நியுட்ரினோ என்னும் கடவுள் துகள்
எங்கும் நிறைந்த (omni present )
எல்லாம் தெரிந்த (omni scent)
எல்லா சக்தியும் உடைய (omni potent)
எப்போதும் விழித்திருக்கும்(omni awakent)
ஒரு பொருள் அல்லது உயிரினம் தான் கடவுள். இவைதான் கடவுளுக்குரிய அடையாளம் என்று எல்லா மதமும் எல்லா ஞானிகளும், மகான்களும், கூறுகிறார்கள் இந்த அடையாளங்களை உடைய ஒரு உயிரினத்தை இதுவரை மனிதர்கள் யாரும் பார்த்ததே இல்லை. கடந்த ஐநூறு வருடங்களில் மனிதன் இந்த பிரபஞ்சத்தை தீவிர மாக ஆராய்ந்து பிரபஞ்சத்திலுள்ள பல சக்தி களையும், சட்டங்களையும் உணர்ந்து, சோதித்து, நிரூபித்து கல்வியாக்கி இருக்கிறான்
ஒரு பொருள் அல்லது உயிரினம் தான் கடவுள். இவைதான் கடவுளுக்குரிய அடையாளம் என்று எல்லா மதமும் எல்லா ஞானிகளும், மகான்களும், கூறுகிறார்கள் இந்த அடையாளங்களை உடைய ஒரு உயிரினத்தை இதுவரை மனிதர்கள் யாரும் பார்த்ததே இல்லை. கடந்த ஐநூறு வருடங்களில் மனிதன் இந்த பிரபஞ்சத்தை தீவிர மாக ஆராய்ந்து பிரபஞ்சத்திலுள்ள பல சக்தி களையும், சட்டங்களையும் உணர்ந்து, சோதித்து, நிரூபித்து கல்வியாக்கி இருக்கிறான்
1.புவியீர்ப்பு சக்தி
2.மின்காந்த சக்தி
3.அணு சக்தி
4.பௌதீகவிதிகள்
5.இராசயனவிதிகள்
6.கணிதவிதிகள்
என்பன அவற்றுள் சில.
இயற்கையின் சக்திகளை பற்றிய விஞ்ஞானிகளின் அறிவு முழுமை பெறவில்லை. பிரபஞ்ச விதிகளுக்குபின்னால் சர்வ சக்தி ஒன்று இயங்குகிறது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒப்புகொள்கின்றனர் சமீபத்தில் கண்டுபிடித்த நியுட்ரினோவை கடவுள் துகள்கள் என்கின்றனர். அணுவை விட கண்ணு க்குத்தெரியாத நியுட்ரினோ என்னும் துகள்கள் பற்றி சமீபத்தில் தான் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த துகள்களை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக தமிழ் நாட்டில் தேனீ என்னும் இடத்தில இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைய போகிறார்கள்.
இயற்கையின் சக்திகளை பற்றிய விஞ்ஞானிகளின் அறிவு முழுமை பெறவில்லை. பிரபஞ்ச விதிகளுக்குபின்னால் சர்வ சக்தி ஒன்று இயங்குகிறது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒப்புகொள்கின்றனர் சமீபத்தில் கண்டுபிடித்த நியுட்ரினோவை கடவுள் துகள்கள் என்கின்றனர். அணுவை விட கண்ணு க்குத்தெரியாத நியுட்ரினோ என்னும் துகள்கள் பற்றி சமீபத்தில் தான் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த துகள்களை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக தமிழ் நாட்டில் தேனீ என்னும் இடத்தில இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைய போகிறார்கள்.
நியுட்ரினோ துகள்கள் தினமும் கோடானகோடி கணக்கில் நம்மை கடந்து செல்கின்றன. மலையிலும் கடலிலும் மனித உடலிலும் புகுந்து செல்கின்றன. பூமியின் ஒரு பக்கம் புகுந்து மறுபக்கம் வெளிவருகின்றன என்று சொல்லி மேலும் விஞ்ஞானிகள் இதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இத்துகள்களை நீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, காற்று கரைக்காது, மண் மக்கச்செய்யாது. கடல், மலை, மண், குளிர் ,வெப்பம் என அனைத்திலும் புகுந்து இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறது தண்ணீ ரினுள் மூழ்கி இருக்கும் பஞ்சினைப்போல் நாம் நியுட்ரினோவில் மூழ்கி இருக்கிறோம். உடல் முழுவதும் மனம் நிறைந்திருபதுபோல் பிரபஞ்சம் முழுதும் கடவுள் நிறைந்திருக்கிறார். மனமானது மனிதனின் மூளையின் வழியாக அவனை இயக்குகிறது போல் இறைவன் இயற்கையின் நியதிகள் வழியாக பிரபஞ்சத்தை இயக்குகிறார். என்றெல்லாம் நமது ஞானிகள் சொன்னதை இன்றைய விஞ்ஞானிகள் அவைகளை நிரூபிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, நியாயம், சமநிலை, ஈடு, எளிமை, இயற்கையை சீர் குலைக்காமல் இருப்பது இவை தான் இயற்கை நியதிகளின் சாரம்.
ஆனால் இன்றைய மனிதனின் எண்ணங்களும், நோக்கங்களும் எந்தவகை யானது அவற்றை எப்படி சரிப்படுத்துவது என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மனித இனம் இருக்கிறது.
உயிரினங்களுக்கு வேண்டியது தனக்குரிய இயற்கையான உணவு மட்டுமே. ஆனால், மனிதன் மட்டுமே இயற்கை யில் காணும் வளங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்து அதை வளர்ச்சி என்று சொல்லி இயற்கையை கெடுத்து, தனக்கு எல்லாவழியிலும் சிரமங்களை ஏற்படுத்திக்கொள்கிறான்.மனிதனின் துயரங்களுக்கு கரணம் யார் என்று ஆராய்ந்து பார்த்தல் அது மனிதனின் செயல்கள் என்பதில் தான் போய் முடியும்.
மனித உயிர்கள் உலகில் பல மாற்றங்களை செய்து அதன் பின்விளைவுகளையும் அனுபவிப்பதால் மனிதனுக்கு கடவுள் என்னும் நினைப்பு ஏற்படுகிறது. வெறும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த மனித இனத்துக்கு கடவுள் நினைப்பு இல்லாதிருந்தது. இதுதான் உண்மை. கடவுள் என்று தனியாக எங்கேயும் கிடையாது, ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நமக்கு துன்பம் வரும்போது கடவுளை அதிகமாக நினைக்கிறோம். இன்பம் அனுபவிக்கும் போது அவ்வளவாக நினைப்பதில்லை.
மனிதன் இயற்கையாய் வாழ்ந்த காலம் வரை அவனுக்குத் துன்பம் இல்லை. இயற்கையை மாற்றும போது மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். இயற்கையாய் வாழ்வதும் எளிதன்று, கடினமே. ஆனால், அதுதான் எல்லா படைப்பு களும் வாழும் வாழ்க்கை. அது தான் இயற்கை விதித்த வாழ்க்கை.
நாம் இயற்கை யை விட்டு வெகுதூரம் வந்து வலி தாங்க முடியாமல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நமக்கு உதவி செய்யாமல் எங்கோ இருக்கிறார் என்று அவரவர் தேவைகளுக்கு அவரவர் வழியில் கடவுளை நினைக்கிறோம். ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நம்முள் கடவுள் நிறைந்திருக்கிறார், நாம் அவருள் மூழ்கியிருக்கிறோம்.
---------------------------------------------
ஆனால் இன்றைய மனிதனின் எண்ணங்களும், நோக்கங்களும் எந்தவகை யானது அவற்றை எப்படி சரிப்படுத்துவது என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மனித இனம் இருக்கிறது.
உயிரினங்களுக்கு வேண்டியது தனக்குரிய இயற்கையான உணவு மட்டுமே. ஆனால், மனிதன் மட்டுமே இயற்கை யில் காணும் வளங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்து அதை வளர்ச்சி என்று சொல்லி இயற்கையை கெடுத்து, தனக்கு எல்லாவழியிலும் சிரமங்களை ஏற்படுத்திக்கொள்கிறான்.மனிதனின் துயரங்களுக்கு கரணம் யார் என்று ஆராய்ந்து பார்த்தல் அது மனிதனின் செயல்கள் என்பதில் தான் போய் முடியும்.
மனித உயிர்கள் உலகில் பல மாற்றங்களை செய்து அதன் பின்விளைவுகளையும் அனுபவிப்பதால் மனிதனுக்கு கடவுள் என்னும் நினைப்பு ஏற்படுகிறது. வெறும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த மனித இனத்துக்கு கடவுள் நினைப்பு இல்லாதிருந்தது. இதுதான் உண்மை. கடவுள் என்று தனியாக எங்கேயும் கிடையாது, ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நமக்கு துன்பம் வரும்போது கடவுளை அதிகமாக நினைக்கிறோம். இன்பம் அனுபவிக்கும் போது அவ்வளவாக நினைப்பதில்லை.
மனிதன் இயற்கையாய் வாழ்ந்த காலம் வரை அவனுக்குத் துன்பம் இல்லை. இயற்கையை மாற்றும போது மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். இயற்கையாய் வாழ்வதும் எளிதன்று, கடினமே. ஆனால், அதுதான் எல்லா படைப்பு களும் வாழும் வாழ்க்கை. அது தான் இயற்கை விதித்த வாழ்க்கை.
நாம் இயற்கை யை விட்டு வெகுதூரம் வந்து வலி தாங்க முடியாமல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நமக்கு உதவி செய்யாமல் எங்கோ இருக்கிறார் என்று அவரவர் தேவைகளுக்கு அவரவர் வழியில் கடவுளை நினைக்கிறோம். ஆனால், எல்லா இடத்திலும் கடவுள் பரவிகிடக்கிறார். நம்முள் கடவுள் நிறைந்திருக்கிறார், நாம் அவருள் மூழ்கியிருக்கிறோம்.
---------------------------------------------
No comments:
Post a Comment