Monday, 1 August 2016

   உடல் எடையயை கட்டுப்படுத்துவது எப்படி 

நம்மில் பலபேருக்கு உடல் எடை அதிக மாகிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம்.

உடல் உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உடலுழைப்பு என்கிற சமநிலை தவறி  தேவைக்கு அதிகமான அளவு உணவை உண்பது அல்லது தனது உடல் ஒத்துக்கொள்ளாத தவறான உணவுகளை உண்பது போன்றவைகள் உடலின் எடை கூடுவதற்கு முக்கிய காரணம். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினசரி பயிற்சிகளால் உட்கார்ந்து இருப்பதை   ஈடுகட்டவேண்டும் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தினசரி பயிற்சி செய்து உடல் எடையை பராமரிப்பதில்லை. அதனால் உடல் எடை கூடுகிறது.
சிலருக்கு ஹார்மோன் போன்ற பிரச்சினைகளாலும் உடல் எடைகூடும்.

 பலபேர் உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை மாற்றி, உடற் பயிற்சி செய்து என பலவழிகளை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அந்தவகை கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கமல் உடல் எடையை குறைக்கமுடியாமல் போய் விடுகிறது. எனக்கு எந்த நோயும் வராது என்று நம் மனம் அடம் பிடிப்பதாலும் கட்டுப்பாடுகள் தளர்நபோய் விடுகின்றன.வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியப்பேச்சையும் கேள்விப்படுகிறோம்.

உடல் எடையை குறைக்க முதலில் நமது மனதின் முழு ஒத்துழைப்பை பெற வேண்டும்.அதற்கு நமது மனதை நாம் பயமுறுத்த வேண்டும்.

அதிக உடல் எடை பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவம் கூறுகிறது.

சிறு வயதில் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், இதயநோய்கள் என பலவிதமான சுகவீனங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களை மருத்துவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.இதைச்சொல்லி   நம் மனதை பயமுறுத்தவேண்டும்.

மருத்துவமனைகளுக்கு சென்று இளம்வயதில் சுகர், பிரஷர், இருதயநோய் என கஷ்ட்ட ப்படுபவர்களை நேரில் பார்க்கவேண்டும். பார்ப்பவர்களை நம் மனம் நம்பும். 

அடிக்கடி பயமுறுத்தவேண்டும்.இந்த பயமுறுத்துதலால் நம் மனம் மாறி ஒத்துழைக்க தயாராகும் 

உடல் எடை எவ்வாறு கூடுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் கார்போஹைரேட் மற்றும் கொழுப்பு உணவுகள் அன்றாடம் எரிக்கப்படாத போது அவை உடலில் சேமிக்கப்படுகிறது. மேலும் மேலும் சேமிக்கப்படும் போது உடை எடை கூடுகிறது.

உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும்.

உடலில் சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்கவேண்டும், மேலும் புதிதாக சேமிப்பிற்கு வராதபடி உணவில் கவனமாய் இருக்கவேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.

சேமிப்பிலுள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்வது. தினசரி இரவு உணவை பழங்கள், காய்களோடு  நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் மன ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

ஒரு 21 நாட்கள் இரவு உணவை உண்ணாமல் இருந்து விட்டால் பிறகு மனம் அதற்கு பழக்கப் பட்டுவிடும். பிறகு இரவு சாப்பிடாமல் இருப்பது ஒரு கஷ்டமாகவே இருக்காது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மனதில் உறுதியாய் இருக்கும் வரை இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. பழங்கள்,காய்களால் உடல் எடை கூடாது.

புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்வது.காலை, மதிய  உணவில் பயறு / பருப்பு / கடலை , காய்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக்  கொள்ள வேண்டும். இடைவேளைகளில் பசித்தால்     பழம், சுண்டல், சிறிதளவு காரம் போன்றவைகளை சாப்பிடலாம். விருந்துகளில் கட்டாயப்படுத்தினார்கள் என்றோ, ருசியாக இருந்தது என்றோ, வீணாகிவிடும் என்றோ எடையை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்தி விட்டு உண்ண வேண்டும். தவறான உணவுகள், பானங்கள் எதையும் வாங்கி வீட்டில் இருப்பில் வைக்கக்கூடாது. காலை உணவிற்குமுன் உடற்பயிற்சி செய்வதாலும் சேமிப்பிலிருக்கும் கொழுப்புகள் கரையும்.

நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு இருக்கும் ஆரோக்கியத்தை நமது அலட்சியம் பாழ்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அதனால் வரும் உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள்,மாத்திரைகளின் பக்க விளைவுகள், செலவுகள்,அலைச்சல்கள், மனச்சோர்வுகள் அனைத்தையும் எண்ணிப்பார்த்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.  


Friday, 13 May 2016

          தேர்தல் நாள் மே 16,   2016  திங்கட்கிழமை                  

நம் நாடு அடைந்திருக்க வேண்டிய முக்கியாமான இலக்குகள்.

தேவைக்கேற்ப ஆறுகள், குளங்கள், அணைகள்.
தேவைக்கேற்ப மின் உற்பத்தி
கடல் பரப்பிற் கேற்ப துறைமுகங்கள்
காலி இடங்களிலெல்லாம் காடு வளர்ப்பு
சிறந்த தரமான ஒரேவித இலவசக் கல்வி
திறமையை வளர்க்கும் பாடத்திட்டங்கள்.
திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு.
ஒழுக்கத்தை, மனிதநேயத்தை வளர்க்கும்  பயிற்சிகள்
நாடு முழுவதும் சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள்
சிறந்த தரமான இலவச மருத்துவம்
தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்
கொசுவற்ற நகரம், கிராமம்
சிறப்பான பேருந்து, ரயில் போக்குவரத்து
 மக்கள் பெருக்கத்திற் கேற்ப தேவைகளை திட்டமிடுதல் 
அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்


ஊழல் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுதல். 
லஞ்சமற்ற அரசு அனுமதிகள்
லஞ்சமற்ற அரசு அலுவலகங்கள்
லஞ்சமற்ற அரசு பணி நியமனம்,
லஞ்சமற்ற அரசு பணி இடமாற்றம்
கமிஷனற்ற அரசு ஒப்பந்ததாரார் வேலைகள்
மிக விரைவான விசாரணை, கடுமையான தண்டனை தரும் சட்டங்கள்.

யாருடைய தவறு 

நம்மில் 40 சதவீதத்தினர் தேர்தல் வந்தால் வாக்களிப்பதில்லை.

மேடைப் பேச்சை, தேர்தல் அறிக்கையை, இலவசங்களை, சினிமா பிரபலங்களை, ஜாதி-மத உணர்வுகளை, ஊடகங்களை  நம்பி, மனம்போன போக்கில் 60 சதவீதத்தினர் வாக்களிக்கின்றனர்.  

இதனால், ஊழல் செய்பவர்களும், மனசாட்சி இல்லாதவர்களும் ஆட்சிப்பொறுப்புக்கு வருகிறார்கள்.

பொறுப்புக்கு வருபவர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன், பினாமி என பலவழிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு,  நாட்டை கடனாளியாக்கும் ஏமாற்றுக் காரர்களாக இருக்கிறார்கள்.  

நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இருப்பதில் நல்லவர் யாரென்று விசாரித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் அளிக்கும் வாக்கு நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது . நமது எதிர்காலமும், நமது பிள்ளைகளின் எதிர்காலமும், நமது பிள்ளையின் பிள்ளைகளின் எதிர்காலமும் நாம் அளிக்கும் வாக்கில் அடங்கி இருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வாக்களிக்கவேண்டும். 

நாட்டின் இன்றைய நிலைமைக்கு நாம் அனைவரும் நல்லவர்களுக்கு வாக்களிக்காததுதான் காரணம்.

சிலர் வாக்களிக்காமல் இருந்து விடுவதுதான் காரணம். 

Friday, 6 May 2016

                          செயலும் பலனும் 

ஆணவம் அலட்சியத்தை வெளிப்படுத்தும்
பணிவு கடமையை விரும்பும்
பொய் சாமர்த்தியமாய் பேசும்
உண்மை நிரபராதி ஆக்கும்
வெறுப்பு பாபம் செய்யும்
விருப்பு வரம்பைத் தாண்டும்,
தவறு குற்ற உணர்வை ஏற்படுத்தும்
சரி நிம்மதியைத் தரும்
ஏமாற்றுவது தரத்தை நிர்ணயிக்கும்
நோக்கம் ஒத்துழைப்பதில் தெரியும்
அநியாயம் பின்விளைவாகி திரும்பி வரும்
நியாயம் துணையாக கூட வரும்
ஆதிக்க மனம் கடவுளிடம் நடிக்கும்
பாதித்த மனம் கடவுளிடம் புலம்பும்


                                   காரணம்- பின்விளைவு 

 விருப்பு-வெறுப்பு
காரணம் பின்விளைவு இல்லாத செயலே கிடையாது.
காரணம் பின்விளைவை ஆராய்ந்துபார்ப்பது அறிவு
காரணத்தை ஆராய்ந்தால் பரிகாரம் தெரியும்
பின்விளைவை ஆராய்ந்தால் கட்டுப்பாடு தெரியும்
கட்டுப்பாட்டை ஆராய்ந்தால் எல்கை தெரியும்
எல்கையை ஆராய்ந்தால் செய்யத்தக்கது, செய்யத்தகாதது தெரியும்
செய்யத்தக்கதை செய்வது நியாயம் என்றாகும்
செய்யத்தகாததை செய்வது குற்றம் என்றாகும்
நியாயமாய் நடக்கும் போது பலன் தெரியாது
குற்றமாய் நடக்கும் போது தண்டனை தெரியாது
நியாயமாகவும், குற்றமாகவும் நடப்பது மனதிலுள்ள விருப்பு - வெறுப்பாகும்.
மனதிற்கு சரி-தவறு, நல்லது-கெட்டது, காரணம் - பின்விளைவு
செய்யலாமா- கூடாதா பற்றிய கவலை இல்லை
உடல் மனத்தின் வேலையாள்
உடல்  மூலம்  தனது விருப்பு, வெறுப்புகளை செய்து மனம் திருப்தி பட்டுக்கொள்கிறது.
அவரவர் மனதிலுள்ள விருப்பு,வெறுப்பு அவரவர் செயலாகிறது
ஒவ்வொரு செயலுக்கும் காரணம் பின்விளைவு உண்டு
-----------------------------------  ( மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் )

                                    =============================

----------------   மனம் பற்றிபெரியோர்கள் சொன்னவை ---------------------.

மனம் ஆசை, கவர்ச்சிகளை விரும்பும்.அதுவே துன்பங்களுக்கெல்லாம் காரணம் . ( புத்தர் )

மனம் உலக சுகங்களை பெரும் பாக்கியம் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ( அருணகிரிநாதர் )

மனம் பாராட்டுக்கு ஏங்கும், விமர்சனங்களுக்குப் பயப்படும். ( உதயமூர்த்தி )

மனம் மனிதாபிமானமாய் நடவாமல், கடவுளைத் தேடி அலையும்.
( கண்ணதாசன் )

மனத்தை ஆணவம், கர்மா, மாயை போன்றவை சூழ்ந்துகொள்ளும்
( சைவசித்தாந்தம் )

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் ( உலக நீதி )

மனமது செம்மையானால் மந்திரங்கள் செம்மையாமே ( திருமூலர்)

செத்தாரைப்போல் திரிமனமே.( பட்டினத்தார் )

மனம் சரியான வழியில் செல்ல இறைவன் அருள் வேண்டும்
( இரமண மகரிஷி )

மனம் இயற்கைநியதிகளை மறந்து, நானே மேலானவன் என்று நடக்கும்
( கடுவெளி சித்தர் )

மனத்திலுள்ள அறம் உடல் நலத்தைப் பேணும் ( சைவ சித்தாந்தம் )

மனம் இருப்பதை எண்ணி மகிழாமல், இல்லாததை நினைத்து, நினைத்து ஏங்கும் ( பாரதியார் )

மனமிருந்தால் மார்க்கமுண்டு  ( பழமொழி )

மனமே நண்பன், மனமே எதிரி   ( பகவத் கீதை )

பிறர் மீது குற்றம் காணும் மனதைக்கொண்டு தன குற்றம் காணவேண்டும்.         ( திருவள்ளுவர் )

தியானம்

பழத்தில் சுவையை உணர்வது போல்
மலரில் மணத்தை உணர்வது போல்
தியானத்தில் ஒரு வகை அமைதியை  உணரலாம்
இறைவனென்ற உருவத்தைத் தேடாமல்
பேரமைதி உணர்வைத்தேடித்தருவது தியானம்
சுகபோக வாழ்க்கை தியானம் செய்ய விடாது
தியான வாழ்க்கை புதிய அனுபவத்தை உணரும்
சுகபோகம் வெளி உலகத்துக்கு மனத்தை அடிமையாக்கும்
தியானம் உள் உலகத்தை உணர வழிகாட்டும்
உள் உலகை உணர்ந்த மனம் பற்றற்று நிற்கும்
பற்றற்ற மனம் துன்பமற்ற மனம்
அதுவே ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள்
அதுவே அகத்தியர், திருமூலர், இரமணர்

என் விதி அளவை தீர்வு செய்யும் இறைவா
என் உடல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் சூழல் அளவை தீர்வு செய்யும் இறைவா
என் மன அளவை தீர்வு செய்யும் இறைவா
என் செயல் அளவை தீர்வு செய்யாதது ஏன் இறைவா.
என் விருப்பு-வெறுப்பு படி செயல் பட விட்டாயே
பின் விளைவில் சிக்கி எம்மை புலம்ப வைத்தாயே.











Sunday, 10 April 2016

சிறு நீரகம்

                                                         சிறு நீரகம் 

சிறுநீர் மூலம் நூற்றுக் கணக்கான கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. நாம் உண்ணுவதையும், குடிப்பதையும், உடற்பயிற்சி செய்வதையும், சிறுநீரக செயல் பாட்டையும் பொறுத்து சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் பரிசோதனை முடிவுகளை  அலட்ச்சியப் படுத்தாதீர்கள்.

எந்த வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எந்தவகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல், எவ்வளவு நீர் அருந்துகிறோம், எதைக்குடிக்கக்கூடாது, எந்த உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எந்த அளவிற்கு உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்பவைப்பற்றி அக்கறைப்படாமல் இளம் வயதிலே ஆரோக்கியத்தை பலவீனப் படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

சிறுநீரகம் இரத்தத்திலுள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவை ஒழுங்கில் வைத்திருக்கிறது. சிறுநீரகத்தில் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, இரத்தத்திலுள்ள இரசாயனக் கூறுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

சிறுநீரில் புரோட்டின், ஆல்புமின் சோதனைமூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் சோதிக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தில் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், அது தனது செயல் பாட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியப்படுத்த முடியாது. சிறுநீரகம் பழுதடையும் போது இரத்த சுகரும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், இரத்த சுகர், புரோட்டின் உணவு, கொலஸ் ட்ரால் முதலிய வற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

சிறுநீரகம் தினசரி 200 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி 2 லிட்டர் கழிவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்று கிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கல், பழுப்பு முதலியன ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்தும், முடிந்தவரை மாத்திரைகளை உண்பதை குறைக்கவும் முயற்சிக்கவேண்டும். சில மாத்திரைகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. 

இரண்டு சிறுநீரகமும் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன.

சரியான உணவிலும், சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், உடல் எடை  போன்ற ஆரோக்கிய எண்களிலும், நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற வற்றிலும் கவனமாய் இருந்தால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  சீனி, உப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு தண்ணீர் தினசரி குடிப்பது மிகவும் நல்லது. வாழைத்தண்டு சாறு, பார்லித் தண்ணீர், சீரகத்தண்ணீ ர்  போன்றவை சிறுநீர் பிரச்சனை களை தடுக்க உதவுகிறது. மாறிய கொழுப்பு ( Trans Fat ) உணவுகளைத் தவிர்ப்பதால் புராஸ்டேட் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சிறுநீர் பிரச்சினை வராமல் தடுக்கலாம்..

                                ------------------------------------------------------













Saturday, 9 April 2016

இருதயம்

                                                           இருதயம் 

தாயின் வயிற்றில் வளரும் சிசுவில்  முதன் முதலாக உருவாகி இயங்கும் உறுப்பு இதயமாகும்.

ஆரோக்கியமான இதயம் எதையும் சமாளிக்கிறது. 

ஆரோக்கியமான இருதய தசைகள் உடல் உழைப்பின் போது சிறப்பாகவும், ஓய்வின் போது குறைந்த அளவு துடிப்புடனும்  முழுவேலையையும் செய்கிறது. 

குறைந்த இதய துடிப்பில் அதிக அளவு இரத்தத்தை வெளியேற்றும் பணியினை செய்யும் சக்தியுடன் இதயதசைகள் இருக்கிறது. இதயத்தமனிகள் அதிக அளவு இரத்தம் பாய்ந்து செல்வதற்கு ஏதுவாய் பெரியதாய் இருக்கிறது.

பிராண வாயு கலந்த இரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் பம்ப் பண்ணி அனுப்பும் வேலையை இருதயம் செய்கிறது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித இதயம் ஒரு நாளைக்கு சுமார் 80000 முதல் 100000 தடவை வரை துடித்து சுமார் 9000 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. 70 முதல் 90 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் சுமார் 2 முதல் 3 பில்லியன் தடவை துடித்து, 50 முதல் 60 மில்லியன் காலன் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்த பணிகளை செய்வதற்கு ஏற்ப இருதய தசைகள் வித்தியாசமான குணங்களுடன் அமையப் பெற்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆன்றி ஆக்சிடண்ட் ( Anti Oxidant ) சத்துள்ள உணவுகள் இதய நோய்களை எதிர்க்கும் முக்கிய கருவியாய்  இருக்கிறது.

காய்கள், கீரைகள், மூலிகைகள், பழங்களில் சக்திவாய்ந்த ஆன்றி ஆக்சிடண்ட்கள் இருக்கின்றன. வைட்டமின் E இதயத்தைப் பாதுகாக்கிறது. முளைவந்த கோதுமை, கோதுமைப்புல் ஜுஸ், பார்லி போன்ற வற்றிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் என்ஸைம்கள்  இதயத்தை வலிமைப் படுத்துகின்றன. திராட்ஷைப் பழக்கொட்டையிலுள்ள ஆன்றி ஆக்சிடண்ட் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதயத்தில் இரத்தம் கட்டியாகாமல் இருக்க ஆஸ்பிரின் உதவும். ஆனால் நெடுநாள் உண்ணும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். ஆஸ்பிரினுக்குப் பதில் அன்னாசிப் பழம் நல்லது. வெள்ளைப்பூண்டு இருதயத்திற்குரிய சிறந்த ஆன்றி ஆக்சிடண்ட். வெள்ளைப்பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது, இரத்தத்தில் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பச்சையாக உண்ணும் பூண்டு இரத்த சுகரை குறைக்கிறது.

இரத்தக் கொலஸ்ட்ரால் விகிதம் கட்டுக்குள் இல்லை என்றாலும் அதிக உடல் எடையாலும் மன அழுத்தத்தை குணப் படுத்தாவிட்டாலும் நல்ல கொழுப்புச் சத்து குறைபாட்டாலும் இரும்புத்தாது அதிகமாவதாலும் இருதயம் ஆபத்துப் பாதையில் போய் விடுகிறது.

உடலில் இருதய ஆரோக்கியம் சத்தான உணவுகளால் சரி செய்யப்பட்டு குணப்படுத்தக்கூடிய ஒரு அவையமாகும்.

இதயநோய் மரணம் ஏற்படும் காரணங்கள் அனைத்திலும் முதன்மை வகிக்கிறது. இளவயது மரணத்திலும் முதற் காரணமாக இருக்கிறது.

புகைத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவை இதயநோய் மரணத்துக்கான தெரிந்த காரணங்கள்.

சிறந்த உடற்பயிற்சி, உணவுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை களால் இருதய நோயை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்கவும் முடியும்.




Image result for இருதயம்



ஆஸ்துமா

                                                                      ஆஸ்துமா 

ஒவ்வாமை       ( புகை, மணம், தூசு, காற்றோட்டமின்மை )             மன அழுத்தம்
( பயம், பரிதவிப்பு, கவலை ) மூச்சுக் குழாய் பலவீனம்,  பரம்பரை போன்ற காரணங்களால் மூச்சுப் பாதையில் தடிப்பு, அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

மூச்சுப் பாதையிலுள்ள குழாய் களில் தடிப்போ அல்லது வீக்கமோ ஏற்படுவது ஆஸ்துமா ஆகும். வீக்க மானது மூச்சுப்பாதையின் வலிமைத்தன்மையை குறைந்த நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது. மூச்சுக் காற்றில் இருக்கும் ஏதாவது துகள்கள் பட்டவுடன் வீக்கமான இடம் அதனை வலிமையுடன் எதிர்க்க ஆரம்பிக்கிறது. மூச்சுப் பாதையில் ஏற்படும் வீக்கம் எளிதாக போய்க்கொண்டிருந்த மூச்சை சிரமப்படுத்துகிறது. மூச்சுவிடும் இயக்கத்திலிருக்கும் தசைகளை இறுக்க மடையச்  செய்கிறது. இதனால் மூச்சுப்பாதை மேலும் குறுகுகிறது. இம் மாற்றங்களினால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று குறைகிறது. மிகுந்த சிரமப்பட்டு மூச்சு விடவேண்டியதாகிறது. மூச்சுப் பாதையிலிருக்கும் திசுக்கள் அதிகமான அளவு சளியை உண்டுபண்ணுகிறது. இதனால் மூச்சு விடுவதற்கு மேலும் சிரமப்படவேண்டிய தாக இருக்கிறது.

யோகாசனம், துரித நடைப் பயிற்சி, ஆழமாக மூச்சு விடும் பயிற்சி, மன அமைதி பயிற்சி போன்றவைகளால் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம்.,