Saturday 28 February 2015

இயற்கையின் நியதி -2 (The Law of Compensation)



                                          இயற்கையின் நியதி -2
                                                          (The Law of Compensation)   

இயற்கையின் செயல் களை உற்று கவனித்தால் அதில்  ஒரு ஒழுங்கு இருப்பதை காணலாம்.

ஒரு மகிழ்ச்சிக்குப் பிறகு தோல்வியும், ஒரு பெரிய சிரமத்துக்கு பிறகு ஒரு நன்மையும் பல தடவை நமக்கு நடந்திருப்பதை பார்த்திருக்கலாம்.

 மாட்டு வண்டி இருந்த காலத்தில், மெதுவாக சென்றோம். காற்று சுத்தமாக இருந்தது.சுவசக்கோளாறு அவதி இல்லை. மோட்டார் வண்டி வந்த பிறகு வேகமாக செல்கிறோம்  காற்று மாசடைந்து ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதை போல் நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

இதெல்லாம் எதோ தற்செயலாய் நடக்கவில்லை.காரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்னும் சுழற்சியில் நடக்கும் ஒருஇயற்கையின் நியதி ஆகும்.இதை The Law of Compensation   எனலாம் .

ஒன்றை கொடுத்த இறைவன் மற்றொன்றை கொடுப்பதில்லை.திறமையை கொடுத்தவன், அழகை கொடுப்பதில்லை, அழகை கொடுத்தவன் குணத்தை கொடுப்பதில்லை, அழகையும் திறமையையும் கொடுத்தவன் ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. ஆரோக்கியத்தையும் திறமையையும் கொடுத்தவன் பணத்தை கொடுப்பதில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. ஈடு செய்யும் நியதிக்கு இதேபோல்  பலரிடம் பல உதாரணங்களை காண்கிறோம்..

அவரவருக்கு, அந்தந்த வீட்டுக்கு, அந்தந்த ஊருக்கு, அந்தந்த நாட்டுக்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு கொடுப்பினைகள்  நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. ஒன்று போகும் போது அதற்கு அதற்கு ஈடாக வேறொன்று வருகிறது. அல்லது ஒன்று வரும்போது ஏதோ ஒன்று போய் விடுகிறது வருவதற்கும் போவதற்கும் காரணங்கள் இருக்கிறது . .சிறிய நாடாக இருக்கும் ஆனால்  செழிப்பாக இருக்கும், விரிந்து பரந்த நாடாக இருக்கும் ஆனால்  பாலை வனமாக இருக்கும்.

அதிவேக வளர்ச்சி உடனடி வீழ்ச்சி (steep rise sudden fall) இறைவன் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பான் என்று  பழமொழிகள்  உண்டு. இது.
The Law of Compensation   செயலாகும்                        

இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு நாம் வளர வேண்டும், நமக்கு எல்லா வசதியும் வேண்டும்  நாம் என்ன தான்  செய்வது.

எல்லாவற்றிக்கும்  ஒரு விலை உண்டு. அதை இன்றோ, நாளையோ கொடுத்தே ஆகவேண்டும் இயற்கை ஈடு செய்யாமல் விடாது .ஆனால் அந்த விலை என்ன என்று நமக்கு தெரிவதில்லை. பலரும் பல விதமாக கொடுத்துக் கொண்டு தானிருக் கிறோம்.

இந்த  ஈடு செய்யும் நியதியை நாம் பல சமயம் பேசுகிறோம், இயற்கை சிலரை தண்டிப்பதையும் இயற்கை சிலரை தூக்கி விடுவதையும்  காண்கிறோம்.ஆனால் நமக்கு லாப மென்றால்  பல சமயம் நியதியை மறந்து விடுகிறோம். தீயவர்கள் சொகுசாய் இருப்பதற்கும் நல்லவர்கள் துன்பப்படு வதற்கும் காரணம் நமக்கு தெரிவதில்லை.

ஆனால் இயற்கையின் ஈடு செய்யும் நியதியானது   (The Law of Compensation)   ஒவ்வருவருக்காகவும் சதா வேலை செய்து கொண்டிருக்கிறது. யாருக்கு எந்த சமயம் என்ன நடக்கும் யாரறிவார். இதுதான் உண்மை .

நமக்கு வரவேண்டியவை எதுவானாலும் நியாயமான வழியில் வரவேண்டும். நமக்கு இருக்கும் நல்லவைகளை காப்பாற்றிக் கொள்ள       நமது சுயநலத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் The Law of Compensation   நமக்கு சொல்லும் பாடம்.

எளிமை, உழைப்பு, கடமை, நியாயம், அவசரத்துக்கு உதவி என நடந்து, தெரிந்தும் தெரியாமலும் நடந்த தவறுகளை மன்னிக்க வேண்டும், மீண்டும்   தவறு செய்யாதபடிஎன்னை  தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டி ,    
The Law of Compensation - ஐ வணங்குவோம்.

                                        -------------------------------------------

                                                                     

No comments:

Post a Comment