Tuesday 24 February 2015

தத்துவம்

                                          

                                    தத்துவம் 

தான் செய்தது என்ன, தனது சூழ்நிலை செய்தது என்ன, உண்மையில் செய்திருக்க வேண்டியது என்ன என மூன்று கோணங்களிலிருந்தும்  விசாரிப்பதே  சரியான அணுகுமுறையாகும்  

உன்னுடைய தேவைகள் என்ன, சக படைப்புகளின் உரிமை என்ன நியாயமாய் நடக்க வேண்டியதின் அவசியம் என்ன என்பதே கற்க வேண்டிய கல்வி .

காரணம் என்ன, பின் விளைவுகள் என்ன, கட்டுப்பாடுகள் என்ன என ஆராய்ந்து செயல் படுவதே தற்காப்பு

பிறரிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது என்ன, பிறர் செய்தது என்ன, தன்னால் அல்லது பிறரால் ஏற்பட்ட முரண்பாடு என்ன என்று சிந்தித்து பார்த்தால் பிரச்சினைகள் தெளிவாகும்

நடந்தது என்ன நடைமுறை என்ன நியாயம் என்ன என்று சிந்தித்து பார்த்தால் சரி தவறு புரியும்

நமது எல்கை எது பிறர் உரிமை எது இதை நாம் மதித்து  நடக்கவேண்டும் என்பதே சுயக்கட்டுப்பாடு

செய்ய த்தக்கது என்ன செய்யத்தகாதது என்ன தன மனம் போகும் போக்கு என்ன என்று தன்னை சதா கண்காணித்து கட்டுப்பட்டு நடப்பதே பொறுமை

பிரச்சினை என்ன, முடிவு என்ன வேண்டும்,   அதற்குரிய பல தீர்வுகள் என்ன அதில் சிறந்த தீர்வு எது என ஆராய்ந்து அதைச் செய்வதே பிரச்சினையை தீர்க்கும் சரியான வழியாகும்.

செய்ய வேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன செய்தே ஆகவேண்டியது என்ன என சிந்தித்து செய்தால் தவறுகள் குறையும் .

தன்னை காப்பாற்றிக்கொள்வதும், தன்னை சரிப்படுத்திகொள்வதும், தன்னை பிறருக்கு பயனாக்கி கொள்வதும் தன்னுடை கடமைகள் என்று நடக்கவேண்டும்

எளிமை, கட்டுப்பாடு, மனிதாபிமானம், நியாயம்  இவை களை கடைபிடித்து வாழும்வரை மனிதன் குற்றவாளி ஆவதில்லை

உடல் இயங்கும் விதம், மனம் இயங்கும் விதம், இயற்கை இயங்கும் விதம் இவைகளை புரிந்து அதன்படி வாழ்ந்தால் உலகமும் ஆரோக்கியமாய் வாழும்

விருப்பு -வெறுப்பால் மனிதன் செயல்படுகிறான், அதிலுள்ள சரி-தவறை நியாயம் பார்க்கிறது, அதற்கேற்ப சூழ்நிலைகளை சாதக-பாதகமாய் காலம் கொண்டுவந்து நிறுத்துகிறது

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.காரணங்களை விசாரியுங்கள் உண்மையான காரணம் தெரியும்போது பரிகாரம் காண்பது சுலபம் .

நியாயமே இயற்கையின் சாரம். நியாயமாய் நடப்பதே வலிமை ,நியாயத்துக்கு பணிவதே உயர்வு, நியாயத்தை மறுப்பது ஆபத்து .

மனத்தை  அன்பு, கவர்ச்சி, சுகம் முதலியன எளிதில் ஈர்த்து விடும். மனதிற்கு உண்மை, பொய் பற்றி கவலையில்லை. மனம் தனது நம்பிக்கையை செயலாக்க முந்துகிறது. உலக சுகங்களை பெரிய பாக்கியம் என்று ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

பரஸ்பரம் மரியாதையால் ஒற்றுமை நிலைக்கும். ஒற்றுமைஅழிய சுயநலமே காரணம்.  நியாயமாய் நடப்பதே ஒற்றுமைக்கு வழி. தவறை திருத்திக் கொள்வதே ஒற்றுமைக்கு நல்லது.

பணமிருந்தால் மகிழ்ச்சி நிச்சயமில்லை, பணமில்லா விட்டால் சோகம் நிச்சயம், சட்டம், ஒழுங்கை மதிக்காத வளர்ச்சி நெருக்கடியில் கொண்டு நிறுத்தும் .

உதவியும் மரியாதையும் ஒருவழிப்பாதையல்ல. உண்மையும் நியாயமும் உறவுக்கு நல்லது

போலித்தனம் உங்களை காட்டிக்கொடுத்துவிடும், சாமர்த்தியபேச்சு உங்களை குற்றவாளியாக்கிவிடும். சுயநலம்  உறவுகளை பிரித்து விடும், யாரை நம்பியும் யாரும் இல்லை.

விதி வலிமையானது. முயற்சி  வலிமையானது. பரிகாரம் வலிமையானது
இவைகளுக்கு மேலாக பிரார்த்தனை வலிமையானது.

விதி என்பது நியாயத்தின் தீர்ப்பு, விதிக்கு பரிகாரம் வலிய சென்று உதவுவது, விதிக்கு மருந்து விடாமுயற்சி, விதியை தணிக்க பிரார்த்தனை உதவும்

அநியாயத்தை மக்கள் கண்டிக்கிறார்கள்,சட்டம் தண்டிக்கிறது,அநியாயத்துக்கு இயற்கை ஒத்துழைப்பதில்லை, காலம் கருணை காட்டமறுக்கிறது

கடவுளே நான் உன்னைச்சார்ந்தவன் ,நான் உன்னிடம் சரணடைகிறேன், சதா எனக்கு நல்லெண்ணங்களையும்  நல்ல சூழ்நிலையையும் தந்து உதவுங்கள் என்பதே பிரார்த்தனை

                                           ------------------------------------------

No comments:

Post a Comment