மனத்தின் குணம்
இதுவரை பார்த்தது கேட்டது அனுபவித்தது நம்பியது இதுதான் மனம்
மனம் மூளையின ஆரோக்கியத்தைப் பொறுத்து உடலை செயல் படுத்துகிறது
சுகத்தின்,ருசியின் அடிமையாகும்
பாராட்டுக்கு ஏங்கும்
நானே மேலானவன் என்று நடக்கும்
நிலை மாறும் போது குணம் மாறும்
கெஞ்சினால் மிஞ்சும் ,மிஞ்சினால் கெஞ்சும்
யூகிப்பதை விசாரிக்காமல் நம்பும்
கேள்விப்படுவதை விசாரிக்காமல் நம்பும்
மிகைப்படுத்திப்பேசும்
நோக்கத்தை அடைந்தபிறகும் திருப்திபடாமல் தாவிக்கொண்டிருக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் தன்போக்கில் போகும்
நான் ,என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
ஆசையாலும் கோபத்தாலும் கிளர்ச்சிவயப்பட்டு தன்னிலை மறக்கும்
வலி,அவமானம் ,தண்டனைக்கு பயப்படும்
பயிற்சிகளை மறக்காமல் நினைவில் கொள்ளும்
வைராக்கியத்தை நிறைவேற்றிப் பார்க்க வழி தேடும்
பசியாய் இருக்கும் போது பொறுமையாய் இராது
சதா பிறரை மதிப்பீடுசெய்து கொண்டே இருக்கும்
தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்
அக்கரை பச்சையை உயர்வாய் யூகிக்கும்
குற்ற உணர்வால் நிம்மதி இழக்கும்
மகிழ்ச்சி ,அமைதி வேண்டி தவிக்கும்
அதிர்ச்சி செய்தியால் சில சமயம் இதயத்துடிப்பை நிறுத்திவிடும்.
உள்ளுக்குள் நினைப் பதை வெளியே பார்க்க முயற்சி செய்யும்
உண்மை-பொய் பற்றிக்கவலைப்படாமல் தன் நம்பிக்கையை செயல்படுத்தும்.
பதட்டத்தாலும்,கவலையாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்
பின்விளைவுகளை யோசிக்காமல் செயல் படும்
காரணங்களை விசாரிக்காமல் அவசரப்படும்
நியாயத்தைப் பற்றி க்கவலைப்படாமல்சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்து கொள்ளும்.
இயற்கை நியதிகளின் வலிமையை அறியாமல் நானேமேலானவன்என்று நடக்கும்
உடல் களைப்படையும் போது மனமும் களைப்படையும்.
வெற்றியின் உயரத்தில் போன மனம் கீழேவிழும்போது தத்துவத்தை தேடும்
தோல்வி இழப்பால் துவண்ட மனதை தத்துவம் தான் சரிப்படுத்தும்
மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே.
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்
செத்தாரைப்போல் திரிமனமே
உலக சுகங்களை பெரிய பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்..
உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை சிறப்பாக்கி, மூளையை தூண்டி மனதை உற்சாகபடுத்துகிறது
உறக்கம்,பிடித்த இசை,புத்தகம்,பொழுதுபோக்கு போன்றவை மனதை புத்துணர்ச்சி படுத்தும்
சதாநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனதின் மறுபக்கத்தின் திறவுகோல்தான் தியானம்
நிமிர்ந்திருந்து கண்களை மூடி சிந்தனை களை நிறுத்தி ஏகாந்த பேரமைதியாய் இருப்பதே தியானம். அவரவர் வைராக்கியம் மற்றும் பயிற்சியின் தீவீரத்தை பொறுத்து மனத்தின் வழியாக ஆன்மீக அனுபவங்களை பெறலாம்.
உண்மையென்று உணர்ந்த சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து திரும்ப, திரும்ப சொல்லிகொண்டிருப்பது சரியான ஒரு மனப்பயிற்சியாகும்.
மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்.
--------------------------------------------------
இதுவரை பார்த்தது கேட்டது அனுபவித்தது நம்பியது இதுதான் மனம்
மனம் மூளையின ஆரோக்கியத்தைப் பொறுத்து உடலை செயல் படுத்துகிறது
சுகத்தின்,ருசியின் அடிமையாகும்
பாராட்டுக்கு ஏங்கும்
நானே மேலானவன் என்று நடக்கும்
நிலை மாறும் போது குணம் மாறும்
கெஞ்சினால் மிஞ்சும் ,மிஞ்சினால் கெஞ்சும்
யூகிப்பதை விசாரிக்காமல் நம்பும்
கேள்விப்படுவதை விசாரிக்காமல் நம்பும்
மிகைப்படுத்திப்பேசும்
நோக்கத்தை அடைந்தபிறகும் திருப்திபடாமல் தாவிக்கொண்டிருக்கும்
சரி-தவறு பற்றி கவலைப் படாமல் தன்போக்கில் போகும்
நான் ,என்னுடைய என்று உணர்ச்சி வயப்பட்டு நிற்கும்
ஆசையாலும் கோபத்தாலும் கிளர்ச்சிவயப்பட்டு தன்னிலை மறக்கும்
வலி,அவமானம் ,தண்டனைக்கு பயப்படும்
பயிற்சிகளை மறக்காமல் நினைவில் கொள்ளும்
வைராக்கியத்தை நிறைவேற்றிப் பார்க்க வழி தேடும்
பசியாய் இருக்கும் போது பொறுமையாய் இராது
சதா பிறரை மதிப்பீடுசெய்து கொண்டே இருக்கும்
தவறிலிருந்து தப்பிக்க சாமர்த்தியம் பேசும்
அக்கரை பச்சையை உயர்வாய் யூகிக்கும்
குற்ற உணர்வால் நிம்மதி இழக்கும்
மகிழ்ச்சி ,அமைதி வேண்டி தவிக்கும்
அதிர்ச்சி செய்தியால் சில சமயம் இதயத்துடிப்பை நிறுத்திவிடும்.
உள்ளுக்குள் நினைப் பதை வெளியே பார்க்க முயற்சி செய்யும்
உண்மை-பொய் பற்றிக்கவலைப்படாமல் தன் நம்பிக்கையை செயல்படுத்தும்.
பதட்டத்தாலும்,கவலையாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்
பின்விளைவுகளை யோசிக்காமல் செயல் படும்
காரணங்களை விசாரிக்காமல் அவசரப்படும்
நியாயத்தைப் பற்றி க்கவலைப்படாமல்சுயநலத்தில் பிடிவாதமாய் இருக்கும்
மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்து கொள்ளும்.
இயற்கை நியதிகளின் வலிமையை அறியாமல் நானேமேலானவன்என்று நடக்கும்
உடல் களைப்படையும் போது மனமும் களைப்படையும்.
வெற்றியின் உயரத்தில் போன மனம் கீழேவிழும்போது தத்துவத்தை தேடும்
தோல்வி இழப்பால் துவண்ட மனதை தத்துவம் தான் சரிப்படுத்தும்
மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே.
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்
செத்தாரைப்போல் திரிமனமே
உலக சுகங்களை பெரிய பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்..
உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை சிறப்பாக்கி, மூளையை தூண்டி மனதை உற்சாகபடுத்துகிறது
உறக்கம்,பிடித்த இசை,புத்தகம்,பொழுதுபோக்கு போன்றவை மனதை புத்துணர்ச்சி படுத்தும்
சதாநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனதின் மறுபக்கத்தின் திறவுகோல்தான் தியானம்
நிமிர்ந்திருந்து கண்களை மூடி சிந்தனை களை நிறுத்தி ஏகாந்த பேரமைதியாய் இருப்பதே தியானம். அவரவர் வைராக்கியம் மற்றும் பயிற்சியின் தீவீரத்தை பொறுத்து மனத்தின் வழியாக ஆன்மீக அனுபவங்களை பெறலாம்.
உண்மையென்று உணர்ந்த சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து திரும்ப, திரும்ப சொல்லிகொண்டிருப்பது சரியான ஒரு மனப்பயிற்சியாகும்.
மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்.
--------------------------------------------------
No comments:
Post a Comment