Tuesday 19 May 2015

மனஅழுத்தம்

                                       மனஅழுத்தம்

ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை.

தொழில்,  குடும்பம், ஆரோக்கியம் போன்றவை மன அமைதியை தருகின்றன அல்லது பாதிக்கின்றன.

தனது பிரச்சினைகளை தீர்க்கும் திறனும், தனது உணர்ச்சிகளும், தனது அணுகுமுறையும், நியாயங்களை ஏற்று கொள்ளும் தனது பக்குவமும் அவரவர் மனஅழுத்தத்தை நிர்ணயிக்கின்றன.

ஒரு மனோதத்துவ மருத்து வரால் பிரச்சனைகளை அறிந்து மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவ முடியும்.

கோபம்:- கோபம் இயற்கையானது.காரணத்தோடு கோபம் வருவது இயற்கை.உண்மையை அறியாமல் கோபப்படுவது  தவறு. தான் கோபப்பட்டது சரியா என யோசித்து பார்ப்பது மறு முறை எடுத்தவுடன் கோபம் வராது.

தவிப்பு ;-  தோல்வி, நஷ்டம், மறுப்பு, அலட்சியம் போன்ற ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்றுஎதிர்பார்க்கும் சூழல் ஒரு விதமான தவிப்பு (அழுத்தத்தை) ஏற்படுத்தும். நம் கட்டுப்பாட்டில் இல்லாததை எண்ணி தவிக்கிறோம். தோல்வி, பயம், மதிக்கவில்லை போன்ற வைகளை ஏற்றுக்கொள்வதால் தவிப்பிலிருந்து விடுபடலாம்.

கவலை :-  கஷ்டங்களும், பிரச்சினைகளும் எல்லாருக்கும்  இருக்கிறது. பலரும் பலவிதமாய் அவைகளை எதிர் கொள்கிறார்கள். கவலை பட்டுக்கொண்டிருப்பதால் எந்த மாற்றமும்  ஏற்பட்டு விடாது. கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து, தீர்வு காணவேண்டும். உடற்பயிற்சி, தோட்டவேலை  போன்ற  ஏதாவதொரு உடல் உழைப்பை செய்தால் கவலை ஆரோக்கியத்தை பாதிக்காது.

மனமுறிவு.:- தனது நியாயமான உரிமைகளை மறுக்கும் போதும், தன்னை பொய் சொல்லி ஏமாற்றும் போதும், பதிக்கப்பட்டவனை குற்றவாளி ஆக்கும் போதும், மனதில் ஏற்படும் பொதுவான கொந்தளிப்பாகும்.

கோபம், கவலை, தவிப்பு, மனமுறிவு, போன்றவை இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். திருப்தியற்ற வேலை, வேலையினாலுள்ள மன அழுத்தம் இருதயத்தை பலவீனப்படுத்தும்.ஆழமான மூச்சு, உடற்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.

உங்கள் வலிமை மற்றும் திறமையின் அளவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வருமானத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எல்லோராலும், எல்லாவற்றையும் முழுமையாகவும், திறமையாகவும் செய்யமுடியாது.
உங்களால் முடியாது என த்தெரிந்தால் அதற்காக போராடாதீர்கள்.
உங்கள் சக நண்பர் அடைந்த வெற்றியை ஒப்பிட்டு நீங்களும் அதே குறிகோளுடன் முனையாதீர்கள்.
தோல்வியை எண்ணி சோர்ந்து விடாதீர்கள். தோல்வி கடைசி  யல்ல. மனதை கூர்ந்து கவனியுங்கள் மனதில்  தவறான, எதிர்மறை எண்ணங்களை உற்பத்தியாவதை கவனியுங்கள். அவ்வாறான எண்ணங்கள் தவறு என்று சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் தவறான எண்ணங்கள் தோன்றாது.
.
உணர்ச்சிகளினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

மகிழ்ச்சியற்ற உணர்சிகள் உடலிலை  சோர்வாக்கி விடுகிறது.
கோபம் எரிச்சலை தருகிறது.
பயம் உதறலை தருகிறது.
கவலை பசியின்மையை தருகிறது.
துக்கம் தொண்டையை அடைக்கிறது.
பதட்டம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துகிறது.
அதிர்ச்சி இதய துடிப்பை பலவீனப்படுத்துகிறது,அல்லது  நிறுத்திவிடுகிறது.
சில சுரப்பிகளின்  இயக்கம் அசாதாரணமாகி தற்காலிக அல்லது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உணர்ச்சிகளின் வடிகால் 

தனது பிரச்சினைகளை அலச உதவும் புத்தகங்களை படித்தல்.
தனக்கு பிடித்த இசையை கேட்டல்
சுற்றுலா செல்லுதல்
நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுதல்.
நகைச்சுவைகளை ரசித்தல்
சூழ்நிலைகளிலிருந்து வெளிவர முயற்சி செய்தல்.
யோகா,பிராணயாமா,தியானம் போன்றவற்றை பிறருடன் சேர்ந்து (சத்சங்கம்) செய்தல்

ஆரோக்கிய மனம் 

புதிய எண்ணங்கள்
புதிய பழக்க வழக்கங்கள்
மன அழுத்தத்திற்கு பொறுப்பேற்றல்
எதையும் மிகைப்படுத்தாதிருத்தல்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் 
கவனித்தலை அதிகமாக்குதல்
பேசுவதை குறைத்தல்.
மனநிலையை ( MOOD ) கவனித்து நிர்வகித்தல்.
பிறர் தேவை,உரிமைகளை மதித்து நடத்தல்.

வெற்றி பெருக, பெருக மகிழ்ச்சியும்   பெருக வேண்டுமானால்,

பிறரை  பரஸ்பரம் மதித்து நடக்கும் சூழ்நிலையை பராமரியுங்கள்.

தனது நோக்கம் (intention), நானே மேலானவன் (Ego) இவைகளை கூர்ந்து கவனித்து சரிப்படுத்துங்கள் .

உனது பாவனைகளையும் (non verbal communication) மற்றும் வார்த்தைகளை யும் (verbal communication) பிறர் சதா கூர்ந்து கவனித்து உன்னை மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு சாமர்த்தியமாய் பேசுவதை கைவிட்டு, வெளிப்படையாக இருக்க முயற்சியுங்கள். வெளிப்படையாக இருப்பது அதிகமாகும்போது, பிரச்சினைகள் குறைந்து போவதை காணலாம்.

பிரச்சனைகள் வரும் போது பாதிக்கப்பட்டவனை குற்றவாளி ஆக்காதீர்கள்.
உங்கள் குற்ற உணர்வு உங்கள் மகிழ்ச்சியை வடித்து மன அழுத்தத்திற்கு ஒரு  காரணமாகும்.

                                    ---------------------------------------------------------.













No comments:

Post a Comment