Tuesday 17 March 2015

மின்பகுப்பு( ELECTROLYTE )

                                        மின்பகுப்பு( ELECTROLYTE )


ஒரு வித மின்சக்தியானது உடலை இயக்குகிறது .மின்பகுப்புகள் மின்சக்தியை கடத்தி உடலை இயங்கச்செய் கிறது.

உடல் இயக்கத்தில் அனைத்து உறுப்புகளும் தங்களுக்குள் மின்சக்தி மூலமே செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன.

உடலில் பல விதமான இராசயனங்கள் இருக்கின்றன.இவைகள் +  ve - ve எலெக்ட்ரிக் சார்ஜ் உடையவை.இவை தண்ணீரில் கரையும் போது + ve - ve ஆக பிரிகின்றன.சோடியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,கால்சியம் போன்றவைகளில் + veஅயான் களும் குளோரைடு , பாஸ்பேட், பைய்க் கார்பனேட்  போன்றவைகளில்  - ve  அயான் களும் உள்ளன.+ ve  - ve  அயான் களால் உடலில் மின்பகுப்பு நடைபெறுகிறது.

சோடியத் தில் அதிக+  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.பொட்டாசியத்தில் குறைவான +  ve எலெக்ட்ரிக் சார்ஜ் இருக்கிறது.நாம் ஓய்வாக இருக்கும் போது செல்களுள் பொட்டாசியம் நுழைகிறது.நாம் உழைப்பாய் இருக்கும் போது செல் களுள் சோடியம் நுழைகிறது.

உடலில் இந்த மின் உற்பத்தி நடைபெறுவதற்கு வேண்டிய மூலகங்கள் நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கின்றன.தாவர உணவு களிலிருந்து கிடைக்கும் மூலகங்களையே உடல் ஏற்று க்கொள்கிறது

உடலில் தாதுக்களுக்கு குறைவு ஏற்பட்டால் மின்பகுப்பில் பிரச்சினை ஏற்படும். உடலில் தாதுக்கள் அதிகமாகிவிட்டால் சிறுநீரகம் அதிகமான அளவை வெளியேற்றி மின்பகுப்பை சமநிலையில் வைத்திருக்கும்.
திரவங்களில் கரைந்துள்ளமின்பகுப்பு தாதுக்கள் மின்சாரத்தை கடத்துகிறது உடலில் இரத்தத்தை மையமாக  வைத்து மின்பகிர்வு ஏற்படுகிறது.மின்பகுப்பு குறைபாடு அல்லது சமநிலை பாதிப்பு ஏற்படாதவாறு உடலை பார்த்துக் கொண்டால் உடலில் மின்பகுப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் சோர்வு முதல் அறிகுறி.உடலில் போதுமான சக்தியில்லாத போது             உ டல் இயங்க மறுக்கும் .மின்பகுப்பு உடல் இயக்கத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. இதுவே உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்திருக்கிறது. முக்கிய மான மூலகங்களுக்கு உடலில் தட்டுப்பாடு ஏற்படுமானாலும் , அளவுக்கு அதிக மாகி விட்டாலும் உடல் சமநிலையை இழக்கிறது

மின்பகுப்பு உடலில் சமநிலையில் இருக்கும் போது நோய எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும்.    மனித ஆரோக்கியத்தில் பல முக்கிய செயல் களுக்கு மின்பகுப்பு உதவியாக இருக்கிறது.

இருதயம்,நரம்பு,தசைஒத்துழைப்பு,உடல் திரவத்தை உறிஞ்சிக்கொள்வது சுரப்பிகளுக்கும் மூளைக்கும் செயல்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது  போன்ற பல முக்கியமான  செயல்களுக்கு மின்பகுப்பு சமநிலை மிகவும் உதவுகிறது.மின்பகுப்பு தனது  சமநிலை யை தவறும்போது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.பல அவையவங்கள் செயல்பட மறுக்கின்றன.

 வாந்தி,பேதி,வியர்வை,போன்றவற்றால் மின்பகுப்பு சமநிலையில் பாதிப்பு ஏற்படும். அது மாதிரி சமயங்களில் சாதம் வடித்த நீரில் சிறிது உப்பு போட்டு கொஞ்சம்,கொஞ்சமாக(small feeding) குடித்துக் கொண்டிருப்பது  மின்பகுப்பை  சமநிலைக்கு கொண்டுவரும்.கைக்குழந்தை களுக்கு இதை பழக்கப்படுத்தி விட்டால் வாந்தி,பேதி, காய்ச்சல் சமயங்களில் மிகவும் சிறந்த உணவாகவும் ,மருந்தாகவும் இருக்கும்.

நமது உடலுள்  மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.உடலில் வயர் வழியாக மின்சாரம் போகவில்லை ,அதற்கு பதில் ஒரு செல்லிலிருந்து அடுத்த செல்லுக்கு தாவித்தாவி அது அடையும் இடத்துக்கு போய் சேருகிறது கையிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து கைக்கும் இப்படித்தான் தகவல்கள் நடக்கிறது.இந்த தகவல்கள் மிக வேக மாக நடைபெறுகிறது. உடலிலுள்ள ஒவ்வொரு செல்லாலும்  மின் சாரத்தை தயார் செய்ய முடியும்.

காய்,கனி,தண்ணீர் இவைகளை தினமும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் உடலுக்குத்தேவையான மின்பகுப்பு மூலகங்கள் கிடைத்துவிடும்.

                                             ---------------------------------

No comments:

Post a Comment