Thursday 11 June 2015

உயர் இரத்த சுகர்

                                            உயர் இரத்த சுகர் 

உடலில் கணையம் என்கிற ஒரு சுரப்பி வயிற்றின் பின் பாகம் இருக்கிறது. இது ஜீரணத்துக்கு தேவையான ஒரு என்சைமையும்( Enzyme ), இரத்தத்திற்கு வரும் இன்சுலினையும் ( Insulin ) சுரக்கிறது. 

உண்ணும் உணவானது உடலுள் பல இரசாயன மாற்றங்களை அடைந்து உடலை இயக்கும் சக்திக்கும், உடற் கட்டுக்கும்  உடல்  பராமரிப்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஆதாரமாய் மாறுகிறது. இதை வளர்சிதைமாற்றம் (Metabolism) என்கிறார்கள். இந்த செயல்  எல்லோருக்கும் ஒரே மாசீனி திரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அளவாய் மாறி இருக்கிறது. உண்ணும் உணவின் ஒரு பகுதி குளுக்கோசாக மாறுகிறது. குளுக்கோசானது சுகர் வடிவத்தில் இரத்தத்தில் காணப்படுகிறது. உடலுள் குளுக்கோஸ் எரிபொருளாக இருக்கிறது. நாம்  உண்ணும் சீனி, அரிசி, கோதுமை, உருளைகிழங்கு, பழங்கள், இனிப்புகள்  போன்றவை உடலில் குளுக்கோஸாக மாறுகிறது. 

இரத்தத்தில் இந்த குளுக்கோசை, கணையம் சுரக்கும் இன்சுலினானது சுமந்து கொண்டு திசுக்களைப் போய் அடைகிறது. கணையமானது போதுமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டும். போதுமான அளவு இன்சுலினை கணையத்தால்  சுரக்க முடியாத நிலை வருவதை டயாபெடீஸ் (Diabetes)  என்கிறார்கள். இன்சுலின் சுரக்காததால் திசுக்கள் குளுகோஸ் கிடைக்காமல் சோர்வடைகின்றன. இரத்தத்தில் குளுக்கோஸ் சேர்ந்து விடுகிறது. இதனால் கண், சிறுநீரகம், கால், நரம்பு மண்டலம் போன்றவை  பாதிப்படைகிறது.

கணையத்தில் இன்சுலின் சுரப்பது நின்று விடுமானால் அல்லது மிகக் குறைவாக இருக்குமானால் அதை டைப்-1 (Type-1) டயாபெட்டீஸ் என்றும், கணையம் ஓரளவு சுரப்பதை டைப்-2 (Type-2) டயாபெட்டீஸ் என்றும் கூறுகிறார்கள். டைப்-1 க்கு இன்சுலினை ஊசி மூலம் உடலில் ஏற்றுகிறார்கள்.  டைப் -2 க்கு மாத்திரை சாப்பிட ச்சொல்லுகிறார்கள்.

இரத்தத்தில் சுகர் இருப்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்துக்  கொள்ளலாம். பொதுவாக, காலை உணவுக்கு முன் இரத்தம் மற்றும் சிறுநீரிலும், காலை உணவு முடிந்து 2 மணி நேரத்தில் திரும்பவும் இரத்தத்திலும், சிறுநீரிலும் சுகர் பரிசோதிக்கப்படுகிறது.

காலை உணவுக்கு முன் இரத்தத்தில்     70----110  க்குள்  ஆரோக்கியமானது.
காலை உணவுக்கு பின் இரத்தத்தில்       70----140  க்குள் ஆரோக்கியமானது.

எப்பொழுது பார்த்தாலும்( Random )          70--- 140  க்குள்  ஆரோக்கியமானது.

துல்லியமாக பார்க்க  A1C TEST          6.5%----7.0%  க்குள்  ஆரோக்கியமானது.

சிறு நீரில் சுகரை கலர் மாற்றத்தை வைத்து நிர்ணயிக்கிறார்கள். இரத்த பரிசோதனையின் முடிவின்படியே சிகிச்சை தருகிறார்கள்.

A1C என்கிற இரத்த பரிசோதனை, டயாபெட்டீஸ் எந்த அளவிற்கு உடலில் கட்டுப்பாடாக இருக்கிறது என்பதை நமக்கும், மருத்துவருக்கும் தெரியப்படுத்துகிறது. இந்த பரிசோதனை இரத்த சிகப்பு அணுக்களில் எவ்வளவு சுகர் படிந்திருக்கிறது என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். A1C   யின் அளவு 6,5% முதல் 7% வரைக்குள்  இருப்பது ஆரோக்கியமானது. இச்சோதனை மிகத் துல்லியமானது. இச்சோதனையை 6 மாதத்துக்கு ஒரு முறை செய்து உடற்பயிற்சி, மாத்திரை போன்றவற்றின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

எந்த அறிகுறியும் இல்லாமல், நீண்ட நாள் கண்டுபிடிக்கப்படாமல், சிலரது உடலில் அமைதியாக  டயாபெட்டீஸ்  இருக்கிறது

இனிப்பு வகை உணவுகள், குளிர்பானங்கள், பாட்டில் பழரசங்கள் உடல் எடை அதிகமாக காரணமாகும்.  அதிக உடல் எடை  உடலில் இன்சுலின் குறைவதற்கு ஒரு காரணமாகும். எல்லாச்சத்தும், எல்லோருக்கும் தேவை.
ருசியுள்ள உணவெல்லாம் ஆரோக்கியமான உணவல்ல. தோல் அல்லது தவிடுடன் கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். காய், கீரை, மீன், நட்ஸ், பயிறு  வகை உணவுகள் நல்லது.

கார்போஹைட்ரேட் வகை உணவுகளுக்குத்தான் இன்சுலின் தேவை. புரோட்டீன் மற்றும் கொழுப்பு வகை உணவுகளுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை நினைவில் கொண்டு நாம் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் டயாபெட்டீஸ் வராமல், அல்லது வந்தபின் சமாளிக்கும் வழியாக பார்த்துக்கொள்ளலாம். கெட்டகொழுப்பு,  நல்ல கொழுப்பு வகை உணவு களையும் நினைவிற்கொள்ள வேண்டும்.


சுகர் வந்தபின், தவறாமல் மருத்துவரிடம்  பரிசோதனை, உணவுப்பழக்கம், மாத்திரை, உடற்பயிற்சி, பலவீனம் பற்றி ஆலோசித்துக்கொள்ள வேண்டியது கட்டயாமாகும். மருத்துவர் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு ஆலோசனை கூறுவார். டயாபெட்டீஸ்  சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்  கலந்துகொண்டு  புதிய  மற்றும்   பல்வேறு ஆலோசனைகளை பெறலாம்.

இரத்த சுகர் வராமல் இருப்பதற்குரிய கட்டுப்பாடுகள்.

வெள்ளை அரிசி உணவுகள், மைதா உணவுகள், சீனி உணவுகள், இவைகளை எளிமையான கார்போஹைட்ரேட்உணவுகள் (Simple Carbohydrate ) என்றும்,  தோல் அல்லது தவிடுடன் கூடிய தானியங்களை, கனிகளை, அவற்றிலுள்ள  கார்போஹைட்ரேட்டை  கடின கார்போஹைட்ரேட் ( Complex Carbohydrate  ) என்றும்  கூறுகிறார்கள்.

தோலுடன் கூடிய உணவுகளில் நார்ச்சத்து இருப்பதினால் ஜீரணம் மெதுவாகவே நடக்கும். அதனால் அவற்றிலிருந்து  சுகரானது மிகவும் மெதுவாக இரத்தத்திற்கு வருகிறது. இதனால் இன்சுலின் தேவையும் குறைந்த அளவு மெதுவாகவே தேவைப்படுகிறது.

எண்ணெய்யில்  செய்த உணவுகளை மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat Food) என்றும் கூறுகிறார்கள். இது திசுக்கள் சுகரை எடுத்துக்கொள்வதை மந்தப்படுத்துகிறது.

எளிமையான கார்போஹைட்ரேட் உணவு களுக்கு நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் திசுக்கள் எரிப்பதற்கு வேர்வை சிந்தும் உடலுழைப்பும் தேவைப்படுகிறது.

மாறிய கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் அதனால் உருவாகும் செல்களால்  இரத்தத்திலுள்ள சுகர் மற்றும்  இன்சுலினை குறைந்த அளவே பயன் படுத்த முடிகிறது. இரத்தத்தில் சுகர் அதிகரிக்க மாறிய கொழுப்பு வகை உணவுகளும்(Trans Fat Food) ஒரு முக்கிய காரணமாகும்.

தேவையான அளவு இன்சுலின் சுரந்து உடல் உழைப்பு இல்லாத  போது இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சுகரும், இன்சுலினும் கொழுப்பாக மாறி தோலின் அடியில் உறைந்து உடல் எடையை  அதிகரிக்கிறது. அதிக உடல் எடை பலவித ஆரோக்கிய குறைவிற்கு காரணமாகிறது.

புரோட்டீன் வகை உணவு களை  செல்கள்  பயன் படுத்து வதற்கு இன்சுலின் தேவையில்லை. எனவே தோலுடன் கூடிய கடலை, பயறு, மற்றும் பருப்பு, காய், கீரை, நட்ஸ், சீட்ஸ்,  போன்ற வைகளை மூன்று வேளை  உணவிலும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசி, மைதா மாவு உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

சீனி மற்றும் மாறிய கொழுப்பு உணவுகள் மெல்லக்கொல்லும் விஷமாகும். அவை  மனிதன் கண்டு பிடித்த இயந்திரங்களினால் தயாரிக்கப்பட்டு பல முக்கிமான சத்துக்கள் நீக்கப்பட்டு  பயன் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் காலையில்  திறந்த வெளியில் முப்பது நிமிடம் தடையின்றி ஏதாவது ஒரு உடற்பயிற்சிசெய்வது இரத்த சுகருக்கும், கொலஸ் டிரா லுக்கும், இரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் எடைக்கும் மிகவும் நல்லது.

யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் டயாபெட்டீஸ் வரலாம் என்பதை நினைவில் கொண்டு நல்ல உணவுகளிலும், உடற்பயிற்சியிலும் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நோய்களை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதில் உறுதி கொள்ளவேண்டும்.

                                        -------------------------------------------






   



    

Tuesday 9 June 2015

உயர் இரத்த கொலஸ்ட்ரால்

                     உயர் இரத்த கொலஸ்ட்ரால் 

கொழுப்பு ஆரோக்கியத்திற்கு எதிரியல்ல. கொழுப்பு இரத்தத்தில் அளவோடு இருக்கவேண்டும். கொழுப்பு என்பது கலோரி அல்லது சக்தி யாகும். இரத்தத்திலுள்ள கொழுப்பிற்கு கொலஸ்ட் ரால் என்றும், லிபிட்ஸ்
( Cholesterol / Lipids ) என்றும் பெயர் உண்டு. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது கெடுதலான பொருள் அல்ல. ஆரோக்கியமாக வாழ உடலுக்கு கொலேஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இரத்தத்தில் மெழுகு போன்று, வழ, வாழப்  பாக இருப்பதினால் இரத்தக் குழாய் களில் இரத்தம் எளிதாய் பயணிக்கிறது.

உடலானது தனக்கு வேண்டிய கொழுப்பில் 75% ஐ உடலுள் உற்பத்தி செய்து கொள்கிறது. எஞ்சிய 25% தான் உணவிலிருந்து தேவைப்படுகிறது. எப்படியோ நாம் அதிக மான கொழுப்பை சாப்பிட்டு விடுகிறோம்.

இரத்தத்தில் இதன் அளவு அதிக மாகும் போது உடலில் மோசமான விளைவு களை ஏற்படுத்துகிறது. உடலில் கொழுப்பு குறைந்து விட்டாலும் கடுமையான  விளைவுகள் ஏற்படும்.

கொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கும், நரம்பு மற்றும் திசுக்களுக்கு கவச மாகவும்,  நோய் எதிர்ப்புக்கும் அவசியமானது.
கொழுப்பு குறைபாடானது தொற்று, அனிமியா, தைராய்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கான்சர் முதலியவற்றுக்கு காரணமாகும்.
கொழுப்பை குறைக்கும் மாத்திரைகள் அனைத்தும் பலவிதமான பக்க விளைவுகளை கொண்டது. 

உண்ணும் உணவினால் மட்டுமே இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. உடல் எடை,  உடற்பயிற்சி, வயது போன்றவைகளும் உடலில் கெட்ட கொழுப்பு அதிக மாவதற்க்கும், நல்ல கொழுப்பு குறைவதற்கும்  முக்கிய  காரணங்களாகும்.

இரத்தத்திலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து கொலஸ் ட்ரால் பயணிப்பதினால் கொலஸ்ட்ராலை லிப்போ புரோட்டீன் ( Lipo Protein ) என்கிறார்கள். லிப்பிட்சும், புரோட்டீனும் இரத்தத்தில் வெவ்வேறு அடர்த்தியில் பயணிக்கின்றன. அதன் அடர்த்தியைப் பொறுத்து உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (High density lipo protein -HDL ) என்றும், குறைந்த அடர்த்தி லிப்போ புரோட்டீன் (Low density lipo protein - LDL) என்றும், மிக குறைந்த அடர்த்தி லிப்போ புரோட்டீன் (Very low density lipo protein - VLDL ) என்றும் பிரிக்கிறார்கள்.

ட்ரைகிளிசிரைட்ஸ்( Triglycerides   ) என்பது  இரத்தத்தில் காணப்படும் வேறு ஒரு வகையான கொழுப்பாகும். அதனை உடல் சக்தியாக பயன்படுத்துகிறது. அது இரத்தத்தில் அளவோடு இருக்கும் போது உடல் ஆரோக்கியமாய் இருக்கும். அதிகமாகி விட்டால் பலவித ஆரோக்கிய குறைவுகளை ஏற்படுத்தும். அதைக் கட்டுப்படுத்த அதற்கென தனி மாத்திரை சாப்பிட வேண்டிவரும்.

Total cholesterol  Less than 200 mg/dL     optimum
                                         200  --  239    Border high
                                         240  --  and above High

LDL       LESS than 100mg/dL        Optimal
                               100  --129       above optimal
                               130  --  159     Border line high
                               160  --  189     HIGH
                               ABOVE  190  VERY HIGH

HDL        Above        60    mg/dL     Healthy
                                 40  --  60         acceptable
                                  Below  40       Undesirable

Triglyceride             Less than 150 mg/dL is optimum
                                             150  --  199    High
                                             200  --  499    Very high

VLDL கொலஸ்ட் ராலை அளவிட நடைமுறை வழிகள் இல்லை.அதனை Triglyceride அளவைக்கொண்டு சதவிகிதத்தில் கணக்கிட்டு கொள்கிறார்கள். VLDL அதிகமாகும் போது உயிருக்கு ஆபத்தாகிறது. மொத்த கொலஸ்ட் ராலும் HDL லும் 3.5:1 முதல் 5:1 என்கிற விகிதத்திற்குள் இருப்பது ஆரோக்கியம் என்கிறார்கள்.`
  
பொதுவாக மொத்த கொலஸ்ட்ரால் 200 க்கும் குறைவாகவும்,  ட்ரைகிளிசிரைட் 150 க்கும் குறைவாகவும், 
LDL 100க்கும் குறைவாகவும்,
HDL 60க்கும் மேலாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது.  

அதிகமாக செய்யும் உடற்பயிற்சி அதிக கலோரியை எரிக்கிறது. அப்போது கொழுப்பு உணவுகளை சாப்பிடவில்லை யானால் சேமிப்பிலி ருக்கும் கொழுப்பினை உடைத்து உடல் கலோரியை எடுத்துக்கொள்கிறது. சிறிய உடற்பயிற்சிகள் சேமிப்பிலுள்ள கொழுப்பினை எடுத்துக்கொள் வதில்லை.
அவை உணவிலுள்ள கொழுப்பினையே எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் செய்யப்படும் உடற்பயிற்சியே சேமிப்பிலுள்ள கொழுப்பினை எரிக்கிறது. 20 வயதிற்கு மேல் உடலுக்கு கொழுப்பை எரிக்கும் திறன்  ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 2% குறைகிறது. எனவே வயது அதிகரிக்கும் போது கொழுப்பு உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமான தாகும்.

உணவிலுள்ள கொழுப்பை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். அவை    கரையாத கொழுப்பு ( Saturated fat  ),  கரையும்    கொழுப்பு ( Unsaturated fat ), மாறிய கொழுப்பு( Trans fat  ) எனவாகும் .

கரையாத  கொழுப்பு:- பால் உட்பட அனைத்து மிருக வகை உணவுகளில், கோழியின்  தோலில் இருக்கக் கூடிய கொழுப்புகள் சூட்டில் உருகும் தன்மை யும், இரத்தத்தில் உறைந்து கட்டியாகும் தன்மையும்  உடையது. இவை நாட்பட இரத்தத்தில் அதிகமாகும் போது இரத்தக்குழாய் களின் சுவரில் தங்கி நாளடைவில் இரத்த வழியினை அடைக்க ஆரம்பிக்கிறது. இதனை குறைக்காமல் விட்டால் மாரடைப்பு, பக்கவாதம், ஹெமரேஜ், சிறுநீரக பாதிப்பு  போன்றவை ஏற்பட காரணமாகும்.

மிருக இறைச்சி, கோழியின் தோல்,கொழுப்புடைய பால் போன்ற வற்றில்     கரையாத  கொழுப்பு  உள்ளது. தோல் நீக்கிய கோழி உணவு,கொழுப்பு நீக்கிய பால் உணவு சிறந்தது.


 கரையும்   கொழுப்பு :- நட்ஸ், சீட்ஸ், மீன் போன்ற வற்றிலுள்ள கொழுப்பானது இரத்தத்தில் உறையாது. பாலி, மோனோ ( Poly unsaturated fat, Mono unsaturated fat )என இருவகையானது. பாலியில் ஒமேகா-3, ஒமேகா-6, ஒமேகா-9 ( Omega-3,6,9 ) என்கிற பிரிவுகளிலும் கொழுப்புகள் இருக்கிறது. இவ்வகை கொழுப்புக்களை உடலால் உற்பத்தி செய்யமுடியாது. உணவு களிலிருந்து தான் உடல் பெறவேண்டியிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கும், தோல், முடி, எலும்பு, ஆரோக்கியத்திர்க்கும், கெட்ட கொழுப்பு குறைவதற்கும்,  நல்ல  கொழுப்பு  கூடுவதற்கும்,  ஜீரணத்தில்  வைட்டமின் A D E & K கரைவதற்கும் இந்த கொழுப்புகள் அவசியப்படுகிறது.
              பாலி  கரையும்     கொழுப்புகள்:-வால்நட், பூசணி விதை, ஆழிவிதை 
             மோனோ  கரையும்   கொழுப்புகள் :-ஆலிவ்ஆயில்,  பாதாம்,  பிஸ்தா,  
              ஒமேகா -3 :- ஆழிவிதை, வால்நட்,  மீன் எண்ணெய்
              ஒமேகா -6:-ஆலிவ் ஆயில், கீரை, பயறு, முழுத்தானியங்கள்.  

மாறிய கொழுப்பு :- தேங்காய், எள், வேர்க்கடலை, சூரியகாந்தி என பலவித மான தாவர எண்ணெய்களை பயன் படுத்துகிறோம். எண்ணெய்களை அதிகமாக  சூடு படுத்தும் போது அதனுடைய குணநலன்கள் மாறிவிடு கிறது. இரத்தத்தில் LDLஐ அதிகரிக்க செய்து, HDL ஐ குறைத்து விடுகிறது. எனவே இது மிகவும் மோசமான கொழுப்பாகும்.திசுக்களின் சுவர்களை கடினமாக்கி இனிப்பை திசுக்கள் ஜீரணிக்கமுடியாதபடி செய்கிறது. இதனால் இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது. கொதிக்கும் எண்ணெய்யில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் மாறிய கொழுப்பு உணவுகளே. வியாபார நோக்கில் அதே எண்ணெயை திரும்ப, திரும்ப சூடு படுத்தி உணவு தயாரிக்கிறார்கள். பாஸ்ட் பூட், காரம், இனிப்பு, வறுத்த, பொரித்த, சுட்ட  உணவுகள் அனைத்தும் LDL / Triglyceride  ஐ அதிகப்படுத்தும் உணவுகளாகும்.  

சில குறிப்புகள் 

தற்போது உண்ணும் உணவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.
உண்ணக் கூடிய உணவுகளையும், உண்ணக்கூடாத உணவுகளையும் தெரிந்து புதிய உணவு ப்பழக்கத்திற்கு மாறுங்கள்.சரியான பாதை ஆரோக்கியத்திற்கு நல்லது.உங்கள் ஒத்துழைப்பே முக்கியம்.
ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து உணவுகள் நல்லது.
காய்,கனிகளில் கொழுப்பு கிடையாது.
நட்ஸ்,சீட்ஸ் -ல் நல்ல கொழுப்பு இருக்கிறது. பச்சையாக உண்ணுவது நல்லது.
ஆழிவிதை, வால்நட், பாதாம், திராஷை விதை,முழு வேர்க்கடலை,எள் நல்லது.
கொழுப்பு உணவாகிய பால், இறைச்சி, கோழியின் தோல், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். கடையில் வாங்கி உண்ணாதீர்கள்.
கொழுப்பு நீக்கிய பால் கிடைத்தால் எடுத்துக்கொள்ளலாம்.
ஆலிவ் ஆயிலை பச்சையாக உண்ணுவது நல்லது.
சமையலுக்கு நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தலாம்.
தினசரி நடை பயிற்சி நல்லது.
                                  -------------------------------------------

     









  

உயர் இரத்த அழுத்தம்

                                          உயர் இரத்த அழுத்தம் 

இரத்தம் உடல் முழுவதும்  பாய்ந்து சென்று அனைத்து திசுக்கழுக்கும் உணவினை வழங்கு கிறது. இரத்தம் உடல் முழுவதும் பயணிக்க இரத்தத்திற்கு அழுத்தம் ( Pressure ) தேவைப்படுகிறது. இரத்தத்திற்கு அழுத்தம் ஏற்படஇருதயம் ஒரு பம்பை ( Pump )  போன்று வேலை செய்து இரத்தத்திற்கு அழுத்தத் தினை தருகிறது.

இருதயம் சுருங்கி, விரிந்து வேலை செய்து இரத்தத் திற்கு அழுத்தத் தினை தருகிறது. இருதயம் சுருங்கும் போது இரத்தத் திற்கு அழுத்தம் கிடைத்து வெளியேறுகிறது. அந்த அழுத்தத்தினை சிஸ்டோலிக் அழுத்தம் (Systolic Pressure) என்கிறார்கள். இருதயம் விரிவடையும் போது ஒரு அழுத்தத்தில் இரத்தம் உள்ளே வருகிறது. இதனை டயஸ் டோலிக் ( Diastolic Pressure ) என்கிறார்கள்.

                                                   Systolic Pressure                        Diastolic Pressure        
ஆரோக்கியமானநிலை       120--    mm/Hg குறைவாக    80--  mm/Hg  குறைவாக
ஏறும் நிலை                            120-139  ''                               80-89    ''           
உயர் அழுத்தம் நிலை -1      140-159  ''                               90-99     ''          
உயர் அழுத்தம் நிலை -2      160----   ''   க்கு மேல்             100----  ''    க்கு மேல்

250/115 என்று இரத்த அழுத்தம் இருக்குமானால், அல்லது ஏதாவது ஒன்று அதிகம் இருக்கு மானால் கூட உடனடியாக அவசர சிகிச்சை பெறவேண்டும்.அல்லது பக்க வாதம் ( Stroke ) மாரடைப்பு ( Heart Attack ) போன்ற விளைவுகள் ஏற்பட காரணமாகும்.

120/80 என்றிருப்பது ஆரோக்கியமான இரத்த அழுத்தம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் உடற்பயிற்சி இன்மை, உப்பு,கொழுப்பு, புகைத்தல், சிறுநீரக நோய்,உடலுள் கட்டிகள்,இரத்த குழாய்கள் குறுகுவது போன்று பல வாறாகும்.

குறைந்த இரத்த அழுத்தத்தினால் எந்த பிரச்சினையும் ஏற்படாதவரை மருத்துவம் தேவையில்லை.குறைந்த இரத்த அழுத்தத்தினால் தலை சுற்று,வாந்தி,பேதி,உடல் தளர்ச்சி,சக்தியின்மை,போன்று ஏதாவது அசாதாரண நிலை ஏற்படலாம். 85/55-ல் கூட ஒருவர் ஆரோக்கியமாய் இருக்க முடியும்.

உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறியையும் காட்டாமல் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம் இருதயம்,மூளை,சிறுநீரகம்,கண் போன்ற உறுப்புக்களை பாதிக்கிறது.
வயது ஆக,ஆக உயர் இரத்த அழுத்தமும் ஆபத்தான தாக இருக்கும். தினசரி தீவிர உடற்பயிற்சியினால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். உடற்பயிற்சி BP மாத்திரை க்கு சமமாக இரத்த அழுத்தத்தை குறைக்கும். திறந்த வெளியில் இருபது நிமிடம் நிறுத்தாமல் தொடர்ச்சி யாக செய்யும் நடை,ஓட்டம்,ஜாகிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் இருதய தசைகளை வலுப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க  உதவுகிறது.வேர்வை உடலில் உள்ள உப்பை வெளியேற்றுகிறது. 

மனஅழுத்தம் இருதய தசைகளை பலவீனப்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சோடியம் அல்லது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.உடல் ஆரோக்கியத்திற்கு தினசரி 3 கிராம் உப்பே போதுமானது.ஆனால் நாம் தினசரி 10 கிராம் உப்பிற்கு மேல் சாப்பிடுகிறோம்.வெளியில் வாங்கி உண்ணும் அனைத்து உணவு மற்றும் பானங்களிலும்  அளவுக்கு அதிக மாகவே உப்பு சேர்க்கிறார்கள்.சுத்திகரிக்கப்பட்ட பொடி உப்பை ( Table salt ) விட,சுத்திகரிக்கப் படாத. தாதுக்கள் நிறைந்த கடல் உப்பு  சிறந்தது.   


மக்னீசியம்,பொட்டசியம்,போன்ற சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கிறது.
கால்சிய குறைபாடு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வைட்டமின் பி 3, நியாசின் போன்றவை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கெட்ட கொழுப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.அந்த வகை உணவுகளை தவிர்த்து விட்டு நல்ல கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும்.
அளவிற்கு மீறி அல்லது தரமற்ற மதுவினை குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்தி,இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
படபடப்பாய், பரிதவிப்பாய்,மனமுறிவாய்,ஆழ்ந்த கவலையாய், மட்டற்ற மகிழ்ச்சியாய்,ஆவேசமாய் இருக்கும் மனநிலை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மனஅமைதிபயிற்சி, ஆசுவாசபயிற்சி, ஒய்வு போன்ற வைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இரத்த அழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஐபுப்ருபென் ( Ibuprofen )மாத்திரைக்கும், இரத்த அழுத்த மாத்திரைக்கும் ஒன்றுக்கொன்று ஆகாது.

மாத்திரை சாப்பிடுகிறேன், நடைபயிற்சி செய்கிறேன்  என்பதற்காக உப்பு, கொழுப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது.

மருத்துவரிடம் வேறுகாரணங்களுக்காaக சாப்பிடும் எல்லா மாத்திரை களையும் கூறி, அவர் தரும் இரத்த அழுத்த மாத்திரையை சாப்பிட வேண்டும்.

காய், கனி, கீரை, நட்ஸ், சீட்ஸ், முழுத்தானியம் என ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிட்டு, போதுமான உடற்பயிற்சி செய்து உறக்கம், ஒய்வு களில் கவனம் செலுத்தி உப்பு, கெட்ட கொழுப்பு உணவுகளை தவிர்த்து இரத்த அழுத்தம் குறையும் வழியை பார்த்துக்கொள்ளவேண்டும்.

                                  --------------------------------------------





 
 



































   





  

Saturday 6 June 2015

உடல் அதிக எடை

                                        உடல் அதிக எடை 

உடல் எடையை வயது, பாலினம், உயரம், பரம்பரை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போன்ற பல காரணங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன.

அதிக உடல் எடைக்கு குறைவான உடற்பயிற்சியும், அதிக மாக உண்பதும் முக்கிய காரணங்களாகும்.

ஆரோக்கியமான உடலுக்கு நல்ல கார்போஹைட் ரேட், புரோட்டீன்,நல்ல கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள் அடங்கிய உணவுகளையும்,போதுமான அளவு தண்ணீரையும் அருந்தவேண்டியது கட்டாயமாகும்.

ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்,கெட்ட கொழுப்பு உணவுகளை உண்ணாமலிருக்க வேண்டும். எல்லா சத்துக்களும் உடலுக்கு தேவையான அளவு  இல்லாமலிருப்பதும் அல்லது உடல் தேவையை மீறி அளவிற்கு அதிகமாக உண்பதும் உடல் எடையை பிரச்சினையாக்கு கிறது.

கார்போஹைட்ரேட்,புரோட்டீன்,கொழுப்பு போன்ற மூன்று சத்துக்கழும் மொத்த உணவில் 40%, 35%, 25% என்கிற விகிதத்தில் இருப்பதே ஆரோக்கியத்தை காக்கும்.இதனால் உடல் எடை சமநிலைக்கு வரும்.இந்த சரிவிகித,சமநிலையை கடைபிடிக்காத உணவுப்பழக்கம் உடல் எடை மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைவுக்கு காரணமாகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் உடல் எடை அதிக மாக காரணம் என்ன. எந்த வழிகளிலெல்லாம் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.பிறகு, அவற்றை நாம் தீவிரமாக கடைபிடிக்கிறோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

கலோரி அதிகமான உணவுகளை உண்ணாமலிருப்பதே உடல் எடையை குறைக்கும் குறுக்கு வழி.

இனிப்பு,காரம், பிஸ்கட், கேக், ஐஸ் க்ரீம், குளிர் பானம் போன்றவை உடல் எடை யை கூட்டும் . உணவு சமச்சீராக இல்லாதபோதும்,சுத்திகரிக்கப்பட்ட தானிய உணவுகளையும் ,எண்ணெய்யில்  வறுத்த தின்பண்டங்களையும்  அதிகமாக உண்பதாலும், போதிய உடற்பயிற்சி இல்லாத தாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க விரும்பு பவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவில் பழம், காய் களுடன்,முழுக்கோதுமை ரொட்டி,சப்பாத்தி, கடலை,பயறு,பருப்பு, ஓட்ஸ்,ராகி போன்ற ஏதாவது ஒரு முழுத்தானிய உணவோடு  உண்ண வேண்டும். மதியம் தவிடு நீக்காத அரிசி யுடன் மீன்,காய்,பழங்கள் உண்ணவேண்டும்.இரவில் கார்போஹைட்ரேட் குறைந்த திரவ  உணவுகளை உண்ணவேண்டும். இடை வேளைகளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.இடை வேளைகளில் பசித்தால் பயிறு வகை சுண்டல்கள், நட்ஸ், பழங்களை சாப்பிடவேண்டும்.

உடல் எடையின் அளவு கோலை BODY MASS INDEX ( BMI )என்கிறார்கள்.


                                         Body Weight in Kg                         Body Weight in pound x 703
Body Mass Index  =------------------------------------ or -------------------------------------------
                                 Height in Meter x  Height in Meter           Height in inch x Height in inch



BMI                     18.5--24.9   is healthy.
                           25.0--29.9    over weight                5 to 15 Kg more than normal weight
                           30.0--34.9    High risk                  16 to 20  ,,,,,,,             ,,,,,            ,,,,,
                           35.0--34.9    Very high risk           21 to 50  ,,,,,,,             ,,,,,            ,,,,,                                     40.0-- more   Extremely high risk   51+         ,,,,,,,             ,,,,,            ,,,,,


அளவான உடல் எடை, இரத்த அதிக சுகர், இரத்த அதிக அழுத்தம், இருதய நோய் போன்றவை களை தடுக்கிறது.

இடுப்பு எலும்பிற்கு மேலுள்ள( பூமிக்கு இணையான = Parallel to earth) வயிற்றின் சுற்றளவு, மூச்சு முழுவதையும் வெளியேற்றிய ஆசுவாசமான  நிலையில், பெண்களுக்கு 35'' க்கும் ,ஆண்களுக்கு 40'' க்கும் மேற்படாமல் இருப்பது நல்லது.  

தீவிர உடற்பயிற்சி உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை எரித்து உடல் எடையை குறைக்கிறது.உணவுக்கட்டுப்பாடு உடலில் மேலும் கொழுப்பை சேர்க்காமலிருக்கிறது. இதைத் தவிர உடல் எடையை குறைக்க மாத்திரையோ, மந்திரங்களோ கிடையாது.

பட்டினி இருப்பதோ, ஜிம்மிற்கு போவதோ, உடற் பயிற்சி இயந்திரங்களோ தேவையில்லை.அவரவர் விருப்பப்படி நடைபயிற்சி,சைக்கிள், ஜாக்கிங், நீச்சல் என ஏதாவது ஒன்றையோ,  சேர்த்தோ செய்யலாம். ஆனால், தினசரி காலை பயிற்சியினாலும், உணவு கட்டுப்பாட்டினாலும்  மட்டுமே உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
உணவுப்பழக்கங்களை மாற்றி படிப்படியாகவும்,பாதுகாப்பாகவும் உடல் எடையை குறைப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.ஒரு வாரத்திற்கு அரை கிலோ விற்கு மேல் குறைக்காமலிருப்பது நல்லது.

சில குறிப்புகள் 
எடை குறைப்பு என்பது சவாலானது. வைராக்கியத்தால் மட்டுமே முடியும்.
உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் தினமும் உண்ணும் உணவுகளை ஒரு நோட்டில் எழுதி வாருங்கள்.
கடை சாமான் வங்க போகுமுன் லிஸ்ட் எழுதி, அதனை மட்டுமே வாங்குங்கள்
பசியோடு இருக்கும் போது கடைக்கு போகாதீர்கள்
லேசாக பசி எடுக்கும் போதே சாப்பிட்டு விடுங்கள். பசிஅதிகமானால் எதையாவது சாப்பிட தோன்றும்.
இனிப்பு உணவும்,கொழுப்பு உணவும் உடலில் சேமிக்கப்பட்டு உடல் எடை கூடும்.அதுமாதிரி உணவுகளை தவிர்த்தே ஆகவேண்டும்.
சாப்பிட ஆசை வந்தால் கடையிலே சிறிய அளவு வாங்கி அங்கேயே சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
வீட்டிற்கு  வாங்கி வந்து இருப்பில் வைத்து சாப்பிடாதீர்கள்.
பொதுவாக் இனிப்பு,காரம்,பிஸ்கட்,கேக்,என அனைத்து தின்பண்டங்களும் நல்ல ஆரோக்கியத்திற்கு கெடுதலான உணவுகள்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்.
உணவை சிறியதாக்கி கொள்ளுங்கள்.(சிறிய தோசை,இட்லி )
சிறந்த உணவுகள் :- கீரைகள். காய், பழங்கள், ஓட்ஸ், ஆலிவ் எண்ணெய், பாதாம்பருப்பு, ஆழிவிதை, கருவாப்பட்டை, தோலுடன் கூடிய பயறு, பீன்ஸ், புதினா, கிரீன் டீ, முழுத்தானிய உணவுகள் முதலியன .  

                            ------------------------------------------------------------


Friday 5 June 2015

சரி விகித உணவு.

                                   சரி விகித உணவு.

 எல்லா உயிர்களும் உணவால் உயிர் வாழ்கிறது. அனைத்து வேலைகளையும்   செய்ய உணவு சக்தியை தருகிறது.நோய்களை எதிர்க்கிறது.

உணவானது உடலுக்கு சக்தி (Energy),உடல் கட்டு (Building ), உடலுக்கு பாதுகாப்பு
(protection )உடலுக்கு வித்தியாசம் ( difference ) போன்ற வற்றைத் தருகிறது.  

ஆரோக்கியமாய் வாழ பலதரப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும்.சத்து (Nutrition)என்பது ஒரு விஞ்ஞானம். அது உணவு மற்றும் அதை உடல் எவ்வாறு பயன் படுத்திக் கொள்கிறது என்பதை தெரிவிக்கிறது.

உணவுகளை ஜீரண உறுப்புகள் ஜீரணிக்கிறது, சிறுநீரகம், கல்லீரல், பெருங்குடல் போன்றவை உணவிலுள்ள கழிவுகளை வடிகட்டி வெளியேற்று  கிறது.  உடலுக்கு ஆறு விதமான சத்துக்கள் தேவைப்படுகிறது.

உணவு உடலுக்கு சத்தைக்கொடுக்கிறது. சத்துக்கள்  பலவகையானது. அவை  கார்போ ஹைட்ரேட்,  புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள், தண்ணீர் என்பனவாகும்.

இவற்றில் உடலுக்கு கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும், புரோட்டீன் அதற்கு அடுத்த தாகவும், கொழுப்பு குறைவாகவும் தேவைப்படுகிறது.இந்த மூன்றி லிருந்தும்  உடலுக்கு வேண்டிய வைட்டமின்களும், தாதுக்களும் கிடைத்துவிடும்.

தண்ணீர்   :- உணவை உடைக்கவும், இரத்தத்தில் உணவை சுமந்து செல்லவும், உடலை குளிர்ச்சி யாக வைத்திருக்கவும்,கழிவுகளை ஈரமாக வைத்திருக்கவும், வெளியேற்றவும், தண்ணீர் உதவுகிறது.

கார்போஹைட்ரேட் :- உடலுக்கு முதன்மை யான சக்தியை அளிக்கிறது. சீனி, மாவுப்பொருட்களில் அதிகம் இருக்கிறது. சீனி, சிரப், ஜாம், ஜெல்லி, முதலியவற்றை  எளிமையான கார்போஹைட்ரேட்( Simple Carbohydrate) எனலாம் .இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை இரத்த சுகரை அதிகரிக்க செய்து அதிக இன்சுலினை ஈர்க்க கூடியது. தவிடு நீக்காத அரிசி, தோல் நீக்காத கோதுமை,  ராகி, கம்பு, தினை போன்ற முழுத்தானியங்களை   சிக்கலான  கார்போஹைட்ரேட்( Complex Carbohydrate ) எனலாம். முழுத்தானியங் களில் கார்போஹைட்ரேட்டுடன், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு,  வைட்டமின், தாதுக்கள் போன்றவைகளும் இருப்பதினால், இவை ஜீரணமாகும் போது, இரத்தத்தில் சுகர் ஒரு சீராக ஏறி, இன்சுலினையும்  ஒரு சீராக எடுத்துக்கொள்கிறது. இவ்வகை சுத்திகரிக்கப் படாத கார்போஹைட்ரேட் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. சுத்திகரிக்கப் பட்ட சீனி, அரிசி, மைதா போன்ற வற்றிலிருக்கும் கார்போஹைட்ரேட் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது.

புரோட்டீன் :- தசை, தோல், முடி என அனைத்தும் புரோட்டீனால் ஆனது. கடலை, பயறு, பருப்பு, பீன்ஸ்,பால், முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ் களில் புரோட்டீன் உள்ளது.

கொழுப்பு :-நமது உடலுக்குத் தேவையான கொழுப்பில் 75% கொழுப்பை உடலே தயாரித்துக் கொள்கிறது. எஞ்சிய 25% கொழுப்புத்தான் நம் உணவிலிருந்து உடலுக்குத்தேவை.  தினசரி உணவில் சிறிய அளவு கொழுப்பே போதும்.  மிருக வகை மற்றும் தாவரவகை உணவில் கொழுப்பு இருக்கிறது. இறைச்சி, பால், நட்ஸ், சீட்ஸ், சமையல் எண்ணெய்களில்  கொழுப்பு இருக்கிறது. கொழுப்பானது நல்ல கொழுப்பு, கெட்டகொழுப்பு என இருவகையாக இருக்கிறது.நல்ல கொழுப்பு வகை உணவுகள் எவை என தெரிந்து அவைகளை உண்ண வேண்டும்.

தாதுக்கள் ( Minerals ):- உடல் வளர்ச்சிக்கு த்தேவையானது. இவை உயிர் வளர்ச்சியற்ற (Inorganic) பொருளானது. இவை உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இவை நீரிலிருந்தும், மண்ணிலிருந்தும் தாவரங்களால் உறிஞ்சப்பட்டு, அந்த தாவரங்களை  மனிதனும், மிருகங்களும் உண்பதன் மூலம் உடலுக்கு தாதுக்கள் கிடைக்கின்றன. உடலுக்கு கால்சியம்,மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்பு, பல் ஆரோக்கியத்திற்கு தேவை.இரும்பு இரத்தத்திற்கு தேவை.இதேபோல்  பலவகையான தாதுக்கள் உடலுக்கு தேவைப்படுகிறது.

வைட்டமின் :- உடலுக்கு பலவகையான வைட்டமின்கள் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பிற்கும், வலிமையான எலும்பிற்கும், கூர்மையான பார்வைக்கும்,தோல், முடி ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. வைட்டமின் A, C,D,E, B குடும்பம்   என பல வகையாக இருக்கின்றன. வைட்டமின்கள் உயிர்ப்பொருளானது (Organic).

நோய் :- தவறான உணவுகளை உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. அதுவே   அநேக நோய்க்கு காரணமாகிறது. வைட்டமின் குறைபாடுகள், அதிக அளவு உண்பது நோயை தருகிறது.

தினசரி மூன்று கிராம் உப்பே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினசரி முழுத்தானிய உணவுகளை அதிகமாகவும், சுத்திகரிக்கப்பட்டதானிய உணவுகளை குறைவாகவும் சமைக்க வேண்டும். இனிப்பிற்கு நாட்டு வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன் முதலியவற்றையும், சீனியை குறைத்தும் உண்ணப்பழகவேண்டும்.

கொழுப்பில் 80% கரையும்  கொழுப்பும், !5%   கரையாத    கொழுப்பும், 5% மாறிய கொழுப்பும் என திட்ட மிட்டு உணவுப் பழக்கமாக  வேண்டும். எண்ணெய்யில் வறுத்த  அனைத்து உணவுகளையும் குறைத்தால் மட்டுமே இரத்தில் கெட்ட கொழுப்பு குறையும்.

தினசரி சமைத்த உணவு 50% ம், காய், கனி, நட்ஸ், சீட்ஸ் போன்றவை 50% ம் உண்ணு வதற்கு மாறிக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகளை 40:35:25(complexcarbohydrate:protein:fat) என்கிற சரிவிகிதத்தில், அளவோடு  உண்ண முயற்சிக்க வேண்டும்.

உணவில் கார்போ ஹைட்ரேட்(40%), புரோட்டீன்(30%), கொழுப்பு(25%) ஆக  மூன்றும் 40:35:25 என்கிற விகிதத்தில் இருக்கும் படி பார்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அளவு எல்லா சத்துக்களும் கிடைத்து விடும்.

சத்தான உணவுகளை குறிப்பிட்ட விகிதத்தில் உண்ண வேண்டியது அவரவர் கடமையாகவும், உறுதியாகவும், தூண்டுதலாகவும்.  இருக்க வேண்டும். 40:35:25 என்கிற விகிதத்தில் உணவுகளை உண்டுவந்தால் உடல் எடை, இரத்த சுகர், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என அனைத்தும் கட்டுப் பாட்டிற்குள் வரும். உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து அனைத்தும் கிடைத்து விடுகிறது. 

உணவில் சத்து 40:35:25 விகிதத்தில் இருக்கும் போது அளவான கார்போஹைட்ரேட் உணவால் சுகர் அதிக மாவது தவிர்க்கப்படுகிறது. கலோரி எரிக்கப்படுகிறது.சேமிப்பிலிருக்கும் கொழுப்பை செல்கள் விடுவிக்கிறது.

உப்பு இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. 
இனிப்புஇரத்தசுகரைஅதிகப்படுத்துகிறது.உடல் எடையை அதிகப்படுத்துகிறது.
கொழுப்பு இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது.
இனிப்பும்,கொழுப்பும் உடல் எடையை அதிகப்படுத்துகிறது.
உணவகங்களில் நாம் எண்ணெய்யில்  வறுத்த உணவுகளையே அதிகம் விரும்பிச் சாப் பிடுகிறோம்.
சீனியில் செய்த இனிப்பு, ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவை களை குழந்தை களுக்கு தவறாமல் வாங்கிகொடுத்து அவர்களை பழக்கி விடுகிறோம்.
நமது தமிழ் நாட்டு உணவில் வெள்ளை அரிசி சாதம் 70% மும், கடலை, பயறு 10% மும், காய், கனிகள் சேர்த்து 10% மும் எண்ணெய்யில் வேக வைத்த உணவுகள் 10% மும் இருக்கும். 
இந்த பழக்கத்தை மாற்றி,எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளையும் வெள்ளை அரிசி உணவையும்  குறைத்து, முழுத்தானிய உணவுகளையும், காய், கீரை, கனி, நட்ஸ், சீட்ஸ்   வகைகளை கூட்டியும் உண்பதால் உணவை சரிவிகித உணவாக மாற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.