Friday 2 October 2015

தண்ணீரும் உடல்நலமும்

                                         தண்ணீரும் உடல்நலமும் 

தண்ணீர் வாழ்க்கையின் அடிப்படை. மனித உடல் இயக்கத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய மானது. கொழுப்பை எரிக்கும் உடலின் இயற்கையான திறனை தண்ணீர் அதிகரிக்கிறது.

உடலால் நீரைத் தேக்கிவைக்க இயலாது, ஆகையால் உடலுக்கு அவ்வப்போது தண்ணீர் தேவைப்படுகிறது.

தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமெடுக்காவிட்டால் கூட போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். காலை, மதியம், இரவு என ஒவ்வொரு உணவின் இடைப்பட்ட நேரங்களில் தண்ணீர்  அருந்துவது நல்லது. அது பலவித நோய்களைத் தடுத்து  உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.

நமது உடல் 70% தண்ணீரால் ஆனது. ஜீரணம், இரத்த ஓட்டம், தோல், சிறுநீரகம், மலச்சிக்கலின்மை போன்ற இயக்கங்களுக்கு நீர் முக்கியமாக பயன்படுகிறது.

நமது உடல் தோல், மூச்சு, சிறுநீர், மலம், வாய் போன்ற வழியாக நீரை இழக்கிறது.இந்த இழப்பை அவ்வப்போது சரிக்கட்டுவது உடல் ஆரோக்கியத் திற்கு நல்லது. 

சிறுநீரகம் சீராக இயங்க நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. நீரானது சிறுநீரக நோய், கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. குறைந்த அளவு நீரால் சிறுநீரகத்தின் செயல்பாடும் குறைகிறது.

நீரானது மலச்சிக்கலை தடுக்கிறது. உடலில் போதுமான அளவு நீர் இருக்கும் போது குடலிலுள்ள கழிவுகள் நகர்வதற்கும் எளிதாக வெளியேறு வதற்கும் உதவுகிறது.

 தண்ணீர் தோலை ஈரமாக வைத்து உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் தண்ணீர் குறைவு ஏற்படுமானால் சிறுநீரக இயக்கம் குறைகிறது அல்லது நின்று விடுகிறது. உடலில் ஏற்படும் சிறிய நீர்க் குறைவு கூட உடலின் சக்தியினை வடித்து சோர்வாக்கி விடுகிறது.

திட உணவு மட்டு மல்ல, திரவ உணவும் உடலுக்கு மிக முக்கியம்.தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறவும், நோய் குணமடைய வும் செய்கிறது.  

உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல், குடல் வழியாக கழிவுகள் வெளியேறும் செயல் பாடுகளுக்கு தண்ணீர் அவசியமாகிறது.
காய்ச்சல்,வாந்தி,பேதி,வேர்வையின் போது அதிக அளவு நீர் உடலை விட்டு வெளியேறு கிறது. 

கடையில் விற்கப்படும் குளிர்பானம், பழரசம், போன்றவை களில் உப்பு, இனிப்பு, பாதுகாக்கும் இரசாயனம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். அவைகளில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை. அவை உயர்  இரத்த அழுத்தம், இரத்த சுகர், உடல் அதிக எடை போன்றவை களுக்கு காரணமா கிறது..

பழங்கள். காய்கள், சூப், கஞ்சி, குழம்பு போன்றவை களில் இருக்கும் தண்ணீர் உடலுக்கு நல்லது.

கர்ப்பமானவர்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும், அதிக உடல் உழைப்பு உள்ளவர்களும், சூடான சூழலில் பணபுரிபவர்களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அளவிற்கு அதிகமான தண்ணீர் உடலிலுள்ள சோடியத்தை (உப்பு) வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தால் ஒரு அளவான நீரைத்தான் வெளியேற்ற முடியும்.

பத்து வயது வரை ஒரு லிட்டரும்,இருபது வயது வரை இரண்டு லிட்டரும் அதற்கு மேற்பட்ட வயதினர் மூன்று லிட்டர் வரையும் தண்ணீர் அருந்தவேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றிற்கும், நமது குடிநீருக்கும், மழை பெய்து உணவு உற்பத்தி செழிப்ப டைவதற்கும் கடல் நீர் ஆதாரமாய் இருக்கிறது.

கடல் நீரில் பெட்ரோலியக் கழிவுகள், அசுத்தநீர், குப்பைகள், இரசாயனக் கழிவுகள் போன்றவை களை கொட்டுவதால்  கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. சில மீன் களில் மெர்குரி சேர்க்கிறது. சில மீன்கள் நோய்வாய்ப் படுகிறது. இந்த மீன் களை  உண்ணும் மனிதன் பலவித நோய்களுக்கு ஆளாகிறான்.    

தண்ணீர்  ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை அறிந்திருக்க வேண்டும்.

                          --------------------------------------------------



No comments:

Post a Comment