Sunday 10 April 2016

சிறு நீரகம்

                                                         சிறு நீரகம் 

சிறுநீர் மூலம் நூற்றுக் கணக்கான கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. நாம் உண்ணுவதையும், குடிப்பதையும், உடற்பயிற்சி செய்வதையும், சிறுநீரக செயல் பாட்டையும் பொறுத்து சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் பரிசோதனை முடிவுகளை  அலட்ச்சியப் படுத்தாதீர்கள்.

எந்த வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எந்தவகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல், எவ்வளவு நீர் அருந்துகிறோம், எதைக்குடிக்கக்கூடாது, எந்த உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எந்த அளவிற்கு உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்பவைப்பற்றி அக்கறைப்படாமல் இளம் வயதிலே ஆரோக்கியத்தை பலவீனப் படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

சிறுநீரகம் இரத்தத்திலுள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை ஒழுங்கில் வைத்திருக்கிறது. சிறுநீரகத்தில் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, இரத்தத்திலுள்ள இரசாயனக் கூறுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

சிறுநீரில் புரோட்டின், ஆல்புமின் சோதனைமூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் சோதிக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தில் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், அது தனது செயல் பாட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியப்படுத்த முடியாது. சிறுநீரகம் பழுதடையும் போது இரத்த சுகரும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், இரத்த சுகர், புரோட்டின் உணவு, கொலஸ் ட்ரால் முதலிய வற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

சிறுநீரகம் தினசரி 200 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி 2 லிட்டர் கழிவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்று கிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கல், பழுப்பு முதலியன ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்தும், முடிந்தவரை மாத்திரைகளை உண்பதை குறைக்கவும் முயற்சிக்கவேண்டும். சில மாத்திரைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. 

இரண்டு சிறுநீரகமும் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன.

சரியான உணவிலும், சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், உடல் எடை  போன்ற ஆரோக்கிய எண்களிலும், நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற வற்றிலும் கவனமாய் இருந்தால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  சீனி, உப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு தண்ணீர் தினசரி குடிப்பது மிகவும் நல்லது. வாழைத்தண்டு சாறு, பார்லித் தண்ணீர், சீரகத்தண்ணீ ர்  போன்றவை சிறுநீர் பிரச்சனை களை தடுக்க உதவுகிறது. மாறிய கொழுப்பு ( Trans Fat ) உணவுகளைத் தவிர்ப்பதால் புராஸ்டேட் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சிறுநீர் பிரச்சினை வராமல் தடுக்கலாம்..

                                ------------------------------------------------------













Saturday 9 April 2016

இருதயம்

                                                           இருதயம் 

தாயின் வயிற்றில் வளரும் சிசுவில்  முதன் முதலாக உருவாகி இயங்கும் உறுப்பு இதயமாகும்.

ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. 

ஆரோக்கியமான இருதய தசைகள் உடல் உழைப்பின் போது சிறப்பாகவும், ஓய்வின் போது குறைந்த அளவு துடிப்புடனும்  முழுவேலையையும் செய்கிறது. 

குறைந்த இதய துடிப்பில் அதிக அளவு இரத்தத்தை வெளியேற்றும் பணியினை செய்யும் சக்தியுடன் இதயதசைகள் இருக்கிறது. இதயத்தமனிகள் அதிக அளவு இரத்தம் பாய்ந்து செல்வதற்கு ஏதுவாய் பெரியதாய் இருக்கிறது.

பிராண வாயு கலந்த இரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இருதயம் செய்கிறது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித இதயம் ஒரு நாளைக்கு சுமார் 80000 முதல் 100000 தடவை வரை துடித்து சுமார் 9000 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 70 முதல் 90 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் சுமார் 2 முதல் 3 பில்லியன் தடவை துடித்து, 50 முதல் 60 மில்லியன் காலன் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்த பணிகளை செய்வதற்கு ஏற்ப இருதய தசைகள் வித்தியாசமான குணங்களுடன் அமையப் பெற்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆன்றி ஆக்சிடண்ட் ( Anti Oxidant ) சத்துள்ள உணவுகள் இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

காய்கள், கீரைகள், மூலிகைகள், பழங்களில் சக்திவாய்ந்த ஆன்றி ஆக்சிடண்ட்கள் இருக்கின்றன. வைட்டமின் E இதயத்தைப் பாதுகாக்கிறது. முளைவந்த கோதுமை, கோதுமைப்புல் ஜுஸ், பார்லி போன்ற வற்றிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் என்ஸைம்கள்  இதயத்தை வலிமைப் படுத்துகின்றன. திராட்ஷைப் பழக்கொட்டையிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தில் இரத்தம் கட்டியாகாமல் இருக்க ஆஸ்பிரின் உதவும். ஆனால் நெடுநாள் உண்ணும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆஸ்பிரினுக்குப் பதில் அன்னாசிப் பழம் நல்லது. வெள்ளைப்பூண்டு இருதயத்திற்குரிய சிறந்த ஆன்றி ஆக்சிடண்ட். வெள்ளைப்பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பச்சையாக உண்ணும் பூண்டு இரத்த சுகரை குறைக்கிறது.

இரத்தக் கொலஸ்ட்ரால் விகிதம் கட்டுக்குள் இல்லை என்றாலும் அதிக உடல் எடையாலும் மன அழுத்தத்தை குணப் படுத்தாவிட்டாலும் நல்ல கொழுப்புச் சத்து குறைபாட்டாலும் இரும்புத்தாது அதிகமாவதாலும் இருதயம் ஆபத்துப் பாதையில் போய் விடுகிறது.

உடலில் இருதய ஆரோக்கியம் சத்தான உணவுகளால் சரி செய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும்.

இதயநோய் மரணம் ஏற்படும் காரணங்கள் அனைத்திலும் முதன்மை வகிக்கிறது. இளவயது மரணத்திலும் முதற் காரணமாக இருக்கிறது.

புகைத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவை இதயநோய் மரணத்துக்கான தெரிந்த காரணங்கள்.

சிறந்த உடற்பயிற்சி, உணவுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை களால் இருதய நோயை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்கவும் முடியும்.




Image result for இருதயம்



ஆஸ்துமா

                                                                      ஆஸ்துமா 

ஒவ்வாமை       ( புகை, மணம், தூசு, காற்றோட்டமின்மை )             மன அழுத்தம்
( பயம், பரிதவிப்பு, கவலை ) மூச்சுக் குழாய் பலவீனம்,  பரம்பரை போன்ற காரணங்களால் மூச்சுப் பாதையில் தடிப்பு, அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

மூச்சுப் பாதையிலுள்ள குழாய் களில் தடிப்போ அல்லது வீக்கமோ ஏற்படுவது ஆஸ்துமா ஆகும். வீக்க மானது மூச்சுப்பாதையின் வலிமைத்தன்மையை குறைந்த நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது. மூச்சுக் காற்றில் இருக்கும் ஏதாவது துகள்கள் பட்டவுடன் வீக்கமான இடம் அதனை வலிமையுடன் எதிர்க்க ஆரம்பிக்கிறது. மூச்சுப் பாதையில் ஏற்படும் வீக்கம் எளிதாக போய்க்கொண்டிருந்த மூச்சை சிரமப்படுத்துகிறது. மூச்சுவிடும் இயக்கத்திலிருக்கும் தசைகளை இறுக்க மடையச்  செய்கிறது. இதனால் மூச்சுப்பாதை மேலும் குறுகுகிறது. இம் மாற்றங்களினால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று குறைகிறது. மிகுந்த சிரமப்பட்டு மூச்சு விடவேண்டியதாகிறது. மூச்சுப் பாதையிலிருக்கும் திசுக்கள் அதிகமான அளவு சளியை உண்டுபண்ணுகிறது. இதனால் மூச்சு விடுவதற்கு மேலும் சிரமப்படவேண்டிய தாக இருக்கிறது.

யோகாசனம், துரித நடைப் பயிற்சி, ஆழமாக மூச்சு விடும் பயிற்சி, மன அமைதி பயிற்சி போன்றவைகளால் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம்.,