Thursday 15 November 2018

திருமூலர் காண்பித்த கடவுள்

திருமூலர் மிகப்பழமையான ஒரு தமிழ் நாட்டு ஞானி. அவர்  வாழந்த காலம் சரியாகத் தெரியாது. 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள். திருமூலர் தான் கண்டு அனுபவித்த கடவுளை பற்றி தனது பாடல்களில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

 அணுவை ஆயிரம் கூறாக உடைத்து அந்த துகள்களுக்குள் நடக்கும் இயக்கத்தை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அணுத்துகள்களை தான் சிவம் என்று உணருகிறார். அந்த துகள்களுக்குள்  நடக்கும் இயக்கத்தை சிவசக்தி என்று தெளிவடைகிறார்.

கீழ் வரும் அவரது பாடல்களை படியுங்கள்.

அணுவின் அணுவினை ஆதிபிரானை
அணுவின் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவிலார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே.

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
காணுவற நின்று கலப்பது உணரார்
இணையிலி யீசன் அவனெங்குமாகி
தணியற  நின்றான் சராசரமாமே.

எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.

ஆதிபடைத்தனன் ஐம்பெரும்பூதம்
ஆதிபடைத்தனன் ஆசில் பல்ஊழி
ஆதிபடைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதிபடைத்தவை  தங்கி நின்றானே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின்  மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.

சிந்தையது என்ன சிவன் என்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய, தெளிய வல்லார்க்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லாத இடமில்லை- காணுங்கால்
கண்காணியாக கலந்தெங்கும் நின்றானை
கண்காணி கண்டார்  களவொளிந்தாரே.

நெறியைப் படைத்தான்  நெறிஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெறிஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்குவார்க்கு
நெறியில் நெறிஞ்சில் முள் பாய்கிலாவே.

நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும்  இல்லை
நடுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின்றார் வழி நானும் நின்றேனே.

நிற்கின்ற போதே நிலையுடன் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றி தொழுமின் தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்காமே.

பெறுதற்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறிழந்தாரே.

ர்க்கும் இடுமின் அவர்இவர் என்னென்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காகம் கரைந்துண்ணும் காலம் அறிமினே.

மேலுள்ள பாடல்கள்  நன்கு புரியும் போது மனம் கடவுளை தீர்மானிக்கும்.

சிதம்பரத்தில் இப்போதிருக்கும் கோவிலை பதஞ்சலி முனிவர் வடிவமைத்துக் கொடுத்தார். சிதம்பரம் கோவிலி லிருக்கும் நடராஜர் சிலையை திருமூலர் வார்த்துக்கொடுத்தார்.

ஸ்விட்சர்லாந்து CERN நிறுவனத்தில் 2000 உலக விஞ்ஞானிகள் ஒன்று கூடி அணுவை உடைத்து துகள்களாக்கி  அதனுள் இருக்கும் சக்தியை ஆராய பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த துகள்களுக்கு கடவுள் துகள் ( GOD's Particle ) என்று பெயருட்டிருக்கிறார்கள்.அந்த ஆராய்ச்சி கூடத்தில் திருமூலரின் 6 ஆடி நடராஜர் சிலையை நிறுவி இருக்கிறார்கள். அணுத்துகள் களினுள் நடக்கும் இயக்கமும் திருமூலரின் நடராஜ நடன தத்துவமும் ஒரேமாதிரி யாக இருப்பதாக உலக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலகில் எல்லாப்பொருளுக்கும் சக்தி இருக்கிறது. பொருள் கண்ணனுக்கு தெரிகிறது. சக்தி கண்ணுக்கு தெரிவதில்லை. இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருள்களும் அணுத்துகள் களினால் ஆனது. சூரியன், சந்திரன், மண், நீர், நெருப்பு, காற்று,ஆகாயம்  என சகலதும் அணு துகள்களால் நிறைந்தது.

அணுத்துகளின் உள்   நடக்கும் இயக்கம் தான்  கடவுள். பிரபஞ்சத்தில் அணுத்துகள் இல்லாத இடமேயில்லை. அதாவது கடவுள் இல்லாதே இடமே இல்லை. அதை எப்படி எல்லோரும் புரிந்து கொள்வது. அதற்குத்தான் நடராஜர் வடிவத்தை திருமூலர்  வடிவமைத்து கொடுத்தார். திருமூலரைப்போல்  தமிழ் நாட்டில் பல ஞானிகள் கண்ணனுக்கு தெரியாத இறைவனை தெளிவாக உணர்ந்து சாதாரண மக்களுக்கு போதித்து வந்திருக்கிறார்கள்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
 அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.
எல்லாம் சிவமயம்

மனிதன் கூறும் இயற்கையின் நியதிகள், நம்பிக்கை, பிரார்த்தனை, சாபம், பாவம், புண்ணியம், சரண், அருள் என்பதற்கும்  அணுத்துகள் களின் இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே திருமூலர் பாடல்கள் கூறுகின்றன.

கடவுளை இல்லை என்று மறுப்பதும் கடவுள் துகள்களே. இரவு-பகல், வெப்பம்-குளிர்  போல. அவரவர் கொள்கையில் உண்மையாய்  இருந்தால் போதும். ஒருவரை ஒருவர் கட்டாயப்  படுத்தாமலும், விமர்சனம் செய்யாமலும் இருந்தாலும்  போதும். உலகம் அமைதியாய் போய்க்கொண்டிருக்கும்.

கடவுளை பயன் படுத்திக்கொள்வதே சிறந்தது. 

ஓம் நமசிவாய ! ஓம் சிவாய நம !   






No comments:

Post a Comment