Friday 30 August 2019





உயிர்.     உலகு.        இறைவன்.

மனிதனின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. வெளி உலகை பயன்படுத்தியும், அக உலகை பயன்படுத்தாமலும் வாழ்ந்து மடிவது.
2. மனநிலை, சூழ்நிலை போன போக்கில் வாழ்வது.
3. செயலையும், பின்விளைவையும் அனுபவிப்பது.

இயற்கையின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. சக்தி, நியதி, பொருட்களால் பாரபட்சம் பாராமல் மாற்றம் அடைந்து கொண்டே இருப்பது.
2.ஒழுங்கற்ற ஒழுங்கில் இரட்டைகள் நடைபெறும் மேடையாய் இருப்பது.( நியாயம்- சுயநலம்,  அறிவு- அறியாமை, கருணை- கொடுமை).
3. சுழற்சியால் அனைத்தையும் பராமரித்துக் காப்பாற்றும் அறிவைத் தருவது( காற்று, தண்ணீர், உணவு, என்பன. )

இறைவனின் முக்கியமான மூன்று பகுதிகள்.
1 சர்வசக்திகளாலும் ஆனவன்.
2. சர்வநியதிகளாலும் ஆனவன்.
3. சர்வபெருட்களாலும் ஆனவன்.

ஆன்மாவின் முக்கியமான மூன்று இயல்புகள்.
1. ஆன்மா  தியானத்தின் எல்கையில் இருப்பது.
2. உயிர்சக்தியுடன் ஒன்றி இருப்பது.
3. மனத்தின் மையக்கருவாக இருப்பது.

இதிலிருந்து மனிதன் அறியவேண்டிய மூன்று முக்கிய முடிவுகள்.
1. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பாதிப்படையச் செய்வதால் வரப்போகும்  பின்விளைவி லிருந்து தப்பிக்க முடியாது.
2. ஒருவருடைய உரிமையை ஒருவர் மதிக்காமல் பாதிக்கச்செய்வது ஏதோ ஒரு வகை தண்டனை வரப்போகும் குற்றமாகும்.
3. "நானே மேலானவன்" என்று செய்கிற செயல்கள் தண்டனை பெறுவதற்கான தகுதிகளை பெற்றுத் தரும்.
( இவையே கர்ம வினையாக அதாவது பின்விளைவாக பற்றித் தொடர்கிறது. )

No comments:

Post a Comment