Sunday 22 February 2015

மனிதனும் தவறும்

                                   மனிதனும் தவறும் 

தவறு செய்வது மனித இயல்பு .

தவறுகள் பல விதம் 

தவறு களுக்கு காரணம் உண்டு .

தவறுகளுக்கு பின்விளைவுகள் உண்டு. 

தவறுகளுக்கு பரிகாரம் உண்டு.

சில தவறுகளுக்கு மன்னிப்பும், சில தவறுகளுக்கு தண்டனையும்  

உண்டு. 

சிலருடைய தவறுகளுக்கு மன்னிப்பும், சிலருடைய தவறுகளுக்கு 

தண்டனையும்  உண்டு

நமது தவறுகள்  நமக்குத்  தெரியாது 

மது தவறுகளை எளிதில் மறந்து விடுகிறோம் 

 நமது தவறுகளை எளிதாய் எடுத்துக் கொள்கிறோம்

 நமது தவறுகளை நாம் பெரிது படுத்திக்கொள்வதில்லை

 நமது தவறுகளின் காரணங்களை நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை 

நமது தவறுகளுக்கு எதிர்ப்பு இல்லாதபோது தொடர்ந்து செய்கிறோம் 

நமது தவறுகளை மறந்து நடக்கிறோம் 

நமது மனதை சமாதானம் செய்து சில சமயம் தவறு செய்கிறோம் 

நமது தவறைஒரு வேளை உணர்ந்தால் அதை நினைத்து குற்ற

உணர்வால் வேதனைப்படுகிறோம் 

நமது தவறை மறைக்க பாதிக்க பட்டவனையே குற்றவாளி 

யாக்குகிறோம் . 

நமது தவறுகளுக்கு எதிர்ப்பு ஏற்படும்போது சாமர்த்தியம் பேசி

தப்பிக்கிறோம்

 நமது தவறுகளின் பின்விளைவுகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாது

நமது தவறுகளுக்குரிய தண்டனை கிடைக்கும் போது துன்பப்படுகிறோம்

 நமது தவறுகளை உணர்ந்து நம்மை சரிபடுத்திக்கொள்வது அதிசயம்

நமது தவறால் பிறருக்கு ஏற்ப்பட்ட பாதிப்பிர்க்காக வருந்துவது அபூர்வம்

நமது தவறை உணர்ந்து, ஏற்று, பரிகாரம் செய்வது ஆச்சரியமான குணம் 

தன் தவறு களை உணர்பவர்களுக்கு பிரச்சினைகள் குறைவு 

தவறை உணர்ந்தால் தவறு பாதியாக குறையும்.

தவறை நியாயப்படுத்தினால் தவறு இரட்டிப்பாகும்.

மேலும் கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

பழசிற்கு பரிகாரத்தைவிட, புதுசு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவறை செய்தவனும் நியாயம் கேட்கிறான்.அந்த தவறால் பாதிக்கப் 

பட்டவனும் நியாயம் கேட்டு அலைகிறான்.

தெரியாமல் செய்த தவறுகளை பெரிது படுத்தாமல் விடவேண்டும்

அடிக்கடி தவறு செய்தால் உணர்த்த வேண்டும்

செய்த தவறுக்கு வருந்தினால் மன்னிக்கவேண்டும்

தொடர்ந்து தவறு செய்தால் கண்டிக்கவேண்டும்

தெரிந்தே திட்ட மிட்டு தவறு செய்தால் துண்டிக்கவேண்டும்

நடந்த தவறுகளுக்கு வருந்தி உண்மையிலேயே சமாதானம் பேசும் போது 

ஏற்றுக்கொள்ளவேண்டும்

நடந்த பிரச்சினை களுக்கு நான் எந்த  அளவு காரணம் என்று நேர்மையாக 

தனக்குத்தானே பல கேள்விகளை கேட்டு சுய விசாரணை செய்து 

பார்க்கும் போதுதான் பிரச்சனையில் ன்னுடைய பங்கு என்ன என்பது 

புரியு ம். அப்போது தான் தனக்குள் வருத்தம் ஏற்பட்டு திருந்த த்தோன்றும் . 


நமது வாழ்க்கையிலும், மகிழ்ச்சியிலும், அக்கறை உள்ளவர்கள் நம்முடைய 

தவறுகளை கூறும்போது தர்க்கம் பேசாமல் கேட்கவேண்டும்.


(தன தவறுகளை தனக்கு உறைக்கும் படி கூற ஆள் இல்லாத திறமையான

அரசன் தன்னை கெடுக்க யாரும் இல்லாத போதும் தன தவறுகளாலே

கெட்டுப் போவான் என்கிறார் வள்ளுவர் .குறள் 448.)

நேர்மையான சுயவிசாரணை செய்து பார்க்காதவரை தன்னுள் 

மறைந்து கிடக்கும் நானே மேலானவன்,நான் சொல்வதே சரி,நான் செய்ததே 

சரி என்கிற தற்காப்பு உணர்வுகள் சாமர்த்தியம் பேசி தவறை நியாயப் 

படுத்தும்.பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கும்.பிரச்சினைகள் தொடரும்.

நமது தவறுகளால் பாதிக்கப்படப்போவது யார் யார், யாருடைய மனக்கஷ்ட 

ங்களுக்கெல்லாம் நாம் காரணமாகி விட்டோம் என சிந்தித்தால் மனம்

வருந்தும்.வருந்திய மனம் தான் திருந்தும்.


----------------------------------------------------





------------------------------------------------------------------

No comments:

Post a Comment