Friday 13 May 2016

          தேர்தல் நாள் மே 16,   2016  திங்கட்கிழமை                  

நம் நாடு அடைந்திருக்க வேண்டிய முக்கியாமான இலக்குகள்.

தேவைக்கேற்ப ஆறுகள், குளங்கள், அணைகள்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி
கடல் பரப்பிற் கேற்ப துறைமுகங்கள்
காலி இடங்களிலெல்லாம் காடு வளர்ப்பு
சிறந்த தரமான ஒரேவித இலவசக் கல்வி
திறமையை வளர்க்கும் பாடத்திட்டங்கள்.
திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு.
ஒழுக்கத்தை, மனிதநேயத்தை வளர்க்கும்  பயிற்சிகள்
நாடு முழுவதும் சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள்
சிறந்த தரமான இலவச மருத்துவம்
தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்
கொசுவற்ற நகரம், கிராமம்
சிறப்பான பேருந்து, ரயில் போக்குவரத்து
 மக்கள் பெருக்கத்திற் கேற்ப தேவைகளை திட்டமிடுதல் 
அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்


ஊழல் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுதல். 
லஞ்சமற்ற அரசு அனுமதிகள்
லஞ்சமற்ற அரசு அலுவலகங்கள்
லஞ்சமற்ற அரசு பணி நியமனம்,
லஞ்சமற்ற அரசு பணி இடமாற்றம்
கமிஷனற்ற அரசு ஒப்பந்ததாரார் வேலைகள்
மிக விரைவான விசாரணை, கடுமையான தண்டனை தரும் சட்டங்கள்.

யாருடைய தவறு 

நம்மில் 40 சதவீதத்தினர் தேர்தல் வந்தால் வாக்களிப்பதில்லை.

மேடைப் பேச்சை, தேர்தல் அறிக்கையை, இலவசங்களை, சினிமா பிரபலங்களை, ஜாதி-மத உணர்வுகளை, ஊடகங்களை  நம்பி, மனம்போன போக்கில் 60 சதவீதத்தினர் வாக்களிக்கின்றனர்.  

இதனால், ஊழல் செய்பவர்களும், மனசாட்சி இல்லாதவர்களும் ஆட்சிப்பொறுப்புக்கு வருகிறார்கள்.

பொறுப்புக்கு வருபவர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன், பினாமி என பலவழிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு,  நாட்டை கடனாளியாக்கும் ஏமாற்றுக் காரர்களாக இருக்கிறார்கள்.  

நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இருப்பதில் நல்லவர் யாரென்று விசாரித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் அளிக்கும் வாக்கு நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது . நமது எதிர்காலமும், நமது பிள்ளைகளின் எதிர்காலமும், நமது பிள்ளையின் பிள்ளைகளின் எதிர்காலமும் நாம் அளிக்கும் வாக்கில் அடங்கி இருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வாக்களிக்கவேண்டும். 

நாட்டின் இன்றைய நிலைமைக்கு நாம் அனைவரும் நல்லவர்களுக்கு வாக்களிக்காததுதான் காரணம்.

சிலர் வாக்களிக்காமல் இருந்து விடுவதுதான் காரணம். 

No comments:

Post a Comment