள பல நிறங்களை உறிஞ்சி தாவரங்களுக்கு நிறத்தைத்தருகிறது. இந்த நிறங்களுக்கு பல்வேறு நல்ல குணங்கள் உள்ளன.

மனிதன் இயற்கையின் நியதிகளை புரிந்து, விவசாயத்தைப் பேணி வந்தால் அதுவே நமது ஆரோக்கியத்திற்கும் நமது குழந்தைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

காலுக்கு காலணிகள் பழக்கத்திற்கு வந்த பிறகு மனிதனுக்கும் பூமிக்கும் இடையே யான நேரடித் தொடர்பு நின்று விட்டது.

வெறுங்காலில் நடக்கும் போது நல்ல மண்ணில் இருக்கும் சிரட்டோனின் பாக்டீரியா ( Seratonin Bacterium ) என்னும் நுண்ணுயிர் மனிதனுக்கு நன்மை செய்கிறது. 

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் மண், மணல், புல், தரையில் நடப்பதால் உடலில் அன்றி ஆக்சிடன்ட்( Anti Oxidant ) ஐ அதிகரிக்கச்செய்கிறது. தூக்கத்தை ச்சிறப்பாக்கு கிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. மூளையின் மின் செயல் அதிகரிப்பதை எலக்ட்ரோன்ஸ் பேலோகிரம்(Electroence Phalograms) என்னும் சோதனை மூலம் அறியலாம். இரத்த சிகப்பு அணுக்களில் ஏற்படும் மாற்றம் இரத்தத்தின் திடத்தை குறைக்கிறது. அதிக திடமான ( High Viscosity ) இரத்தம் இதய நோய்க்கு காரணமாகிறது. பூமியின் நேரடித் தொடர்பு கிடைப்பதால் பூமியின் சக்தி உடலுக்கு கிடைக்கிறது. வெறும் காலால் நல்ல மண்ணில் நடந்து உயர்ந்த பலன்களை அனுபவிக்கலாம்.

உயர்ந்த மண் வகைகளை உடலில் பூசிக் கொள்ளும் போது மண் உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை உறிஞ்சிக்கொள்கிறது. உடலில் கடினமான தோலின் தன்மையை மிருதுவாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ச்செய்கிறது. இதனால் முடி, தசை, மூட்டுகள் நல்ல ஆரோக்கியம் பெறுகின்றன.   

மண் வளம்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                                ------------------------------------------------

Friday 2 October 2015

தண்ணீரும் உடல்நலமும்

                                         தண்ணீரும் உடல்நலமும் 

தண்ணீர் வாழ்க்கையின் அடிப்படை. மனித உடல் இயக்கத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய மானது. கொழுப்பை எரிக்கும் உடலின் இயற்கையான திறனை தண்ணீர் அதிகரிக்கிறது.

உடலால் நீரைத் தேக்கிவைக்க இயலாது, ஆகையால் உடலுக்கு அவ்வப்போது தண்ணீர் தேவைப்படுகிறது.

தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமெடுக்காவிட்டால் கூட போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். காலை, மதியம், இரவு என ஒவ்வொரு உணவின் இடைப்பட்ட நேரங்களில் தண்ணீர்  அருந்துவது நல்லது. அது பலவித நோய்களைத் தடுத்து  உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.

நமது உடல் 70% தண்ணீரால் ஆனது. ஜீரணம், இரத்த ஓட்டம், தோல், சிறுநீரகம், மலச்சிக்கலின்மை போன்ற இயக்கங்களுக்கு நீர் முக்கியமாக பயன்படுகிறது.

நமது உடல் தோல், மூச்சு, சிறுநீர், மலம், வாய் போன்ற வழியாக நீரை இழக்கிறது.இந்த இழப்பை அவ்வப்போது சரிக்கட்டுவது உடல் ஆரோக்கியத் திற்கு நல்லது. 

சிறுநீரகம் சீராக இயங்க நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. நீரானது சிறுநீரக நோய், கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. குறைந்த அளவு நீரால் சிறுநீரகத்தின் செயல்பாடும் குறைகிறது.

நீரானது மலச்சிக்கலை தடுக்கிறது. உடலில் போதுமான அளவு நீர் இருக்கும் போது குடலிலுள்ள கழிவுகள் நகர்வதற்கும் எளிதாக வெளியேறு வதற்கும் உதவுகிறது.

 தண்ணீர் தோலை ஈரமாக வைத்து உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் தண்ணீர் குறைவு ஏற்படுமானால் சிறுநீரக இயக்கம் குறைகிறது அல்லது நின்று விடுகிறது. உடலில் ஏற்படும் சிறிய நீர்க் குறைவு கூட உடலின் சக்தியினை வடித்து சோர்வாக்கி விடுகிறது.

திட உணவு மட்டு மல்ல, திரவ உணவும் உடலுக்கு மிக முக்கியம்.தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறவும், நோய் குணமடைய வும் செய்கிறது.  

உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல், குடல் வழியாக கழிவுகள் வெளியேறும் செயல் பாடுகளுக்கு தண்ணீர் அவசியமாகிறது.
காய்ச்சல்,வாந்தி,பேதி,வேர்வையின் போது அதிக அளவு நீர் உடலை விட்டு வெளியேறு கிறது. 

கடையில் விற்கப்படும் குளிர்பானம், பழரசம், போன்றவை களில் உப்பு, இனிப்பு, பாதுகாக்கும் இரசாயனம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். அவைகளில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை. அவை உயர்  இரத்த அழுத்தம், இரத்த சுகர், உடல் அதிக எடை போன்றவை களுக்கு காரணமா கிறது..

பழங்கள். காய்கள், சூப், கஞ்சி, குழம்பு போன்றவை களில் இருக்கும் தண்ணீர் உடலுக்கு நல்லது.

கர்ப்பமானவர்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும், அதிக உடல் உழைப்பு உள்ளவர்களும், சூடான சூழலில் பணபுரிபவர்களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அளவிற்கு அதிகமான தண்ணீர் உடலிலுள்ள சோடியத்தை (உப்பு) வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தால் ஒரு அளவான நீரைத்தான் வெளியேற்ற முடியும்.

பத்து வயது வரை ஒரு லிட்டரும்,இருபது வயது வரை இரண்டு லிட்டரும் அதற்கு மேற்பட்ட வயதினர் மூன்று லிட்டர் வரையும் தண்ணீர் அருந்தவேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றிற்கும், நமது குடிநீருக்கும், மழை பெய்து உணவு உற்பத்தி செழிப்ப டைவதற்கும் கடல் நீர் ஆதாரமாய் இருக்கிறது.

கடல் நீரில் பெட்ரோலியக் கழிவுகள், அசுத்தநீர், குப்பைகள், இரசாயனக் கழிவுகள் போன்றவை களை கொட்டுவதால்  கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. சில மீன் களில் மெர்குரி சேர்க்கிறது. சில மீன்கள் நோய்வாய்ப் படுகிறது. இந்த மீன் களை  உண்ணும் மனிதன் பலவித நோய்களுக்கு ஆளாகிறான்.    

தண்ணீர்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                          --------------------------------------------------



சூரியனும் உடல்நலமும்

                                        சூரியனும் உடல்நலமும் 

சூரிய ஒளி மாசுபடாத,கொழுப்பற்ற , இனிப்பற்ற ஒரு உணவு எனலாம். 

சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B ( UVB ) கதிர்கள் உடலின் தோலிலிருக்கும கொழுப்புடன் சேரும்போது வைட்டமின்  D உற்பத்தியா கிறது.

உணவிலுள்ள கால்சியம் சத்தை உறிஞ்ச உடலில் அதற்கேற்ப வைட்டமின் D சத்து இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தை விட , சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலெட் B கதிர்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்தே அதிக மானதும், முதன்மை யானதும் ஆகும்.

உடலில் வைட்டமின் D யை தேவைக்கு அதிக மாக சூரியனிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் நிறுத்திக்கொள்ளும் திறன் இயற்கை யாகவே உடலுக்கு இருக்கிறது.

கண்ணாடிவழியாக வரும் சூரிய வெளிச்சத்திலிருந்து உடலால் வைட்டமின்  D யை தயாரித்துக்கொள்ள முடியாது.கண்ணாடியில் UVB கதிர்கள் ஊடுருவி வராது. சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது நல்ல உறக்கத்தையும் , உடல் பொலிவையும் தரும்.

கண்ணுக்கு கண்ணாடி அணியாமல் சூரிய ஒளியில் இருக்கும் போது  கண்ணுக்குள்ளேயும் புகுந்து நன்மை செய்கிறது.

சூரிய ஒளியில் நடமாடாதவர்களுக்கு வைட்டமின் D சத்திலும், கால்சிய சத்திலும் குறைவு ஏற்படலாம்.

மீன், முட்டை, பால்,  ஓட்ஸ், இனிப்பு கிழங்கு போன்ற உணவுகளிலும் வைட்டமின் D இருக்கிறது.

இயற்கையில் சீதோஷ்ணம் ஒரு சீரான சுழற்சியில் இருந்து வந்தது. இது உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிக சாதக மாக இருந்தது. காலப்போக்கில் காற்றை குளிர்ச்சிபடுத்தவும், சுத்தப்படுத்தவும் செய்து வந்த வனங்கள் அழிக்கப்பட்டன. மறுபுறம் பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்கள், மின்சாதனங்களி லிருந்து வெளியேறும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் பூமி வெப்ப மய மாதல் கட்டுப் படுத்தமுடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போவதாலும் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

பூமியில் இதுவரை பனிக்கட்டியாகவே இருந்த நிலங்கள் உருக ஆரம் பித்திருக்கிறது.

கடல்நீர் மட்டம் உயர்வு, புயல், கடல் நீர் நிலத்துள் புகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.

மழைக்காலம் என்பது ஒழுங்கற்றது ஆகிவிடும்.
வெப்பமான சூழ்நிலை பலவித ஒவ்வாமை நோய் கள்  ஏற்பட காரணமாகும்.
வெப்பமான நிலைமை கெடுதல் பாக்டீரியாக்கள் உற்பத்தியாக ஏதுவாகும்.
வெப்பமான சுற்றுப்புறம் எரிச்சலையும், வெறுப்பையும் தரும்.
வெப்பக்காற்றினால் நோய், மரணம் ஏற்படும்.
வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று என்பது சாதாரணமாகி விடும்.

சூரிய ஒளி  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                    ---------------------------------------------




















காற்றும் உடல்நலமும்

                                              காற்றும்   உடல்நலமும்

உயிர்கள் வாழ பிராணவாயு அவசியம். உயிர்கள் காற்றிலிருந்து பிராண வாயுவை எடுத்துக்கொள்கிறது. மூச்சு விடுதலில் இரண்டு வகை. ஒன்று  மேல்மூச்சு. இரண்டாவது ஆழமான மூச்சு.

பொதுவாக நாம் அனைவரும் மேல்மூச்சு விடுபவர்களாக இருக்கிறோம். ஆழமான மூச்சு விடுபவர்களாக இல்லை.

மேல் மூச்சு விடுவதால் நுரையீரலின் முழுத் திறனையும் நாம் பயன் படுத்திக்கொள்வதில்லை.

நாம் ஆழமான மூச்சுவிடும் போது நுரையீரலின் கீழ் உள்ள டயபரமானது அதிக பட்சமாய் விரிவடைகிறது. அப்போது  வயிறானது ஒரு பலூனைப் போன்று உள்ளே போவதும் வெளியே  வருவதுமாக இருக்கிறது.  இதனால் நுரையீரலின்    முழுத்திறனையும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நமது மன நிலை சுவாசத்தை பாதிக்கிறது. கோபம், பரிதவிப்பு, கவலை போன்ற மனநிலைமைகளில் நாம் இருக்கும் போது நமது சுவாசமானது மிகவும் குறைந்த பட்சமாகி விடுகிறது. உடலில் பிராணவாயு குறைவு ஏற்பட்டு உடல் சோர்வு, பசியின்மை, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளே இழுத்து  வெளியே விடும்போது நமது இதயத் துடிப்பு (Heart Beat), நாடியின் அளவு (Pulse Rate ) இரத்த ஓட்டம் முதலியன ஒரே சீராக  இயங்கு கின்றன. அப்போது உடல் ஆசுவாசம் பெறுகிறது. அதனால் மனமும் ஆசுவாசம் அடைகிறது. தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதால் நாடித்துடிப்பு  சீராகி மனம் ஆசுவாசம் அடைந்து, உயர் இரத்த அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவையும், சுவாசிக்கும் பிராணவாயுவையும் சேர்த்து செல்கள் உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றிக்கொள்கின்றன. உடலுக்கு பிராணவாயு குறைவு ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அல்லது உடலிலுள்ள பலவீனமான பாகங்களில் வலி ஏற்படுவதை  தவிர்க்க முடியாது.

நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் அதன் அளவிற்கேற்ப சக்தி பயன் படுத்தப் படுகிறது.மேல் மூச்சைவிட ஆழமான மூச்சுவிட அதற்கேற்ப சக்தி அதிகம் தேவைப்படுகிறது.ஆழமான மூச்சு அதிக கலோரியை பயன்படுத்து கிறது. அதனால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கப்படுகிறது.

மூச்சுப்பயிற்சி மனக்கொந்தளிப்பையும், மன அழுத்தத்தையும் குறைத்து மனதை சமநிலையில் வைக்கிறது.

காற்றில் 21% பிராணவாயும்,78% நைட்ரஜன் வாயும்,மீதி ஈரப்பதம் போன்ற பிற பொருட்களும் உள்ளன. காற்றிலிருந்து பிராணவாயுவை மட்டும் பிரித்து இரத்தத்துடன் சேர்க்கும் வேலையை நுரையீரல் செய்கிறது. இரத்தத்திலுள்ள கரிமல வாயு போன்ற அசுத்தங்களை பிரித்து வெளியேற்றும் வேலையையும் நுரையீரல் செய்கிறது.

வாகனப்புகையாலும், தொழிற்சாலை புகையாலும் காற்று மாசு படுகிறது. அந்த மாதிரி காற்றையும் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில்  நாம் இருக்கிறோம்.  மாசடைந்த காற்றினால்  தலைவலி, சுவாசக்கோளாறு மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன.

காற்றிலுள்ள தூசு, புகை, மணம், குளிர்ச்சி போன்றவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சுவாசப்பிரசசினை  யை தருகிறது.

கைகளை கழுகு வதும், மருத்துவம் கூறும் துணியினை மூக்கில் கட்டிக்கொள்வதும் பயன்தரும்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்வது காலப்போக்கில்  பழக்கமாகிவிடும்.மூச்சுப் பயிற்சி ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                                 ---------------------------------------------