Sunday 14 February 2016

ஆரோக்கியத்தை காப்பது எப்படி

                                   ஆரோக்கியத்தை காப்பது எப்படி 

சிறப்பான ஆரோக்கியத்திற்கு தேவையானவை மூன்று.1.  காற்று 2. தண்ணீர்
3.இயற்கை உணவுகள்.

இளமையில் முதுமைத் தன்மை வராமலிருக்க, அல்லது முதுமைநோய்கள் வராமலிருக்க சரியான உணவு எது, தவறான உணவு எது  என்று தெரிந்து உண்ணுவதை பழக்கப்படுத்திக்கொள் ளவேண்டும்  

1900 க்குப்பிறகு தான் மின் உற்பத்தி, இயந்திரங்கள் பெருக்கம் அதிக மானது. சுத்திகரித்த சீனி, அரிசி, எண்ணெய் சந்தைக்கு தாராளமாக வந்தன. உணவில் வியாபாரம் புகுந்தது. ஆரோக்கியம் பிரச்சினையானது.  

இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இரசாயனம், உணவில் இரசாயனம், பிளாஸ்டிக்  என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகங்களில் உண்பது,   தயார் உணவு, துரித உணவு, வெளிநாட்டு காய், கனிகள்,  உணவுகள், குளிர் பானங்கள், பழரசங்கள்  சாதாரணமாகி விட்டன.

இதனால், சுத்தி கரித்த உணவுகள் (Refined Grains,oil,sugar ) மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat), விஷத்தன்மை உணவுகள் (Oxidants) போன்றவைகளை மிக அதிகமாக உண்கிறோம். மது, மாத்திரை, மாசுபட்ட சுற்றுச்சூழல் அனைத்தும் பக்கவிளைவு களை உடையதாக இருக் கிறது. 

சரியான உணவுகள்:- முழுத்தானியம், நட்ஸ், சீட்ஸ், உள்ளூர் காய், கனி, கீரை, கிழங்கு, மூலிகைகள், கருப்பட்டி, நாட்டுவெல்லம், தேன், பனங்கற்கண்டு,   தண்ணீர் முதலியன.

தவறானஉணவுகள்:-சுத்திகரித்த தானியங்கள், எண்ணெய்கள், சீனி, வெல்லம், கொதிக்கிற எண்ணெயில் செய்த மாமிசஉணவுகள், சிற்றுண்டிகள், இனிப்புகள்,  தின்பண்டங்கள், சீனி இனிப்புகள், இராசாயனம் சேர்த்து பாதுகாக்கப் பட்ட காய், கனி, குளிர்பானங்கள், உணவுகள் முதலியன.. 

எறும்பூர  கல்லும் தேயும் என்பது போல தவறான உணவுகளை நாட்ப் பட உண்பதால் பலருக்கும் பலவிதமான  ஆரோக்கிய கேடுகள்  ஏற்படுகிறது.

இதை நினைவில் நிறுத்தி உணவுப் பழக்கத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும். ஏனென்றால், பரம்பரை யினாலோ,  பிறவிக்குறை பாடாலோ, ஒவ்வொருவர் உடலிலும் ஏதாவது ஒன்று அல்லது பல உறுப்புகள் பலவீனமாக அமைந்து விடுகிறது. அந்த உறுப்புகள் தவறான உணவுகளால் சீக்கிரமாக மேலும் பலவீனமாகிறது.

நாம் சரியான உணவை உண்கிறோமா, அல்லது தவறான உணவை உண்கிறோமா என்பதைப் பொறுத்துத்தான்  நமது ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. ருசியான உணவிற்கும் ஹார்மோன்கள்  இயக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் உணவு ருசியாக இருந்தால் கட்டுப்பாடுகளை சமாதானப் படுத்திவிட்டு, விரும்பி சாப்பிடுகிறோம்.

முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், பல் வலி, பார்வை குறைபாடு போன்றவை முதல் பெரிய நோய்கள் வரை இளம் வயதில் ஏற்பட தவறான உணவுகள் முக்கிய காரண மாக இருக்கிறது.  

உணவுகளை அதன் இயற்கைத் தன்மையை  மாற்றாமல் உண்ணும் போது அவற்றிலிருந்து  உடலானது தனக்கு வேண்டிய எல்லா சத்துக் களையும் தயாரித்துக் கொள்கிறது. பசுவானது வெறும் பச்சைப்புல்லையும் தண்ணீரை யும் குடித்து விட்டு எல்லா ச்சத்து க்களையும் உடைய பாலை சுரப்பதை நாம் அறிவோம்.

நாம்மனிதர்கள். சூழ்நிலையாலும், எண்ணங்களாலும் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். உணர்ச்சிகள் உடல் இயக்கத்தை நடத்தக்கூடியவை. மூச்சின் வேகமும், இதயத்தின் துடிப்பும் உணர்ச்சிகளால் மாறக்கூடியவை. இதை நினைவில் கொண்டு மூச்சுப் பயிற்சியினை  முக்கியமாக  கடை பிடிக்கவேண்டும். 
          -----------------------------------------------------------------

No comments:

Post a Comment