Thursday 19 March 2015

இயற்கையின் நியதி -5 ( The Law of Remedy)

                                      இயற்கையின் நியதி - 5
                                                     ( The Law of Remedy)

தென் இந்தியாவில் ஒரு பிரபல தொழில் அதிபர். தொழில் மூலம் நிறைய வருமானம். மிகவும் கண்டிப்பானவர். பரிவு, மன்னிப்பு, இரக்கம் என்பது அவரிடம் கிடையாது. சிறு தவறு நடந்தால் கூட வேலையி லிருந்து நிறுத்திவிடுவார். வியாபாரம் மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருந்தது.

அவருக்கு இரண்டு மகள்கள். மகள் களுக்கு திருமணம் செய்து வைத்தார். மிகக்குறுகிய காலத்தில் இரண்டு மகள்களும் விதவையாகி விட்டார்கள்.

வேதனையில் துடித்தார் .தூக்கம் இழந்தார்.சாப்பாடு பிடிக்கவில்லை. தன்னுடைய மனக்கஷ்டத்திர்க்குரிய காரணங்களை ஆராய்ந்தார். சுயவிசாரணை செய்தார்.இதுதான் காரணமாக இருக்குமோ என சில சம்பவங்கள் அவரை உறுத்தியது.இதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

தான் தொழில் நடத்தி வந்த இடத்தில் கல்வி, மருத்துவம்,உணவகம்,என அமைத்து மிக குறைந்த விலையில் மிக உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியாய் வந்து,போவதை பார்த்து திருப்தி படுகிறார்.

தென் தமிழ் நாட்டில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரு சொத்து ஒன்று வாங்கு கிறார். சில காரணங்களுக்காக அதை தன்  நண்பர் பெயரில் பதிவு செய்து, நண்பரிடம் எனக்கு தேவைப்படும்போது இந்த சொத்தை என் பெயரில் பதிவு செய்து கொடு என்கிறார். நண்பரும் சரி என்கிறார்.

காலம் கடந்தது.ஒரு நாள் சொத்தை தன பெயரில் பதிவு செய்யவேண்டும் என்று கேட்கிறார். நண்பர் முடியாது என மறுத்து விடுகிறார்.

சொத்தை தர மறுத்தவருக்கு இரண்டு மகன்கள.இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள்.

சில வருடங்களில் சொத்தை தர மறுத்தவரும்,சொத்தை வாங்கியவரும் இறந்து விடுகிறார்கள்.சொத்தை தர மறுத்தவரின் இரண்டு மகன்களும் ஒருவர் பின் ஒருவராக இளம் வயதில் சாலை விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

சொத்தை தரமறுத்தவரின் பேரப்பிள்ளைகள் நிம்மதி இழந்து சோகத்தில் ஆழ்ந்தார்கள்.யாரோ ஒருவர் குழந்தை களிடம் மேற்கண்ட விபரத்தை கூறி நட ந்த அகால மரணங்களுக்கு  அதுவாக கூட காரணமாயிருக்கலாம் என தங்கள்  மனதில் தோன்றியதை சொன்னார்கள்..

அது மாதிரி சொத்து நமக்கு வேண்டாம் என்று குழந்தைகள் முடிவெடுத்து, சொத்தின் உரிமையாளரின் வாரிசுக்கு அதை திருப்பி கொடுத்து விட்டார்கள்.

மேற் படி நடந்த இரண்டு நிகழ்ச்சிகளைப்போல் பலரும் பல நிகழ்ச்சிகளை கூறுவார்கள்.வெளியில் இருந்து பார்க்கும் போது தெளிவாக  தெரிவது நமக்கு நடக்கும்போது நமக்கு தெரிவதில்லை. நாம் ஏதாவது காரணங்களை கூறி நமக்கு நடப்பதை  நியாயப்படுத்திக் கொள்கிறோம். எல்லா தவறு களுக்கும் பரிகாரம் உண்டு.

நமது வாழ்க்கையிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை உடையவர்கள் நம்முடைய தவறுகளை எடுத்துச் சொல்லும் போது அதை புரிந்து கொண்டு நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் வருந்தி திருந்த நினைக்கும் போது The Law of Remedy  நமக்கு உதவ முன்வரும். 

மனம் வருந்தி உண்மையை உண்மையாகவே தேடும் போது பரிகாரம் என்ன என்பது தெரியவரும்.அவரவருக்கு அவரவரே தேடிப்பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நடந்த தவறை பிறர் கூறியோ, அல்லது தானாக புரிந்தோ, ஒருவர் உணர்ந்து, வருந்தும் போது அவர் நோகும் படியாக நேரடியாகவோ, பிறரிடம் கூறியோ, பரிகாசம், இளக்காரம் பேசுவதால், அப்படிப்  பேசுபவருக்கு குற்றம் சேருகிறது.  
எல்லா செயல்களும்  காரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்னும் சட்டத்துக்குட்ப்பட்டது.

                                     ----------------------------------------------------



                    
  

Tuesday 17 March 2015

நீரேற்றம் (HYDRATION)

                                               நீரேற்றம்   (HYDRATION)

உடல் தண்ணீரை பயன் படுத்திக் கொள்ளும் திறனை நீரேற்றம் ( hydration  ) எனலாம். உடலில் ஓவ்வொரு செல்லின் இயக்கத்திலும்  தண்ணீரின் பங்கு இருக்கிறது. தண்ணீரை  குடிப்பதோடு மட்டுமல்ல, அதை உடலிலுள்ள செல்கள் எவ்வாறு பயன் படுத்திக்கொள்கின்றன என்பது நீரேற்றத்தின்
 ( hydration  ) உயர்ந்த நிலை.ஒவ்வொரு செல்லும் தனக்கு வரும்  உணவை தன இயல்பான குணமாக மாற்றி, கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற தண்ணீர் உதவியாக இருப்பதும்  நீரேற்ற த் ( hydration )திற்கு உட்பட்டது

உடலில் சரியாக நீரேற்றம் நடக்காதபோது செல்களில் கழிவுகள் வெளியேற்றப் படாமல் நச்சுக்கள் தேங்கி அதிக மாகி விடுகின்றன நீரேற்றம் ஆரோக்கியமான உடலுக்கு மிக முக்கியமான ஒரு இயக்கம்.தண்ணீருக்கு உடல் இயக்கத்தில் பல பங்குகள் இருக்கின்றன.

உடலில்,செல் மற்றும் திசுக்கள் அமைய அதன் வடிவம் அமைய தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. தண்ணீர் உடலின் உட்பாகங்களில் ஏற்படும் வெப்பங்களை கடத்தி உடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்து வெளியேற்றுகிறது.செல் களின் வளர் சிதைக்காக நடக்கும் இராசாயன மாற்றங்களில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது.சத்துக்கள் உடல் முழுவதும் சென்றடைய தண்ணீர் உதவுகிறது.செல்களுக்கு உணவினை கொடுத்து,கழிவுகளை அப்புறப்படுத்த தண்ணீர் உதவுகிறது.உடலின் இயக்கத்திற்கு தண்ணீர் மிக முக்கியமான சத்துள்ள உணவாகும்.

ஏனைய உணவுகளான கார்போஹைட்ரேட்,புரோட்டீன், கொழுப்புகள், வைட்டமின், தாதுக்கள், அனைத்தும் உடலில் சத்தாக மாற போதுமான அளவு தண்ணீரின் இருப்பை பொறுத்தே நடைபெறுகிறது.

 உணவு ஜீரணத்திற்கு நேரடியாக தண்ணீர் தேவையில்லை.ஆனால் உணவை  ஜீரணிக்கும் அமிலங்கள், என்ஸைம்கள் போன்ற திரவங்கள் மூலம் தண்ணீர் தேவைப்படுகிறது.அவைகளில் தண்ணீர் நிறைய இருக்கிறது.உடலில் நீரேற்றம் சிறப்பாக இருக்கும் போது ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஜீரணமான உணவுக்குழம்புகள் தண்ணீருடன் இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.

இரத்தத்துடன் உள்ள தண்ணீர் செல்களுக்கும் ,உடலின் மின்சக்தி செயல் களுக்கும், உடல் எதிர்ப்பு சக்தி பெறவும், ஹார்மோன் உற்பத்திக்கும், பயன்படுகிறது.

உடலில் ஆங்காங்கே யுள்ள கழிவுகளை குடல்,சிறுநீரகம், தோல்,நுரையீரல் வழியாக வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.இந்த செயல்களெல்லாம் உடலில் சரியாக நடைபெற நீரேற்றம் ஒழுங்காக இருக்கவேண்டும்.

தண்ணீர் இரத்தத்துடன் சேர்ந்து செல்கள் இயக்கத்துக்கு உதவியாய் இருப்பதை நீரேற்றம் எனவும் தண்ணீர் பற்றாக்குறையால் அந்த வேலைகள் நடைபெற முடியாமல் இருப்பதை நீரேற்றமின்மை( de-hydration )எனவும் கூறலாம்.

 நீறேற்றமின்மை ஏற்படும்போது செல்களுக்கு உணவுகிடைக் காமலும், செல்களிலிருந்து கழிவுகள் அகற்றப்படாமலும் ஆகி உடல் ஆரோக்கியம் கெடுகிறது.

 காய்ச்சல்,வாந்தி,பேதி,மதுவினால் அதிகம் சிறுநீர் வெளியேறுவது,போன்ற வற்றால் உடலில் நீரேற்றமின்மை(de-hydration) ஏற்பட காரணமாகிறது.

ஒவ்வொரு உணவு இடைவேளையிலும் தாகம் இல்லாதபோதும் தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

கடையில் விற்கும் பாட்டில்  பழரசங்களை,குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.  அவற்றில்  சத்துக்கள் எதுவும் கிடையாது,மாறாக அதிக இனிப்பு,அதிக உப்பு, பழரசங்களின் வாழ்நாளை கூட்டும் இரசாயனங்கள் போன்ற வை கள் சேர்க்கப் பட்டிருக்கும்

                                   ---------------------------------------------------------
   

மின்பகுப்பு( ELECTROLYTE )

                                        மின்பகுப்பு( ELECTROLYTE )


ஒரு வித மின்சக்தியானது உடலை இயக்குகிறது .மின்பகுப்புகள் மின்சக்தியை கடத்தி உடலை இயங்கச்செய் கிறது.

உடல் இயக்கத்தில் அனைத்து உறுப்புகளும் தங்களுக்குள் மின்சக்தி மூலமே செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன.

உடலில் பல விதமான இராசயனங்கள் இருக்கின்றன.இவைகள் +  ve - ve எலெக்ட்ரிக் சார்ஜ் உடையவை.இவை தண்ணீரில் கரையும் போது + ve - ve ஆக பிரிகின்றன.சோடியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,கால்சியம் போன்றவைகளில் + veஅயான் களும் குளோரைடு , பாஸ்பேட், பைய்க் கார்பனேட்  போன்றவைகளில்  - ve  அயான் களும் உள்ளன.+ ve  - ve  அயான் களால் உடலில் மின்பகுப்பு நடைபெறுகிறது.

சோடியத் தில் அதிக+  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.பொட்டாசியத்தில் குறைவான +  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.நாம் ஓய்வாக இருக்கும் போது செல்களுள் பொட்டாசியம் நுழைகிறது.நாம் உழைப்பாய் இருக்கும் போது செல் களுள் சோடியம் நுழைகிறது.

உடலில் இந்த மின் உற்பத்தி நடைபெறுவதற்கு வேண்டிய மூலகங்கள் நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கின்றன.தாவர உணவு களிலிருந்து கிடைக்கும் மூலகங்களையே உடல் ஏற்று க்கொள்கிறது

உடலில் தாதுக்களுக்கு குறைவு ஏற்பட்டால் மின்பகுப்பில் பிரச்சினை ஏற்படும். உடலில் தாதுக்கள் அதிகமாகிவிட்டால் சிறுநீரகம் அதிகமான அளவை வெளியேற்றி மின்பகுப்பை சமநிலையில் வைத்திருக்கும்.
திரவங்களில் கரைந்துள்ளமின்பகுப்பு தாதுக்கள் மின்சாரத்தை கடத்துகிறது உடலில் இரத்தத்தை மையமாக  வைத்து மின்பகிர்வு ஏற்படுகிறது.மின்பகுப்பு குறைபாடு அல்லது சமநிலை பாதிப்பு ஏற்படாதவாறு உடலை பார்த்துக் கொண்டால் உடலில் மின்பகுப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் சோர்வு முதல் அறிகுறி.உடலில் போதுமான சக்தியில்லாத போது             உ டல் இயங்க மறுக்கும் .மின்பகுப்பு உடல் இயக்கத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. இதுவே உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்திருக்கிறது. முக்கிய மான மூலகங்களுக்கு உடலில் தட்டுப்பாடு ஏற்படுமானாலும் , அளவுக்கு அதிக மாகி விட்டாலும் உடல் சமநிலையை இழக்கிறது

மின்பகுப்பு உடலில் சமநிலையில் இருக்கும் போது நோய எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும்.    மனித ஆரோக்கியத்தில் பல முக்கிய செயல் களுக்கு மின்பகுப்பு உதவியாக இருக்கிறது.

இருதயம்,நரம்பு,தசைஒத்துழைப்பு,உடல் திரவத்தை உறிஞ்சிக்கொள்வது சுரப்பிகளுக்கும் மூளைக்கும் செயல்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது  போன்ற பல முக்கியமான  செயல்களுக்கு மின்பகுப்பு சமநிலை மிகவும் உதவுகிறது.மின்பகுப்பு தனது  சமநிலை யை தவறும்போது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.பல அவையவங்கள் செயல்பட மறுக்கின்றன.

 வாந்தி,பேதி,வியர்வை,போன்றவற்றால் மின்பகுப்பு சமநிலையில் பாதிப்பு ஏற்படும். அது மாதிரி சமயங்களில் சாதம் வடித்த நீரில் சிறிது உப்பு போட்டு கொஞ்சம்,கொஞ்சமாக(small feeding) குடித்துக் கொண்டிருப்பது  மின்பகுப்பை  சமநிலைக்கு கொண்டுவரும்.கைக்குழந்தை களுக்கு இதை பழக்கப்படுத்தி விட்டால் வாந்தி,பேதி, காய்ச்சல் சமயங்களில் மிகவும் சிறந்த உணவாகவும் ,மருந்தாகவும் இருக்கும்.

நமது உடலுள்  மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.உடலில் வயர் வழியாக மின்சாரம் போகவில்லை ,அதற்கு பதில் ஒரு செல்லிலிருந்து அடுத்த செல்லுக்கு தாவித்தாவி அது அடையும் இடத்துக்கு போய் சேருகிறது கையிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து கைக்கும் இப்படித்தான் தகவல்கள் நடக்கிறது.இந்த தகவல்கள் மிக வேக மாக நடைபெறுகிறது. உடலிலுள்ள ஒவ்வொரு செல்லாலும்  மின் சாரத்தை தயார் செய்ய முடியும்.

காய்,கனி,தண்ணீர் இவைகளை தினமும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் உடலுக்குத்தேவையான மின்பகுப்பு மூலகங்கள் கிடைத்துவிடும்.

                                             ---------------------------------

Sunday 15 March 2015

வளர்சிதைமாற்றம் (Metabolism)

                                  வளர்சிதைமாற்றம் (Metabolism)

உயிருள்ள ஜீவனின் உள்ளே நடக்கும் இரசாயன மாற்றங்களை வளர்சிதைமாற்றம் என்கிறார்கள்.ஆகாரத்தை உட்கொண்டு சக்தியை வெளிப்படுத்துவது ஜீவனினால் ஏற்படும் வளர்சிதைமாற்றமாகும் .குறிப்பாக சொல்வதென்றால் செல்கள் உணவை சக்தியாக உற்பத்தி செய்வதை வளர்சிதைமாற்றம் எனலாம்.

உயிருள்ள  ஒரு ஜீவனின் உடலில் மூன்று வித செயல்கள் நடைபெறுகிறது. உயிருள்ள ஜீவனின் உடலில் பராமரிப்பும்( Maintenance),உடலைச் சரிப் படுத்தலும் ( Repair ),உடலை வளர்ச்சிப்படுத்தலும்( Growth )   இந்த வளர்சிதை மாற்றத்தால் நடை பெற்றுக் கொண்டி ருக்கிறது.

செல்கள் என்பது நுண்ணுயிர் தன்மையானது  எல்லா ஜீவன்களும் ( Organism ) செல்களின் கூட்டாகும்.பாக்டீரியா என்பது ஒரு செல் ஜீவன்.

செல்கள் உணவை எடுத்துக்கொண்டு அதை சக்தியாக கொடுக்கும் வளர்சிதை மாற்றத்தைச் செய்கிறது. ஒரு செல்லுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை செல் வளர்சிதை மாற்றம் என்கிறார்கள்.ஒவ்வொருசெல்லும் ஒரு ஜீவனாகும். ஒவ்வொரு வகையான செல்லும் அதற்கென்று உரிய வேலையை செய்கிறது. பலவகையான செல்கள் பலவகையான வேலைகளை செய்கிறது. மூளைசெல், நாக்கிலுள்ளசெல், இரத்தத்திலுள்ளசெல், தோல்செல், கல்லீரல்செல், என பல கோடிக்கணக்கான செல்கள் உடலில் காணப்படுகிறது

.இறந்த செல்களை இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் உடலிலிருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.

வளர்சிதைமாற்றம் சத்து சம்பந்தப்பட்டது. சத்து வளர்சிதையின் சாவி. உடலுக்கு தேவையான சக்திகிடைக்க சத்துக்கள் இருக்கவேண்டும். அது இல்லாதபோது உடலில் ஆரோக்கியம் குறைகிறது.

உணவில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கிட்ட தட்ட இருபது தனிமங்கள் தேவைப்படுகின்றன.

உடலுக்கு அதிகமாகத்தேவைப்படுவது கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், வைட்டமின், தாதுக்கள்,தண்ணீர், ஆக்சிஜன்,  இவைகளுடன் சேர்த்து உடலில் உற்பத்தியாகும் என்ஸைம்கள் (கிரியா ஊக்கி  )போன்றவை ஆகும். இதில் கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்துடன் கூடிய சுகர் மற்றும் ஸ்டார்ச் ஆகும்.
நாம் உண்ணும் உணவின் தரத்தை ப் பொறுத்து புதிய செல்கள் உருவாகின்றன .உண்ணும் உணவு தரமில்லாதபோது பலவீனமான அல்லது ஒத்துழைக்காத செல்கள் உற்பத்தியாவதால் பலவிதமான ஆரோக்கிய குறைவுகள்  ஏற்படுகின்றன.
                                              ----------------------------------------

Saturday 14 March 2015

நார்ச்சத்தும் ஆரோக்கியமும்

                                 நார்ச்சத்தும் ஆரோக்கியமும்   

நாம் உண்ணும் தாவர உணவுகளில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நார்ச்சத்துக்கள் தாவரங்களின் ஒரு பாகம். அவைகளை நாம் உண்ணும் போது நமது ஜீரணத்தில் அவைகள் உடைவதில்லை. அவைகள் ஜீரணிக்காமலே உணவுப்பாதையை கடந்து வெளியேறுகின்றன.

எல்லா நார்ச்சத்து உணவுகளும் இரண்டு வகையாக இருக்கிறது.ஒன்று நீரில் கரைவது ( soluble ).இரண்டாவது நீரில்கரையாதது.( insoluble ).நம் உடலில் ஜீரணம் ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு இரண்டு வித நார்ச்சத்துக்களும் அவசியமாகிறது.

இவை இருதய நோய் ,சுகர் ,அதிக உடல் எடை,மலச்சிக்கல் போன்ற வற்றை தடுக்கிறது.

நீரில் கரையும் நார்ச்சத்து வயிற்றில் தண்ணீரை உறிஞ்சி ஒரு ஜெல்  ( jel ) போன்று ஆகி ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவதை தாமதப்படுத்துவதால் நாம் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கிறோம். இதனால் உடல் எடை குறைகிறது.மேலும்  இரத்தத்தில்  சுகர் குறைந்து இன்சுலின் தேவை குறைகிறது.இது டியாபெட்டிஸ் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.மற்றும் உணவிலுள்ள கொழுப்பை உறிஞ்ச விடாமல் தடுத்து ரத்தத்தில் கொலஸ்டிராலை குறைக்கிறது.

தோல் அல்லது தவிடுடன் கூடிய ஓட்ஸ்,பயறுகள் மற்றும் தோலுடன் கூடிய ஆப்பிள், நட்ஸ், ஆழிவிதை, வெள்ளரி,கேரட்,போன்ற வற்றில் நார்ச்சத்து காணப்படுகிறது.

நீரில் கரையாத நார்ச்சத்துக்களை குடல் ஆரோக்கிய நார்ச்சத்து என்கிறார்கள். இவை குடலில் கழிவுகளை தங்க விடாமல் வெளியேற்றுகிறது.மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.இவை நீரில் கரை வதில்லை. குடலில் உணவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.குடலில் தேங்கும் கழிவுகளை விரைவாக வெளியே தள்ளுகிறது. நீரில் கரையும் நார்ச்சத்து ஜீரணமாகாததால், உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் நார் துகள்களின் மீது ஒட்டிக் கொண்டு வெளியேறி விடுகிறது.இதனால் ரத்தத்தில் கெட்டக் கொழுப்பு ( LDL  ) குறைகிறது.

நார்ச்சத்து குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. குடலில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்  உள்ளன.  
அதிக அளவு ஆரோக்கியத்திற்கு இரண்டு வகை நார்ச்சத்துக் களையும் உண்ண வேண்டும்

அதிகமான நார்ச்சத்து வாயு,குடற்சுளுக்கு போன்ற தொல்லைகளை ஏற்படுத்தும் உணவில் நார்ச்சத்தை படிப்படியாய் கூட்டவேண்டும் .அல்லது வாயு,பேதி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பழம் ,காய்,முழுத்தானியங்களில் தோலை வீணாக்காமல் இருந்தாலே தேவையான நார்ச்சத்து கிடைத்து விடும்.
                                           ----------------------------------

Tuesday 3 March 2015

உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம்

       உணவுகள் இயற்கை த்தன்மை இழக்கும் விதம் 

பொதுவாக உணவுப்பொருட்கள் சுற்றுப்புறத்தை உறுஞ்சி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று (Oxidation) அதைக்கொன்டிருக்கும் பாத்திரம் ( அலுமினியம்,இரும்பு,பித்தளை, காகிதம், பிளாஸ்டிக், வாழைஇலை, மண்சட்டி ) போன்ற வற்றால் உணவின் தன்மை கெட்டுப்போகவோ, நன்றாக இருக்கவோ செய்கின்றன.

முழுதாக இருக்கும் விதைகள், தானியங்கள் விரைவில் கெட்டுப்போவதில்லை.


அதையே பொடி பண்ணும் போது ஈரப்பதம், வெளிச்சம், வெப்பம், காற்று, பாத்திரம் போன்ற வற்றால்   விரைவாக கெட்டு விடுகிறது.

தானியங்களின் தோலை நீக்கவும், சுத்தப்படுத்தவும், தீட்டவும்,மாவாக்கவும், ஜலிக்கவும கடந்த 150 வருடங்களில் பல்வேறு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உபயோகத்தில் இருக்கின்றன.

தானியங் களின் தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. தானியங்களை மாவாக்கி ஜலிக்கும் போது அதன் தோல், முளை போன்றவைகள் அகற்றப் படுகின்றன. அதனால் பல சத்துக்கள் இழந்து போகின்றன. உணவு தானியங்களை குறைவாக சுத்திகரிக்கப்படும் போது, ஆரோக்கியம் நிறைவாக இருக்கிறது.

சுத்திகரிப்பால் வைட்டமின்  B   குடும்பம் முழுவதும் பிரிந்துபோய் விடுகிறது.அதனால் நரம்பு மண்டலத்துக்கு கிடைக்கவேண்டிய சத்துக்கள் கிடைப்பதில்லை.

மன அழுத்தம் அதிகமாகும் போது மூளையும் ,நரம்பு மண்டலமும் ஈடுகொடுக்க வைட்டமின்  B  சத்துக்கள் தேவைப்படுகின்றன.தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையே அதிகம் உண்ணும்போது தனக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப் படுகிறது.

முக்கியமாக  உணவுகளிலுள்ள வைட்டமின் A  E  C         (ஆன்றி ஆக்சிடன்ட் ) நார்ச்சத்து, செலினியம், துத்தநாகம், போன்றவை அழிந்து போகின்றன. கரும்புச் சாறு தனது குரோமியம், மெக்னீசியம், கோபால்ட், செம்பு, துத்தநாகம், மாங்கனீஸ் போன்றவைகளை  இழந்து வெள்ளை நிற சீனீ யாகி விடுகிறது.

முழுத்தானியம் தன்னிடம் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், சோடியம்,  இரும்பு, மாலிபீடினம், செலினியம் போன்ற வற்றை இழந்து வெள்ளை நிற மாவாகிறது. சிகப்பு நிற கைகுத்தல் அரிசியே ஆரோக்கியமான உணவு.  தவிடு,முளை போன்ற வற்றை நீக்கி வெறும் ஸ்டார்ச்சை மட்டும் உண்பதால் கணையத்தின் பளு அதிக மாகிறது.இது இரத்தத்தில்  சுகர்  அதிகமாக காரணமாகிறது.

உணவின்  நிறம், மணம், சுவையை கூட்டவும் வாழ்நாளை நீட்டிக்கவும் பலவதமான இரசாயனங்களை  அடிட்டிவ்ஸ் (additives) என பெயரிட்டு அவைகளை உணவில் சேர்க்கிறார்கள். இவை உணவிலுள்ள நன்மை செய்யும் கிருமிகளுக்கு எதிரியாகிவிடுகின்றன.இவை மனிதனுக்கு நன்மை செய்வதில்லை மாறாக கெடுதலையே செய்கின்றன. .இயன்றவரை பாதுகாக்கப்பட்ட உணவுகளையும், அடிட்டிவ்ஸ் சேர்க்கப்பட்ட உணவு களையும் தவிர்த்து விடவேண்டும்.முழுத்தானிய உணவு களையும், உள்ளூர் காய்,கனி,கீரை,சீட்ஸ்,நட்ஸ் உணவுகளையும் விரும்பிச் சாப்பிட வேண்டும்.

தானியங்கள், எண்ணெய் போன்ற உணவுகளை சுத்திகரிக்கும் செயல்முறையின் போது ஏற்படும் வைட்டமின், தாது சத்துக்களின் இழப்புக்களை திரும்பவும் இரசாயன முறையில் உணவுப் பொருட் களுடன் சேர்க்கிறார்கள். ஆனால் அதுமாதிரியான சத்துக்களை உடலானது ஏற்றுக் கொள்வதோ,பயன்படுத்திக்கொள்வதோ இல்லை.                 .

உணவு களை அதிகம் சூடாக்கும் போதும், ஹை ட்ரோஜினெஷன் செய்யும் போதும் உணவு தன் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.அதிக வெப்பம் காரணமாக எண்ணெய், தானியங்கள், போன்றவைகள் தன்னிடம் இருக்கும் வைட்டமின், தாது சத்துகள், ஒமேகா 3, 6, போன்ற வற்றை இழந்து விடுகின்றன.சாக்லேட்,சீனி போன்றவை உடலுக்கு அதிக கலோரியை கொடுக்கிறது. சூட்டினால் தரமான எண்ணைகள் மாறிய கொழுப்பாக மாறி (Trans fat )உடலில் கெட்ட கொழுப்பை அதிகப்படுத்து கின்றன.

 பழங்களின் மீது குறிப்பிட்ட அளவு காமா கதிர் களை (Gamma rays ) செலுத்து கிறார்கள்.அந்த கதிர்கள்  கிருமிகளையும்.பூச்சிகளியும்,புழுக்களையும், வைட்டமின்களையும்  அழித்து புள்ளிகள் பரவாமலும் தடுத்து விடுகிறன இதனால் பழங்கள் மேலும் கனிவதும் ,முளை யிடுவதும் போன்ற இயற்கை செயல்கள் தடுக்கப்படுகின்றன.பழங்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன.வியாபார நோக்கத்தில் இது செய்யப்படுகிறது.

 பழங்களின் தோலில் சுருக்கம் ஏற்படாமல் நீண்டநாள் வழவ்ழப்பாக இருக்க மெழுகை பூசுகிறார்கள் இதனால் பழங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் அது உடல்நலத்துக்கு நல்லதல்ல

பழங்கள் தானாக பழுக்கும் வரை பொறுத்திருக்காமல் காய் பருவத்திலேயே அறுவடை செய்து அதனுடன் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுகிறார்கள்.அதனால் பச்சைத்தோல் களில்  இரசாயன மாற்றம் ஏற்பட்டு பச்சை நிறமானது பழுத்த நிறத்திற்கு மாறிவிடுகின்றன.இதனை தெரியாதவர்கள் பழம் என்று வாங்குகிறார்கள்.ஆனால் அந்த பழங்கள் பழுத்த பழங்களுக்குரிய ருசி யாகவும் இருப்பதில்லை,உடலுக்கும் உபாதை யாகி விடுகிறது.உதாரணம்  மாம்பழங்கள்.

 உணவு பொருட்களை மிக எளிதாகவும், துரிதமாகவும்  சூடு பண்ணுவதற்கு மைக்ரோ ஓவன் பயன்படுத்துகிறோம்.  மைக்ரோ ஓவன்.தத்துவம்  கதர் வீச்சு மூலம் உணவுகளை  சூடுபண்ணுவது. எனவே . மைக்ரோ ஓவன் பயன் படுத்துகிறவர்கள் அதன் பயன் பாட்டை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது நல்லது.


தற்காலத்தில் பிளாஸ்டிக்கின் உபயோகம் வந்த பிறகு உணவுகளை பாக்கிங் செய்ய பெரும்பாலும் பிளாஸ்டிக் கையே பயன்படுத்துகிறார்கள். உணவுகளை பரிமாறுவதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கின் மூலப்பொருள் பெட்ரோலியத்தயாரிப் பில் கிடைக்கும் பாலிமர் ( POLYMER ) என்னும்  ஒரு பொருளுடன் பல இரசாயனங்களை சேர்த்து பலவகை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் LDPE என்னும் பிளாஸ்டிக் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் உருகும் நிலை 104 டிகிரி  ஆகும். அனைத்து பேப்பர் கப்பினுள்ளும் LDPE லைனிங்  இருக்கும். உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் தரத்தைப் பற்றியும் சேர்க்கவேண்டிய கலவை விகிதத்தை பற்றியும் கவைப்படுவதில்லை. தரமில்லாத பிளாஸ்டிக்கை  உபயோகப்படுத்தும் போது அவை உணவுடன் சேர்ந்து உடலுள் செல்கின்றன.

விவசாய விஞ்ஞானிகள் பயிர்களின் மரபணுக்களில் மாற்றங்கள் செய்து விளைச்சலை அதிகப்படுத்தலாம் என்று மரபணு மாற்றம் செய்த உணவுகளை உற்பத்திசெய்கிறார்கள். இவ்வகை உணவுப்பொருட்கள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் பலவித ஆரோக்கிய குறைவுகளை ஏற்படுத்துகிறது.

முழுத்தானிய மிக்ஸ், நட்ஸ் &சீட்ஸ் மிக்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, மூலிகை போன்ற மற்றும் அவைகளை கொண்டு வீட்டில் செய்து உண்ணும் உணவுகளுக்கு ஈடு இணையாக  உடலுக்கு நலம் தரும் உணவுகள் வேறு எதுவும் இல்லை.

வியாபார நோக்கில் வெளியில் கிடைக்கும் தயார் உணவுகளும்,செய்து தரும் உணவுகளும் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

                                ------------------------------------------------

Sunday 1 March 2015

விஷத்தன்மை எதிரி(Anti Oxidant)

                                             விஷத்தன்மை எதிரி 
                                      ( Anti Oxidant)

உடலில் பிராண வாயு வின் இரசாயன மாற்றத்தின் போது ஏற்படும் விஷத்தன்மை யை ஆக்சிடேஷன் (oxidation )எனவும் அதனால் பாதிக்கப்படும் திசுக்களை ( cells ) ஆக்சிடன்ட் ( oxidant )எனவும் கூறுகிறார்கள். விஷத்தன்மை
யால் பாதிப்பு ஏற்படாமல் உடலிலுள்ள ஆரோக்கியமான  திசுக்களை பாதுகாக்கும் பொருளுக்கு விஷத்தன்மை எதிரி (anti oxidant  ) என்று பெயர் .

இருபத்து நான்கு மணி நேரமும் உடலுள் திசுக்கள் இறப்பதும், பிறப்பதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்

இது உடல் ஆரோக்கியத்துக்காக இயற்கையாக  நடைபெறும் ஒரு செயல். இந்த இயக்கம் நடைபெறும் போது திசுக்களில் விஷத்தன்மை ஏற்படுவதும் ஒரு இயற்கை யான செயல். இந்த செயலால்   தானே நச்சுத்தன்மை அடையும் திசுக்கள் (free radical)பாதிக்கப்பட்ட திசுக்களாகும். இந்த நச்சுத் தன்மை  திசுக்கள் பிற நல்ல திசுக்களை கொன்று விடுகின்றன. இதனால் உடல் பலவீனப்படுகிறது. இது முதுமைக்கும், நோய்க்கும் காரணமாகிறது.உடலில்  எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.

 விஷத்தன்மை திசுக்களை அழித்து அப்புறப்படுத்தும் வேலையை அதற்கு எதிரான உணவுகளை உட்கொள்வது மூலம் உடல் சரி செய்து கொள்கிறது   உடலானது இறந்த  திசுக்களுக்கு பதில் புதிய திசுக்களை உற்பத்தி செய்து கொள்கிறது.   இயற்கை தன்மையால் ஏற்படும் நச்சுத் தன்மையை உடல்  அழித்துக் கொண்டிருக்கிறது.

வெளி மாசினால் ஏற்படும் நச்சுத்தன்மை திசுக்கள் அதிகரிக்கும் போது உடலால் அவைகளை  அழிக்க  முடியாமல் போவதால் நல்ல திசுக்கள் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக மூளை திசுக்கள் பாதிப்படையும் போது மூளையால் சரியாக இயங்க முடிவதில்லை. ஞாபகசக்தி குறைவு மகிழ்ச்சிக் குறைவு. எளிதில் மன அழுத்தம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாசடைந்த காற்று மற்றும் தண்ணீர் ,புகைபிடித்தல் ,மது,காய்,கனி
களிலுள்ள பூச்சிமருந்துகள் உணவு பார்செலிலுள்ள  பிளாஸ்ட்டிக் ,இங்க் பெய்ன்ட், பாலிஷ், சோப், குளோரின், உணவிலுள்ள கலர்,  கதிர் வீச்சு  போன்றவை உடலுள் போகும் போது திசுக்கள்  நச்சுத்தன்மை அடைவது அதிகரிக்கிறது. இதனால் உடலில் குணப்படாத நோய்கள் ஏற்படுகின்றன. தற்கால விஞ்ஞான வாழ்க்கை சூழ்நிலையில் உடலுள் நச்சுத்தன்மை ஏற்பட நிறைய வழிகள் உள்ளன.

இப்போ தெல்லாம் தயார்  உணவு, துரித உணவு, புதிய வகை உணவு, சுத்திகரிக்கப் பட்ட உணவு, என்பன பிரபலமாகி விட்டன. வியாபார நோக்கில் தயாரிக்கப்படும் இவ்வகை உணவுகளில் பல வித மான இரசாயனங்கள் சேர்க்கப் படுகின்றன. இது பலபேருக்கு தெரிவ தில்லை. ருசியை மட்டுமே பார்த்து உண்கிறார்கள். அதனால் ஒவ்வருவருக்கும் ஒவ்வருவிதமான் ஆரோக்கிய குறைவு ஏற்படுகிறது.

அதேபோல் எலெக்ட்ரானிக் பொருள்களும், அதன் பயன் களும்  அதிகமாகி விட்டன. மொபைல் போன்,  மொபைல் டவர், டேப், லேப்டாப், கம்பியூட்டர்,என அனைத்து  எலெக்ட்ரானிக் பொருள்களும் கதிர் வீச்சை உமிழ்பவை.  நிறைய பேர்  இதை தெரிந்து பயன் படுத்துவதாக தெரிய வில்லை. குழந்தைகள் அதிக நேரம் பயன் படுத்து வதையும், பக்கத்தில் வைத்து  பார்ப்பதையும்  பெரியவர்கள்  தான் கட்டுப் படுத்த வேண்டும்.

விஷத்தன்மையை எதிர்க்கும் உணவுகளை ( ant oxidant foods   )அதிகம் உண்ணவேண்டும். அவை நச்சுத்தன்மை திசுக்கள் உருவானதும் அவைகளை  அழித்து விடுகின்றன.  வைட்டமின்  A E C      போன்றவை நச்சுத்தன்மைக்கு எதிராக செயல் பட்டு ஒரு ராணுவத்தை போல் உடலை காத்துவருகின்றன.     நச்சுத்தன்மைக்கு எதிரானஉணவுகள் நோய் மற்றும் முதுமையை தடுக்கிறது.வைட்டமின் A E C ஐ விஷத்தன்மை எதிரி(Anti Oxidant food) உணவு என்கிறார்கள்.

வைட்டமின் E  யையும்   C    யையும் சேர்த்து உண்ணவேண்டும்

மஞ்சள்,இஞ்சி,பூண்டு,கீரை,கிரீன் டீ ,முழுத்தானிய உணவுகள்,காய், கனி, நட்ஸ், வித்துகள் என இயற்கை உணவுகளை மாற்றி மாற்றி உண்ணவேண்டும்.

விஷத்தன்மை எதிரி உணவுகளை தினமும் உண்பதை நாம் உறுதிப்  படுத்திக் கொள்ள வேண்டும்.