Wednesday 13 May 2015

உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்

                                             உடற்பயிற்சி 

உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு தெம்பையும், உணர்ச்சிகளுக்கு கட்டுப்பாட்டையும் தருகிறது.

உடல் நகர்வதற்காக படைக்கப்பட்டிருகிறது. உட்கார்ந்தே இருப்பதற்காக அல்ல.உடல் அவையவங்கள் Use it or Lose it  என்பதையே உணர்த்து கின்றன.

உடற்பயிற்சி நோய் வராமல் தடுக்கவும், வந்த நோய்யை குணப்படுத்தவும் உதவுகிறது.

உடலானது உழைப்பில் அல்லது உடற்பயிற்சியில் இருக்கும்  போது சத்துக்கள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.

தினசரி செய்யும் உடற்பயிற்சிகள்  ரத்தத்தில் நல்ல கொழுப்பை ( HDL ) அதிகமாக்கி,கெட்ட கொழுப்புகளை  (LDL, Triglycerides) குறைக்கிறது. உடற்பயிற்சி இல்லையெனில் இரத்தத்தில் LDL அதிகமாகியும், HDL குறைந்தும் விடுகிறது.

உடற்பயிற்சி உடலுக்கு வலிமையையும், வளைவுத்தன்மையையும், நீண்டநேரம் தாங்கும் சக்தியையும் தருகிறது.

வலிமை:- தசைகளை வலிமையாக்கி பாரங்களை இழுக்கவும்,தள்ளவும், தூக்கவும், சுமக்கவும் முடிகிறது.

வளைவுத்தன்மை:- உடலிலுள்ள மூட்டு மற்றும்  தசைகளின் விறைப்பை குறையச் செய்து, குனியவும்,நிமிரவும்,நீட்டவும்,மடக்கவும், முறுக்கவும், சுற்றவும்,குதிக்கவும் முடிகிறது.

தாங்கும் நேரம்:- ஓய்வின்றி நீண்டநேரம் ஒரே சீராக செய்யமுடியும் தன்மையை தக்கவைக்கிறது.

தான் எவ்வளவுஉறுதியாய் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தொரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்காக செய்யும் உடற்பயிற்சி மூளையில் பல ரசாயனங்களை சுரக்கச்செய்து மன அழுத்தங்களைக் குறைக்கிறது. 

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி எல்லா திசுக்கழுக்கும் சரியான அளவு பிராணவாயுவையும், சத்துக்களையும் கிடைக்கச்செய்து    உடலை ஆரோக்கியமாக்குகிறது.

உடற்பயிற்சியின் போதுள்ள மூச்சு அதிகமான தசைகளை இயங்கச் செய்கிறது.

உடற்பயிற்சி இரவில் சீக்கிரமாய் தூக்கம் வரச் செய்து, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.   

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்பொழுதே உடற்பயிற்சியை மேற் கொண்டால், நோய்வரும் வாய்ப்புகள் இருக்காது.

உடற்பயிற்சி செய்யும் போது நன்றாக, இயல்பாக சுவாசிப்பது நல்லது. மூச்சை அடக்குவது கெடுதலாகும். 

தினசரி உண்ணும் உணவுகள் எரிக்கப் படவேண்டும். அவை உடலில் சேமிப்பாக விடக்கூடாது.

நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள், நீச்சல், படிஏறுதல், தரைதுடைத்தல் என எதாவது ஒன்றையோ, சேர்த்தோ செய்வது நல்லது.

இரத்த அழுத்தம், உடல் எடை, சுகர்,      கொலஸ்டிரால் போன்றவை சரியான அளவில் இருந்தாலும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நோய், மற்றும் இயலாமையை தள்ளிப்போடலாம்.

உடற்பயிற்சியை அலட்சியப் படுத்துபவர்கள் நோய்க்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சிக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி அதை செய்யாதவர்கள், இளம் வயதிலேயே முதுமைத் தன்மையை அடைகிறார்கள். வாழ்நாள்  முழுவதையும்  நோய்க்காக ஒதுக்குகிறார்கள்.

குனியவும், நிமிரவும், நீட்டவும், மடக்கவும், முறுக்கவும், சுற்றவும், ஆழமாக மூச்சுவிடுதலையும் குறைந்த பட்சமாக காலையில் செய்தாக வேண்டும்.

காலை உடற்பயிற்சி சிறந்தது. காலையின் குளிர்ச்சியான காற்று, அமைதியான மனம், காலியாயுள்ள வயிறு, உடலின் வளைவுத்தன்மை எல்லாம் உடற்பயிற்சிக்கு சாதகமானது. சேமிப்பிலுள்ள இனிப்பும், கொழுப்பும் எரிக்கப்படுகிறது. உப்பு வேர்வை வழியே வெளியேறுகிறது. உடற்பயிற்சியை முடித்து விட்டு இனிப்பையும், உப்பையும், கொழுப்பையும் உண்பதால் பலன் ஏதும் இருக்காது.

ஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.அதிக நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பது மூட்டுக்களையும், தசை களையும்  விறைப்பாக்கி விடுகிறது.

முக்கியமாக முதுகிலுள்ள தசைகள் விரைவாக சிறுவயதிலேயே வளையும் தன்மையை இழந்து விறைப்பாகி விடுகின்றன. 

குறைவான நடையும், அதிகம் உட்கார்த்திருப்பதும் உடல் எடை கூடுவதற்கும், நோய்களுக்கும் காரணமாகும். கால் தசைகளில் மின் செயல்கள் நின்று விடுகின்றன. கலோரி எரிவது குறைந்து விடுகிறது.

இனிப்பும்,  கொழுப்பும் இரத்தத்தில் அதிக மாகி உடலுள் சேமிக்கப்படுகிறது. வயறு பருமனாகிறது. என்ஸைம்கள் சுரப்பது குறைகிறது. HDL குறைகிறது. LDL & Triglycerides அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பது பலவீன மடைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உட்கார்ந்திருப்பதை நடை பயிற்சி மூலம் ஈடு செய்வதை விட வேறு வழி இல்லை.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடப்பதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

                                         --------------------------------------------   

No comments:

Post a Comment