Friday 27 February 2015

இயற்கையின் நியதி -1 (The Law of Harmony )




                                         இயற்கையின் நியதி - 1
                                     (The Law of Harmony )                             

இந்த உலகமும்,இந்த பிரபஞ்சமுமான இந்த இயற்கை ஏதோ தாறுமாறாக இயங்கவில்லை .

அது ஒரு சட்டம்-ஒழுங்கில் கரணம்-காரியம்-பின்விளைவு-பரிகாரம் என்கிற சுழற்சியில், மாறுதல்களை அடைந்துகொண்டே போகிறது.

மாறுதல் என்பது மட்டும்  நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது.

இயற்கையில் நடக்கும் பல்வேறு செயல்களை காணும் மனிதன் இந்த செயல்களெல்லாம் சில  நியதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது என்று உணர்ந்து அவைகளில் தெளிவு படுகிறான்.அவைகளை இயற்கையின் நியதிகள் என்கிறான்.      

ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியில் வித்தியாசமாக ஒலி எழுப்பும் பல இசைக்கருவி களை ஒரே நேரத்தில் உபயோகப்படுத்தி ஒரு இனிமையான இசையை,பாடலை  நமக்குத் தருகிறார்கள்.  வாய்ப்பாட்டுடன், வயலின், மிருதங்கம்,கடம், தம்புரா, ஹார்மோனியம் என பல வித்தியாசமான கருவிகளை ஒரு ஒற்றுமையோடு வாசிப்பதில் அனைத்து கலைஞர்களும் ஒரே மனதுடனும், முழுமனதுடனும் உழைக்கிறார்கள் அவரவர் இஷ்டப்படி ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் வாசித்தால் அதை யாரும் கவனிக்கப்போகிறது இல்லை

பல வித்தியாசங்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருந்தால் பலன் தானே வரும் என்பதுதான் இந்த இயற்கையின் நியதி,  இதை Law of Harmony எனலாம்.

 நீர், வெப்பம், காற்று, நிலம், ஆகாயம் என ஐந்து வித்தியாச மான பொருட்கள் ஒரு ஒற்றுமையான நிலையில் இருக்கும் போது அங்கு உயிரினங்கள் தோன்றுகிறது.  The Law of Harmony என்னும் இயற்கையின் நியதி நடக்கிறது.

நான்கு விளையாட்டு வீரர்கள் நான்கு விதமான குணங்களுடன் இருக்கிறார்கள் அவர்கள் ஒரு அணியாக விளையாடும் போது நம் அணி தான் வெற்றி பெறவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளில் விளையாடினால் தான் வெற்றி பெறமுடியும்.அதற்காக  The Law of Harmony   வேலை செய்யும்.

அதேபோல் ஒரு குழுவில், அல்லது ஒரு குடும்பத்தில் உள்ள வித்தியாச குணமுடைய  அத்தனை பேரும் தங்களுக்குள் ஒரு பொது குறிக்கோளை ஏற்படுத்திக்கொண்டு அது லாபம், வளர்ச்சி, ஒற்றுமை, உறவு தான் முக்கியம்,   என எதுவாகவும் இருக்கலாம். அனைவரும் முழு மனதுடனும் ,அதே கவனத்துடனும் இருந்தால் அவர்களது குறிக்கோளை  The Law of Harmony  என்கிற இயற்கையின் நியதி நிறை வேற்றித் தரும்

நானே மேலானவன், சுயநலம், பொறாமை, ஏமாற்று, ஆதிக்கம், என்கிற உந்துதல்களுடன் ஒருவர் உறவாடினால்கூட   The Law of Harmony என்னும் இயற்கையின் நியதியால் அந்த குழுவிற்கு பலன் கிடைக்காது..

                                     -------------------------------------

                                               

No comments:

Post a Comment