Saturday 23 May 2015

மருத்துவ சோதனை

                                           மருத்துவ சோதனை 

உண்பதும், தினசரி வேலைகளை செய்வதும் சிறந்த ஆரோக்கியம் ஆகாது.
மருத்துவ சோதனை உடலின் ஆரோக்கியம் பற்றியும், ஆரோக்கியகுறைவு பற்றியும் நமக்குத் தெரியப் படுத்துகிறது.

ஆரோக்கியத்தை காக்கவும், நோய்களின் ஆரம்ப நிலையிலே சிகிச்சை எடுக்கவும், நோய் வலிமையடையாமல் தடுக்கவும், வாழ்க்கையை அச்சுறுத்தும் நிலைக்கு கொண்டுவராம லிருக்கவும் மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம்.

சரியான மருத்துவ சோதனைகளை சரியான நேரத்தில் செய்து உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவேண்டும். குறைகள் இருக்குமானால் அதை ஆரம்ப நிலை எச்சரிக்கை அடையாளமாக எடுத்துக் கொண்டு தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்வதால் பல எதிர்கால  நோய்களை தடுக்கலாம்.

காலா காலத்தில் செய்து கொள்ளும் மருத்துவ சோதனை உடலையும், மனதையும் நல்ல நிலையில் வைத்திருக்கும்.

மருத்துவ சோதனைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது சேமிப்பு, வாழ்க்கை, மகிழ்ச்சி போன்றவை ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீங்கள்தான் தீவிர கவனத்துடன் இருக்கவேண்டும்.

உங்களை சுற்றி இருப்பவர்களோ, அல்லது உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுபோன்ற பிரச்சினைகளோ உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாது. உடல் பராமரிப்பு மீதுள்ள அலட்சியமே அதிகமாய் இருக்கும்.

உணவு, உடற்பயிற்சி, உடல் எடையில் கவனம் செலுத்துங்கள். புகைத்தல், மது அருந்துதல், சீனி இனிப்புகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

மன அழுத்தம், பரபரப்பு,  ஆத்திரம், பரிதவிப்பு  போன்றவற்றை குறையுங்கள்.
மருத்துவர் நீண்ட நாட்களுக்குத்தரும் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை யின்றி நிறுத்தக்கூடாது.

மருத்துவர் மாத்திரை எழுதி தரும்போது அந்த மாத்திரை உடலுள் என்ன பலனை தரும், வேறு மாத்திரையுடன் சாப்பிடலாமா, உணவு கட்டுப்பாடு என்ன, என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். மாத்திரைகளின் பலனை அறிந்து சாப்பிடுவதால் அதன் பலனை நம்மால் உணர முடியும்.
தற்போது சாப்பிட்டு வரும் அனைத்து மாத்திரை களின் பட்டியலையும் ஒவ்வொரு முறையும் அவரிடம் தரவேண்டும்.

ஐபுப்ருபன்(IBUPROFEN)  மாத்திரையை எந்த ஒரு BP மாத்திரையுடனும் சேர்த்து உண்ணக்கூடாது. மாத்திரைகள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போக வில்லையானால் புதிய நோய்கள் வரக் காரணமாகும். BP க்கு மாத்திரை சாப்பிட்டாலும், உணவில் உப்பை குறைத்து, கொழுப்பை குறைத்து, சரியான உணவையும், தினசரி உடற்பயிற்சியையும் செய்து வருவது நல்லது. BP மாத்திரைகள் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத் தக்கூடியது.

வைட்டமின் மாத்திரைகளை வேறெந்த மாத்திரைகளுடனும் சேர்த்து உண்ணாமல் தனியாக உண்ண வேண்டும்.

ஒவ்வொரு முறை மருத்துவரிடம் செல்லும் போதும் எடை, இரத்த அழுத்தம், உண்ணும் மாத்திரைகள் பற்றியும், தினசரி உணவு, உடற்பயிற்சி போன்ற வற்றையும் உடலில் ஏதாவது அசௌகரியம் இருக்குமானால் அதைப்பற்றியும் பேசுங்கள்.

ஆரோக்கியம் பற்றியும், நோய்பற்றியும் சிறுநீர் சோதனையிலும் அறியலாம்.
எதை எல்லாம் உண்ணுகிறோம், எதை எல்லாம் குடிக்கிறோம், எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறோம் என்பது அனைத்தும் சிறுநீரில் வெளியாகும் கழிவு களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகத்தின் ஆரோக்கியம், பல வீனம் சிறு நீர் சோதனையில் தெரியும். எந்த உணவை குறைக்கவேண்டும், எந்த உணவு பற்றாக்குறை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சிறுநீர் சோதனை முடிவுகளை அலட்சியம் செய்யக்கூடாது. நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் சிறுநீரகத்துக்கு வந்து கழிவுகள் பிரிக்கப்பட்டு சிறுநீரில் வெளியேறுகின்றன. சிறு நீரில் நூற்றுக்கு மேற்பட்ட கழிவுகள் இருக்கின்றன.

மருத்துவ சோதனை செய்து கொள்வதில் அலட்சியமாய் இருக்காதீர்கள். ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை இழந்து விட்டால் உணவுக்கட்டுப்பாடும், மருந்து மாத்திரைகளும், வீண் பணச்செலவும் அதனால் மனச்சோர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

                           --------------------------------------------------------



        
  

No comments:

Post a Comment